|
இயேசுக்கிறீஸ்துவில் அன்பார்ந்த இறைமக்களே! |
இருள் சூழ்ந்துள்ள இந்த வேளையிலே, முடிவில்லாத பேரொளியாகிய
நம் ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா பெருவிழாவை கொண்டாட
நாம் மகிழ்வுடன் கூடிவந்துள்ளோம். பாவத்தையும் சாவையும்
வென்ற இயேசு வெற்றி வீரராக உயிர்தெழுந்தார். இந்த இரவிலே
அவர் நம்மையும், பொய்மையினின்று மெய்மைக்கும், இருளினின்று
ஒளிக்கும், அடிமை வாழ்வாகிய பாவத்திலிருந்து விடுதலை
வாழ்வாகிய அருள் வாழ்விற்கும், சாவினின்று வாழ்விற்கும்
கடந்து வரச் செய்கின்றார். பத்து கன்னியர் உவமையில் வரும்
விவேகிகளைப் போன்று, எரியும் திரிகளை கைகளில் தாங்கி,
ஆண்டவருக்காகக் காத்திருந்து, இப்புனித வழிபாட்டு
நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்குகொண்டு, நம் மீட்பர்
இயேசுவில் புதுவாழ்வு பெற, உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இன்றைய பாஸ்கா திருவிழிப்பு
பெருவிழா நான்கு பகுதிகளாக அமைகின்றது
1) திரு ஒளி வழிபாடு.
2) இறை வாக்கு வழிபாடு.
3) திருமுழுக்கு வழிபாடு.
4) நற்கருணை வழிபாடு.
1. திரு ஒளி
வழிபாடு
புது நெருப்பு ஆசீர்வதித்தல்
ஒளி என்பது உலகம் உருவானது முதல் இறைவனின் அடையாளக்
குறியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒளியின் வடிவில்தான்
முட்புதரில் மோயீசனுக்கு இறைவன் காட்சியளிக்கிறார்.
இஸ்ராயேல் மக்களை இறைவன் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில்
வழி நடத்துகிறார். இதே ஒளிதான் இயேசுவின் பிறப்பை
அறிவித்தது. இதே ஒளிதான் இன்று இயேசுவின் உயிர்ப்பையும்
உறுதிப்படுத்துகின்றது.
இப்பொழுது புதிய நெருப்பை
குருவானவர் மந்திரிக்கின்றார்.
பாஸ்காத்திரி ஏற்றுதல்
குரு பாஸ்கா திரியில் சிலுவை அடையாளமும், அகரமும், னகரமும்
என எழுதுகின்றார். இந்த அடையாளங்கள் சிலுவையின் மூலமாகவே
மனுக்குலம் மீட்கப்பட்டது என்றும் கிறீஸ்துவே முதலும்,
முடிவும், அவருக்கே அனைத்து மாட்சிமையும், புகழும்
உரியதாகும் என்பதையும் குறிக்கின்றன.
பாஸ்காபவனி
குரு பாஸ்கா திரியை ஏற்றி பீடத்தை நோக்கி பவனி வருவார்.
"கிறீஸ்துவின் ஒளி இதோ" என்று பாடும் குருவுக்கு "இறைவா
உமக்கு நன்றி" என்று பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பாஸ்காப்புகழுரை
நம் ஆதிப்பெற்றோர் செய்தபாவங்களும் மனுக்குலம் அனைத்தின்
பாவங்களுமே நம் மீட்பர் இயேசுவை சாவிற்கு உள்ளாக்கியது.
ஆயினும் அவர் பாவத்தை வென்றார். பாஸ்கா இரவு விடுதலையின்
இரவு. எனவே கிறீஸ்துவைப் பிரதிபலிக்கும் ஒளியின் மக்களாக
நாமும் எரியும் திரிகளைக் கையிலேந்தி, ஆண்டுகள் பலவாயினும்
ஆண்டவனுக்கு ஏற்ற பாடலாக அமைத்த இப்புகழுரைக்கு எழுந்து
நின்று செவிமடுப்போம்.
