நம்பிக்கையை வளர்க்க ஆசி வேண்டி வந்திருக்கும் அன்பு உள்ளங்களே!
மீன் வலை ஒன்று இன்றைய திருப்பலியில் நமது நம்பிக்கை நிலையை எண்ணிப்
பார்க்கச் சொல்லி அழைக்கிறது! மலையளவு சோதனை என்றாலும் நிலைகுலையாத
நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வழிகாட்டி வலைகிழிய அகப்பட்ட மீன்கள்
துள்ளுகின்றன!
இரவெல்லாம் இமைவிழித்து வலைவிரித்து சோர்ந்த போதும்கூட இயேசுவின்
சொல்லைக் கேட்டு வலையை வீசிய போது அகப்பட்ட மீன்பாட்டைக் கண்டு ஆழமான
நம்பிக்கைக்குள் அகப்பட்டு பேசிக் கொண்டார்கள். கூடவே ஆன்மாவைப்
பிடிக்கும் அதிசயத் துண்டிலாக மாறிப்போனார்கள். அலையோடு போராடி வலை
வீசிய நிகழ்வில் சிதறிய சிந்தனை பரிசீலிக்கப்பட்டது. மனிதரை
பிடிக்கும் திறமை பரிசளிக்கப்பட்டது.
உழைப்பில் களைப்பும், விடாமுயற்சியில் சோர்வும் தாக்கினாலும் நம்பிக்கை
நெம்புகோலை வெற்றியின் திசையில் நகர்த்தினால், கடலின் அலைகூட
வெற்றிப்படிக்கட்டாகும் கலையைக் கற்றுக்கொடுக்கும்.
உழைப்பு உயர்வுக்கு வித்து...
விடா முயற்சி வளர்ச்சிக்கு பயிற்சி....
நம்பிக்கை வெற்றிக்கு நெம்புகோல்....
ஆம் ஆன்மாவைப் பிடிக்கும் அதிசயத் தூண்டிலாக மாற நம்பிக்கையுடன் உழைக்க
முன் வருவோம். நமக்கும் மனிதரை பிடிக்கும் திறமை பரிசாக அளிக்கப்படும்
அப்போது விரும்பும் வரங்கள் பெற்று அதிசயத்தூண்டிலாக வலம் வருவோம்..
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. உமது வார்த்தையில் நம்பிக்கை வைத்த சீமோனை ஆன்மாவைப்
பிடிக்கும் அதிசய தூண்டிலாக்கிய இயேசுவே! திருச்சபைத்
தலைவர்கள் இறை மக்களை பிடிக்கும் அற்புத மனிதர்களாக
வலம் வர அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆழத்திற்கு தள்ளிக் கொண்டு போய் மீன்களைப் பிடிக்க
வலைகளைப் போடுங்கள் என்று சொன்ன இயேசுவே!
நாட்டு மக்களை உயர்த்த வேண்டும் என்ற ஆழமான சிந்தனை வலைகளை
மக்களுக்காக விரிக்கும் மன நிலையை நாடுகளின் தலைவர்களுக்குத்
தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3 'அஞ்சாதே மனிதரை பிடிப்பவரக மாற்றுவேன்' என்று சொன்ன
இயேசுவே!
எங்கள் ஆன்மீக வழிகாட்டிகள் உமது சொல்லை நம்பி வீசும்
வலைக்குள் ஏராளமான இறைமக்கள் அகப்பட்டு பயன்பெற
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கை உணர்வினை விதைக்க மீன்பிடிப்போரை அழைத்த
இறைவா!
இங்கே கூடியிருக்கும் இறைமக்கள் உள்ளங்களில்
குடியிருக்கும் துன்ப துயரங்கள், நம்பிக்கை குறைவான செயல்பாடுகள்,
அச்சம் அனைத்தையும் அகற்றிவலுவான நம்பிக்கையை தந்தருள
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
ரிக்ஸியா 13 வயது சிறுமி. அவள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டாள்.
அதிகமான அளவிற்கு மருந்து எடுத்து உடல் சோர்வுற்றாள் கூடவே உடல்
நிலை தேறாது என மனமும் சோர்வுற்றாள். அவளிடமிருந்த எதிர்மறை எண்ணத்தை
மாற்றி நம்பிக்கைக் கொடுக்க விரும்பினார் அவளது தந்தை. அதற்கான
வழியை யோசித்துக் கொண்டே சென்ற போது ஒருவன் நடந்து செல்லும்
பாதையில் ஓடுவது தெரிந்தது. அவன் காலில் அணிந்திருந்த காலணி
வேறுபட்டிருப்பதைக் கண்ட அவள் தந்தை காரை பின் நோக்கி ஓட்டி வந்து
அவனிடம் விசாரித்தார். நிச் என்ற பெயருடைய அவன் காலில்லாத
நிலையில் மாறுபட்ட காலணிகளோடு பயிற்சி பெற்று ஓடுவதாகச்
சொன்னான். அன்றே உறுதியுடன் தானும் ஓடிப் பயிற்சி பெறவிரும்பினார்.
அவNhடு அவளது மகளும் ஓடிப் பயிற்சி பெற முன் வந்தாள். அந்தமப்
பெண் பள்ளி இறுதி வகுப்பு முடிக்கும் போது நானூறு மைல் ஓட்டப்பந்தயத்தில்
பங்கு பெற்று பரிசும் பெற்றாள். அதன் பிறகு நோயைப் பற்றி பிரச்சனையே
இல்லை. காலில்லாமல் ஓடியது நம்பிக்கையை உருவாக்கியது, நோயுற்ற
அந்த சிறுமியும் புது நம்பிக்கையோடு வாழ்வுபெற வழிகாட்டியது.
நாம் அதிக கவனமும் உழைப்பும் முயற்சியும் எடுத்துக் கொண்டால்
தான் நல்லவற்றை பயிரிடமுடியும்.
முயற்சி முழுமையாக இருக்குமானால் விதி என்று சொல்லப்படுபவற்றைக்கூட
மாற்றி அமைக்க முடியும்.
வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது கூட்டைவிட்டு பறக்கின்ற
பறவைகள்கூட நம்பிக்கையோடு பறக்கின்றன. இன்று நாள் முழுவதம் சுகமாக
இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன. பறவைகளின் நம்பிக்கையைவிட
நமது நம்பிக்கை சிறகு பொதாக இருக்க வேண்டுமே!
கையில் இருப்பதைக் கொண்டு சாதனை படைக்க இயேசு கற்றுத் தருகிறார்.
அதனால் தான் ஆழத்திற்கு தள்ளிக் கொண்டு போய் வலைகளை வீசுங்கள்
என்கிறார்.
இரவு முழுவதும் வலை வீசி சோர்ந்தவர்களை மீண்டும் முயற்சிக்க
அழைக்கிறார். அதோடு சொல்லை நம்பியவர்களுக்கு புதுமையை அள்ளிப்
பொழிந்து அற்புதம் நிகழ்த்துகிறார்.
நம் கையில் உள்ளவற்றை ஆண்டவரிடம் அர்பணிப்போம். பழைய தோல்விகளை
சோர்வுகளை அகற்றிவிட்டு ஆண்டவரின் வார்த்தை மீது நம்பிக்கை
வைத்து ஆழ்கடலில் வலையை வீசினால் கடவுள் நம் வலைகளையும் கிழியுமளவுக்கு
ஏராளமான மீன்களால் நிரப்புவார். நாம் விரிக்க வேண்டியது நம்பிக்கை
வலைகளையே!
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.O.S.M.
பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
I. எசாயா 6:1-2அ, 3-8
II. 1 கொரிந்தியர் 15:1-11
III லூக்கா 5:1-11
எல்லோர்க்கும் எல்லாமாய்........
எல்லோர்க்கும் எல்லாமாய் எல்லோராலும் இருக்க முடியாது. இறைவன்
ஒருவரைத் தவிர. இன்றைய நற்செய்தியில் இறைவன் நம்மை அவர்
போல எல்லோர்க்கும் எல்லாமாய் இருக்க முயற்சி செய்ய அழைக்கின்றார்.
சீமோன் பேதுருவை அழைக்கும் பகுதி இன்று நமக்கு நற்செய்தி
வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பறிவே இல்லாத சீமோன்
பேதுரு இறைமகன் இயேசுவால் அழைக்கப்பட்டு, அவர் பணி செய்து
பின் திருச்சபையை ஆண்டு வழிநடத்தும் அளவுக்கு
பொறுப்பேற்கிறார். இயேசு சொன்னது போல மீன்களைப் பிடித்துக்
கொண்டு இருந்தவர் மனிதர்களைப் பிடிப்பவரைப் போலாகிறார். உள்ளதை
உள்ளபடி பேசும் குணமும், குடும்பப்பற்றும் பொறுப்பும்
கொண்டிருந்த அவரை அப்படியே தன்பால் திருப்பி இறைப்பணி
செய்ய அழைக்கிறார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தந்தையாக
தமையனாக மகனாக என்று எல்லாமாய் இருந்தவர் , அந்த குறுகிய
வட்டத்தை விடுத்து மூத்த அப்போஸ்தலர், திருச்சபையின் முதல்
தலைவர் என்ற பெரிய வட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
இயேசுவால் அழைக்கப்பட்ட சீமோன் பேதுரு எல்லோர்க்கும் எல்லாமாய்
மாறிவிடுகிறார். அவரது அழைப்பின் மேன்மையை வாசிக்க கேட்டு
மகிழ்ந்த நாமும் அவர் போல வாழ முயற்சி எடுப்போம்.
இயேசு இன்றைய நற்செய்தியில் தன்னைப் பின்பற்றி வந்த மக்களுக்கும்,சீமோன்
பேதுருவிற்கும், உடனிருந்த அவரின் உடன்பிறப்புக்களுக்கும்
எவ்விதமாக செயல்பட்டார், எப்படி, "எல்லாமாய்" இருந்தார்
என்பதை அறிந்து அவர் போல் வாழ விழைவோம்.
1. திரளான மக்களுக்கு வார்த்தையாய்.....
2. சீமோனின் உடன் பிறப்புக்களுக்கு வளமையாய்.....
3. சீமோன் பேதுருவிற்கு வாழ்வாய்.....
வார்த்தையாய்.......
வார்த்தை வடிவமாய் மனு உருவானவர் மீண்டும் அதே
வார்த்தையின் வடிவில் தன்னையும் தன் பணியையும் மக்களுக்கு
வெளிப்படுத்துகிறார். ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை
வெல்லும் ... ஆனால் இயேசுவின் வார்த்தைகள் நம் பலவீனத்தைக்
கொன்று, நம் பலத்தை வெல்லும். ஏரிக்கரையில் நின்று
கொண்டிருந்தவர், திரளான மக்கள் தனது வார்த்தையைக் கேட்க
விரைந்து வருவதை கண்டு கொள்கிறார். எந்நிலையிலும் எப்படிப்பட்ட
சூழ்நிலையிலும் இறைவார்த்தையைக் கேட்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா
என்பதைக் கண்டறிகிறார். நீர் நிலைகளின் அருகில் எப்போதும்
சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் . நீரலைகளின் சத்தம், அங்கு
மீன் பிடிக்கும்- விற்கும் மீனவர்களின் சத்தம், அதனை பேரம்
பேசி வாங்க காத்திருக்கும் மக்களின் சத்தம் என பல சத்தங்களின்
கலவையாக அந்த இடம் இருந்திருக்கும். இருப்பினும் அந்த சத்தத்தை
எல்லாம் விடுத்து, இறைவார்த்தையைக் கேட்க ஆவலாயிருப்பவர்களுக்கு
இறைவார்த்தை மட்டுமே காதில் விழ வேண்டும் என்று எண்ணியவராய்,
படகில் அமர்ந்து அவர்களின் கவனத்தை ஒன்றிணைக்கிறார். அவர்களின்
எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களை இறைவார்த்தையால் நிறைவு
செய்கின்றார். நமது எதிர்பார்ப்பு என்ன நமது இறைவனிடத்தில்
என்று யோசிப்போம். இறைவார்த்தைக்கு செவி கொடுக்க நாம் எடுக்கும்
முயற்சிகள் எவை என்பதை கண்டுணர்ந்து வாழ்வோம். வார்த்தையான
இறைவன் நம்மையும் ஆட்கொள்ள அனுமதிப்போம்.
வளமையாய்.....
மனிதன் வாழ அவசியமானது நலமான உடலும் வளமான வாழ்வும் தான் .
இது இரண்டில் ஒன்று குறைவுபட்டாலும் பிரச்சனை தான். இரவு
முழுவதும் பாடுபட்டு உழைத்து கரை திரும்பி, மீன்களுக்கு பதிலாக
வலையில் மாட்டிய கழிவுகளை கழுவிக் கொண்டிருந்தனர் சீமோன்
பேதுருவின் பங்காளிகள் உடன்பிறப்புகள். மீனுக்கு பதில் கழிவுகளா?
இன்று நம் பிள்ளைகள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்ற கவலைகளோடு
வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு வளமையாய் வருகின்றார்
இயேசு. யாராருக்கு என்னென்ன தேவையோ அதைக் கொடுப்பவர் இயேசு.
எனவே அன்றாட பசிதீர்க்கும் கவலை கொண்ட அவர்களுக்கு ஏராளமான
மீன்கள் என்னும் வளமையைக் கொடுத்து மகிழ்வடையச்செய்கின்றார்.
தங்களது குடும்பத்தின் சுமையை தீர்த்த இறைவனுக்கு தங்களையேக்
கையளித்து இயேசுவைப் பின்தொடர்கின்றனர். நமக்கு இன்று அப்பிரச்சனை
இல்லை நாம் நலமோடும் வளமோடும் வாழ்கிறோம். நம்மை மகிழ்வோடும்
நிறைவோடும் காக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்
என்ன என்று சிந்திப்போம்.
வாழ்க்கையாய்......
சீமோன் பேதுரு எளிய மனம் கொண்டவர், நினைத்ததைப் பேசும் குணம்
கொண்டவர். மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தும் உள்ளம்
கொண்டவர். இப்படிப்பட்டவரை இயேசு அழைக்கின்றார். இவரது எதிர்பார்ப்பு
எல்லாமே நல்லதொரு அமைதியான நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்
என்பது மட்டுமே. அது கிடைக்காமல் போகவே மிகுந்த வேதனையோடு
கரையில் அமர்ந்திருக்கிறார். அவரது எண்ண ஓட்டத்தை உணர்ந்தவராய்
இயேசு அவரது படகினைத்தெரிவு செய்கின்றார். அவரது வெளிப்புற
தோற்றத்தையும் சூழலையும் வைத்து அவரது எண்ணத்தை தெரிந்து
கொண்ட இயேசு அருகில் சென்று அவரிடம் பேச்சு
கொடுக்கின்றார். ஆழத்திற்கு சென்று வலைகளைப் போடுங்கள் என்கிறார்.
உமது வார்த்தைக்கேற்ப செய்கிறேன் என்று பேதுரு கூறிய மறுமொழியால்
கவரப்பட்டவர், அவரது எதிர்பார்ப்பிற்கும் மேலாக அதனைப்
பூர்த்தி செய்கிறார். ஏனெனில் அவரது வாழ்க்கை மீன்பாட்டைப்
பொருத்தே அமைந்திருந்தது. எனவே அந்த மீன் வழியாக அவரது ஏக்கத்தை
நிறைவு செய்கின்றார். இறைமகனின் வல்லமை செயலைக் கண்டு மனதுருகி
தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றார். தனது
வாழ்வாதாரமாய் இருந்த படகையும் வலையையும் விட்டு விட்டு இயேசுவைப்
பின்தொடர்கின்றார். நாம் நமது வாழ்வின் ஆதாரமாய் எவற்றைக்
கருதுகிறோம். அவற்றை இயேசுவிற்காய் விட்டு விட தயாராய் இருக்கின்றோமா?
சிந்திப்போம்.
ஆக யார் யார் என்ன என்ன எதிர்பார்ப்போடு இயேசுவை அணுகினார்களோ
அதனைப் பெற்றுக்கொண்டனர். நாமும் திருப்பலியிலும் மற்ற பிற
அருட்சாதனங்களிலும் அன்றாடம் இயேசுவை எதிர்கொள்கின்றோம்.
நாம் என்ன எதிர்பார்ப்போடு அவரை எதிர்கொள்கிறோம் என
சிந்திப்போம். நமக்கு வார்த்தையாக வளமையாக வாழ்வாக என எல்லாமாக
இருக்க இறைவன் விரும்புகிறார். அவரைப் பின்பற்றும் நாமும்
எல்லோர்க்கும் எல்லாமாக இருக்க முயல்வோம் இறையாசீர் என்றும்
நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm
பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்(ள்)
இன்று எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், தங்களுக்கு
தேவைப்படும் பணியாளர்களை தகுதி, திறமை பார்த்து
தேர்ந்தெடுக்கிறது. ஆனால் கடவுளின் அழைப்பைப்
பொறுத்த வரையில் இது முற்றிலும் நேர் எதிராக இருக்கிறது.
இந்த உலகம் 'மடமை' அல்லது 'தகுதியற்றவர்கள் வலுவற்றவர்கள்
'என யாரையெல்லாம் கருதியதோ அவர்களை தம் பணிக்கென
தேர்ந்தெடுக்கிறார். பொதுக்காலம் ஐந்தாம் வாரத்தில்
இருக்கும் நமக்கு, இயேசு முதல் சீடரை அழைத்தல் என்ற
நற்செய்தி பகுதி வாசகமாக கொடுக்கப்பட்டுள்ளது.
கெனசரேத்து ஏரிக்கரையில் எத்தனையோ மீனவர்கள் தன்
பிழைப்பின் ஆதாரமான மீன்பிடித் தொழிலை செய்து
கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் இயேசு சீமோன்
பேதுருவின் படகை தேடிச் சென்று அமர்ந்து, இறைவார்த்தையை
கற்பிக்கின்றார். சீடர்கள் தான் குருவைத் தேடிச்
சென்று கற்றுக்கொள்வதும், பயிற்சி பெற்றுக்கொள்வதும்
வழக்கமான ஒன்று. ஆனால் இயேசு என்னும் குரு, தானாகவே
முன்சென்று தான் விரும்பியவர்களை தன் சீடர்களாக
தேர்ந்தெடுக்கிறார். அவர்களில் யாரும் பணக்காரரும்
அல்ல , பணம் படைத்தவரும் அல்ல. மாறாக அவர்களின் எளிய
உள்ளத்தையும் , எதார்த்த குணத்தையும் கண்டு அவர்களை
தன் சீடர்களாகத் தேந்தெடுக்கிறார். சாதாரண மீன்
பிடிப்பவர்களை தம் சீடர்களாக அழைத்து , அவர்களுக்கு
மிகப்பெரிய பயிற்சியை அளிக்கிறார். பயிற்சியென்றால்
போர் பயிற்சியும், வில் வித்தையும் அல்ல. மாறாக தம்
வாழ்க்கையாளும், சொல்லாலும், செயலாலும் அவர்களுக்கு
வாழ்க்கைப் பாடங்களை பயிற்சியாகக் கொடுக்கிறார்.
இந்நற்செய்தி வழியாக இயேசு இரண்டு செய்திகளை நம்முன்
வைக்கிறார்.
1.ஆழத்திற்குச் சென்று வலைப்போடுங்கள்.
2.மனிதரைப் பிடியுங்கள்.
ஆழத்திற்குச் சென்று வலைபோடுங்கள்.
சீமோன் பேதுருவும், அவருடைய சகோதரரும் இரவு முழுவதும்
பாடுபட்டு உழைத்தும் மீன்பாடு ஒன்றும் கிடைக்கவில்லை.
இயேசு பேதுருவை நோக்கி "ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு
போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார்.
ஆனாலும் சீமோன் பேதுரு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
பணிந்த மனதோடும், அமைந்த உள்ளத்தோடும் ஏற்றுக்கொண்டு
, ஆழ்த்திற்குச் சென்று வலை விசுகிறார். இயேசுவின்
ஒற்றவார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால் ஏராளமான மீன்களை
பிடிக்கிறார்கள்.
ஆழம் தெரியாமல் காலைவிடாதே என்பார்கள் நம்
முன்னோர்கள். ஆனால் இங்கே இயேசு ஆழத்திற்குச்
சென்று வலைபோடுங்கள் என்கிறார். மனிதர்களை நம்பி
ஆழ்த்திற்குச் சென்றால் ஆபத்து. இறைவனை நம்பி ஆழத்திற்குச்
சென்றால், அங்கே மகிழ்ச்சியையும் , பொக்கிஷத்தையும்
கவர்ந்து வரலாம். ஆழம் என்பதை கடலின் ஆழத்தை மட்டும்
கூறவில்லை . மாறாக நம் வாழ்க்கைப் பயணத்திலும் ஆழமான
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.
