தமிழ் திருப்பயணிகள் ஆன்மீகப்
பணி மையம் உங்களை
வரவேற்கின்றது
மரியன்னை உங்களை அழைக்கிறாள்.........
இறை சித்தத்தை செயல்படுத்தும் மாபெரும் சக்தி மரியன்னை. அவள் மக்களின்
அன்னை. அன்னையிடம் வரம் கேட்க அல்ல, அன்னையையே வரமாகக் கேட்க,
லூர்து நகர் திருத்தலம் செல்வோம். குடும்பமாய்க் கூடி ஜெபமாலை
சொல்வோம். தூய ஆவியின் வரங்களும், அன்னை மரியின் பரிந்துரையும்
கிடைத்திட திருப்பலியில் விசேடமாக
தொடர்ந்து அனைவருக்காகவும் லூர்து அன்னை
மூலமாக ஜெபிக்கிறோம்.
தினம்
ஒரு நல்வார்த்தை
நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்: உங்களைத்
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். மத்தேயு 5:44
அன்பர்களே உங்கள் அனைவர்க்கும் நத்தார்
புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நமது உள்ளத்தையும், இல்லத்தையும் இயேசு தங்கக்கூடிய
இனிய இடமாக மாற்ற நம்மையே நாம் இந்த நாள்களிலே
தூய்மையாக்கிக் கொள்வோம்.
இன்று இதுவே நமது செபமாக இருக்கட்டும் :
இயேசுவே! என் வாய் உம்மைப்போற்ற மறந்தது போதும்!
என் நா உம்மைப் புகழ மறந்தது போதும்!
என் கண்கள் உம்மைத் தேட மறந்தது போதும்!
என் செவிகள் உம் வார்த்தையைக் கேட்க மறந்தது போதும்!
என் சுவாசம் உம்மைச் சுவாசிக்க மறந்தது போதும்!
போதும் ! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
ஓடி ஓடி களைத்துப்போனேன்!
என்னிடம் மிஞ்சியிருப்பதெல்லாம்
சோதனை, வேதனை, தயக்கம், மயக்கம், குழப்பம், பயம்,
பஞ்சம், பசி!
போதும்!
நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
இன்று உமது உடனிருப்பால் என்னைத் தொட்டுக் குணமாக்கி
உமக்கு ஏற்ற இல்லிடமாக என்னை மாற்றியருளும்.
ஆமென்.
இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும்
பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல்
போனதுதான். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள்,
அதுவும் நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான்.
கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும்
மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை
நின்றதுதான்.
முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை
சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள்
எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில்
நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை
கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே
காப்பாற்றிக் கொண்டிருந்தது.
ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே "பாவிகளாய்
இருக்கிற எங்களுக்காக "எங்களை சோதனையில் விழவிடாதேயும்"
என்று நாம் ஜெபிக்கும் போது உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும்
ஜெபிக்கிறோம். "
ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள்
நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள்
வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.