• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

வியாகுலமாதா மன்றாட்டு மாலை

   

வியாகுலமாதா மன்றாட்டு மாலை


ஆண்டவரே இரக்கமாயிரும்(2

கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)

ஆண்டவரே இரக்கமாயிரும்(2)

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்

பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

- அதி வணக்கத்துக்குரிய தேவதாயாராகிய வியாகுலமாதாவே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

- பாவம் நிறைந்த இப்பரதேசத்திற் சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்த பரிசுத்த மாதாவே,

- உம்முடை திவ்விய குழந்தையான யேசுநாதர் மாட்டுக் கொட்டிலில் காற்று, குளிர், தரித்திரம் முதலியவைகளாற் பட்ட உபத்திரவத்தைக் கண்டு அளவற்ற துயரமடைந்த மாதாவே,

- விருத்த சேதனத்தால் திவ்விய குழந்தை சிந்தின இரத்தத்தையும் சிந்தின நோக்காடுகளையும் கண்டு அழுது துக்கித்த மாதாவே,

- யேசுநாதருக்கும் உமக்கும் வரப்போகிற நிர்ப்பந்தங்களையும் புனித சிமியோன் வெளிப்படுத்தக் கேட்டு வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே,

- தேவாலயத்தில் உம்முடைய திருக்குமாரனைத் தேவ நீதிக்கு உத்தரிப்புப் பலியாக மிகுந்த மனத்துயரத்துடனேயே ஒப்புக்கொடுத்த மாதாவே,

- ஏரோதென்கின்ற இராசா உம்முடைய நேசபாலனைக் கொல்லத் தேடுறதைக் கேட்டு மனோவாக்குக் கெட்டாத சஞ்சலத்துக்குள்ளான மாதாவே,

- தேவபிதாவின் கட்டளைப்படியே திவ்விய குழந்தையை எடுத்துக்கொண்டு இராக்காலத்தில் மிக்க துரிதத்துடனே எகிப்த் என்கிற பரதேசத்திற்கு ஓடிப்போன மாதாவே,

- அந்த இராட்சியத்தில் அநேக வருசம் திவ்விய பாலகனோடு பரதேசியாய் இக்கட்டு அனுபவித்த மாதாவே,

- பன்னிரெண்டு வயதில் உமது திவ்விய யேசு உம்மைப் பிரிந்து காணாமல் போனதினாற் மூன்றுநாள் துக்கசாகரத்தில் அமிழ்ந்தின மாதாவே,

- யேசுநாதர் வேதத்தைப் போதிக்கச் சுற்றித்திரிகையில் அநேகமுறை பாவிகளான யூதர் அவரை நிந்தித்து தூஸித்ததினால் மட்டற்ற வியாகுலம் அடைந்த மாதாவே,

- யேசுநாதர் பாடுபடப்போவதற்கு விடைகொடுத்து அனுப்பி வைத்தபோது ஆத்துமம் பிரிந்தாற்போலத் துக்க வேதனைக்குட்பட்ட மாதாவே,

- யேசுநாதர் பூங்காவனத்தில் துக்க மிகுதியால் இரத்த வியர்வை வேர்த்து மரண அவஸ்தைப்பட்டதைக் கேட்டு மனமிழகிப் பரிதவித்த மாதாவே,ஸி
- திவ்விய கர்த்தர் ஒரு கள்வனைப்போலப் பாவிகளாற் பிடிக்கப்பட்டுச் சங்கிலி கயிறுகளால் கட்டப்பட்டதையும் சீஸர்களால் கைவிடப்பட்டதையும் அறிந்து திரளான கண்ணீர்விட்டு அழுத மாதாவே,

- உம்முடைய மாசற்ற குமாரன் அன்னாஸ், கைப்பாஸ் என்கிற பிரதான குருக்கள் வீட்டில் பொய்சாட்சிகளாற் குற்றஞ் சாட்டவும், சாவுக்கு நியமிக்கவும் பட்டதையும் கேட்டுத் தயங்கிக் களைத்த மாதாவே,

- திவ்விய நாதர் நீச ஊழியர்களால் திருக்கன்னத்தில் அடிக்கப்பட்டு திருமுகத்தில் துப்பப்பட்டு இரவு முழுவதும் சகலவித நிந்தை அவமான நிஸ்டூரத்துடன் வாதிக்கப்பட்டதைக்கேட்டு வியாகுலம் நிறைந்த மாதாவே,

- ஆண்டவர் ஒரு பாதகனைப் போலே பிலாத்து என்கிற துரையிடத்தில் ஒப்பிக்கப்பட்டு பற்பல குற்றம் சுமத்தப்பட்டு ஏரோது என்கிற இராசாவினாலும் அவன் சேனைகளினாலும் பைத்தியனாக நிந்திக்கப்பட்டதினால் அளவற்ற துயரப்பட்ட மாதாவே,

- பிலாத்து மாசற்ற நாதரைப் பறபாஸ் என்கிற கொலைப்பாதகனோடு ஒரே வரிசையில் நிறுத்திக் காண்பிக்க யூதர் பாதகனை விடுதலையாக்கி நாதரைக் கொல்லக் கூவினதால் அகோர துக்கத்தால் மனம்நொந்த மாதாவே,

- நாதர் கற்றூணிற் கட்டுண்டு நிஸ்டூரச் சேவகராற் பட்ட அடியெல்லாம் உமது திரு இருதயத்தில் பட்டாற்போல் வேதனை அனுபவித்த மாதாவே,

- கசை அடியால் உம்முடைய நேச யேசுவின் திருச் சதை தெறித்து திருஇரத்தம் வெள்ளமாயோட திரு மேனியெல்லாம் ஒரே காயமானதைக் கண்டு இருதயம் பிளந்து விம்மியழுத மாதாவே,