2. இறைவார்த்தை
வழிபாடு
முதல் வாசக முன்னுரை (தொநூ 1: 1-2:
2)
இறைவன் அனைத்துலகிற்கும் தலைமை வகிப்பவராக அனைத்தையும்
ஆளுபவராக இருக்கிறார். எனவேதான் அவர் அனைத்தையும் படைத்து
இருளை இல்லாமல் செய்து இறுதியில் மனிதனை தம் சாயலிலே
படைத்து அவனை படைப்பின் சிகரமாக்கினார், அவனோடு உறவுகொண்டு
வழிநடத்தினார். இன்னும் கிறிஸ்து வழியாக இறைவன்
திருச்சபையை பல்வேறு அடையாளங்கள் வாயிலாக வழிநடத்துகிறார்.
தமது அருட்கரத்தால் திருச்சபையின் கை பிடித்து காலத்தின்
அறிகுறிக்கேற்ப செயல்படுத்துகிறார் என்ற நம்பிக்கையோடு
இறைவார்த்தைக்கு செவி மடுப்போம்.
இரண்டாம் வாசகம் (விப 14: 15 -15:
1)
இறைவன் தொடக்கம் முதல் இஸ்ராயேல் மக்களை பல்வேறு
துன்பங்களிலிருந்து காத்தார், மோயீசன் தலைமையில் இஸ்ராயேல்
மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற அற்புத நிகழ்வுகளையும்,
எகிப்தியரை முறியடித்து மக்களை காப்பாற்றினார் என்பதையும்
வாசிக்க கேட்போம்.
மூன்றாம் வாசகம் (எசே 36:
16-28)
இறைவனின் அன்பையும் அரவணைப்பையும் உணராததால் இஸ்ராயேல்
மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். பாவத்தால்
இறுகிப்போன மனித உள்ளங்கள் திரும்பி ஆண்டவருக்குள்
வருகிறபோது, தூய நீரினால் தூய்மையாக்கி தன்னோடு
சேர்த்துக்கொள்வார் என்று கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
(மூன்றாம் வாசகம் முடிந்தவுடன்
உன்னதங்களிலே பாடப்படும். மணி அடிக்கப்படும், பீடத்தின்
திரிகள் பற்றவைக்கப்படும்).
திருமுகம் (உரோ 6: 3-11)
இயேசு கிறிஸ்துவோடு துன்பப்படுகிறபோது இறக்கிறபோது
திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம், எனவே பாவ
வாழ்வைக் கடந்து தூய வழிகளில் வாழுங்கள் எனக் கூறும்
இவ்வாசகத்தைக் கேட்போம்.
நற்செய்தி வாசகம் (மாற்கு
16, 1-7)
3.
திருமுழுக்கு வழிபாடு:
திருமுழுக்கு வழிபாடு கிறிஸ்தவர்கள் எனப்படுகிற நாம்
அனைவரும் இயேசுவின் இறப்பிலும், உயிர்ப்பிலும்
பங்கேற்கிறோம் எனபதைக் குறித்துகாட்டுகிறது. கிறிஸ்துவின்
உயிர்ப்பு நமது விசுவாசத்தின் ஆணிவேர். ஆகவே கிறிஸ்து
இயேசுவின் உயிர்ப்பில் விசுவாசம் கொண்டு, நமது வாழ்வை
தூய்மைப்படுத்திக் கொள்ள இந்த வழிபாட்டில் பங்கெடுப்போம்.
இப்போது குருவானவர் நீரின் மீது இறைவன் இறங்கிவர நம்
அனைவரையும் மன்றாட அழைக்கிறார். தொடர்ந்து புனிதர்கள்
பிரார்த்தனை பாடப்படுகிறது. அனைத்துப் புனிதர்களின்
பரிந்துரை வழியாக இறைவனின் அருள் இந்த திருமுழுக்கு
தொட்டியில் உள்ள நீரில் இறங்க அனைவரும் எழுந்து நின்று
மன்றாடுவோம்.