கரையோரத்தில் நின்று காத்துக் கொண்டிருந்தோ மென்றால் நல்ல காற்றுக் கிடைக்கும், கடலின் அழகைக் கண்டு
இரசிக்கலாம். ஆனால் கையில் ஒன்றும் கிடைக்காது. அதே
சமயம் கடலின் ஆழ்த்திற்குச் சென்றால், நம் பசியைப்
போக்கும் மீன்களையும், விலைமதிப்பற்ற முத்துக்களையும், வளம்புரி சங்குகளையும் அத்தோடு கூட மகிழ்ச்சியையும்
கொண்டுவரலாம். உழைப்பு இருந்தால் ஊதியம் நிச்சயம்
இருக்கும்.
கடவுள் நமக்கு வாழ்க்கை என்னும் கொடையை
கொடுத்திருக்கி றார். அந்த வாழ்க்கையை மேலோட்டமாக
வாழாமல் ,உயிரோட்டமுள்ள ஆழமான, அர்த்தமுள்ள
வாழ்க்கை வாழவேண்டும் என்று இறைவன்
விரும்புகிறார். கடலின் ஆழத்திற்குள் எப்படி
விலையுயர்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கின்றதோ, அதே போல, நாமும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும் போது, நமக்குள்ளும்
நல்ல மாற்றங்கள் வெளிப்படுவதை உணரலாம். நாம் கற்றுக்கொண்ட
நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். அதனால்
இறைவன் விரும்பும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முயற்சிசெய்வோம்
நீ மனிதனைப் பிடிப்பவன் ஆவாய்.
இயேசு சீமோன் பேதுருவைப் பார்த்து, இனி நீ மனிதரைப்பிடிப்பவன்
ஆவாய் என்றார். பேதுரு ஆண்டவரே என்னால் மீன்களையே
பிடிக்கமுடிய வில்லை, நான் எப்படி மனிதர்களைப்
பிடிக்கப்போகிறேன்.... என்று எண்ணியபடி இயேசுவின்
காலில் விழுந்து , ஆண்டவரே நான பாவி, என்னைவிட்டுப்
போயிவிடும், என்றார். ஆனாலும் இயேசுவின்
பார்வையும் ,அவரின் தெய்வீகத் தன்மையும் சீமோனை ஈர்த்ததால்
,படகுகளையும், வலைகளையும் ,தங்கள் உடைமைகளையும்
விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர்ந்தார்கள். மீன்
பிடித்துக்கொண்டிருந்த இந்த பேதுருவைத் தான் அப்போஸ்தலர்களின்
தலைவராக இயேசு தேர்ந்து கொள்கிறார். இயேசுவின் உயிர்ப்பிற்குப்
பிறகு பேதுரு பல இடங்களுக்குச் சென்று, நற்செய்தி
அறிவித்து, பல துன்பங்களையும், துயரங்களயும் அனுபவித்து
பல ஆயிரம் மக்களை இயேசுவின் பாதத்தில் கொண்டுவந்து
சேர்த்தார். இறைவன் தாம் முன் குறித்தோரை அழைத்திருக்கிறார்.
தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கியிருக்கிறார்.
தகுதியற்றவர்களை அழைத்து தமக்கு தகுதியுடையவர் ஆக்கிக்கொண்டார்.
இயேசு சொன்னதை பேதுரு வெற்றிகரமாக செய்து முடித்து
விட்டார். நாம் என்ன செய்கின்றோம்..?
சிந்தனைக்கு...
பல்வேறு குணங்களை கொண்ட மனிதர்களுடன் நாம்
வாழ்கின்றோம். பல நேரங்களில் சில மனிதர்களைப்
பார்த்தாலே பயம், சிலரிடம் பேசினாலே பயம். சண்டை, சச்சரவுகள் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
எப்படிப்பட்ட மனிதர்களுடன் வாழ்ந்தாலும் ,நமது
வாழ்க்கையை நாம் தான் அர்த்தமுள்ள வகையில் வாழவேண்டும்.
அதனால் சில கசப்புகளை கடந்து தான் செல்ல வேண்டும்.
இயேசு பேதுருவுக்குப் பணித்ததுபோல், நமக்கும் பணித்துள்ளார்.
இயேசு என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக்
கண்டுணர்ந்து அதற்கான பாதையில் நமது பயணம் தொடர முடபடுவோம்.
இறுதியாக...... இறைவனால் நாம் ஒவ்வொருவரும் மனிதனாக
இம்மண்ணில் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அழைக்கப்பட்ட
ஒவ்வொருவருமே, ஒவ்வொரு விதத்தில் பணிசெய்ய
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நாம் எந்தப் பணிசெய்ய
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோமோ, அப்பணியில் வேரூன்றி
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவே இறைவன்
விரும்புகின்றார். அழைக்கப்பட்டவர்கள் என்ன பலர்,
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர். அப்படி
தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் இறைவனைத் தேடுவதையே நோக்கமாக
கொண்டுவாழ்வோம். இறைவனின் அன்பும் ,ஆசிரும் என்றும்
நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.
சகோ. செல்வராணி OSM
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
குறையே இறையால் நிறையாய்!
மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில்
நடுவில் புழங்கிய கதை இது (மெல் கிப்சன் அவர்கள் இயக்கிய
'
அப்போகாலிப்டோ'
என்ற திரைப்படத்தில் (2006) இக்கதை ஷாமான்
ஒருவரால் சொல்லப்படுவதாக அமைந்திருக்கும்): மனிதன் ஒருநாள்
காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள்
அவனைச் சுற்றி வந்து அவனிடம், '
நீ சோகமாக இருப்பதை
எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள்.
நாங்கள் உனக்குத் தருகிறோம்'
என்றன. மனிதன், '
எனக்கு நல்ல
கண்பார்வை வேண்டும்'
என்றான். கழுகு, '
என் பார்வையை
உனக்குத் தருகிறேன்'
என்றது. '
யாரும் எதிர்க்கமுடியாத
வலிமை வேண்டும்'
என்றான். ஜகுவார், '
நான் தருகிறேன்'
என்றது. '
பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்'
என்றான்.
பாம்பு, '
அதை நான் உனக்குக் காட்டுகிறேன்'
என்றது. எல்லா
விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தன.
எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான்.
அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, '
மனிதன் இப்போது
எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம்,
வருத்தம் இருக்காது'
என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக,
'
இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை
நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது
அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும்
வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த
வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த
பூமி சொல்லும்: '
இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம்
ஒன்றுமேயில்லை'
.
மனித உள்ளத்தில் இருக்கும் இக்குறை அல்லது வெற்றிடத்தைத்
தானாகவே மனிதர்கள் அறிந்துகொள்வார்களா? அவர்கள் அக்குறைகளை
அறிந்துகொண்டவுடன் அக்குறைகள் எப்படி நிறைவு செய்யப்படும்?
குறையுள்ள மனிதர்கள் மற்றவர்களின் குறைகளை நிறைவாக்க
முடியாத நிலையில், மனிதர்கள் விரும்பும் நிறைவைத் தருபவர்
யார்? என்ற கேள்விகளுக்கு விடையாக இருக்கிறது இன்றைய
இறைவார்த்தை வழிபாடு.
'
மனிதர்கள் எல்லாமே குறையுள்ளவர்கள்'
என்று நாம்
சொல்லும்போது, அது சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக,
அறநெறி, உடல்நலம் என பல தளங்களைச் சுட்டிக்காட்டினாலும்,
நம்மை முன்னேறாமல் தடுத்து, சில நேரங்களில் நம்மைப்
பின்னிழுக்கின்ற குறைகள் பெரும்பாலும் நம் உள்ளம்
சார்ந்தவையே. இவற்றிலிருந்து நாம் விடுபட நாம் இறைவனோடு
கைகோர்த்தால் மட்டுமே முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 6:1-8) எசாயா
இறைவாக்கினரின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். எசாயா
அழைப்பு நிகழ்வு, மோசே, கிதியோன், எரேமியா ஆகியோரின்
அழைப்பு நிகழ்வுகளை ஒத்திராமல், எசேக்கியேல்
இறைவாக்கினரின் (1-3) அழைப்பு நிகழ்வையே ஒத்திருக்கிறது.
ஏனெனில் இந்த இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே ஆண்டவர்
அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி வருகிறது. இந்த
நிகழ்வு கடவுளின் அரசவையில் நடப்பதுபோல எழுதப்பட்டுள்ளது.
உசியா அரசர் மறைந்த ஏறக்குறைய கி.மு. 742ஆம் ஆண்டில்
இந்நிகழ்வு நடக்கிறது. இப்படி வரலாற்று பின்புலம்
காட்டப்படுவது எதற்காக என்றால், இந்த நிகழ்வு ஒரு வரலாற்று
நிகழ்வு என்ற உண்மைநிலையைக் காட்டுவதற்கே. ஆண்டவர்
அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவரது தொங்கலாடை கோவிலை
நிரப்பியிருக்கின்றது. செராபின்கள் அரியணையைச் சுற்றி
இருக்கின்றன. '
செராபின்'
என்றால் எபிரேயத்தில் '
எரிந்து
கொண்டிருப்பது'
அல்லது '
எரிபவை'
என்பது பொருள். இந்த
செராபின்கள் வெறும் அழகுப் பதுமைகள் அல்ல. மாறாக, அவை
'
படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர்'
என்று
பாடிக்கொண்டிருக்கின்றனர். இறைவனின் பிரசன்னத்தையும்,
அவரைப் பற்றிச் செராபின்கள் பாடுகின்ற குரலொளியையும்
கேட்கின்ற எசாயா. சட்டென தன் நிலையை உணர்கின்றார். '
நான்
அழிந்தேன்!'
என கத்துகின்றார். தூய்மையின் முன் தன்
தூய்மையின்மையை உணர்கின்றார். எசாயா செய்த பாவம் அல்லது
அவர் கொண்டிருந்த குற்றவுணர்வு என்னவென்று
குறிப்பிடப்படவில்லை. உடனே நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து
வரும் செராபின் ஒருவர் எசாயாவின் உதடுகளை
தூய்மைப்படுத்துகின்றார். குற்றப்பழியும், பாவமும்
அகற்றப்படுகின்றது. இவ்வளவு நேரம் நடந்தவையெல்லாம் வெறும்
காட்சியாக இருக்கின்றது. இப்போது யாவே இறைவனே
பேசுகின்றார். '
யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார்
போவார்?'
எனக் கேட்கிறார். தூய உதடுகளைப் பெற்ற எசாயாவும்,
'
இதோ, நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்'
என்கிறார்.
ஆக, தன்னுடைய தூய்மையின்மையை இறைவனின் தூய்மையோடு ஒப்பிட்ட
எசாயா இறைவாக்கினரின் வெட்கம் என்ற குறையை, இறைவன்
நெருப்புத் துண்டால் தூய்மைப்படுத்தி அவரை
நிறைவாக்குகின்றார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:1-11) பவுல்
கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய இன்னொரு பிரச்சினை
பற்றி எழுதுகின்றார்: '
இறந்தவர் உயிர்ப்பு.'
கொரிந்து
நகரம் கிரேக்கச் சிந்தனையில் மூழ்கியிருந்தது. கிரேக்க
சிந்தனை உடலை ஆன்மாவின் சிறை என்று கருதியதால், உடலை
வெறுத்தது. நிலைவாழ்வு என்பது ஆன்மா உடலிலிருந்து பெரும்
விடுதலை என்றே கிரேக்கர்கள் நினைத்தார்கள். ஆனால், பவுலோ,
உயிர்ப்பு என்பதே நிலைவாழ்வு என்றும், உயிர்ப்பின்போது நம்
உடலும் மாற்றம் பெறும் எனவும் எழுதுகின்றார். கிறிஸ்து
உயிர்பெற்றெழுந்ததை சான்றாக வைத்து, இறந்தவர்கள்
உயிர்பெற்றெழுவார்கள் என்று கொரிந்து நகர திருஅவைக்கு
பவுல் தரும் இறையியல் விளக்கம் தருகின்றார்.'
கிறிஸ்து நம்
பாவங்களுக்காகஇறந்தார்அடக்கம் செய்யப்பட்டார்உயிருடன்
எழுப்பப்பட்டார்'
தொடக்கத் திருஅவையில் துலங்கிய முதல்
நம்பிக்கை அறிக்கை இதுவே. இதைப்போன்ற அறிக்கைகளை நாம் பிலி
2:1-13 மற்றும் கலா 3-அலும் வாசிக்கின்றோம். இந்த
நம்பிக்கையின் நீட்சியாக உயிர்த்த இயேசு கேபா, யாக்கோபு
என்று பலருக்குத் தோன்றியபின், இறுதியாக, '
காலம் தப்பிப்
பிறந்த குழந்தையைப் போன்ற'
தனக்கும் தோன்றியதாகப் பெருமை
கொள்கின்றார் பவுல். இவர் இப்படிப் பெருமை பாராட்டும்
நேரத்தில் இவருடைய உள்ளத்தில் உடனடியாக இவருடைய பழைய
வாழ்க்கை பற்றிய நினைவு தோன்றுகிறது. தன் இறந்த காலத்தில்
தான் செய்த '
கடவுளின் திருச்சபையைத் துன்புறத்திய செயல்'
அவரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகின்றது. ஆனால், '
கடவுளின்
அருளால்'
நான் திருத்தூதர் நிலையில் இருக்கின்றேன் எனக்
கடவுளின் அருள் தன் குற்ற உணர்வைக் களைந்ததையும்
நினைவுகூருகிறார் பவுல்.
ஆக, தன்னிடம் இருந்த குற்ற உணர்வு என்னும் குறையை கடவுளின்
அருளாலும், அந்த அருள் உந்தித் தள்ளிய உழைப்பாலும்
நிறைவாக்குகிறார் பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 5:1-11), '
இயேசு
முதல் சீடரை அழைக்கும் நிகழ்வை'
லூக்கா நற்செய்தியாளரின்
கண்கள் வழியாகப் பார்க்கின்றோம். இது நடக்குமிடம்
கெனசரேத்து ஏரிக்கரை அல்லது கலிலேயாக்கடல் பகுதி. முதல்
சீடர்களை அழைத்தல் என தலைப்பு இடப்பட்டிருந்தாலும், பேதுரு
மட்டுமே இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்றார். அவரின்
சகோதரர் அந்திரேயாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும்,
செபதேயுவின் மக்களான யாக்கோபு மற்றும் யோவானின் பெயரும்
வலிந்து திணிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில், இந்த
நிகழ்விற்கு எப்படி பெயரிடுவது? போதனை (5:1-3), அறிகுறி
(5:4-10அ), அழைப்பு (5:10ஆ-11) என மூன்று இலக்கியக்
கூறுகள் ஒரே இடத்தில் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் '
தச்சனுக்கு தெரியுமா தண்ணீரின் ஓட்டம்?'
என முதலில் சந்தேகிக்கின்ற பேதுரு, '
இரவு முழுவதும்
நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை'
என்று
தயங்குகின்றார். பின் அவரே, 'உம் சொற்படியே வலைகளைப்
போடுகிறேன்'
என வலைகளைப் போட மிகுதியான மீன்பாடு
கிடைக்கின்றது. தான் கொண்ட '
சந்தேகத்திற்காக'
மனம்
வருந்தும் பேதுரு, 'ஆண்டவரே, நான் பாவி. என்னைவிட்டு
அகலும்!'
என மன்றாடுகின்றார். ஆனால், '
அஞ்சாதே'
என அவரின்
பயம் அகற்றும் இயேசு, '
நீ இது முதல் மனிதரைப் பிடிப்பவன்
ஆவாய்'
என்ற புதிய பணியைக் கொடுக்கின்றார்.
ஆக, '
சந்தேகம்'
என்ற பேதுருவின் குறையை இயேசு, '
அஞ்சாதே!'
என்று தேற்றி நிறைவு செய்கின்றார்.
இவ்வாறாக, முதல் வாசகத்தில் எசாயாவின் '
வெட்கம்'
என்ற
குறையை '
உதடுகளைத் தூய்மைப்படுத்தி'
நிறைவு செய்கிறார்
கடவுள். இரண்டாம் வாசகத்தில், பவுலின் '
குற்றவுணர்வு'
என்ற
குறையை '
திருத்தூதர் நிலை'
என்ற நிலைக்கு அருளால் உயர்த்தி
நிறைவு செய்கிறார் கடவுள். நற்செய்தி வாசகத்தில்,
பேதுருவின் '
சந்தேகம்'
அல்லது '
ஐயம்'
என்ற குறையை
'
அஞ்சாதே'
என்று நீக்கி, அவரை நிறைவுள்ளவராக்குகின்றார்
இயேசு.
ஆக, குறையுள்ள ஒன்று நிறைவுள்ள இறைவனின் தொடுதலால்
நிறைவுள்ளதாகின்றது. குறையை நிறைவாக்குவது இறையே என்பதும்
புலனாகிறது. இன்று நாம் நம்மிடம் உள்ள குறைகளை எப்படி
இனங்கண்டு, அவற்றை இறைவனின் துணையால் நிறைவு செய்வது?
நம் கொடைகளைக் கொண்டாடுவது?
எசாயா என்னதான் தன்னைக் கடவுளின் தூய்மையோடு ஒப்பிட்டு,
தன்னையே, '
தூய்மையற்றவன்'
எனக் கருதினாலும், அவர் கடவுளைக்
காட்சியாகக் காணும் பேறு பெறுகின்றார். தன்னுடைய சம
காலத்தில் யாருக்கும் காட்சி அளிக்காத கடவுளைக் காட்சியில்
கண்டவராகின்றார் எசாயா. பவுல், கடவுளின் திருச்சபையைத்
துன்புறுத்தியவர் ஆனாலும், கடவுளின் அருள் அவரைச் சூழ்ந்து
கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தான் பெற்ற அருளை
வீணாக்காமல் மிகுதியாகப் பாடுபட்டு உழைக்கிறார் பவுல்.
பேதுரு, தன் வெறுமை நிலையில் மிகுதியான மீன்பாட்டைக்
கண்டுகொள்கின்றார். '
கடவுளின் காட்சி,'
'
கடவுளின் அருள்,'
'
மீன்பாடு'
என தாங்கள் பெற்ற கொடைகளை முதலில்
நினைவுகூறுகின்றனர் எசாயாவும், பவுலும், பேதுருவும். ஆக,
நம் குறைகளைக் காண்பதற்கு முன் முதலில் நம்மைச்
சுற்றியுள்ள நிறைகளைக் கணக்கில் எடுக்க வேண்டும்.
பழையதை விடு, புதியதை அணி
'
நமக்காக யார் போவார்?'
எனக் கடவுள் கேட்டவுடன், '
இதோ
நானிருக்கிறேன், எனை அனுப்பும்'
என முன் வருகிறார் எசாயா.
'
ஐயோ, என் இறந்தகாலம் மிகவும் மோசமானதே!'
என தற்பழி எண்ணம்
கொண்டிராமல், '
நான் வருகிறேன்'
என திருத்தூதுப்பணிக்கு
முன்வருகின்றார் பவுல். '
ஆண்டவரே, பாவி என்னைவிட்டு
அகலும்'
என்று இயேசுவைத் தன்னிடமிருந்து அகற்றியவர்,
'
மனிதர்களைப் பிடிப்பவராக'
முன்வருகிறார் பேதுரு. ஆக, நம்
குறைகளைக் கண்டவுடன் அவற்றை நாம் பற்றிக்கொண்டிருக்காமல்,
பழையனவற்றை விட்டுவிட்டு, புதியனவற்றை அணிந்துகொள்ள
முன்வருதல் வேண்டும்.
