Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 சிலுவைப்பாதை

  கொரோனா வைரஸ் சிறப்பு சிலுவைப்பாதை  
                  

தொடக்க மன்றாட்டு:

அன்பு ஆண்டவரே, எங்கள் ஆபத்துக்களில் அடைக்கலமானவரே, எங்கள் துயரங்களில் ஆறுதலானவரே, எங்கள் நோய்களில் மருத்துவரே, எங்கள் பாவங்களால் நீதியின்படி தண்டிக்கப்பட்டாலும், உமது அளவுகடந்த இரக்கத்தால் தொற்று நோயின் பாதிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு நலமுடன் உமது வார்த்தைக்கு ஏற்ப வாழ்வோமாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் ஒரே இறைவனை வாழ்ந்து ஆட்சி செய்யும் எங்கள் மீட்பரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

முதல் நிலை :

இயேசு மரணத்திற்கு தீர்ப்பிடப்படுகின்றார்

அன்பு இயேசுவே, எங்கள் அனைவருக்கும் தெரிந்த உறுதியான உண்மை என்னவென்றால் ஒருநாள் அனைவரும் இறப்போம் என்பதே. இதை உணர்ந்து ஏற்றுக்கொண்டாலே, ஒவ்வொரு நாளும் நீர் தரும் அருட்கொடைகளின் உதவியால் வாழ வேண்டிய முறையில் வாழ்வோம், வாழ்வு எனும் கொடையைப் போற்றிப் பாதுகாப்போம். இப்புவியில் எம் வாழ்வு முடிவுறும்போது எமக்கு நண் மரணத்தையும், நிலைவாழ்வையும் தந்தருளும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

இரண்டாம் நிலை:

இயேசு சிலுவையை சுமந்து கொள்கிறார்

அன்பு இயேசுவே, உம்மீது அநியாயமாக அழுத்தப்பட்ட சிலுவையை சுமக்க முன்வந்தீர். கொரோனா எனும் கொடிய சிலுவையை நாங்கள் ஒன்றாக சேர்ந்து சுமக்க வலிமை தாரும். தங்கள் வலிகளை தாங்கிட பிறருக்கு உதவி செய்வோமாக. இக்கட்டான இக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மருத்துவ மற்றும் உளவியல் உதவிகளை தரும் நாட்டுத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் திரு அவையின் ஆன்ம மேய்ப்பர்கள் அனைவரும் துயர் துடைக்கும் தூய பணியினை தொடர்ந்து ஆற்றிட அருள் தாரும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

முன்றாம் நிலை :

இயேசு முதல் முறையாக கீழே விழுகிறார்

அன்பு இயேசுவே, நாங்கள் பலவீனத்தால் பாவத்தில், நோயில் விழும்போது, எம் சுமைகளை, நோய்களை சுமந்து எமக்கு வலுவையும் ஊக்கத்தையும் தருபவர் நீரே. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, பல மக்களை இழந்து, செய்வதறியாமல் தவிக்கும் உலக நாடுகளைக் கனிவுடன் கண்ணோக்கும். இந்நோயினால் பாதிக்கப்பட்டோர்மீது நீர் இரக்கம் கொள்வீராக.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து
உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

நான்காம் நிலை:

இயேசு தன் தாயை சந்திக்கிறார்

அன்பு இயேசுவே, நீரும் உம் தாயும் சந்தித்த வேளையில் உம் தந்தையே உம் சிலுவையை தாங்கிப் பிடித்தார். மலருமுன்னே கருகிப்போகும் மொட்டுகளான குழந்தைகள்தான் இயேசு. இறந்த பிள்ளைகளை நினைத்து அழும் அன்னையராக கன்னி மரியா. நோயினால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட நோயுற்றோரோடும் அவர்களது குடும்பங்களோடும் மிக அருகில் இருந்தருளும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

ஐந்தாம் நிலை:

இயேசு சிலுவை சும்மக்க சீமோன் உதவுகிறார்

அன்பு இயேசுவே, எனக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதை பயமின்றி பெற்றுக்கொள்ளவும், உதவி தேவைப்படுவோருக்கு தயக்கமின்றி உதவி செய்யவும் அருள் தாரும். எமது அரசுத் தலைவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் அனைவருக்கும் உமது ஆசியை வழங்கும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

ஆறாம் நிலை:

இயேசுவின் முகத்தை வெரோனிக்கா துடைக்கிறார்

அன்பு இயேசுவே, உமது இரக்கத்தோடு நான் பிறரை காண்பேனாக. உமது கனிந்த அன்பை பிறர் என்னில் காண்பார்களாக. இக்கட்டான இச் சூழலில் பரபரப்பாக பணிபுரியும் அரசு அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், உணவுத் துறையினர், ஊடகத்துறையினர், நோயுற்றோரைப் பராமரிப்பவர்கள், ஏழைகள், தேவையில் இருப்போர் அனைவருக்கும் உமது ஆசீரைத் தாரும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

ஏழாம் நிலை:

இயேசு இரண்டாம் முறை மண்ணில் விழுகிறார்

அன்பு இயேசுவே, எமது சறுக்கல்கள் எதிர்கால மகிழ்ச்சியான, தூய்மையான வாழ்வுக்கான சந்தர்ப்பங்கள் என உணரச் செய்யும். வீழ்ச்சிக்குப்பின் பெரும் வெற்றியைத் தருபவர் நீர். இந்த தற்காலிக சூழலுக்குப் பின் உருவாக இருக்கும் புதியதோர் உலகில் நம்பிக்கை கொள்ளச் செய்யும். கொரோனா நோயினால் நிலைகுலைந்து போயிருப்போர் தங்களின் விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் அருளைப் பெற்றுக் கொள்வார்களாக.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