புனிதர்களின் பிரார்த்தனை
திருமுழுக்கில் பெற்ற இறைஅருளுக்கு ஏற்ப வாழ்ந்து,
மீட்பின் நிறைவைப் பெற்றவர்கள் புனிதர்கள் என்பதால்
புனிதர்களின் மன்றாட்டுமாலை பாடப்படுகின்றது. நாமும்
விசுவாச வாழ்வில் நாளும் வளரத் தேவையான அருளை
இறைவனிடமிருந்து பெற்றுத்தருமாறு புனிதர்களிடம் வேண்டி
கரம் குவித்து பக்தியுடன் பாடுவோம்.
திருமுழுக்குத் தண்ணீர்
மந்திரிக்கப்படுகிறது:
குருவானவர் திருமுழுக்கு நீரில் இறையாசீர்
பொழியப்படவும் புதுப்பிறப்பை அருளும் தூயஆவியானவர் இந்த
நீரில் இறங்கி புனிதப்படுத்துமாறும் செபிக்கிறார்.
மீட்பின் வரலாற்றில் இறைவன் தண்ணீரை எவ்வாறெல்லாம்
பயன்படுத்தினார் என்பது இச்செபத்தில் நினைவு கூரப்படுகிறது.
தண்ணீர் கடவுளுடைய கொடைகளில் முதன்மையானது. உலகம்
உண்டாவதற்கு முன் தண்ணீர்தான் எங்கும் நிறைந்திருந்தது.
இந்த தண்ணீரின் தன்மைகள், பலன்கள் கணக்கற்றவை. யோர்தான்
ஆற்றிலே இயேசுவை ஆவியால் அபிஷேகம் செய்வதற்கு தண்ணீர்
தேவைப்பட்டது. இன்றும் நாம் புனிதமடைவதற்கு
புதுப்படைப்பாவதற்கு திருமுழுக்குத் தண்ணீர்
தேவைப்படுகிறது. ஆகவே இப்போது குருவானவர் இந்த தண்ணீரை
ஆசீர்வதித்து புனிதப்படுத்துகிறார்.
(குருவானவர் தண்ணீரிலிருந்து திரியை
எடுத்தவுடன்) அனைவரும் இப்போது நான் சொல்வதை
தொடர்ந்து சொல்லுங்கள்.
"நீரூற்றுகளே ஆண்டவரைப் போற்றுங்கள் என்றென்றும் அவரைப்
புகழ்ந்தேத்துங்கள்"
திருமுழுக்கு வாக்குறுதிகளை
புதுப்பித்தல்:
அனைவரும் மெழுகுதிரிகளை பற்றவைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு
மகத்துவமிக்க நேரம்.
திருமுழுக்கின்போது நமது ஞானபெற்றோர்கள், நமக்கு பதிலாக
வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். இப்போது அவர்கள் கொடுத்த
வாக்குறுதிகளை நாமே புதுப்பித்து கொள்வோம். திருமுழுக்கு
பெற்றுள்ள நாம், நமது திருமுழுக்கின்போது இறைவனுக்குக்
கொடுத்த வாக்குறுதிகளை மறந்து, நம்பிக்கை இன்றி, மனம்
போனபோக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் புனிதமான
இரவிலே, உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த தெய்வீக உணர்விலே
மிகுந்த பொறுப்புடன், நன்கு உணர்ந்து நம் வாக்குறுதிகளை
அனைவரும் எழுந்து நின்று மெழுகுதிரிகளை ஏற்றி
புதுப்பிப்போம்.
உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டுமானால்
இறைவனுக்கு எதிராக உள்ள தீயசக்திகளை விட்டுவிடுகிறேன்
என்றும் கடவுளின் வெளிப்பாட்டினையும், வழிகாட்டுதலையும்
ஏற்றுக்கொள்கிறேன் (அதாவது ஒருமையில் விட்டு விடுகிறேன் -
ஏற்றுக்கொள்கிறேன்) என்றும் பதிலளிப்போம்.
(திருமுழுக்கு வாக்குறுதி
புதுப்பித்துக்கொண்ட நம்மீது தூய நீர்
தெளிக்கப்படும். அவ்வேளை தேவாலய வலப்புறமிருந்து என்ற
பாடல் பாடப்படும்.
இறைமக்களின் வேண்டல்கள்
உயிர்ப்பின் உயிரே!
சாவு, பாவம், இருள் போன்ற தீமைகளை வீழ்த்தி, உயிர்ப்பு,
நிலைவாழ்வு, நிறையுண்மை போன்ற மறையுண்மைகளை நோக்கி, நீர்
பயணம் செய்ததுபோல, நாங்களும் எங்கள் சோதனைகளை வீழ்த்தி
உம்வழியில் வெற்றி நடைபோட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
உலகின் ஒளியே!
இஸ்ராயேல் மக்கள் அன்று வேதனைகளையும், சோதனைகளையும் கடந்து,
பாஸ்கா விழா கொண்டாடியது போல, உமது உடலாம்
எங்கள்தாய்த்திருச்சபை பல்வேறு எதிர்ப்புக்களைத் தாண்டி,
பாஸ்கா விழாவின் கனிகளான நம்பிக்கை, அன்பு, அருள், ஒளி
இவைகளை நிரமபப் பெற்று வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
உலகின் இரட்சகரே!
உயிர்ப்பின் பாஸ்கா பலியை கொண்டாடும் எங்கள் பங்கு மக்கள்,
பிள்ளைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், ஏனைய
இறைமக்கள் அனைவரும் உமது உயிர்ப்பின் ஒளியைப் பெற்றிடவும்,
வீழ்ந்துபோன அவர்களது வாழ்வு வளம்பெறவும் வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்வின் வள்ளலே!
பல்வேறு பிரச்சனைகளால் அல்லல் படும் எங்கள் தாய்நாடு, உமது
உயிர்ப்பால் முழுவிடுதலை பெறவும், விடுதலையை நோக்கிப்
பயணம் செய்யம் நாட்டுத் தலைவர்கள், நாட்டுக்குப் பணி
செய்யவும், விடுதலையின் கீற்றுக்களான ஒற்றுமை, சமத்துவம்,
அமைதி எங்கள் நாட்டில் சுடர்ந்திட வேண்டுமென்றும், இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4.
நற்கருணை
வழிபாடு:
வாழ்வின் உணவைப் பெற்று வாழும் வாழ்வைப் பொருளுள்ளதாக
மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். உண்ண உணவும் உடுக்க
உடையும் இல்லா மானிடருக்கு, உணவும் உடையும் கிடைக்க ஆவன
செய்ய இந்தத் திருவிருந்து நம்மை உந்தித் தள்ளட்டும்.
நற்கருணை என்றாலே பகிர்வு என்று பலமுறை கேட்டு ஓய்ந்து
விட்ட நாம், எப்போது பகிரப்போகிறோம் என்ற கேள்வியை இந்தத்
திருவிருந்து நம்முள் எழுப்பட்டும். |
|
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M. |
|
|
|
|
|
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M. |
|
|
|
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி. |
|
|
|
|
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம். |
|
|
|
|
|
|
|
|
இறைவாக்கு
ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள்
பாளையங்கோட்டை |
|
|
|
|
|
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை
ஆயர் F.அந்தோனிசாமி |
|
|
|
|
மறையுறை
மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ் |
|
|
|
திருவுரைத்
தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை |
|
|
|
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி |
|
|
|
|
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
|
|
|
|