வலுவின்மையில் வல்லமை செயலாற்ற அனுமதிப்பது
இறையை நாம் அனுமதிக்காவிடில் அவர் நம் குறையை நிறைவாக்க
மாட்டார். '
நான் வருகிறேன்'
என்ற முன்னெடுப்பும், '
என்
படகில் ஏறிக்கொள்ளும்'
என்ற தாராள உள்ளமும் நாம்
அவருக்குக் காட்ட வேண்டும். எசாயா, பவுல், பேதுருவிடம்
முறையே விளங்கிய வெட்கம், குற்றவுணர்வு, மற்றும் ஐயம்
என்னும் உணர்வுகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன. நான்
என்னிடம் பொய் சொல்லும்போது வெட்கமும், மற்றவரிடம் பொய்
சொல்லும்போது குற்றவுணர்வும், இறைவனிடம் பொய் சொல்லும்போது
சந்தேகமும் வலுக்கிறது. இறைவன் என்னும் உண்மை இப்பொய்மைகளை
அகற்றிவிட அவரை நான் அருகில் அனுமதிக்கிறேனா? அல்லது அவர்
அருகில் நான் செல்கிறேனா?
இறுதியாக, என் உள்ளத்தில் உள்ள வெற்றிடமும் துவாரமும் என்
ஆற்றல் இழப்புக்குக் காரணமாக இருந்தாலும், என் ஆற்றல்களை
நான் கொண்டாடத் தொடங்கும்போது, என் அருகில் வருகின்ற அவர்
தன் நிறைவால் என் குறையை நிறைவாக்குவார். '
நிறைவானது
வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோகும்!'
குறைகள் நிறையப்பெற்ற ஒருவர் திருப்பாடல் ஆசிரியரோடு
இணைந்து (காண். திபா 138), '
ஆண்டவரே, என் முழுமனத்துடன்
உமக்கு நன்றி செலுத்துவேன்'
என்று பாடுவார்.
சீனாவின் "அன்னை தெரசா" என அழைக்கப்படுகின்றவர் கிளாடிஸ்
எல்வர்ட் (Gladys Aylward 1902-1970) சீனாவில் உள்ள மக்களுக்கும்,
தொடர்ந்து ஹாங்காங்கில் உள்ள மக்களுக்கும் நற்செய்திப் பணியோடு,
சமூகப் பணியையும் செய்த இவரது வாழ்க்கையை நாம் படித்துப்
பார்க்கின்றபோது, கடவுள் எப்படிச் சாதாரண மனிதர்களைத் தனது
பணிக்கென அழைத்து, அவர்களை உயர்த்துகின்றார் என்பது நமக்குப்
புரியும்.
இங்கிலாந்தில் உள்ள லிவர்போல் என்ற ஊரில் பிறந்த கிளாடிஸ்
எல்வர்ட், தனது பதின்வயதில் ஒரு மாத இதழை வாசிக்க நேர்ந்தபோது,
"சீனாவில் நற்செய்தி அறிவிக்கத் தயாரா?" என்றோர் அறிவிப்பைக்
கண்டார். உடனே இவர், இயேசுவைப் பற்றி அறியாத மக்களுக்கு
அவரது நற்செய்தி அறிவிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
சீனாவில் நற்செய்தி அறிவிக்க, அந்த மொழியைக் கற்றாக
வேண்டும் அல்லவா! ஆகையால், சீன மொழியில் கடவுளின்
வார்த்தையை எப்படி அறிவிக்க வேண்டும் என்பது பற்றிக் கற்றுத்
தந்துகொண்டிருந்த பயிற்சிப் பாசறைக்குச் சென்றார் இவர். அங்கிருந்தவர்களோ
இவருக்குச் சீன மொழி சரியாக வரவில்லை என்று, இவரை
வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இதனால் இவர் மிகுந்த வருத்தத்தோடு
வீட்டிற்குத் திரும்பி வந்தார்.
இந்நிலையில் சீனாவில் நற்செய்தியை அறிவித்துக்கொண்டே அனாதைக்
குழந்தைகளையும் கவனித்து வந்த 72 வயது நிரம்பிய ஜென்னி லாசன்
என்ற பெண்மணி தனது பணியைத் தொடர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்
என்று செய்தித்தாளில் அறிவிப்புக் கொடுத்தார். கிளாடிஸ் எல்வர்ட்
அதற்கு விண்ணப்பிக்கவே, ஒருமனதாகத் தேர்ந்துகொள்ளப்பட்டார்.
இதையடுத்து, 1932 ஆம் ஆண்டு கிளாடிஸ் எல்வர்ட்
சீனாவிற்குப் புறப்பட்டுச் சென்று, ஜென்னி லாசனின் பணியைத்
தொடர்ந்தார். சீனா மொழி வரவே வராது என்று புறக்கணிக்கப்பட்ட
இவர் சீனாவிற்குச் சென்றதும், மிக எளிதாகச் சீனமொழியைக் கற்றுக்கொண்டு
அங்குள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்.
இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுப் பலர் இயேசுவில் நம்பிக்கை
கொண்டார்கள். கூடவே இவர் அங்கிருந்த அனாதைக் குழந்தைகளையும்
கவனித்து வந்தார். 1938 ஆம் ஆண்டு சீனாவில் போர் மூண்டபோது
இவர் அனாதைக் குழந்தைகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு
ஹாங்காங்கிற்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு நற்செய்தியைப்
பணியையும் சமூகப் பணியையும் செய்து, பலரையும் இயேசுவின்மீது
நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
ஆம், சீன மொழி பேச வராது என்று புறக்கணிக்கப்பட்ட கிளாடிஸ்
எல்வர்ட், சீன மொழியை மிக எளிதாகக் கற்றுக்கொண்டு,
சீனாவில் உள்ள மக்களுக்கும், இன்னும் பலருக்கும் மிகுந்த
வல்லமையோடு நற்செய்தி அறிவித்து, அவர்களை இயேசுவில் நம்பிக்கை
கொள்ளச் செய்தது, கடவுள் தகுதியானவர்களை அழைப்பதில்லை; அழைப்பவர்களைத்
தகுதியானவர்களாக மாற்றுகின்றார் என்கிற செய்தியை நமக்கு
உணர்த்துகின்றது. பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே
செய்தியைத்தான் கூறுகின்றது. நாம் அது குறித்துச்
சிந்திப்போம்.
எல்லாரையும் அழைக்கும் இறைவன்:
"இறைப்பணியை "இவர்கள்"தான் செய்யவேண்டும். "அவர்கள்" எல்லாம்
செய்யக்கூடாது" என்று இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலேயே
மனிதர்களைப் பிரித்து வைக்கும் ஓர் அவல நிலை தொடர்ந்து
கொண்டிருக்கின்றது. ஆனால், ஆண்டவராகிய கடவுள் இதற்கு
முற்றிலும் மாறாக, எல்லாரும் தன்னுடைய பணியைச் செய்யலாம்
என்று பாவிகள், தன்னைத் துன்புறுத்தியவர் என்று யாவரையும்
தனது பணிக்கென அழைக்கின்றார்.
முதல் வாசகத்தில் தூய்மையற்ற உதடுகளைக்கொண்ட எசாயாவைக் கடவுள்
தனது பணிக்கென அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். எசாயா
தூய்மையற்ற உதடுகளைக் கொண்டிருந்தார் எனில், அவர் தூய்மையற்ற
இதயத்தைக் கொண்டிருந்தார் என்பதுதான் பொருள். ஏனெனில், உள்ளத்தின்
நிறைவே வாய் பேசும். அப்படிப் பார்க்கையில், தூய்மையற்ற அல்லது
கறைபடிந்த வாழ்க்கை வாழ்ந்த எசாயாவைத் தூய்மையான தனது பணிக்குக்
கடவுள் அழைக்கின்றார் என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும்.
இரண்டாம் வாசகத்தில், திருஅவையை மிகவும் துன்புறுத்தியவரும்,
காலம் தப்பிப் பிறந்த குழந்தையுமான பவுலின் அழைப்பினையும்,
அவரது பணிவாழ்வையும் குறித்து வாசிக்கின்றோம். தன்னைத்
துன்புறுத்தியவரையே தனக்காகவும், நற்செய்திக்காகவும்
துன்புறச் செய்வது எல்லாம், யாரும் நினைத்துப் பார்க்க
முடியாதது; அத்தகையதொரு செயலைக் கடவுள் பவுல் வழியாகச்
செய்கின்றார். நற்செய்தியில் பேதுரு மற்றும் அவரோடு இருந்தவர்களுடைய
அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும்
படிப்பறிவில்லாதவர்கள். மீன்பிடிக்கும் தொழிலைச் செய்தவர்கள்.
அப்படிப்பட்டவர்களை இயேசு தனது பணிக்கென அழைத்து, கடவுளின்
அழைப்பு எல்லாருக்கும் உண்டு. அதைத் தடுப்பதற்கு
யாருக்கும் உரிமை இல்லை என்பதை உரக்கச் சொல்கிறார்.
கடவுளின் வார்த்தையை வல்லமையோடு அறிவித்தல்:
கடவுள் பாவிகள், படிப்பறிவில்லாதவர்கள்; ஏன், தன்னைத்
துன்புறுத்தியவர்கள் எனத் தகுதியில்லாதவர்களையும் தனது பணிக்கென
அழைத்திருந்தாலும், அவர்களை அவர் அப்படியே வைத்திருக்கவில்லை;
மாறாக, அவர் அவர்களைத் தகுதியுள்ளவர் ஆக்குகின்றார் அல்லது
தமக்கு ஏற்புடையவர் ஆக்குகின்றார் (உரோ 8:30). தூய்மையற்ற
உதடுகளைக் கொண்டிருந்த எசாயாவை நெருப்புப் பொறியின் மூலம்
குற்றப் பழியை நீக்கித் தூய்மையாக்கியதன்மூலம், எசாயாவைக்
கடவுள் எப்படித் தமக்கு ஏற்புடையவர் ஆக்கிக் கொண்டாரோ, அப்படிப்
பேதுரு மற்றும் பவுலின் பாவங்களைக் கடவுள் மன்னித்து அவர்களைத்
தமக்கு ஏற்புடையவர் ஆக்கிக்கொண்டார்.
கடவுள் இம்மூவரையும் தகுதியுள்ளவர்கள் ஆக்கிக் கொண்டபிறகு,
அவர்கள் செய்த பணி மிகவும் அற்புதமானது. ஆண்டவருடைய அழைப்பைப்
பெற்ற எசாயா யூதா நாட்டினர் நடுவில் மிகச் சிறப்பாகப் பணிசெய்கின்றார்.
ஒரு காலத்தில் திருஅவையை, அதன்மூலம் கிறிஸ்துவைத்
துன்புறுத்திக்கொண்டிருந்த பவுலை இயேசு தனது பணிக்கெனத்
தேர்ந்துகொண்ட பிறகு, அவர் பிற இனத்தாருக்கு மிகந்த வல்லமையோடு
நற்செய்தி அறிவித்து, இயேசுவுக்குத் தன் உயிரையும் தருகின்றார்.
பேதுரு திருஅவையின் தலைவராக இருந்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
அறிவித்து, அவருக்காகத் தன் உயிரையும் தருகின்றார். இவ்வாறு
கடவுள் தகுதியற்றவர்களை அழைத்திருந்தாலும், தமது ஆற்றலால்
அவர்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கி, தமது பணியைத் திறம்படச்
செய்ய வைக்கின்றார்.
கடவுளில் நிலைத்திருத்தல்:
கடவுள் தகுதியற்றவர்களை அழைத்து, அவர்களைத் தகுதியுள்ளவர்கள்
ஆக்கி, அவர்கள் வழியாகத் தமது பணியைத் திறம்படச்
செய்திருக்கின்றார் எனில், அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்ட
நற்செய்தியைக் கேட்டு, அதன்படி வாழ்ந்து, அதில் உறுதியாக
நிலைத்திருக்க ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றார்கள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், "நான் அறிவித்த நற்செய்தியை
நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் மீட்பு அடைவீர்கள்"
என்கிறார். ஆகவே, தனது அடியார்கள் வழியாகத் தமது
வார்த்தையை மக்களுக்கு அறிவிக்கும் கடவுள், அவ்வார்த்தையைக்
கேட்டு, மக்கள் அதில் உறுதியாக நிலைத்திருக்கவேண்டும்
விரும்புகின்றார். அவ்வாறு மக்கள் நிலைத்திருந்தால், அவர்களுக்கு
மீட்பு உண்டு என்றும் கடவுள் வாக்களிக்கின்றார்.
இன்றைக்கு ஒருசிலர் கடவுளின் அடியார்கள் அறிவிக்கும் இறைவார்த்தையைக்
கேட்பதுமில்லை; கேட்டாலும் அதில் நிலைத்திருப்பதுமில்லை.
இறைவார்த்தையைக் கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும் (உரோ
10:17). எனவே, மக்கள் யாவரும் இறைவார்த்தையைக் கேட்டு, அதில்
உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள்
மீட்பினைப் பெற முடியும்.
சிந்தனைக்கு:
"ஒவ்வொரு கிறிஸ்தவருமே ஒரு மறைப்பணியாளர்" என்பார் சார்லஸ்
ஸ்பெர்ஜியோன். எனவே, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும்
கடவுளின் வார்த்தையை அறிவிக்கக் கடமைப் பட்டவர்கள் என்பதை
உணர்ந்து, கடவுளின் வார்த்தையை அறிவிப்போம். அதன்படி
வாழ்ந்து, அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
நிகழ்வு
கான்சாஸ் நகரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அற்புதமாக
கேலிச் சித்திரங்களை வரையக்கூடியவன்.
ஒருநாள் அவன் தான் வரைந்து வைத்திருந்த கேலிச் சித்திரங்களையெல்லாம்
எடுத்துக்கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை
கேட்டுப்போனான். அந்த நிறுவனத்தில் இருந்தவர்களோ இளைஞன்
கொண்டுவந்திருந்த கேலிச் சித்திரங்களைப் பார்த்துவிட்டு,
"
இந்த மாதிரிக் கேலிச் சித்திரங்களை எல்லாம் மக்கள் இரசித்துப்
பார்க்கமாட்டார்கள்"
என்று சொல்லி அனுப்பிவிட்டனர். இளைஞன்
அதை நினைத்து வருத்தமடையாமல், மறுநாள் வேறு ஒரு நிறுவனத்திற்குச்
சென்றான். அங்கேயும் அவன் வேறொரு ஏதோ ஒரு காரணத்திற்காக
வெளியே அனுப்பி வைக்கப்பட்டான். இப்படி அவன் பல நிறுவனங்களின்
வாசலை ஏறியபோதும், அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இதற்காக அவன் சிறிதும் மனதளராமல், ஒவ்வொரு நிறுவனமாக ஏறி
இறங்கினான்.
ஒருநாள் அவன் ஓர் அருட்தந்தையைச் சந்தித்து, வேலை கேட்டு
நின்றான். அருட்தந்தையோ, "
உனக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு
இங்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை... வேண்டுமானால், இங்கேயே
தங்கிக்கொண்டு ஆலயத்திற்கு விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக்கொடு"
என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அருட்தந்தை
கொடுத்த ஒரு சிறிய அறையில் தங்கிக்கொண்டு, ஆலயத்திற்கு
வேண்டிய விளம்பரப் பலகைகளைத் தயாரித்துக் கொடுத்துக்
கொண்டும் தன்னுடைய திறமைகளையும் வளர்த்துக் கொண்டும் வந்தான்.
அந்த இளைஞன் தங்கியிருந்த அறை கொஞ்சம் பாழடைந்திருந்தது.
அதனால் அவ்வப்போது அந்த அறைக்குள் எலிகள் வந்துபோயின. நாளடைவில்
எலிகளுக்கும் அவனுக்கும் இணக்கம் ஏற்பட, அவன் எலிகளை சற்று
வித்தியாசமாக வரைந்து, மக்களுடைய பார்வைக்கு வைத்தான். ஒருகட்டத்தில்
அவன் வரைந்த எலிகளைப் பற்றிய கேலிச் சித்திரங்கள் பிரபலமடையவே,
அவன் பெரும் பணக்காரன் ஆனான். ஆம்- அந்த இளைஞனின் பெயர்
வால்ட் டிஸ்டினி, அவன் வரைந்த கேலிச்சித்திரத்தின் பெயர்
மிக்கி மவுஸ். இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு
மையங்களாக இருக்கக்கூடிய டிஸ்டினி லாண்டும் டிஸ்டினி
வோல்ட்டும் இவருக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத் தக்கது.
தான் வரைந்த கேலிச் சித்திரங்கள் தொடக்கத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்டபோது
அதை நினைத்து மனந்தளராமல், தன்னுடைய திறமையின்மீது நம்பிக்கை
வைத்து விடாமுயற்சியோடு போராடி, வாழ்க்கையில் வெற்றிகண்டார்
வால்ட் டிஸ்டினி. நம்முடைய வாழ்க்கையில் வரும் சிறு சிறு
தோல்விகளைக் கண்டு மனந்தளராமால், விடாமுயற்சியோடு, அதே நேரத்தில்
நாம் எடுத்த காரியத்தில் மேம்போக்காக இல்லாமல், ஆழமாக
சென்றால், வெற்றிகள் கைகூடுவது உறுதி.
பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும்
நாம், இன்றைய இன்றைய நாளில் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தை
அடிப்படையாகக் கொண்டு, '
ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போ'
என்ற
தலைப்பில் சிந்திக்க இருக்கின்றோம். எனவே, அதைக் குறித்து
இப்போது பார்ப்போம்.
தோல்வியைச் சந்தித்த சீமோன்
நற்செய்தியில், இயேசு கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்தபோது,
அங்கு முந்தின நாள் இரவு, கடலுக்குள் மீன்பிடிக்கச்
சென்று, மீன்பாடு கிடைக்காமல் கரைக்குத் திரும்பி வந்து,
வலைகளை அலசிக்கொண்டிருந்த சீமோனையும் அவருடைய கூட்டாளிகளையும்
கண்டார். சீமோன் ஒரு மீனவர், அவருக்கு மீன்பிடிப்பதில் உள்ள
நெளிவு சுழிவுகள் எல்லாம் தெரியும். அப்படியிருந்தும் அவருக்கும்
அவருடைய கூட்டாளிகளுக்கும் இரவு முழுவதும் பாடுபட்டும்
மீன் ஒன்றும் கிடைக்காமல் இருப்பது வியப்பாக இருக்கின்றது.
சில சமயங்களில், நமக்கு எல்லாம் அத்துப்பிடி என்று
நினைத்துக்கொண்டிருக்கின்ற துறைகளில்கூட தோல்விகள் ஏற்படலாம்.
அத்தகைய தருணங்களில் நாம் மனமுடைந்து போகாமல், அடுத்த கட்டத்திற்கு
நகர்வதுதான் நல்லது. முந்தின நாள் இரவு மீன்பிடிக்கச்
சென்ற சீமோன், மீன் ஒன்றும் கிடைக்காததற்காக மீன்பிடித்
தொழிலை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, மாறாக, அவர் வலைகளை அலசிக்கொண்டிருக்கின்றார்.
வலைகளை அலசுதல் என்பது, மீண்டுமாக மீன்பிடிக்கச் செல்வதற்கு
தன்னையே தயார்செய்வதாக இருக்கின்றது.
ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய் வலைவீசிய சீமோன்
படகில் அமர்ந்தவாறே மக்களுக்குப் போதித்த இயேசு பின்னர்
சீமோனிடம், "
ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க
உங்கள் வலைகளைப் போடுங்கள்"
என்கிறார்.
இவ்வாறு சொன்ன இயேசுவிடம் பேதுரு விசனப்பட்டிருக்கலாம்,
'
இவர் தச்சரின் மகன்தானே, இவருக்கு எப்படி மீன்பிடிப்புப்
பகுதி தெரியும், அதுவும் இந்தப் பகல்வேளையில் இப்படி ஆழத்திற்குத்
தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கச் வலைகளைப் போடச்
சொல்கிறாரே'
என்று. ஆனால் அவர் அப்படியெல்லாம் விசனப்படாமல்,
"
ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும்
கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப்
போடுகிறேன்"
என்று படகை ஆழத்திற்கு இழுத்துக் கொண்டுபோய்
வலைகளை வீசுகிறார். அதனால் வலையே கிழிந்து போகின்ற அளவுக்கு
பெருவாரியான மீன்கள் கிடைக்கின்றன.
இங்கு பேதுரு, இயேசுவின் வார்த்தைகளின்மீது கொண்ட அசைக்க
முடியாத நம்பிக்கையையும் இயேசுவின் வார்த்தைகளுக்கு அவர்
கீழ்ப்படிந்து நடந்ததையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
வேறு யாராக இருந்தாலும் ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போகச்
சொன்ன இயேசுவிடம், '
எல்லாம் எங்களுக்குத் தெரியும்'
என்றுதான்
சொல்லியிருப்பார்கள். ஆனால், பேதுருவோ அப்படிச் சொல்லாமல்,
இயேசுவின் வார்த்தைகளை நம்பி, அதன்படி நடக்கின்றார். அதனால்
அதிசயத்தைக் கண்டுகொள்கிறார்.