எட்டாம் நிலை:

இயேசு எருசலேம் மகளிரை சந்திக்கிறார்

அன்பு இயேசுவே, இத் துன்பமான நேரத்தில் திருப்பலி மற்றும் அருளடையாளங்களின் வழியாக உம்மை சந்திக்க இயலாத அனைவருக்கும் அருகில் இருந்தருளும். எண்களின் பாவங்களுக்காக மனம் வருந்தும் அருளைத் தாரும். பரவிக் கொண்டிருக்கும் நோய்க்காக மட்டுமல்ல, எம்மை உம்மோடும் பிறரோடும் சேர்ந்து வாழாத வண்ணம் பிரிக்கும் எம் பாவங்களுக்காக அழும் அருளைத் தாரும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

ஒன்பதாம் நிலை:

இயேசு மூன்றாம் முறையாக தரையில் விழுகிறார்

அன்பு இயேசுவே, உம்மையும் பிறரையும் அன்பு செய்யாமல் பாவத்தில் விழுந்து விட்டோம். எங்கள் பேராசையின் காரணமாக பிறரின் தேவைகளில் அக்கறை காட்டத் தவறி விட்டோம். அரசும், திரு அவையும் எடுக்கும் முடிவுகள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழ்ப்படியாததை எண்ணி மன்னிப்பு வேண்டுகிறோம். எம் பாவங்களை மன்னித்து, தண்டனையிலிருந்து எம்மைக் காப்பாற்றும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

பத்தாம் நிலை:

இயேசுவின் ஆடைகள் உரியப்படுகின்றன

அன்பு இயேசுவே, வாடிய பயிருக்கு வான் மழையையும், வயல்வெளி மலர்களுக்கு வண்ணங்களையும் தருகின்ற உமது ஆடைகளை உடலிலிருந்து உரித்து அவமானப்படுத்துவதை எண்ணி அழுகின்றோம். அவசரகால நேரத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறியோரைக் காத்தருளும். நோயின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்மீது இரக்கமாயிரும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

பதினொன்றாம் நிலை:

இயேசு சிலுவையில் அறையப்படுகின்றார்
அன்பு இயேசுவே, உம்மைக் குறித்தது எல்லாம் முன்னரே திட்டமிடப்பட்டாலும், உமது முடிவு அவமானமாக இருந்தது. தோல்வியே நிலையென நினைத்து அழும் அனைவருக்கும் நம்பிக்கையைத் தாரும். குறிப்பாக, நோய் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்ற, சிகிச்சை பெறுகின்ற, தங்கள் உடல் நலனை நினைத்து பெரிதும் கவலைப்படுகின்ற அனைவரோடும் மிக அருகில் இருந்து காத்தருளும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

பன்னிரெண்டாம் நிலை:

இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்

அன்பு இயேசுவே, எம்மோடு இன்றும் என்றும் எங்கள் இறப்பின் வேளையிலும் இருந்தருளும். எங்கள் பாவங்களுக்காக உண்மையாகவே மனம் வருந்தும் உந்துதலை எமக்குத் தாரும். எம்மை நீதித் தீர்ப்பின் தண்டனையிலிருந்து காப்பாற்றும். நோயினால் இறந்தோருக்கு நிலையான அமைதியைத் தாரும். இறப்போருக்கு மிக அருகில் இருந்தருளும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

பதிமூன்றாம் நிலை :


இயேசுவின் உடல் அன்னை மரியின் மடியில்

அன்பு இயேசுவே, உம்மை சிலுவையிலிருந்து இறக்கி உமது தாயின் மடியில் கிடத்துகிறார்கள். கொரோனா நோயினால் இறந்தோரை நினைத்து அழும் குடும்பங்களோடு உடனிருந்து நம்பிக்கையில் உறுதிப்படுத்தும். மரணத்திற்கு பிறகு மேலான வாழ்வு உண்டு எனவும், அப்பொழுது எம் கண்ணீரை எல்லாம் துடைத்து விடுவீர் எனவும் உணரச் செய்தருளும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

பதினான்காம் நிலை:

இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்

அன்பு இயேசுவே, தந்தையில் கரங்களில் உம்மை ஒப்படைத்துவிட்டீர். உமது பராமரிக்கும் அன்பில் நாங்கள் இருப்போமாக. தொற்று நோய் உருவாக்கியுள்ள பயம், கவலை, நம்பிக்கையின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, உம்மில் ஆறுதலும் அமைதியும் அடைவோமாக. உமது மரணத்தாலும் உயிர்ப்பாலும் எமக்கு புது வாழ்வு தருகிறீர் என் நம்பச் செய்யும்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................

ஒருவர்: கொரோனா தொற்று நோயிலிருந்தும், அனைத்து உடல் ஆன்ம நோய்களிலிருந்தும்

அனைவரும்: இரக்கமுள்ள இயேசுவே எங்களைக் காத்தருளும்.

திருத்தந்தையின் கருத்துக்களுக்கும், பங்குத்தந்தையின் கருத்துக்களுக்காகவும், பங்குமக்களின் கருத்துக்களாகவும் செபிப்போம்.

விண்ணுலகில் இருக்கிற.....................
அருள் நிறைந்த மரியே ................................
தந்தைக்கும் ..................................
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்