- கர்த்தருடைய திருச்சிரசில் முள்முடி வைத்து அழுத்தவும், முங்கில் தடியால் அடிக்கவும, எல்லா பக்கத்திலும் முள்ளுகள் தைத்திறங்கவும், அவைகளின் வழியால் சிந்தின இரத்தத்தால் திருமுகந் தாடியும் நனையக்கண்டு வியாகுல முட்களால் இருதயத்திற் குத்தப்பட்ட மாதாவே,

- உம்முடைய ஏக நேசகுமாரனைச் சிலுவையில் அறைய வேண்டுமென்கிற அநியாயத் தீர்வையைக்கேட்டு வியாகுல அம்பினால் ஊடுருவப்பட்ட மாதாவே,

- உம்முடைய திவ்விய சுதன் மகா அவமானத்தோடு திரளான சனங்கள் சூழப் பாரமான சிலுவையைச் சுமந்து வருகிறதைக் கண்டிரங்கிப் பிரலாபித்த மாதாவே,

- ஒரு செம்மறியைப்போலக் கொலைக்களத்துக்குக் கூட்டிக்கொண்டு போகப்பட்ட உம்முடைய நேசகுமாரனைப் பின்சென்று துயரத்தாற் புலம்பின மாதாவே,

- துஸ்ட சேவகர் திவ்விய யேசுவின் காயங்களோடு ஒட்டியிருந்த உடைகளை தோலுரிக்கிறதுபோல் உரிக்கக் கண்டு ஏங்கின மாதாவே,

- அவரைச் சிலுவையில் அறைகிற சத்தத்தைக் கேட்டு வியாகுல மிகுதியால் மயங்கி விழுந்த மாதாவே,

- உம்முடைய நேச குமாரன் இரு கள்வருக்கு நடுவே உயர்ந்த சிலுவையில் நிறுத்தப்பட்டுத் திரளான சனங்களால் நிந்தித்துத் தூஸிக்கப்பட்டதைப் பார்த்து மனமுருகிக் கண்ணீர் வெள்ளமாய் சொரிந்த மாதாவே,

- யேசுநாதர் ஒருசாமம் சிலுவையில் கொடூர நிர்ப்பந்தங்களுடனே தொங்குகிறதைக்கண்டு வியாகுலத்தால் அவரோடே சிலுவையில் அறையுண்டவளைப்போல் நின்ற மாதாவே,

- யேசநாதர் பரம பிதாவைநோக்கி, என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கூறிய துயர வசனங் கேட்டுப் பரிதவித்த மாதாவே,

- உம்முடைய நேச குமாரன் தலைகுனிந்து மரிக்கிறதைக் கண்டு உமது பிராணன் பிரிந்து போகிறது போல் அதிக வேதனைக்குட்பட்ட மாதாவே,

- உயிர் பிரிந்த திவ்விய யேசுவின் ஒரு சேவகன் ஈட்டியாற் குத்தித் திறந்ததைக் கண்டு வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே,

- சீஸர்கள் சிலுவையில் நின்று இறங்கின நாதரின் திருச்சரீரத்தை உமது மடியில் வளர்த்தினபோது திருக்காயங்களைத் துயரத்தோடு உற்றுப் பார்த்து முத்திசெய்து திரளான கண்ணீர் சொரிந்து பிரலாபித்த மாதாவே,

- உமமுடைய நேச யேசுவின் திருச்சரீரம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டபோது துக்கசாகரத்தில் அமிழ்ந்தின மாதாவே,

- அவர் அடக்கப்பட்ட பின்பு நீர் தனியாயிருந்ததினால் அவருடைய திருப்பாடுகளை இடைவிடாமல் நினைத்து அளவற்ற துக்க வியாகுலத்திற்குட்பட்ட மாதாவே

- வியாகுல மிகுதியாற் சகல வேதசாட்சிகளைவிட அகோர வேதனை அனுபவித்த மாதாவே,

- எங்கள் நிமித்தம் இத்தனை வியாகுல துன்பத்துக்குள்ளான மாதாவே,
- சகல உபத்திர வியாகுலத்திலும் நம்பிக்கை அமரிக்கையோடு தேவ சித்தத்திற்கு கீழ்ப்படிந்த மாதாவே,

- சகல கஸ்தி துன்பங்களிலும் மாறாத பொறுமையின் உத்தம மாதிரிகையான மாதாவே,

- துன்ப துயரத்திலே அடியோர்க்கு அடைக்கலமும் ஆறுதலுமாயிருக்கிற வியாகுல மாதாவே,

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்களைப் பொறுத்தருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே

மு- யேசுக்கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக.
து- மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக
கருணைச் சமுத்திரமாகிய திவ்விய யேசுவே, தேவரீர் அடியோர்களுக்காகப் பட்ட கணக்கில்லாத கொடூர கஸ்தி நிர்ப்பந்த வேதனைகளுக்கும் மோட்ச இராட்சியத்திற் சுதந்தரித்துக் கொண்ட அளவில்லாத பேரின்ப மகிமை வல்லபத்திலும் உம்முடைய நேசத் திருமாதாவைப் பங்காளியாக்கத் திருவுளமானீரே. தேவரீர் உம்முடைய திருப்பாடுகளையும் நேச மாதாவின் வியாகுலத்தையும் பார்த்து, உமது திரு இரத்தத்தின் விலைமதியாத பூரண பயன்களுக்கும் அத்திருமாதாவின் புண்ணிய பேறுகளுக்கும் அடியோர்களைப் பங்காளியாக்கி உமது பேரின்ப இராட்சியத்தின் ஆனந்த மகிமைக்கு எங்களைப் பாத்திரவான்களாக்கியருளும் ஆமென்.








 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்