மனிதர்களைப் பிடிப்பவராக மாறிய சீமோன்
சீமோன் (பேதுரு), இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு நடந்ததனால்,
நடந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போய், "
ஆண்டவரே, நான்
பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்"
என்கின்றார். ஆனால்
இயேசுவோ அவரிடம், "
அஞ்சாதே! இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவர்
ஆவாய்"
என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள், '
என் வாய்
திக்கும்'
(விப 4:10), '
நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்டவன்'
(எசா 6:5) , '
நான் சிறுபிள்ளைதானே'
(எரே 1:6) என்று சொன்ன,
மோசே, இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா போன்றோரிடம் ஆண்டவர்
சொன்ன திடப்படுத்தும் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துவதாக
இருக்கின்றன.
மீன்பிடித் தொழிலைச் செய்து இயல்பாகவே பிரச்சினைகளை
எதிர்கொள்வதற்கான மன உறுதியையும் பொறுமையையும் இணைந்து
உழைப்பதற்கான ஆற்றலையும் பெற்றிருந்த சீமோனால், திரு
அவைக்குத் தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்பதை அறிந்த
இயேசு, அவரை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குகின்றார்.
பேதுருவும் ஆண்டவரிடத்தில் தன்னை முழுவதும்
ஒப்படைத்துவிட்டு அவர் பணி செய்யப் புறப்படுகின்றார்.
சிந்தனை
ஒரு சாதாரண மீனவராக இருந்த சீமோன் பேதுரு, மனிதர்களைப்
பிடிப்பவர்களாக மாறி, பின்னர் திரு அவைக்கே தலைவராக
மாறினார் என்றால், அது அவர் இயேசுவை முழுமையாக நம்பி,
அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்ததனாலேயே சாத்தியமானது.
நம்முடைய வாழ்விலும் அது போன்ற அதிசயங்கள் நடக்கவேண்டும்
என்றால், நாம் இறைவனை முழுமையாக நம்பி, அவருடைய
வார்த்தைகளுக்குப் கீழ்படிந்து நடக்கவேண்டும்.
ஆகவே, நாம் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவருடைய
வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபிக்க மூன்று நிகழ்ச்சிகளை
இன்றைய வார்த்தை வழிபாடு நமக்குத் தருகிறது.
இறைவாக்கு உரைக்க இறைவன் எசாயாவை அழைத்தபோது, நான் தூய்மையற்ற
உதடுகளைக் கொண்ட மனிதன் என்றார் எசாயா. ஒன்றுமில்லாமையிலிருந்து
உலகைப் படைத்த இறைவனுக்கு எசாயாவின் உதடுகளைச் சுத்தப்படுத்த
எவ்வளவு நேரம் ஆகும்? இறைவன் எசாயாவின் உதடுகளைத் தொட, பரிசுத்தமாக்கப்பட்ட
எசாயா, இதோ நானிருக்கிறேன். என்னை அனுப்பும் என்றார் . இரண்டாவது,
புனித பவுல் உயிர்த்த இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
எந்த சக்தியாலும் இயேசுவின் உயிர்ப்பை தடுத்து நிறுத்த
முடியவில்லை என்று உரைத்தார் துணிவோடு.
மூன்றாவது, பேதுரு, செபதேயுவின் மக்கள் யாக்கோபு, யோவான்
இரவு முழுவதும் கடலிலே ஒன்றும் அகப்படாமல் சோகத்தில் இருந்தபோது,
இயேசு அவர்களைச் சந்திக்கிறார். மீன் ஒன்றும் அகப்படவில்லை
என்று கலங்கிய கண்களோடு பேதுரு இயேசுவை நோக்கிக் கூற , ஆழத்திற்கு
தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்
என்றார் இயேசு. அவ்வாறே பேதுருவும் யாக்கோபும், யோவானும்
நம்பி வலைகளை ஆழத்தில் வீச, ஏராளமான மீன்களை வளைத்துப்
பிடித்தனர். ஆம்! இயேசுவால் ஆகாதது ஒன்றுமில்லை.
விமான ஓட்டி ஒருவர் நள்ளிரவில் பயணிகளைப் பார்த்து, நாம்
ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். கடவுள் தான் நம்மைக்
காப்பாற்ற வேண்டும் என்றார் ஆங்கில மொழியில். ஆங்கிலம்
தெரியாத ஒருவர் தன் பக்கத்திலிருந்தவரைப் பார்த்து, விமானஓட்டி
என்ன சொல்கிறார் என்று கேட்டார். கேட்டவருக்குக் கிடைத்த
பதில், நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார் என்பது.
நாம் இவ்வுலகில் வாழ்வதே நம்பிக்கையில்தான். நாம் நம்பவில்லை
என்றால் உலகில் ஒரு நொடிப்பொழுதும் வாழவே முடியாது. ஆகவே
நம்பிக்கையை ஆடையாக அணிந்து, இறைவனால் முடியாதது ஒன்றுமில்லை
என்பதை உணர்ந்தவர்களாக வாழ்வோம். அப்போது அவர் நம்மீது கருணை
மழை பொழிந்திடுவார்.
ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
நம்பிக்கை என்றால் என்ன என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு
குட்டிக்கதை! பேரரசன் ஒருவன் ஓர் ஊரில் ஓர் அழகான கோயிலைக்
கட்ட விரும்பினான். கோயில் கட்டும் வேலை துவங்கியது.
கோயில் கட்டப்பட்ட இடத்திற்குப் பக்கத்தில் குடிசை ஒன்று !
அந்தக் குடிசைக்குள்ளே சிறுவன் ஒருவன். அவன் தினம் தினம்
கோயில் கட்டும் இடத்திற்குச் சென்று கோயில் கட்டப்படுவதை
வேடிக்கைப் பார்ப்பான். கோயில் கட்டப்படும் வேலை ஏறக்குறைய
முடிந்துவிட்டது. கோபுரத்தின் உச்சிப்பகுதி கட்டப்பட்டது.
அந்தக் கோபுரத்தின் மீது ஏற வேண்டும். ஏறி அங்கிருந்து ஊரைப்
பார்க்கவேண்டும். சிறுவனது கனவு நனவாகும் நாள் வந்தது.
கோபுரத்தின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்த கொத்தனாரின்
தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது. நல்ல வெயில்! கொத்தனார்
குனிந்து பார்த்தார். அங்கே அந்தச் சிறுவன்
நின்றுகொண்டிருந்தான். கொத்தனார் அவனைப் பார்த்து, தம்பி,
என் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது ; அதை எடுத்துத்தர
முடியுமா? என்று கேட்டார்.
நிச்சயமாக, இதற்காகத்தானே இத்தனை நாள்கள் , இத்தனை மாதங்கள்
காத்திருந்தேன் எனச் சொல்லி, சிறுவன் துண்டை எடுத்துக்கொண்டு
ஏணியில் ஏறினான். பாதி தூரம் சென்றிருப்பான். என்ன
நினைத்தானோ தெரியவில்லை, கீழே குனிந்து பார்த்தான்.
அதள பாதாளம்! கைகளும், கால்களும் நடுங்கத் தொடங்கின. கொத்தனாரைப்
பார்த்து, ஐயா எனக்கு மயக்கம் வருகின்றது என்றான். அதற்குக்
கொத்தனார், தயவு செய்து கீழே பார்க்காதே, மேலே பார், என்னைப்
பார் என்றார். அந்தச் சிறுவனும் அப்படியே மேலே பார்த்தபடியே
ஏணியில் ஏறினான்.
உச்சியை அடைந்தான். அவன் கனவு நனவாகியது; எல்லையில்லா பெருமகிழ்ச்சி
அடைந்தான்.
இந்நிகழ்ச்சியில் வந்த சிறுவன் கொண்டிருந்த மனநிலைக்குப்
பெயர்தான் நம்பிக்கை.
கொத்தனார் நம்மைவிடப் பெரியவர். அவர் சொல்வதில் உண்மையிருக்கும்
என அந்தச் சிறுவன் நம்பினான்.
கதையில் வந்த கொத்தனாரைப் போன்றவர்தான் கடவுள் ! கடவுள் நம்மைவிடப்
பெரியவர், அவர் சொல்லும் சொல்லில் உண்மையைத் தவிர
வேறொன்றும் இருக்காது என்று சொல்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.
இதோ, பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும்
இரண்டு உதாரணங்கள். தானியேல் நூல் இயல் 6. அங்கே நாம்
தானியேல் இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம். அவர் அரசனின்
தவறான ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததால் சிங்கங்களின்
குகைக்குள் எறியப்பட்டார். ஆனால் அவரோ தம் கடவுள்
இறந்தவர்களின் கடவுள் அல்ல, உயிருள்ளவரின் கடவுள் என்று
நம்பி, தமது நம்பிக்கை நிறைந்த கண்களைக் கடவுள் பக்கம்
திருப்பினார். சிங்கங்களின் வாய்கள் கட்டப்பட்டன ! அவர்
காப்பாற்றப்பட்டார்.
இன்றைய நற்செய்தி புனித பேதுருவின் வாழ்க்கையில் நடந்த ஓர்
அருமையான நிகழ்வை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றது.
அது காலை நேரம். கிழக்கு வெளுத்தது, கீழ்வானம் சிவந்தது.
பறவைகள் எல்லாம் கூட்டைவிட்டு வானில் பறந்து கானம் பாடின.
தெவிட்டாத தீந்தென்றல் இயற்கையை அழகாகத் தாலாட்டியது.
கடல் சிரித்தது ! கரை சிரித்தது !
ஆனால் அந்த மீனவர்களின் முகங்களில் சிரிப்பு இல்லை. காரணம்
இரவு முழுவதும் பாடுபட்டும் எந்த மீனும் அவர்களுக்குக்
கிடைக்கவில்லை. அங்கே இயேசு தோன்றுகின்றார்.
கவலையா? அங்கே இயேசு தோன்றுவார்.
கண்ணீரா? அங்கே இயேசு தோன்றுவார்.
மயக்கமா? அங்கே இயேசு தோன்றுவார்.
தயக்கமா? அங்கே இயேசு தோன்றுவார்.
அந்த மீனவர்கள் மனத்தினிலே கவலை! நடந்ததை அறிந்துகொண்டு
இயேசு ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க
உங்கள் வலைகளைப் போடுங்கள் (லூக் 5:4) என்றார். இரவு
முழுவதும் முயன்றும் எங்களுக்கு மீன் கிடைக்கவில்லை. ஆனால்
உமது வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து வலையை
வீசுகின்றோம் என்று சொல்லி அந்த மீனவர்கள் வலையை
வீசினார்கள். ஏராளமான மீன்கள் கிடைத்தன.
இன்று நாம் சிங்கக் குகைக்குள் எறியப்படாமலிருக்கலாம்.
ஆனால் சில சமயங்களில் வறுமை என்னும் குகைக்குள்
எறியப்படுகின்றோம். நோய் என்னும் குகைக்குள்
எறியப்படுகின்றோம்.
மரணம் என்னும் குகைக்குள் எறியப்படுகின்றோம்.
பல சமயங்களில்
முத்துக்குள் சிப்பி இருப்பதில்லை!
மண்ணுக்குள் மாணிக்கம் இருப்பதில்லை!
தண்ணீருக்குள் தாமரை இருப்பதில்லை!
எத்தனை முறை முயன்றாலும், எவ்வளவு முயன்றாலும் படிக்கும்
பாடத்தில் வெற்றி கிடைப்பதில்லை!
இல்லறத்திலும் சுகம் இல்லை , துறவறத்திலும் சுகம் இல்லை !
எடுக்கும் முயற்சியில் சிகரம் கிடைப்பதில்லை !
இல்லறத்திலும் துன்பம், துறவறத்திலும் துன்பம்!
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெருஞ்சுமை சுமந்து
சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள் (மத்
11:28) என்ற இயேசுவின் வார்த்தைகள் மீது நம்பிக்கை வைத்து
நமது நம்பிக்கையுள்ள கண்களை நற்கருணை ஆண்டவர் பக்கம்
திருப்பி, வளமோடும் நலமோடும் வாழ்வோம். எசாயாவின்
நம்பிக்கையை (முதல் வாசகம்), புனித பவுலடிகளாரின்
நம்பிக்கையை (இரண்டாம் வாசகம்) நமது நம்பிக்கையாக்கிக்
கொள்வோம்.
மேலும் அறிவோம் :
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற (குறள் : 661).
பொருள் : செயல்திறம் என்று அறிஞர் பெருமக்கள் போற்றிப்
புகழ்வது ஒருவருடைய மன உறுதியே ஆகும். ஏனைய உறுதிகள்
அனைத்தும் செயல் உறுதி என்று கூறப்படா!
மனநோய் மருத்துவமனை ஒன்றில் ஒருநாள் காலையில் ஒரு
மனநோயாளி தனது கட்டிலுக்கு அருகிலிருந்த சுவற்றில் தனது
காதை வைத்து அச் சுவற்றிலிருந்து ஏதோ கேட்பதைப் போன்று
காட்டிக் கொண்டார். அவரைப் பார்த்த மற்ற மனநோயாளிகளும் சுவற்றில்
காதை வைத்துக் கேட்டனர், காலை 10.00 மணிக்கு மனநோயாளிகள்
பிரிவுக்கு வந்த மருத்துவரும் தனது காதை சுவற்றில்
வைத்துக் கேட்க, அவர் காதில் ஒன்றும் கேட்கவில்லை . எனவே
அவர் மனநோயாளிகளிடம், "சுவற்றில் என்ன கேட்கின்றீர்கள்? என்
காதில் ஒன்றும் கேட்கவில்லை " என்றார். ஒரு மனநோயாளி மருத்துவரிடம்,
"நீங்கள் சுத்தப் பைத்தியம், நாங்கள் காலையிலிருந்தே காதை
வைத்துக் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். இன்னும் ஒன்றையும்
எங்களால் கேட்க முடியல்லை; அப்படியிருக்க உங்களுக்கு மட்டும்
வந்தவுடனே கேட்குமா?" என்றார்.
ஆழத்திற்குப் படகைத் தள்ளி வலையை வீசும்படி பேதுருவை இயேசு
கேட்டபோது பேதுரு அவரிடம், "நீங்கள் கடலைப் பற்றிய விபரம்
தெரியாத ஆள் போல் இருக்குது; கடலைப் பற்றி நன்கு அறிந்த
நாங்களே இரவு முழுவதும் மீன்பிடித்தும் ஒரு மீன் கூட அகப்படவில்லை.
உங்க பேச்சைக் கேட்டு வலையை வீசினால் மீன் ஆகப்படுமா?" என்று
அந்த மனநோயாளி மருத்துவரைக் கேட்டதுபோல கேட்டிருக்கலாம்.
ஆனால், பேதுரு அவ்வாறு செய்யாது இயேசுவிடம், "உமது சொல்லை
நம்பி வலையைப் போடுகிறேன்" என்றார், வலைகள் கிழிந்து
போகும் அளவுக்கு ஏராளமாக மீன்கள் அகப்பட்டன.
கடவுளை உண்மையாகவே நம்புகிறவர்களுக்கு எல்லாம் கை கூடும்,
"கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை " (லூக் 1:37). கடுகளவு நம்பிக்கை
மலையையும் பெயர்க்கும் சக்தி வாய்ந்தது (மத் 17:20). கடவுளிடம்
நம்பிக்கை கொண்டோர் இறப்பினும் உயிர் வாழ்வர் (யோவா.
11:25).
காதலர்கள் இருவர் ஓர் ஆழமான கிணற்றில் பேசிக் கொண்டிருந்தனர்,
"நீங்கள் ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்" என்று கேட்டதற்கு அவர்கள்,
"எங்கள் காதல் ஆழமானது" என்றார்களாம், கடவுள் மேல் நமக்குள்ள
நம்பிக்கையும் ஆழமானதாக இருக்க வேண்டும். "ஆழத்திற்குப்
படகைத் தள்ளிக் கொண்டு போங்கள்" என்று கிறிஸ்து இன்றைய நற்செய்தியில்
கூறுகிறார்.
நமது நம்பிக்கை மேலோட்டமாக அமையாமல் வேரோட்டமாக இருக்க
வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகலாகாது. தோல்வி நம்மைத்
துரத்திக் கொண்டு வந்தால் வெற்றி நம்மை நெருங்கி வருகிறது
என்று நினைக்கவேண்டும், "நம்பிக்கை வேண்டும் நம் வாழ்வில்;
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒருநாளில்" "நம்பினார் கெடுவதில்லை;
இது நான்கு மறைத்தீர்ப்பு".
கடவுள் ஒரு சிலரைத் தமது இறையரசின் முழு நேரப் பணியாளர்களாகும்படி
அழைக்கிறார். அவ்வாறு கடவுளால் அழைக்கப்பட்ட எசாயா, பவுல்,
பேதுரு ஆகிய மூவருமே தங்களது தகுதி இன்மையை உணர்கின்றனர்.
முதல் வாசகத்தில் எசாயா, "தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன்
நான்" என்கிறார் (எசா 6:5). இரண்டாம் வாசகத்தில் பவுல்,
"திருத்தூதர் என அழைக்கப் பெற தாம் தகுதியற்றவர்" என்கிறார்
(1 கொரி 15:9). நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே
நான் பாவி. நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்கிறார்
(லூக் 5:8).
ஆனால், மேற்கூறப்பட்ட மூவரையுமே கடவுள் தமது ஊழியத்துக்குத்
தகுதியுள்ளவர்களாக மாற்றுகின்றார். நெருப்புப் பொறியால் எசாயாவின்
உதடுகளைத் தொட்டு, அவரிடமிருந்த குற்றப் பழியையும் பாவங்களையும்
அகற்றுகிறார் (எசா 6:6-7), திருத்தூதர் பவுல், "நான் இந்த
நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த
அருள் வீணாகிவிடவில்லை " என்கிறார் (1 கொரி 15:10). இயேசு
பேதுருவிடம், "அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன்
ஆவாய்" என்கிறார் (லூக் 5:10).
கடவுள் தகுதியுள்ளவர்களை அழைக்கிறார் என்பதைவிட, தகுதியற்றவர்களை
அழைத்து அவர்களைத் தமது பணிக்குத் தகுதியுள்ளவர்களாக
மாற்றுகிறார் என்பதே உண்மை . இன்றும் கடவுள் தமது பணிக்கு
இளைஞர்களையும் இளம் பெண்களையும் அழைக்கின்றார். அவர்கள் தங்களது
சொந்தப் பலத்தை நம்பாமல். கடவுளின் அருளை நம்பி, எசாயா
கூறியது போன்று. "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்"
என்று பதிலளித்துக் கடவுளின் அழைத்தலை ஏற்க முன்வரவேண்டும்.
துறவற வாழ்வு மட்டுமல்ல, இல்லற வாழ்வும் இறைவனுடைய அழைத்தலே
என்பதை அனைவரும் உணரவேண்டும். கடவுள் எல்லார்க்கும் ஒரே விதமான
அழைத்தலைக் கொடுப்பதில்லை. "அருள்கொடைகள் பலவகை; ஆனால் ஆவியார்
ஒருவரே" (1 கொரி 12:4).
திருப்பணியாளர்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம்
பொதுநிலையினர் சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
குருக்கள் அப்பத்தையும் இரசத்தையும் கிறிஸ்துவின் உடலாகவும்
இரத்தமாகவும் வசீகரம் செய்கின்றனர். ஆனால், பொதுநிலையினரோ
உலகையே இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றனர் என்று 2ஆம் வத்திக்கான்
சங்கம் பணிந்து கூறுகிறது (தி. எண். 34), குடும்பம், பண்பாடு,
பொருளாதாரம், அரசியல் போன்ற உலக அமைப்பைப் பொதுநிலையினர்
நற்செய்தி உணர்வால் ஊடுருவி உலகில் இறையரசைக் கட்டி எழுப்புகின்றனர்.
ஒரு பேருந்தில் ஒரு பிச்சைக்காரர் கை நீட்டிப் பயணிகளிடம்
பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார், அவரிடம் பேருந்து நடத்துனர்,
"டேய் பிச்சைக்காரா! கீழே இறங்கு. நீயும் கை நீட்டிக் காசு
வாங்குற: நானும் கை நீட்டிக் காசு வாங்குறேன். நம்ம இரண்டு
பேரிலே யார் நடத்துனர், யார் பிச்சைக்காரன் என்று மக்களுக்குத்
தெரியாமல் போயிடும்" என்றார்.
இன்று திருச்சபையில் யார் திருப்பணியாளர், யார் பொதுநிலையினர்
என்ற வேறுபாடு தெரியாமல் ஒரு குழப்பச் சூழ்நிலை உருவாகி வருகிறது.
திருப்பணியாளர்களின் பணிகளைப் பொதுநிலையினரும், பொதுநிலையினரின்
பணிகளைத் திருப்பணியாளரும் செய்து வருகின்றனர். இந்த அவல
நிலையைப் பார்த்து மறைந்த திருத்தந்தை 2ஆம் ஜான்பால் பின்வருமாறு
கூறினார்: "சாமியார்களின் சம்சாரித்தனமும் சம்சாரிகளின்
சாமியார்த்தனமும் கண்டிக்கப்பட வேண்டும்".
திருப்பணியாளர்கள் இதுவரை செய்து வந்த ஒரு சில பணிகளைப்
பொதுநிலையினர் தற்போது செய்து வருவதால் அவர்கள் திருப்பணியாளர்கள்
ஆவதில்லை. உலகைச் சார்ந்து இருப்பது பொதுநிலையினரின் தனிப்பண்பாகும்.
உலகின் நடுவில் புளிப்புமாவு போல் செயல்பட்டு உலகக் காரியங்களில்
நற்செய்தியைப் புகுத்துவது பொதுநிலையினருக்குரிய தனிப்பட்ட
அழைத்தலாகும்.
எனவே, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் தத்தம் அழைத்தலுக்கு
ஏற்பத் திருத்தூதுப்பணி ஆற்றுவதே காலத்தின் கட்டாயமாகும்,
உலகின் நடுவில் வாழ்ந்து பொதுநிலையினர் நற்செய்திப் பணிபுரியட்டும்.
அதே பணியை உலகிலிருந்து பிரிந்து குருக்களும் துறவறத்தாரும்
ஆற்றட்டும். அரங்கை மாற்றாமல் அனைவரும் ஆண்டவருக்கு ஊழியம்
புரிய ஆண்டவர் அருள்வாராக!
திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலகத் திருஅவையின் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டதும் நடந்த முதல் நேர்காணல் அது. நிருபர்கள்
கேட்ட முதல் கேள்வி: "நீங்கள் யார்?" திருத்தந்தை
கிஞ்சித்தும் எதிர்பார்க்காத கேள்வி அது! சிறிது அதிர்ந்தபின்
அவர் சொன்னார்: "நான் ஒரு பாவி" நிருபர்கள் எதிர்பாராத பதில்
அது! திருத்தந்தை தொடர்ந்தார்: "நான் ஒரு பாவி. ஆனால்
பாவியான என்னைக் கடவுள் தனது இரக்கப் பெருக்கினால் தனது
திருப்பணிக்கு அழைத்திருக்கிறார். நான் இருப்பது இயங்குவது
எல்லாமே இறைவன் போட்ட பிச்சை".
வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்கள் நம்மை மாற்றுகின்றன.
வாழ்வில் திருப்புமுனைகளாகின்றன.
குஜராத் மாநிலத்தில் பிறந்த அண்ணல் காந்தி தன் தாயின் அனுமதி
பெற்று மதிப்புமிக்க பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன்
நகர் சென்றார். தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தென்
ஆப்பிரிக்கா சென்று தனது வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.
அந்த நாட்டு இரயிலில் பயணம் செய்த அனைவரும் வெள்ளையர்கள்.
காந்தி மட்டுமே கருப்பராக இருநதார். இனவெறி கொண்ட வெள்ளையர்
ஒருவர் அண்ணல் காந்தி முதல் வகுப்பில் பயணம் செய்வதைக் கண்டு
பொங்கி எழுந்தார். விரைந்து வந்து காந்தியின் சட்டையைப்
பிடித்துத் தரதரவென இழுத்து ஓடும் இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டு,
"முதல் வகுப்பில் பயணம் செய்யக் கருப்பர்களுக்கு உரிமையில்லை'
என்று உரக்கக் கத்தினார். மனித நேய உணர்வின்றி காட்டு
மிராண்டித்தனமாக. நடந்து கொண்ட வெள்ளையர்களுக்கு எதிராகப்
போராடியே தீர வேண்டும் என்று அன்று முடிவெடுத்தார் காந்தி.
1946 ஆகஸ்டு 16இல் கொல்கத்தா நகர் சமயக் கலவரத்தால் இரத்தக்காடானது.தன்
பராமரிப்பில் உள்ள 300 குழந்தைகளுக்கு உணவு தேடிக் கலவர
வீதியில் நடந்த அன்னை தெரசாவை; சிதைந்து சிதறிக் கிடந்த மனித
உடல்கள், கவனிப்பாரற்று மனித மாண்பிழந்து நின்ற மனித உருவங்கள்
தொட்டன. அடுத்த செப்டம்பர் 10இல் அன்னையின் வாழ்வில்
திருப்பம் ஏற்படுத்தியது இந்த மரண ஒல அதிர்ச்சிதான்.
அனுபவங்கள் வாழ்வின் திருப்புமுனைகளாவதை இன்றைய வழிபாட்டு
வாசகங்கள் மூன்றும் நமக்கு உணர்த்துகின்றன. இறைவாக்கினர்
எசாயா பெற்ற அழைப்பு. பவுலான சவுல் பெற்ற அழைப்பு. மீனவர்
பேதுரு பெற்ற அழைப்பு. மூன்றுக்கும் உள்ள பொது அம்சங்கள்
1. தங்கள் பாவநிலை, இயலாமை பற்றிய தன்னுணர்வு பெற்றார்கள்
என்பது. 2. அந்த இயலாமையில் இறைவனின் தூய்மையை, ஆற்றலைக்
கண்டு கொண்டார்கள் என்பது. 3. இறைவனுடைய அழைப்பை, பணியை
உவந்து ஏற்றார்கள் என்பது.
இறைவனின் அழைப்பை எசாயா கேட்டதும் "தூய்மையற்ற உதடுகளைக்
கொண்ட மனிதன் நான் (எசா. 6:5) அருகதையற்ற நான் எப்படி அருள்வாக்கு
உரைக்க முடியும்?" என்று திகைத்து நின்ற வேளையில் ஆண்டவர்
அவர் உதடுகளைத் தூய்மைப்படுத்தி "துணிந்து செல். தயக்கம்
வேண்டாம். நான் என்றும் உன்னோடு" என்று ஆறுதல் தருகிறார்.
எங்கோ எதையோ சாதிக்கத் துடிதுடித்த சவுலை இறைவன்
திசைதிருப்பித் திருத்தூதர் பவுலாக்குகிறார். "நான்
திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத்
தகுதியற்றவன்." (1 கொரி. 15:9) எனத் தன் இயலாமையையும் இறைவனின்
எல்லையற்ற ஆற்றலையும். ஏற்றுக் கொள்கிறார் பவுல்.
பேதுருவின் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வு இன்றைய
நற்செய்தி. "ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன்
பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்." (லூக். 5:4) என்ற இயேசுவின்
வார்த்தைக்குப் பணிந்து பெரும் திரளான மீன்களைப்
பிடிக்கிறார் பேதுரு. அவருக்கு இது ஆழமானதோர் அனுபவம். அவர்
கடலின் ஆழத்திற்கு மட்டுமா சென்றார்? தனது மனதின் ஆழத்திற்குச்
சென்று தன் நிலையை முற்றிலும் உணர்ந்து "ஆண்டவரே, நான்
பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்." (லூக். 5:8) என்றார்.
இயேசுவின் உடனிருப்பால் இயேசு யார் என்பதையும் தான் யார்
என்பதையும் உணர்ந்து கொள்கிறார். -அந்த நேரத்தில்தான் அவர்
புதியதோர் பணிக்கான அழைப்பைப் பெறுகிறார். "அஞ்சாதே, இதுமுதல்
நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்." (லூக். 5:10).
வாழ்க்கைப் படகை ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போக பணிக்கிறார்
இயேசு. நிறைவாழ்வைக் காண விரும்புபவர்கள் ஆழத்திற்குப் போகத்
தயங்கலாகாது. அதற்கான துணிவு இயேசுவின் சீடனுக்கு மிக இன்றியமையாதது.
நுனிம்புல் மேய்வதல்ல கிறிஸ்தவ வாழ்வு. ஆழமான அனுபவங்களுக்கு
அழைப்பு வீடுப்பது கீற்ஸ்தவம். மேலோட்டமாக வாழ்வது அல்ல,
வேறோட்டமாக வாழ்வது கிறீஸ்தவம். அப்போது நம்மிடம் உள்ள தகுதியின்மைகள்,
நம்மை அழைக்கும் இறைவனுக்கு என்றும் தடைகளாய் தோன்றுவதில்லை.இந்த
உண்மையை உணர்ந்து அவரது வார்த்தையை - அழைப்பை ஏற்போமாயின்
நாம் இறைவனின் மகத்தான திட்டங்களுக்கு கருவிகளாய் அமைந்துவிடுவோம்
என்பது நிச்சயம். நாம் நல்லவர்களாக கருக்கிறோம் என்பதற்காக
அழைப்பதில்லை. மாறாக நம்மை நல்லவர்களாக்குவதற்காகவே கடவுள்
நம்மை அழைக்கிறார்.
தகுதியைப் பார்த்து வேலைக்கு ஆள் எடுப்பது உலக நியதி. தகுதியற்றவருக்குத்
தகுதி தந்து பணி செய்ய வைப்பது இறைவனின் நியதி. திருத்தூதர்
பவுலுக்கு இயேசு கூறியது: "என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்
தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" (2 கொரி. 12:9). இதை
உணர்ந்து பவுல் எழுதுவார்: "என் வலுவின் மையிலும் இகழ்ச்சியிலும்,
இடரிலும் " இன்னவிலும், நெருக்கடியிலும் கிறிஸ்துவை
முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது
வல்லமை பெற்றவனாய் இருக்கிறேன் " (2 கொரி. 12:10). ஆகவே இறைவனின்
இதயத்தில் இடம் ரிடிக்க தகுதியற்றவர்களாகிய நாம் தகுதியுடையவர்களே!
சிறுவன் தாவீதை இஸ்ரயேல் மக்களின் அரசனாக அருள்பொழிவு
செய்யும் நிகழ்வு உள்ளத்தைத் தொடும் ஒன்று. தாவீது
திருப்பொழிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால் தோற்றத்தையும்
உயரத்தையும் பார்த்தா? "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பது
இல்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப்
பார்க்கிறார்.
திருப்பணியாளர்கள் கடவுளின் ஈடு இணையற்ற, செல்வத்தைக்
கொண்டுள்ள மண்பாண்டங்கள். அவர்கள் தகுதி அவர்களிடமிருந்து
வரவில்லை. கடவுளிடமிருந்தே வருகிறது (2 கொரி. 4:7). கடவுள்
தகுதி உள்ளவர்களை அழைப்பதில்லை. மாறாகத் தான் அழைத்தவர்களை
தகுதி உள்ளவர்களாக மாற்றுகிறார்.
தகுதியின்மையில் கூடத் தகுதியைப் பார்ப்பவர் இறைவன். உலகப்புகழ்
பெற்ற சிற்பி இத்தாலி நாட்டு மைக்கிள் ஆஞ்சலோ, ஒரு
சிற்பியாகச் சிகரம் ஏற, வாழ்க்கை இரகசியம் என்ன என்று கேட்டபோது,
அவர் சொன்னார். "கரடுமுரடாக இருந்தாலும் ஒவ்வொரு கல்லுக்குள்ளும்
அழகான சிற்பம் ஒளிந்திருக்கிறது. உளி எடுத்துத் தேவையற்ற
வெளிப்பகுதிகளைச் செதுக்கி அகற்றினால், உள்ளே இருக்கும் எழிலான
சிற்பம் தன் முகத்தைக் காட்டிவிடும்". ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒர் அற்புதமான சிற்பம் இருப்பதைக் கடவுள் அறிவார். தனது சாயலில்
அவர் உருவாக்கிய படைப்புத்தானே மனிதன்! (தொ.நூ. 1:27). கடவுளாகிய
தனக்குச் சற்றே சிறியவராகத் தானே மனிதனைப் படைத்தார்!
(தி.பா. 8:5).
தெய்வ பயம் ஞானத்தின் தொடக்கம். ஆம், அது வெறும் தொடக்கமே!
அதன் முடிவு, அது காணும் முழுமை, நிறைவு - தெய்வ அன்பு.
பயம் முதலில் அன்பு முடிவில்! "உங்கள் மீட்பை அச்சத்திலும்
நடுக்கத்திலும் உழைத்துப் பெறுங்கள்" என்கிறார் பவுல்.
தெய்வ பயத்தில் தொடங்கி தெய்வ அன்பில் நிறைவு பெறுவதே
ஞானம். ஆண்டவருக்கு அஞ்சுவோர் பேறு பெற்றோர். "கடவுளுக்கு
நான் அஞ்சுகிறேன். கடவுளுக்கு அடுத்தபடி கடவுளைக் கண்டு
அஞ்சாதவனுக்கு அஞ்சுகிறேன்" என்பது யாரோ சொன்னது.
திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
திருமுழுக்கு யோவானிடம் இயேசு
திருமுழுக்கு பெற்ற நிகழ்வை நான்கு வாரங்களுக்கு முன்
சிந்தித்தோம். இந்த நிகழ்வைக் குறித்து மக்களுக்கு மறையுரையாற்றிய
ஒருவர், இறுதியில் ஒரு சிறு செபத்தைச் சொன்னார்: "இறைவா,
இயேசுவைப்போல் பணிவில் நாங்கள் வளரச் செய்தருளும். எங்களுக்கு
முன் நிற்பவர்கள் எங்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள்
அறிந்திருந்தாலும், அவர்களுக்கு முன் பணிவுடன் இருக்க வரம்
தாரும்" என்று அவர் வேண்டினார்.
இது மிகவும் ஆபத்தான, அபத்தமான, தவறான செபம்.
போலித்தாழ்மைக்கு அழகானதோர் எடுத்துக்காட்டு. நமக்கு முன்
நிற்பவர் நம்மைவிட தாழ்ந்தவர் என்ற எண்ணமே நம்மைத் தற்பெருமையில்
சிக்கவைத்துவிடும். அந்தப் பெருமிதமான எண்ணங்களுடன் அவர்களுக்கு
முன் பணிவது, நடிப்பே தவிர, உண்மையான பணிவு அல்ல. இயேசுவைப்போல்
எம்மை மாற்றும் என்று சொன்ன அதே மூச்சில் போலியானத்
தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும் ஆபத்தானது.
பணிவைப் பற்றிய தெளிவான எண்ணங்கள் இல்லாதபோது, இவ்விதம் அரைகுறை
கருத்துக்கள் வெளிவர வாய்ப்புக்கள் உள்ளன. நமது சிறுவயது
முதல் நமக்கு பணிவுப் பாடங்கள் பல சொல்லித் தரப்பட்டுள்ளன.
கீழை நாடுகளில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படும்
பெருமை, பணிவு என்ற பாடங்களுக்கும் மேலை நாடுகளில் குழந்தைகளுக்குச்
சொல்லித் தரப்படும் பாடங்களுக்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு.
பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய
இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மேலோட்டமாகச்
சிந்திக்கும்போது, பெருமையும், பணிவும் எதிரும் புதிருமான
முரண்பட்ட இரு மனநிலைகளாகத் தோன்றுகின்றன. ஒன்று இருக்கும்
இடத்தில், மற்றொன்று இருக்கமுடியாது என்பதே நம்மிடையே உள்ள
பரவலான கருத்து. ஆயினும், ஆழமாகச் சிந்தித்தால், உண்மையான
பெருமையும், உண்மையான பணிவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்
என்பதைப் புரிந்துகொள்ளலாம். உண்மையான பணிவு, உண்மையான
பெருமை என்பவை யாவை என்று கருத்துக்களைத் திரட்ட நான் முற்பட்டபோது,
போலியான பணிவு, போலியான பெருமை என்பவைகள் பற்றிய கருத்துக்களையே
அதிகம் கண்டேன். ஒளி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள
இருளைப்பற்றி நாம் சிந்திப்பதுபோல், உண்மையான பணிவு அல்லது
பெருமை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள போலியானப் பணிவு,
போலியான பெருமை ஆகியவற்றை உருவாக்கும் அகந்தையைப்
புரிந்துகொள்வது நல்லது.
கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப் பணியாற்றியவர்
C.S.Lewis. இவர் 1942ம் ஆண்டுமுதல், ஈராண்டுகள் BBC
வானொலியில் வழங்கிய உரைகளைத் தொகுத்து, Mere Christianity
- குறைந்தபட்ச கிறிஸ்தவம் - என்ற நூலை 1952ம் ஆண்டு
வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் -
என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக்
கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன:
"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இந்த உலகில் வாழும் அனைத்து
மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக்
கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள
மறுக்கிறோம். இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை
ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான
ஒப்புமைப்படுத்துதல், போட்டிப் போடுதல் என்பவைக் குறித்து
அழகாக விவரிக்கிறார்:
"
ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது.
'
என்னிடம் ஒன்று உள்ளது'
என்று சொல்வதைவிட, '
என்னிடம் உள்ளது,
அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம்'
என்ற கோணத்தில் நம்மைச்
சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு, அறிவு இவற்றில்
நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில்
அவர் சொல்ல முனைவது வேறு... மற்றவர்களைக் காட்டிலும், அதிகத்
திறமையுள்ளவராக, அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான்
பெருமை - அதாவது, அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு,
அறிவு, திறமை உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது.
ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு இடமில்லை"
என்று கூறும் Lewis, தொடர்ந்து அகந்தையின் மற்றொரு தவறான
அம்சத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"
வேறுபல குறையுள்ள மனிதர்கள் இணைந்து மகிழ வாய்ப்புண்டு.
எடுத்துக்காட்டாக, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இணைந்துவந்து
மகிழும் வாய்ப்புண்டு. ஆனால், அகந்தையில் ஊறிப் போனவர்கள்
சேர்ந்துவருவது இயலாதச் செயல். அப்படியே சேர்ந்துவந்தாலும்,
அவர்களில் யார் மிக அதிக அகந்தை உள்ளவர் என்பதை
நிரூபிக்கும் போட்டி உருவாகும்."
இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு,
தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த
புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர்.
"
தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம்,
ஆதாரம்"
என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள்
உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும்
அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது
சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.
இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு என்ற
மூன்று விவிலியத்தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப்பற்றிக்
கூறும் வார்த்தைகளை இன்றைய ஞாயிறு வாசகங்கள் தாங்கி வருகின்றன.
முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் கண்டு எசாயா
கூறும் வார்த்தைகள் இவை: எசாயா 6:5 - தூய்மையற்ற உதடுகளைக்
கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில்
வாழ்பவன் நான்.
இரண்டாம் வாசகத்தில், இயேசு, திருத்தூதர்கள் பலருக்குக்
காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக,
தனக்கும் தோன்றினார் என்பதை இவ்வாறு கூறுகிறார்: 1 கொரி.
15:8 -10 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை
போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக்
கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில்
கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது
நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.
இயேசு, பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை அந்த
நடுப்பகலில் மீன்பிடிக்கச் சொன்ன அந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாகத்
தரப்பட்டுள்ளது. பெருந்திரளான மீன்பிடிப்பைக் கண்டு,
பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து கூறும் வார்த்தைகள்
இவை: லூக்கா 5:8: - "
ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை
விட்டுப் போய்விடும்"
எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே
உள்ளத்தின் நிறைவிலிருந்து, தங்களைப்பற்றி கொண்டிருந்த உண்மையான
பெருமையிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை.
தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே
வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது
நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி அல்லது, பணிவு
என்பது உள்ள நிறைவிலிருந்து, உண்மையான பெருமையிலிருந்து வரும்போதுதான்
உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும்.
தன்னிறைவு, தன்னைப்பற்றிய தெளிவு, தன்னைப் பற்றிய உண்மையான
பெருமை இவை இல்லாதபோது, அடுத்தவர்களை எப்போதும் நமக்குப்
போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று
நம்மையே அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும் அல்லது, மிகவும்
பரிதாபமாக போலித் தாழ்ச்சியுடன், போலிப் பணிவுடன் நடிக்க
வேண்டியிருக்கும். போலித் தாழ்ச்சிபற்றி பல கதைகள் உண்டு.
அவற்றில் இதுவும் ஒன்று:
இஸ்லாமிய அறிஞர் நஸ்ருதீன் ஒருநாள் தொழுகைக் கூடத்தில்
வேண்டிக் கொண்டிருந்தபோது, இவ்வுலகில் தான் எவ்வளவு சிறியவன்
என்ற எண்ணம் அவரை ஆக்கிரமித்தது. அவர் உடனே தரையில்
விழுந்து, கடவுளிடம், "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!"
என்று உரக்கக் கத்தினார். அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரும்
செல்வந்தர் அந்நேரம் தொழுகைக் கூடத்தில் இருந்தார். அவர்
எப்போதும் அடுத்தவர்களின் பார்வையில் உயர்ந்தவராகத்
தெரியும்படி வாழ்ந்து வந்தவர். நஸ்ருதீன் உரத்தக் குரலில்
சொல்லிய வார்த்தைகள் அவரது காதில் விழவே, அவர் சுற்றிலும்
பார்த்தார். அங்கிருந்தோர் கவனமெல்லாம் நஸ்ருதீன் மீது
திரும்பியிருந்ததைக் கண்ட அவர், உடனே விரைந்து சென்று நஸ்ருதீன்
அருகில் அமர்ந்து, "நான் ஒன்றுமில்லாதவன்! நான் ஒன்றுமில்லாதவன்!"
என்று உரக்கக் கத்தினார். அந்நேரம், தொழுகைக் கூடத்தைச்
சுத்தம் செய்வதற்காக, ஓர் ஏழைப் பணியாள் அங்கே வந்தார்.
அவரும் நஸ்ருதீன் அருகே அமர்ந்து, "நான் ஒன்றுமில்லாதவன்!
நான் ஒன்றுமில்லாதவன்!" என்று உரக்கச் சொன்னார். இதைக் கண்ட
செல்வந்தர், நஸ்ருதீனைத் தன் முழங்கையால் இடித்து, "'நான்
ஒன்றுமில்லாதவன்' என்று சொல்பவர் யார் என்று பாருங்கள். இதை
யார் சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிற்று" என்றார்.
அகந்தையில் சிக்கி, கிறிஸ்தவர்களை அழித்து வந்த சவுல், இறைவனால்
ஆட்கொள்ளப்பட்டு, திருத்தூதர் பவுலாக மாறியபின், உண்மையான
உள்ள நிறைவோடும், பெருமையோடும், அதே நேரம் பணிவோடும் சொன்ன
வார்த்தைகள் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12: 9-10
கிறிஸ்து என்னிடம், "
என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான்
வல்லமை நிறைவாய் வெளிப்படும்"
என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப்
பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது
கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும்
இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும்
கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான்
வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 61-9)
இறை அழைத்தல் என்பது சமுதாயத்தில் ஒரு நபருக்கு இருக்கக்
கூடியத் தகுதியையும், கெளரவத்தையும் பொறுத்தது அல்ல.
மாறாக இறைவவின் விருப்பத்தையும், பேரிரக்கத்தையும்
பொறுத்தது. எனவேதான், தான் தகுதியற்றவரெனக் கருதப்பட்ட
போதும், தன்னைத் தகுதியற்றவரென இறைவாக்கினர் முதல் எசாயா
இறைவனிடம் உரைந்தப் போதும், இறைவன் அவரைத் தூய்மைப்படுத்தி
தகுதியுள்ளவராக்குகிறார். இறைவாக்கினர் எசாயாவும் இறையணிக்குத்
தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி 150-10)
கிறிஸ்தவர்களைக் கொன்று கூவிப்பதற்காகச் சென்றத்
திருத் தூதர் பவுலை, இயேசு கிறிஸ்து தன் பணிக்கென அழைத்தார்
இவரும் இன்றைய வாசகத்தில், தனது தகுதியின்மையை எடுத்து-
ரைக்கிறார். எனவேதான் திருத்தூதர்களிலெல்லாம் கடையனாகத்
தன்னை வெளிப்படுத்துகிறார். இறைவனின் அருளும், ஆசீரும்
எத்த கையவரையும் மாற்றம் பெற வைக்கிறது, இறைபணிக்கெனத்
தகுதி படைத்தவராகவும் ஆக்குகிறது,
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 5:1-11)
இயேசு பேதுருவை அழைக்கும் முன்பே அவரை யோர்தான் ஆற்றங்கரையில்
சுந்தித்திருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு.
பேதுருவின் அழைப்பு நிகழ்கிறது. அந்த யோர்தான் ஆற்றங்கரைச்
சந்திப்பு பேதுருவுக்கான அழைப்பின் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது.
அப்பொழுதே இயேசுவின் ஓரப்பார்வையாளது பேதுருவின் உள்ளத்தை
வருடிச் சென்றிருக்கிறது. அந்தச் சந்திப்பே இந்த அழைப்பை
உறுதி செய்திருக்கிறது. இல்வழைப்பானது மீன்களைப்
பிடித்திட அல்ல, மாறாக இயேசுவை நோக்கி மக்களை அழைத்திட.
மறையுரை
அழைப்பு என்பது ஓர் ஆன்மீகத்தின் ஆணிவேர் என்று கூறலாம்.
இவ்வாணிவோதான் இன்று திருச்சபையைக் கட்டிக்காக்கக்
கூடிய பக்கவேர்களாக ஆயர்களையும், குருக்களையும், கன்னியர்களையும்
மற்றும் பொதுநிலையினரையும் உருவாக்கித் தந்திருக்கின்ற
மாபெரும் சக்தியாக விளங்குகிறது. இவ்வழைப்பு சாதாரண அழைப்பல்ல,
இவ்வழைப்பு சாமார்த்தியக்காரர்களுக்கான. தல்ல, மாறாக இவ்வழைப்பு
சாமானியரையும் சரித்திரம் படைக்கத் தூண்டும் மாபெரும்
அழைப்பு. இறைவனே இவ்வழைப்பிற்கான மூலதனம். இதயமே அதன் பிறப்பிடம்.
எனலே, இத்தகைய மகத்துவமிக்க மாண்புமிக்க இறை அழைத்தலானது,
நமது குடும்பங்களிலும் உலா வருவதென்பது எவ்வளவு சாலச்சிறந்தது!
இன்றைய மூன்று இறைவாசகங்களுமே, இறை அழைத்தலின் இனிமையை நம்
காதுகளில் தவழவிடும் தேனடைகளாக இருக்கின்றன. திருச்சபையின்
வரலாற்றைத் திருத்தி எழுதிய மூன்று முக்கியத் திருச்சபைத்
தலைவர்களையும் அவர்களது அழைப்பின் மேல்மையையும் எடுத்துரைக்கின்றன
இல்வாசகங்கள். இன்றைய முதல் வாசகமானது எசாயா இறைவாக்கினரின்
அழைத்தல் பற்றி கூறுகிறது. எசாயா இறைவாக்கிணிடம் இறைவன்
கேட்கின்றார்,"
யாரை நான் அனுப்புவேன், என் பணிக்காக
யார் செல்வார்?"
(எசாயா 68). இக்கேள்விக்குரியப் பதிலை
எசாயா இறைவாக்கினர் உடனடியாக உரைக்கிறார், "
இதோ நான் இருக்கிறேன்,
எனை அனுப்பும்"
. இவ்வாறு, இறைவாக்கினர் எசாயா, 'இறைவிருப்பத்திற்கு
உடனடியாக இணக்கம் தெரிவிக்கிறார்.
இரண்டாம் வாசகத்தில் பார்க்கிறோம், இறைவன் தன் 'பணிக்காகத்
தேர்ந்தெடுத்திருப்பதை உணர்ந்தவராய், தூய பவுல் நற்செய்தியின்
தூதுவராகக் காட்சி தருகிறார். கிறிஸ்தவத்தை அடியோடு அழிக்க
புறப்பட்ட சவுல், கிறிஸ்தவ மதிப்பீடுகளை விதைக்கப் புறப்பட்ட
பவுலாகிறார். யூத மத வெறியனாக இருந்த சவுல்
கிறிஸ்துவின் பணியாளராகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகமும் தூய பேதுருவின் அழைப்பு பற்றிய
ஆழமான செய்தியைத் தருகிறது. "
இன்று முதல் நீ மனிதரைப்
பிடிப்பவராவாய்"
என, மக்கள் பணிக்காக இடமாறுதல் உத்தரவை,
இயேசு தூய பேதுருவு்குப் பிறப்பிக்கின்றார். இவ்வாறு,
திருச்சபையில், இறை அழைத்தலினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்
பலர், இத்தகைய மேலான இறை அழைப்பினால்தான் திருச்சபையின்
ஆயுட்காலம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இறை அழைத்தல் என்பது எதிர்பாராத ஒரு நிகழ்வு அல்வழைப்பானது
செல்வந்தருக்கு மட்டுமே உரித்தான இலவச இணைப்பு அல்ல. உயர்ந்த
மதிப்பில் உள்ளோருக்கான உத்தரவாத ஓலையல்ல, படித்தவர்கள்
மட்டுமே பெறுகின்ற பல்கலைக்கழகப் பட்டமுமல்ல, ஜாதிக்கறை
படிந்தோருக்கென தாளம் போடும் மத்தளமும் அல்ல, அரசியல்
என்ற போர்வையில் குளிர் காய்ந்து, ஜனநாயகத்தைக்
கூறுபோடும் சர்வாதிகாரமுமல்ல. மாறாக, இறை அழைத்தலானது, இறைவிருப்பத்துடன்
எவர் வேண்டுமானலும் பெறக்கூடியப் பொதுவுடைமை. ஏழை, எளியவர்,
உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், பாமரர் என இறைவன்
ஆள் பார்த்து, பாரபட்சம் காட்டிச் செயல்படுவதில்லை. இறைக்
கனலை நனவாக்க உயிர்த் துடிப்புடன் செயல்படும் ஒவ்வொருவரையும்
இறைவன் அழைக்கிறார். தகுதியற்றவர்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களாக
மாற்றுகிறார். எனவேதான் திக்குவாயான மோசேயும், ஒழுங்கு
முறைத் தவறிய தாவீதும் கூட இறை அழைத்தலுக்குத் தகுதியாளராயினர்,
இறை விருப்பமானது இறை அழைத்தலாகிறது. எனவேதான், "
நீங்கள்
என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. மாறாக, நான்தான் உங்களைத்
தேர்ந்து கொண்டேன்"
என இயேசு கூறுகிறார். அத்தகைய இறை
விருப்பமானது, சமுதாயத் தால புறக்கணிக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்டு,
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம்
கொடுப்பதாக அமைகிறது. எனவேதான், இயேசு, மீன்பிடி தொழில்
புரிவோரையும், வரி வசூலிப்பு என்ற பெயரில் மக்களை ஏய்த்துப்
பிழைப்போரையும், சமுதாயத் துரோகிகள், பாவிகள் எனக் கருதப்படுவோரையும்,
தமது சீடர்களாக அழைத்ததோடு மட்டுமல்லாமல், அகில உலகத்
திருச்சபையின் பொறுப்பையும் ஒப்படைக்கின்றார். இதற்கான
பதிலை இயேசு கூறுகிறார், "
நோயற்றவர்க்கு அல்ல, நோயற்றவர்க்கே
மருத்துவர் தேவை" (மத்தேயு 9:12). ஒறையழைத்தல் இரு
முக்கியப் படிநிலைகளைக் கொண்டுள்ளது. 1. மனத்தாழ்ச்சி மற்றும்
2. முழு ஈடுபாடு
இறையழைத்தலானது முழுமையான அர்த்தம் பெறுவது. மனந்தாழ்ச்சியினால்
தான் என்பது. மறுக்க முடியாத உண்மை. இறைவன், இறைவாக்கினர்
எசாயாவை அழைக்கும் போது, "
தான் ஒரு தூய்மையற்ற உதடுகள்
பெற்றவன்' எனத் தனது குறைபாடு: களை ஏற்று, தனது. தகுதியின்மையை
எணிபிக்கின்றார். இயேசுவீன் தாயாக அன்னை மரியாளை இறைவன்
தேர்ந்தெடுத்தபோது, "
நான் உமது அடிமை, உமது விருப்பப்படியே
எனக்கு ஆகட்டும்" என லூக்கா நற்செய்தி 138.இல் தனது
தாழ்நிலையை மரியாள் வெளிப் படுத்துகின்றாள். இவ்வாறு,
மனத்தாழ்ச்சியானது, இறைசாட்சி. வயத்திற்கான முதல் படிநிலையாக
இருக்கிறது. மனத்தாழ்ச்சி நம்மில் அடித்தளமாகும் போது இறையாட்சி
எனும் மகுடம் நம் வாழ்வை அலங்கரிக்கும்.
முழு ஈடுபாடு என்பது எல்லோரிடத்திலும் காணப்படுவது அரிது.
இயேசுவின் சீடர்கள் அவரின் உயிர்ப்புக்குப்பின் முழு
ஈடு பாட்டோடு நற்செய்தியைப் பறைசாற்றினார்கள் என்றால்
கிறிஸ்து வின் மேல் கொண்ட மேலான நம்பிக்கையேக் காரணம்.
"
இதோ, ஒநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை
அனுப்புகிறேன்"
(மத்தேயு 10:16) என்றார் இயேசு. முழு ஈடுபாடின்றி
இத்தகையப் பணியைத் தொடங்குவதும் கடினம், தொடர்வதும்
கடினம்.
இத்தகைய சவால் நிறைந்த இறையழைத்தலில் நமது நிலைப்பாடு
என்ன? இறையழைத்தல் என்பது பணிக்குருத்துவம்,
பொதுக்குருத்துவம் என இரண்டையுமே உள்ளடக்கியது. இறை:
பணியாளர்களைப் போலவே, இறைமக்களும் இறைலிருப்பத்தை
நிறைவேற்றுவதில் பங்குதாரர்களே. இரண்டாம் வத்திக்கான்
சங்கம் இவ்வாறு உரைக்கிறது, "
திருச்சபையில் உள்ள
ஒவ்வொருவரும் அதன் அங்கத்தினாக இருப்பதால், தாய
வாழ்விற்கான பொதுக்: குருத்துவ அழைப்பில்
பங்குபெறுகின்றார்கள்" (இன்றைய உலகில் திருச்சபை 40).
இறையழைத்தலானது எவ்வகையிலாவது பிறர்பணி புரிந்து தூயவாழ்வு
வாழத்துணை நிற்கிறது. "
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்
மேல் உள்ளது, ஏனெவில், அவர் எனக்கு அருள்பொழிவு
செய்துள்ளார், ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை
அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும்,
சிறைப்பட்டோருக்கு வீடுதலையை பறைசாற்றவும்,
கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை
அனுப்பியுள்ளார் "(எசா.. 61:1) இத்தகையப் பணி
நோக்கத்தோடு வாழ்ந்த அன்னைத் தெரேசாள் அருளாளராக
உயர்த்தப்பட்டாள்.
நமது பணி நோக்கம் என்ன?.
"
விழுகின்ற மழை நீரெல்லாம் விவசாய லளர்ச்சிக்கில்லை.
பிறக்கும் மாந்தரெல்லம் பிறர்பணி செய்வதில்லை இத்தகையப்
பிறர் பணிபுரிந்து இறைவனை மாட்சிப்படுத்த, இறைவன் இறை
அழைத்தல் என்ற இனிய கொடையை நம் ஒவ்வொருவருக்கும்
அளித்துள்ளார். நமது வாழ்வும் "பத்தோடு பதினொன்று,
அத்தோடு நான் ஒன்று' என இருந்து விடாமல், "
இறைவனின்
வீணையில் நானும் ஒரு நரம்பு என இணைந்து, பிறர்
பணியாற்றும் இசையாக வலம்வரச் சிந்திக்கும் நேரம் இது.
விரைவில் அச்சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
⏺ வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல இறைவன்
வலிமை அற்றோரை அழைத்து தன் வல்லமையால் தன் பணிக்காக
வலிமையுடையோராய் ஆக்குகிறார்.
⏺ இறைவன் அழைக்கும்போது புறத்தோற்றத்தை உற்று நோக்காமல்
அகத்தின் தூய்மையைப் பார்த்து தன் பணிக்காக
அழைக்கிறார்.
⏺ அன்பினால் பணிசெய்து அனைவரையும் தூய வாழ்வுக்கு அழைக்க
வேண்டுமென்பதே அவரது அழைப்பின் நோக்கம்.
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
இன்றைய இறைவாக்குளில் முதல் வாசகமும் நற் செய்தியும்
இறையழைத்தல் எனும் கருத்தில் ஒன்றிணைகின்றன. அதிலும்
குறிப்பாக அழைக்கப்பட்ட எசாயாவும் பேதுருவும். இறைவன்
முன் தங்களின் பாவத்தையும் பலவீனத்தையும் உணர்வதில்
மிசுவும் ஒத்திருக்கின்றனர். இதன் உள்பொருளை விவாதிப்பதற்கு
முன் இன்றைய நற்செய்தி பற்றிய சில பின்னணித் தகவல்களை
தெரிந்துகொண்டு, பின் புனித சீமோன் பேதுருவின் கதாபாத்திரத்தின்
பண்பு நலன்களை சிறிது அலசி ஆராய்ந்து அதிலிருந்து நமது
வாழ்வுக்குச் சிலவற்றைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.
நற்செய்திப் பகுதியின் பின்னணி
லூக்கா தனது நற்செய்தியில் இிருத்தூதர்களை அழைக்கும் நிகழ்வை
பிற நற்செய்திகள்போல தொடக்கத்திலேயே கூறி விடாமல், இயேசு
தனது பணிவாழ்வை தொடங்கும்வரை காத்திருந்து (காண். லூக்
474-44) இப்போது விவரிக்கின்றார். ஓத்தமை நற்செய்திகளில்
மாற்கும் மத்தேயுவும் முதல் இருத் தூதர்களை அழைத்ததை
விவரிக்கும் விதத்திற்கும் லூக்கா இதைவிவரிப்பதற்கும்
அதிக வித்தியாசங்கள் உள்ளன. மாற் 1:76-20 இதை மிகவும்
சருக்சமாக அதிக விவரங்களை சேர்க்காமல் விவரிக்கின்றது. மத்
4:18-22 மாற்கின் வழியையே பின்பற்றுகின்றது. லூக்கா
5:1-11இந்த நிகழ்வை விவரித்து, பெரும் மீன்பாடு
புதுமையோடு இணைத்துச் கூறுகின்றது. இந்நிகழ்வு யோவான்
27:1-11 உயிர்த்த இயேசுவின் திருக்காட்சியோடு தொடர்புடைய
நிகழ்வோடு ஒத்திருக்கின்றது, அங்கும் பெரும் மீன்பாடு
புதுமை காணப்படுகின்றது.
இறைவாக்கினரான இயேசு
இயேசு நாசரேத்துக்குச் சென்று எசாயாவின் சுருளேட்டை
வாசித்து தன்னை ஓர் "
இறைவாக்கின மெசியா'வாக பிரகடனப் படுத்தினார்.
அவர் இந்த நிகழ்வில் தனது ஆற்றலை வெளிப் படுத்தும்' இறைவாக்கினரான
தன்னை வெளிப்படுத்துகின்றார். இறைவாக்கினரின் இன்னொரு பரிமானம்
வர இருப்பதை முன்கூட்டியே அறிவிப்பது."
ஆழத்திற்குத் தள்ளிக்
கொண்டுபோய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் (வச.4)
என்றபோது ஓர் இறைவாக்கனராக பின்நிகழ இருப்பதை இயேசு
முன்கூட்டியே அறிந்திருந்தார். இதே ஒரு கண்ணோட்டத்தோடுதான்
"
இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்' (வச.10) என்று
இயேசு கூறியதை நாம் உற்று நோக்கவேண்டும். இது பிற்காலத்தில்
திருத்தூது பணியிலும் (காண். திப 2:41) திருஅவையின் வரலாற்றிலும்
உண்மையானதை நாம் அறிவோம். இனி இந்த இறையழைத்தல் நிகழ்வில்
பிற திருத்தூதர்கள் (யாக்கோபு, யோவான் வச. 10) இருந்தாலும்
வாசகரின் கவனத்தையெல்லாம் பேதுருவின் மீது லூக்கா
குவிப்பதால் அவரின் பண்பு நலன்கள் சிலவற்றை இவண்
விரிவாகக் காண்போம்.
1. மறுப்பும் ஏற்யும்
இயேசு மீனவர்களான சீடர்களிடம் ஆழத்திற்குத் தள்ளிக்
கொண்டு போய், மீன் பிடிக்க வலைகளை வீசச் சொன்னபோது முதலில்
பேதுரு அதை எதிர்ப்பதுபோல, 'ஐயா, இரவு முழுவதும் நாங்கள்
பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் படைக்கவில்லை"
(வச. 5) என்று
கூறினாலும் பின் இயேசுவின் கட்டளையை ஏற்கும் விதமாக,
"
ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்"
9 வச. 5)
என்கின்றார். இதை கொஞ்சம் ஆழ்ந்து நோக்குபவர்களுக்கு இது,
"
இது எப்படி, நிகமும்? நான் கன்னி ஆயிற்றே! (லூக் 1:39)
என்று வானவன் செய்தியை முதலில் எதிர்த்து பின், "
நான்
ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்"
(லூக் 1:38) என்று கூறி ஏற்றுக்கொண்ட மரியாவை ஓத்திருப்பது
புலப்படும்.
இந்த இரு நிகழ்வுகளையும் ஒப்பிடும்போது பல உண்மைகள் புலப்படுகின்றன.
முதலாவது மரியா வானவன் வழியாக வந்த இறைவனின் வார்த்தையை
நம்பினார்; பேதுரு இயேசுவின்வார்த்தையை நம்பினார். இரண்டவதாக
மரியாவுக்கு எலிசபெத்து முதிர்ந்த வயதில் கருத்தரித்திருப்பதை
சுட்டிக்காட்டி "
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' (லூச்
1:37) என்பதைப் புரிய வைக்கின்றார். இங்கு பேதுருவுக்கு
பெரும் மீன்பாட்டைத் தந்து அதே, செய்தியை அதாவது கடவுளால்
இயலாதது ஒன்றுமில்லை"
என்பதை வார்த்தையால் சொல்லாமல் செயலால்
விளங்க வைக்கின்றார். எனவே மரியாவைப்போல, மனித அறிவுக்கு
எட்டாது, சாத்தியப் படாது என்பதையும் இறைவார்த்தையை நம்பி
ஏற்றதால் பேதுருவும் நம்பிக்கையின் மனிதராய் காட்சித்
தருகின்றார்.
2. நான் பாவி
முதல் வாசகத்தில் எசாயாவைப்போல, இறைவனைச் சந்திக்க
பார்க்கு வாய்க்கப் பெற்றவர்கள், பெரும் இறைவாக்கின
ரைச் சந்திப்பவர்களின் உணர்வுகள் தான் பேதுருவுக்கும்
இருந்தது. அந்த வகை இறைச்சந்திப்பின் உச்சத்தில்
"
ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்"
(வச. 8) என்கின்றார். இங்கு பேதுரு தன்னை' பாவி?
என்றுகுறிப்பிட்டதை ஓர் அறநெறிக் கண்ணோட்டத்தில்
பொருள் கொள்ளக்கூடாது. மாறாக தூயவரான இறைவனின் ஆற்றலின்
முன் தனது வியப்பையும், ஆச்சரியத்தையும்
வெளிப்படுத்துவதாகக் கொள்ளவேண்டும். எனவே இது
பயத்தினாலும் குற்ற உணர்விலும் கூறப்பட்டதல்ல மாறாக
வியப்பிலும், தாழ்ச்சியிலும் கூறப்பட்டவை. அதேபோல "
நீர்
என்னை விட்டுப் போய்விடும்"
(வச. 8) என்பதையும் இவ்வாறே
பொருள் கொள்ள வேண்டும். உண்மையில் "
என்னை விட்டுப்
போய்விடும்"
என்று கூறிய இயேசுவைத் தான் பேதுரு
"அனைத்தையும் விட்டுவிட்டு"
பின்பற்றினார் (வச.11).
இதுதான் இறையனித சந்திப்பில் நிகழ்வது. இறைவன் மனிதரை
சந்திக்கின்ற போது அம்மனிதர் சற்றும் எதிர்பாராத
கூழவில்,எதிர்பாராதநிகழ்வுகளில் அவர்களை தடுத்து
ஆட்கொள் கின்றார். இதுதான் பவுலடியாருக்கும் தமஸ்கு
நகர் நேரக்கிய பயணத்தில் நிகழ்ந்தது. பேதுருவை இயேசு
கெனசரேத்து ஏரியில் தடுத்தாட்கொண்டார். எனவே
பேதுருவைப்போல இறை வார்த்தையை நம்பிய மனிதர்களாக
இருக்கவும், இறைவனால் தடுத்தாட் கொள்ளப்படவும்
வேண்டுவோம்.
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - ஐந்தாம் ஞாயிறு
முதல் வாசகம் :எசா 6:1-8
எசாயாலின் நாவைச் சுட்டு எரித்த, இறைவன் அவரைத்
தூய்மைப் படுத்தினார். இதுவே அவரது குருப்பட்ட விழா.
அன்று அருள் பெற்றார்; மனத்திடம் பெற்றார். "
யாரை
அனுப்புவோம்?"
என்ற இறைவனின் கூரல் கேட்டு "
இதோ நான்"
என்கிறார். "
ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும்"
என்று
கேட்டு (காண்: திப. 22 : 10) "
நான் நற்செய்தியை
அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட
ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு
உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு"
(1கொரி.9: 16- 18) என்றுகூறி இறைப்பணியில் இறங்கிய
பவுலைப்போல, ஆண்டவரின் அழைப்பைக் கேட்டு,
அனைத்தையும்விட்டு அவரைப்பின் சென்ற திருத்தூதர்கள் போல
(லூக் 5: 27; மாற்: 1:16) எசாயா இறை அழைப்பை ஏற்றார்;
அதில் வெற்றியும் கண்டார். ஆண்டவரின் அழைப்பை ஏற்ற
நான் அதில் உறுதியுடன் நிற்கின்றேனா? ஊக்கத்துடன் பணி
புரிகின்றேனா?
இதோ அடியேன்: என்னை அனுப்பும்.
இரண்டாம் வாசகம்1கொரி. 15:1-11
15-ஆம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்புப்
பற்றிச் பவுல் எடுத்துரைக்கிறார். கிறிஸ்தவர்களின்
உயிர்ப்புக்கு மூலமும் முன்னோடியுமாயிருப்பதால்,
கிறிஸ்துவின் உயிர்ப்பு பவுலின் மடல்களில் முக்கிய
இடம் பெறுகிறது. இன்றைய வாசகத்தில் நற்செய்தியின்
கருப்பொருளான இயேசுவின் உயிர்ப்பும், உயிர்த்த
இயேசுவின் காட்சிகளும் இடம் பெறுகின்றன.
கிறிஸ்து உயிர்த்தார்
கிறிஸ்துவ விசுவாசத்தை இரத்தினச் கருக்கமாய்த் தன்னுள்
அடக்கியுள்ள ஒரு விசுவாச அறிக்கை அல்லது மறைபொருள்
இன்றைய வாசகம். "
இது விசுவாசத்தின் மறைபொருள்"
என்று
குருவானவர் கூற, "
கிறிஸ்து இறந்தார். கிறிஸ்து
உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்"
என்று நாம்
பதிலிறுப்பதும் இதையே சுட்டுகிறது. கிறிஸ்துவின்
"
இறப்பு-உயிர்ப்பு"
தாள் திருத்தூதர் சாட்சியத்தின்
அடிப்படை உண்மை (திப.3: 13- 15;4: 19. கிறிஸ்து நமது
பாவங்களுக்காக இறந்தார்; நமது பாவங்களுக்காகவே, அவற்றைக்
குழுவே உமிர் பெற்றெழுந்தார். இன்றைய வாசகத்திலே,
கிறிஸ்து "
இறந்தார், அடக்கம் செய்யப்பட்டார்;
தோன்றினார்"
என்ற வினைச்சொற்கள் கடந்த காலத்து
உண்மைகளாகவும், உயிர்த்தெழுந்துள்ளார்"
' என்பது கடந்த
காலத்தில் தொடங்கி நிகழ் காலத்திலும் தொடர்ந்து
நடக்கும் உண்மையாகவும் கிரேக்க மூலத்தில்
காணப்படுகிறது. இதிலிருந்து பவுல், கிறிஸ்துவின்
உயிர்ப்பு என்றும் எங்கும் தொடர்ந்து செயல்படுகிறது
என்பதை உணர்த்துகிறார் எனலாம். எவ்வளவு ஆறுதல்
அளிக்கும் உண்மை இது! கிறிஸ்துவின் உயிர்ப்பு ஏதோ
பழங்காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியன்று; இன்னும்
எங்கெல்லாம் நற்செயல்கள் செய்யப்படுகின்றனவோ,
எங்கெல்லாம் அன்பு அணை பரண்டு ஓடுகிறதோ, எங்கெல்லாம்
நீதிக்குரல் முழக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் ஏழை
எளியவர், நோயாளிகள் புதுவாழ்வு பெறுகின்றனரோ
அங்கெல்லாம் கிறிஸ்து உயிர்த்தக் கொண்டே இருக்கிறார்.
கிறிஸ்துவின் இல்வுயிர்ப்பு நிகழ்ச்சியில் நாமும்
பங்குபெற வேண்டுமெளில், அன்பு செய்வோம், அறம்
செய்வோம். நம் வாழ்விலே கிறிஸ்து உமிர்த்துக் கொண்டே
இருக்கிறாரா?
கிறிஸ்து தோன்றினார்
ஒரு வகையிலே கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு அவர் தந்த
காட்சிகள் ஆதாரம் என்றாலும், இக்காட்சிகள் வழி
கிறிஸ்து புகட்டும் உண்மை ஒருவர் ஒருவருக்கு ஆறுதலும்
துணையுமாயிருக்க வேண்டுமென்பதாகும். தம்மை மறுதலித்த
"
கேபா"
எனும் பேதுருவுக்கு இயேசு தோன்றியது அவரது
விசுவாசத்தை உறுதிப்படுத்தவாகும். பாடுகளின்போது பயந்து,
தம்மைவிட்டு அகன்றோடிய பன்னிருவருக்குக் காட்சி அளித்து,
அவர்களோடு என்றும் இருப்பார் என்று
காட்டுவதற்காகவேயாகும் (மத் 28: 20). அதே போன்று,
ஏனையோருக்கும் தம்மை வெளிப்படுத்தியது, அவர்கள் வேத
விரோதிகளைக் குண்டு அஞ்சி அவநம்பிக்கை கொள்ளக்கூடாது
என்பதற்காகவேயாகும். இவ்வாறு, தாம் இல்வுலகில்
வாழ்ந்தபோது எவ்வாறு ஏழை எளியவர்களுக்கு, பாவிகளுக்கு
நோய்வாய்ப்பட்டோருக்கு இயேசு உறுதுணை யாயிருந்தாரோ,
அங்வாறே தாம் உயிர்த்த பின்னும் தமது அன்புப் பணியைத்
தொடர்ந்து செய்கிறார். இயேசுவின் உயிர்த்த வாழ்வில்
பங்குபெறும் நாமும் (உரோ. 5 : 17 - 19) அவ்வுயிர்த்த
வாழ்வுக்குச் சாட்சியங்களாக வாழ வேண்டும், தாம்
உயிர்த்த வாழ்வு வாழ்கிறோம் என்பதற்கு ஆதாரம் அல்லது
அறிகுறி ஏழைகளுக்கு இரங்குவது, நோயாளிகள்,
சிறைப்பட்டோரைச் சந்தித்து ஆறுதல் அளிப்பது; உள்ளம்
உடைந்தோருக்கு உறுதுணையாயிருப்பது போன்ற நற்செயல்களே
என்பதை உணர்ந்து, உயிர்த்த வாழ்வு வாழ முயற்சிப்போம்
"
முயற்சி திருவினையாக்கும், முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்"
(குறள் 618)
(கிறிஸ்து நமது பாவங்களுக்காக இறந்தார். )
நற்செயதி: லூக்கா 5:1-11
மீனவர்களைக் தேர்ந்துகொண்டார்
இயேசு இறையரசுப் பணிக்கு சாதாரண மனிதர்களை அழைத்தார்.
உலகம் தாழ்ந்தோர் எனக் கருதியவனரத் தம் சீடர்களாகத்
தேர்ந்துகொள்கிறார். ஆம், "
கடவுள் ஞானிகளை
வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத்
தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த,
வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார் "
(கொரி 1:27 - 28)
இறைவன் ஏழைகளைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் அவர்கள்
அவர் அருகில் இருப்பதால் தான். அவர்கள் அவரை சார்ந்து
சிக்கெனப் பிடித்துக்கொள்வர். எனவே தான் இயேசு
குழந்தைகளோடு, ஏழை எளியவரோடு தன்னை ஐக்கியப்படுத்திக்
கொண்டார். எனவே இறைவன். நம்மில் செயல்பட நம்மையே
வெறுமையாக்குவோம். இறைவனுக்குச் சொந்தமான ஏழை எளிய
மக்களோடு ஐக்கியப்படுவோம். நம்மையும் இறைவன்
தேர்ந்துகொள்வார். இறைவன் தேர்ந்துகொள்ளும்
தாழ்ந்தோரையே நமது நண்பர்களாகக் கொள்வோம். நாமும்
இயேசுவின் நண்பர்களாவோம்.
இரவு முழுவதும் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை.
நம் முயற்சிகள் தோல்லியடையும்போது இறைவன் துணை நமக்கு
வெற்றியளிக்கிறது. திருத்தூதர்கள் பாடுபட்டுப் பலன்
காணாத நிலையில். இயேசுவின் ஒரே வார்த்தை அவர்களுக்கு
அபரிமித பலன் அளிக்கிறது"
நம் சொந்த செயல்களையும்
முயற்சிகளையும் மட்டுமே நம்பும்போது இறையரசுப் பணியிலே
பலன் காண முடியாது என்பதை இங்கு இயேசு
தெளிவுடுத்துகிறார். ஆம்!" ஆண்டவரே வீட்டைக்
கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு
வீணாகும்"
(திபா. 127). நம் பணியும் ஆண்டவரின்
வார்த்தையோடு இணைந்த செயல்பாடாயிருந்தால்தான் பயன்
விளையும்.
இறைவனின் ஆற்றல் நம்மில் விளங்கும் போது நம் செயல்
படைப்பாற்றல் மிக்கதாய் விளங்குகிறது. நம் குறைகளும்
இறைவனுக்குத் தடையல்ல. ஒரு வேளை நம் பலவீனமே ஆண்டவரின்
செயல் விளங்க ஒரு வாய்ப்பாக இருக்கும். இது தூய பவுலின்
அனுபவம்: "
வலுவின்றி இருக்கும் போதுதான், நான்
'வலிமைமிக்கவனாய் இருக்கிறேன்"
.
நாமும் நம் பணியில் தளர்ச்சியறும்போது, பலவீனத்தால்
மனம் சோர்வுறும்போது திருத்தூதர்களின் மீன் பிடித்த
அனுபவத்தை நினைவு கூர்வோம். நாம் வெற்றி காணாத
வேளைகளில் இயேசுவின் வார்த்தை நமக்கு எப்போதும்
உறுதுணையாயிருக்கட்டும்.
"
அஞ்சாதே! இன்று முதல் மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்!"
இயேசுவின் பிரசன்னம், நம் பணியில் பலன் அளிப்பதோடு,
நம் மன அச்சத்தையும், விரக்திமையும் ஓட்டுகிறது.
நம்மில் மறைந்து கிடக்கும் சக்திகளையும்
வெளிக்கொணர்ந்து நிறைவு அளிக்கிறது.
மீன் பிடிக்கும் பேதுரு, மனிதர்களைக் கூட்டிச்
சேர்க்கும் திருச்சபையின் தலைவராக மாற்றப்படுகிறார்.
இயேசுவை சந்திக்கும்போது... இயேசுவின் அழைப்புக்கு பதில்
அளிக்கும்போது, நம் வாழ்வு புதுமை அடைகிறது.
இயேசுவின் பணியில் நம்மை. அர்ப்பணிக்கும் போது நாம்
இழப்பதை விட பெறுவதே அதிகமாகிறது. வலையையும், படகையும்
விட்டு வந்த பேதுரு, இயேசுவின் அருளால் உலக வரலாற்றில்
இடம் பெற்றுவிட்டார்
தேவ அழைத்தல் எவரிடமும் பறிமுதல் செய்வதில்லை, மாறாக.
நம்மை நிரப்புகிறது.
உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்.
நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைத்தலைப் பற்றி தியானிக்க...
இன்று திருஅவை - "நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைத்தலைப்
பற்றி தியானிக்க" - அழைக்கின்றது.
வந்தோரை வாழவைக்கும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழ்
சமூகத்தின் நடுவில் அழைப்பு என்ற வார்த்தையின் விலை என்ன
என்பது நமக்கு நன்குதெரியும். . குறிப்பாக ஒரு நல்ல
காரியம் ஒரு வீட்டில் நிகழும் போது அதைச் சுற்றி சில
வார்த்தைகள் தொடரும் - இதோ என்னையும் அழைத்தார்கள் என்றும்
, என்னை ஏன் அழைக்கவில்லை? என்றும் இதோ அழைப்பை ஏற்று
நானும் சென்றிருந்தேன். மற்றும் என்னை அழைத்தார்கள் நான்
போகவில்லை என்ற சொற்தொடர்கள் சுற்றிச் சுற்றி வரும். ஆக
மனித சமூகத்தில் ஏற்படும் அழைப்புகள் நேர்மறை, எதிர்மறை
வினைகளை ஏற்று நடை பயில்கின்றன. ஆனால் இறைவன் கொடுக்கும்
அழைப்பு எந்தச் சூழலிலும் நேர்மறையான நன்மைகளைமட்டுமே
விதைகின்றது ,அறுவடை செய்கின்றது. என்பதை இன்றையவாசகங்கள்
அறிவுறுத்துகின்றன.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சீமோனை அழைப்பதைக்
கேட்டோம் . இந்த சீமோன் கடின உழைப்பாளி , ஒரு மீனவர். இரவு
முழுவதும் வலை வீசி முயற்சித்தும் மீன்கள் எதுவும்
கிடைக்காமல் சோர்ந்து இருந்த நிலையில் , இயேசு அவருடைய
படகில் ஏறி அமர்ந்து மக்கள் கூட்டத்திற்கு கற்பிப்பதை
இவரும் கேட்கின்றார். இயேசு பேசி முடித்தபின்பு சீமோனை
நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க
உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். சீமோன் மறுமொழியாக,
"ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும்
கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப்
போடுகிறேன்" என்றார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இயேசுவை சீமோனோ அல்லது
சீமோனை இயேசுவோ இதற்கு முன் சந்தித்து கொண்டதாக
விவிலியத்தில் சான்றுகள் இல்லை .
இயேசு கற்பித்த வார்த்தைகளை, சில மணித்துளிகள் கேட்டுக்
கொண்டிருந்த சீமோன், தன்னுள் இருந்த தனது குலத்தொழிலான
மீன்பிடித்தலில் தான் பெற்ற அறிவு, அனுபவம், ஆற்றல்,கடின
உடல் உழைப்பு என அனைத்தையும் நம்பாமல்;இயேசுவின்
வார்த்தைகளுக்கு முழுமையான முக்கியத்துவம் கொடுத்து நம்பத்
தொடங்கினார் - செயல்பட்டார்.
சீமோன்-இயேசுவின் வார்த்தைகளுக்கு முன்பு தன்னை
வெறுமைஆக்கினார். இயேசுவின் வார்த்தைகள் வல்லமையோடு சீமோன்
உள்ளும் சீமான் மீதும் முழுமையாக செயல்பட அந்த வெறுமை
வாய்ப்பை உண்டாக்கியது.
சில மணிநேரங்கள் கேட்ட இறைவனின் வார்த்தைகள், முடிவாக
அவருடைய வாழ்வை முற்றிலும் மாற்றியதை - சீமோன் பேதுருவாக,
பாறையாக மாறிப்போனதை, நாம் இன்று நமது வாழ்வின் மூலமாக
அறிவிக்கின்றோம்.
முதல் வாசகத்தில்
ஆண்டவருடைய முழு பிரசன்னத்தில்
மூழ்கிப்போன எசாயா, அந்த பயமிக்க மகிழ்ச்சியிலும் அவருள்
குடிகொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையின் காரணமாக "ஐயோ, நான்
அழிந்னே;. ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன்
நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன்
நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே"
என்று அறிக்கையிட்டார். அறிக்கையக் கேட்ட இறைவன் , அவரை
குறையற்ற மனிதராக மாற்றி அதேவேளை, தனது எண்ணங்களை - யாரை
நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார்போவார்?" என
வெளிப்படுத்த, அந்த இறை வார்த்தையை கேட்ட எசாயா ; "இதோ
நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்று முனைப்புடன்
முன் வருகின்றார்.
ஒருவர் எதிர்பாராமல் அளவற்ற நன்மைகளை பெறும்போது, அதை
கொடுத்தவர்மேல் பெற்றுக்கொண்டவர் மனதில் ஒரு உண்மையான
நன்றி உணர்வு உண்டாகும். இது சாதாரண மனிதனின் இயல்பு -
அதுவும் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு
அந்த உணர்வு மிக அதிகமாக உண்டாகும். இறை அழைத்தலை எசாயா
ஏற்க முன் வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகக்கூட இருக்கலாம்.
ஆம், தாழ்வு மனப்பான்மையும் இறைவன் முன் ஆதாயமானதே.
இறை அழைத்தலின் முழுப்பயனை பெறுவதற்கு தாழ்வு மனப்பான்மை
கொண்ட எசாயா ஆகவோ, குலத் தொழிலில் முழு ஆற்றல் பெற்ற
சீமோனாகவோ இருக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல . மாறாக
அழைப்பு கேட்கப்பட்டபோது பழையன கழிதலும் புதியன புகுதலும்
என்பதற்கேற்ப தங்களுடைய தாழ்வு மனப்பான்மையையும்,
குலத்தொழில் ஆளுமையையும் அறிக்கையிட்டு, விட்டொழித்து
அவர்கள்- தங்களை வெறுமையாக்கி முழுமையாக இறைவார்த்தையை
ஏற்றுக்கொண்டது மட்டுமே மூலக் காரணங்களாக அமைந்தன .
இரண்டாம் வாசகத்தில்-
பவுல் அடிகளார் தன் பணி வாழ்வால் நிலைவாழ்விற்கான
அழைத்தலைப் பெற்றுக்கொண்ட கொரிந்து வாழ் திருஅவை மக்கள்
அதில் நிலைத்திருந்து - அதை உறுதியாகப் பற்றிக்
கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவார்கள்; இல்லையேல்
அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே என
எச்சரிப்பதைக் காண்கிறோம்.
மேலும் பவுல் அடிகளாரோ மற்றத் திருத்தூதர்களோ
யாராயிருந்தாலும்
"மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மேலும் மறைநூலில்
எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்
என்பதை மட்டுமே பறைசாற்றியதையும் நினைவு கூறுகின்றார்,
எதற்காக? இவர்கள் அறிவித்த நற்செய்தி என்பது
கிறிஸ்து, கிறிஸ்துவின் வாழ்வியல், கிறிஸ்துவின் மரணம்,
கிறிஸ்துவின் உயிர்ப்பு ஆகியவற்றை மட்டுமே மையமாக
கொண்டுள்ள நற்செய்தி என்பதற்காகத்தான்..
திருஅவை மக்களாகிய நாம் எனவேதான் , இன்று திருப்பலியில்:-
கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார் , கிறிஸ்து
மீண்டும் வருவார் என நமது நம்பிக்கையை அறிக்கை இடுகின்றோம்.
இந்த தெய்வீக நம்பிக்கை உயிரோட்டமாக என்றும் அறிக்கையிடப்
படவேண்டும் என்பது இறைத் திட்டம் - இறைப் பணி.
நமது பணிக்காக யார்போவார்?" என்ற இறை அழைத்தலுக்கு (ஏசா:
6-8)
- பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழ்கின்ற இறைமக்கள்
நாங்கள் (எபே- 4:1) என திருத்தூதர்கள் போல் இறைபணியில்
உறுதியுடன் உயிரோட்டமுள்ள இறைமக்களாக நாங்கள் இருக்கிறோம்
என இறைவன் முன் பறைசாற்ற வேண்டாமா?. பாருங்கள் குழந்தை
பருவத்தில் திருஅவை நமக்குத் தந்த ஞாயிறு மற்றும் கடன்
திருநாட்களை மறவாமல் அனுசரிப்பாயாக என்ற அழைத்தலையே
இன்றுவரை உயிரோட்டம் உள்ளதாக மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன்
செயல்படுத்தி வருகின்றோம் இப்படி இருக்க, நிலை வாழ்வை
தேடுவோருக்கு இறைவன் தந்த அழைத்தல்-பணியான 1. "உன் முழு
இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு
மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக.
2.உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்
மீதும் அன்பு கூர்வாயாக என்ற இறைஅழைத்தல் -பணியை மறக்காமல்
செயல் படுத்த வேண்டும் அல்லவா?. கவனியுங்கள், இதில்
ஒன்றையேனும் செய்பவர் சாதாரண மக்கள். இரண்டையும்
கடைபிடித்து வாழ்பவர்கள் இறைமக்கள். நாம் பிறரால்
இறைமக்கள்(கிறிஸ்துவர்கள்) என்று அழைக்கப்படும் போது
பெருமை அடைகின்றோம் எனவே, இரண்டையும் சிறப்பாக
செயல்படுத்தி நிலைவாழ்வை நமதாக்குவோம்.
இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக
சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
அருள்பணி ஜெரோம் லூயிஸ் SJ
மேடைகளில், குறிப்பாக, அரசியல் மேடைகளில்
பேசுவோர், கூட்டத்தைக் கண்டு, அங்கு எழும் கரவொலியைக்
கேட்டு, நிலை தடுமாறி, பேசுவதைப் பார்த்திருக்கிறோம். நல்லவேளையாக,
நம் கோவில்களில், வழிபாட்டு நேரங்களில், மறையுரை நிகழும்
வேளையில், பொதுவாக, கரவொலிகள் எழுவதில்லை. இருந்தாலும், ஒரு
சில வேளைகளில், மறையுரை வழங்குவோரும் நிலை தடுமாறி, மிகைப்படுத்திப்
பேசுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என்பதை மறுக்க இயலாது.
இயேசுவின் திருமுழுக்கைப் பற்றி மறையுரை வழங்கிய ஒருவருக்கு
இவ்வாறு நிகழ்ந்தது. அவர், தன் மறையுரையில், இயேசு,
திருமுழுக்கு பெற்றபோது காட்டியப் பணிவைப்பற்றி மக்கள் மனதில்
ஆழமாய்ப் பதிக்க நினைத்தார். இயேசுவைக் காட்டிலும், அவருக்குத்
திருமுழுக்கு வழங்கிய யோவான், எவ்வளவோ சிறியவர் என்றாலும்,
இயேசு, அவருக்கு முன் பணிந்து நின்றதை, பல வழிகளில் விவரித்தார்.
அந்த மறையுரையின் இறுதியில், உணர்வுப்பூர்வமான சிறு செபத்தையும்
அவர் கூறினார். "இறைவா, இயேசுவைப்போல் பணிவில் நாங்கள்
வளரச் செய்தருளும். எங்களுக்கு முன் நிற்பவர்கள் எங்களைவிட
தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அவர்களுக்கு
முன் பணிவுடன் இருக்க வரம் தாரும்" என்ற வேண்டுதலுடன் அவர்
தன் மறையுரையை நிறைவு செய்தார்.
இது மிகவும் ஆபத்தான, தவறான செபம். போலித்தாழ்ச்சிக்கு அழகானதோர்
எடுத்துக்காட்டு. நமக்கு முன் நிற்பவர், நம்மைவிட தாழ்ந்தவர்
என்ற எண்ணமே, நம்மைத் தற்பெருமையில் சிக்கவைத்துவிடும். அத்தகையப்
பெருமிதமான எண்ணங்களுடன், அவர்களுக்கு முன் பணிவது, நடிப்பே
தவிர, உண்மையான பணிவு அல்ல. இயேசுவைப்போல் பணிவில் நாங்கள்
வளரச் செய்தருளும் என்று சொன்ன அதே மூச்சில், போலியானத்
தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும் ஆபத்தானது.
பணிவைப் பற்றிய தெளிவான எண்ணங்கள் இல்லாதபோது, இவ்விதம் அரைகுறை
கருத்துக்கள் வெளிவர வாய்ப்புக்கள் உள்ளன. பெருமை, பணிவு
என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய இன்றைய
ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. மேலோட்டமாகச்
சிந்திக்கும்போது, பெருமையும், பணிவும் எதிரும் புதிருமான
முரண்பட்ட இரு மனநிலைகளாகத் தோன்றுகின்றன. ஒன்று இருக்கும்
இடத்தில், மற்றொன்று இருக்கமுடியாது என்பதே, நம்மிடையே உள்ள
பரவலான கருத்து. ஆயினும், ஆழமாகச் சிந்தித்தால், உண்மையான
பெருமையும், உண்மையான பணிவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்
என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஒளி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இருளைப்பற்றி
நாம் சிந்திப்பதுபோல், உண்மையான பணிவு அல்லது உண்மையான
பெருமை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள, போலியானப் பணிவு,
போலியான பெருமை ஆகியவற்றை உருவாக்கும் அகந்தையைப்
புரிந்துகொள்வது நல்லது.
கதாசிரியராக, கவிஞராக, இறையியல் பேராசிரியாக விளங்கிய C.S.
Lewis அவர்கள், ஈராண்டுகள், BBC வானொலியில் வழங்கிய உரைகளைத்
தொகுத்து, Mere Christianity - குறைந்தபட்ச கிறிஸ்தவம் -
என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' -
பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக்
கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன:
"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில் வாழும் அனைத்து
மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக்
கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள
மறுக்கிறோம். அதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை
ஆரம்பித்துள்ளார்.
பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான
ஒப்புமைப்படுத்துதல், போட்டிப் போடுதல் என்பவைக் குறித்து
அழகாக விவரிக்கிறார்: "
வேறுபல குறையுள்ள மனிதர்கள் இணைந்து
மகிழ வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, குடிப்பழக்கத்திற்கு
அடிமையானவர்கள் இணைந்துவந்து மகிழ்வதற்கு வாய்ப்புண்டு.
ஆனால், அகந்தையில் ஊறிப் போனவர்கள் சேர்ந்துவருவது இயலாதச்
செயல். அப்படியே சேர்ந்துவந்தாலும், அவர்களில் யார் மிக
அதிக அகந்தை உள்ளவர் என்பதை நிரூபிக்கும் போட்டி
உருவாகும்"
என்று C.S. Lewis அவர்கள் கூறியுள்ளார். இந்தப்
போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள்,
கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை,
கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.
அகந்தைக்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம்,
பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர்.
"
தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம்,
ஆதாரம்"
என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம்
அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று
ஆரம்பித்து, அடக்கமுடைமை என்ற பண்பை அழகிய பத்து குறள்களாக
நமது சிந்தையில் பதிக்கிறார், திருவள்ளுவர்.
இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு ஆகிய
மூவரும் உண்மையானத் தாழ்ச்சியோடு தங்களைப்பற்றிக் கூறும்
வார்த்தைகளை, இன்றைய மூன்று வாசகங்களும் தாங்கி வருகின்றன.
முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் காணும்
எசாயா கூறும் வார்த்தைகள் இவை: தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட
மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில்
வாழ்பவன் நான். - எசாயா 6:5
இயேசு, திருத்தூதர்கள் பலருக்குக் காட்சியளித்ததை
வரிசைப்படுத்திச் சொல்லும் புனித பவுல், இறுதியாக,
தனக்கும் தோன்றினார் என்று கூறுவதை, இரண்டாம் வாசகத்தில்,
இவ்வாறு வாசிக்கிறோம்: எல்லாருக்கும் கடைசியில் காலம்
தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான்
திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என
அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின்
திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த
நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். - 1 கொரி. 5:8
இயேசு, பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை
நடுப்பகலில் மீன்பிடிக்கச் சொன்ன நிகழ்ச்சி இன்றைய
நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தி 5ம்
பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள இக்காட்சியை நாம் சிறிது
அசைபோடுவோம். - லூக்கா நற்செய்தி 5 : 1-3
முந்திய இரவு முழுவதும் உழைத்தும் ஒரு பயனையும் காணாமல்,
மனம் நொந்து போய் அமர்ந்திருந்தார் சீமோன். தன் கவலைகளில்
மூழ்கியிருந்த சீமோனின் படகு அசைந்தது. நிமிர்ந்து பார்த்த
அவருக்கு ஆச்சரியம், கொஞ்சம் கோபமும் கூட இருந்திருக்கும்.
முன்பின் தெரியாத ஒரு புது மனிதர், அவரது படகில், அவரது
உத்தரவின்றி ஏறியிருந்தார்.
முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், முன்னறிவிப்பு ஏதும்
இல்லாமல், நம் வாழ்வில் நுழைந்த அனுபவம் நம்மில் பலருக்கு
இருக்கலாம். இந்த நுழைவு, நல்ல விளைவுகளை உருவாக்கினால்,
வாழ்நாள் முழுவதும் அழகான ஒரு நட்புறவு மலரும். இந்த
நுழைவு, தேவையற்ற ஒரு குறுக்கீடாக அமைந்தால், பிரச்சனைகள்
என்ற களைகள், வெட்ட, வெட்ட வளரும்.
உரிமையோடு சீமோனின் படகில் நுழைந்த இயேசு, சீமோனின்
வாழ்விலும் நுழைந்தார். புதுமையை ஆரம்பித்து வைத்தார். தன்
படகிலிருந்து இயேசு போதித்தவற்றை, சீமோனும் கேட்டார்.
தன்னுடைய சொந்தக் கவலைகளில் மூழ்கியிருந்த சீமோனின்
உள்ளத்தில், இயேசுவின் வார்த்தைகள், மாற்றங்களை உருவாக்க
ஆரம்பித்தன.
போதனைகள் முடிந்த கையோடு, "ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு
போகும்படி" (லூக்கா 5:4) இயேசு கட்டளையிடுகிறார். இயேசு
விடுத்த இந்தக் கட்டளையைக் கேட்டு, சீமோனும், அவரைச்
சுற்றியிருந்தோரும் அதிர்ச்சியும், எரிச்சலும்
அடைந்திருக்கலாம். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள்
ஊறி, தேர்ந்த அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி
செய்வது போல் இருந்தது, இயேசுவின் கட்டளை.
சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் இப்படி
சொல்லியிருக்கலாம்: "ஐயா, இந்தப் பகல் நேரத்தில் நாங்கள்
வலை வீசினால், பார்ப்பவர்கள் எங்களைப் பைத்தியக்காரர்கள்
என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசனைக்கு நன்றி. என்ன
செய்வதென்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று,
பேதுரு, தன் நிலைப்பாட்டை, நல்லவிதமாகக் கூறியிருக்கலாம்;
மாறாக, கள்ளம் கபடமற்ற சீமோன், தன் இயலாமையையும்,
இயேசுவின் மீது தனக்கு உருவாகியிருந்த நம்பிக்கையையும்
இவ்விதம் சொல்கிறார். சீமோன் மறுமொழியாக, "
ஐயா, இரவு
முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும்
கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப்
போடுகிறேன்"
என்றார். (லூக்கா 5:5)
சீமோனின் நம்பிக்கை வீண்போகவில்லை. 'வலைகள் கிழியும்
அளவுக்கு' மீன்கள், அந்தப் பகல் நேரத்தில் பிடிபட்டன.
மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோனின் சொல்லும், செயலும்
ஆச்சரியத்தைத் தருகின்றன. இதைக் கண்ட சீமோன் பேதுரு,
இயேசுவின் கால்களில் விழுந்து, "
ஆண்டவரே, நான் பாவி, நீர்
என்னை விட்டுப் போய்விடும்"
என்றார். (லூக்கா நற்செய்தி
5:8)
இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர்கள் பவுல், பேதுரு ஆகிய
மூவருமே உள்ளத்தின் நிறைவிலிருந்து, தங்களைப்பற்றி
சரியாகப் புரிந்துகொண்டதால் உருவான உள்ளார்ந்தப்
பெருமையிலிருந்து இவ்வாறு பேசினர். தன்னிரக்கத்தில்,
வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே
தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும்
முக்கியமான பாடம்: தாழ்ச்சி, அல்லது, பணிவு என்பது, உள்ள
நிறைவிலிருந்து, உண்மையான பெருமையிலிருந்து வரும்போதுதான்
உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும்.
தன்னிறைவு, தன்னைப்பற்றிய தெளிவு, தன்னைப் பற்றிய உண்மையான
பெருமை இவை இல்லாதபோது, அடுத்தவர்களை எப்போதும் நமக்குப்
போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று
நம்மையே அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும் அல்லது, மிகவும்
பரிதாபமாக போலித்தாழ்ச்சியுடன், போலிப்பணிவுடன் நடிக்க
வேண்டியிருக்கும்.
அகந்தையால் உருவாகும் போலிப் பணிவைப்பற்றி கூறும் ஒரு கதை
இது:
தற்பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஒரு அரசனை ஞானி ஒருவர்
பார்க்க வந்தார். அரசன் அவரை உடனே சந்திக்கவில்லை. பல
அலுவல்களில் மூழ்கி இருப்பதுபோல் நடித்துக்கொண்டு, அந்த
ஞானியை காத்திருக்கச் செய்துவிட்டு, பிறகு, அரசன் அவரைச்
சந்தித்தான். அரசனுக்கு முன் ஞானி வந்ததும், அவர் தன்
தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி அரசனை வணங்கினார்.
உடனே, அரசனும் தான் அணிந்திருந்த மகுடத்தைக் கழற்றி ஞானியை
வணங்கினான். இதைக் கண்ட அமைச்சர்களுக்குப் பெரும்
ஆச்சரியம். அவர்களில் ஒருவர், "அரசே, என்ன இது? அந்த
மனிதன் சாதாரண குடிமகன். அவன் தன் தொப்பியைக் கழற்றி
வணங்குவது, அவனது கடமை. அதற்காக நீங்கள் ஏன் உங்கள்
மகுடத்தை கழற்றினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசன்
சொன்ன விளக்கம் இது: "முட்டாள் அமைச்சரே, அந்த மனிதனை விட
நான் குறைந்துபோக வேண்டுமா? அவன் தன் பணிவைக் காட்ட
தொப்பியைக் கழற்றி எனக்கு வணக்கம் சொன்னான். அவனுக்கு முன்
நான் என் மகுடத்தைக் கழற்றவில்லையெனில், அவன் பணிவில்
என்னை வென்றுவிடுவான். என்னைவிட உயர்ந்துவிடுவான். நான்
அவன் முன் தோற்றுவிடுவேன். யாரும், எதிலும், என்னை
வெல்லக்கூடாது. புரிகிறதா?" அரசன் தந்த விளக்கத்தைக்
கேட்டு, அமைச்சர் வாயடைத்து நின்றார்.
உண்மையான பெருமையையும், பணிவையும் கலந்து வாழ்ந்த
சாதனையாளர்களை நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான, அறிவியல்
மேதை ஐசக் நியூட்டன் சொல்வது இது: மற்றவர்களை விட நான்
இன்னும் அதிக தூரம் பார்க்க முடிந்ததற்கு ஒரு முக்கிய
காரணம், நான் எனக்கு முன் சென்றவர்களின் தோள்களின் மேல்
ஏறிநின்றேன். இறைவனின் தோள்களில் துணிவுடன் ஏறி நின்ற
எசாயா, பவுல், பேதுரு ஆகியோர், இன்றைய வாசகங்கள் வழியே
சொல்லித்தரும் பணிவுப் பாடங்களை நம் வாழ்வில் பயில
முயல்வோம்.
அருள்பணி ஜெரோம் லூயிஸ் SJ
அருள்தந்தை குமார்ராஜா
பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை!
மீனவரான சீமோன் பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான
ஒரு நிகழ்வு இது. அவரது வாழ்வையே புரட்டிப் போட்ட நிகழ்வு
என்றும் சொல்லலாம். ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு
அவரிடம் சொன்னபோது, சீமோன் பேதுருவின் பதில் மொழி: "
ஐயா,
இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும்
கிடைக்கவில்லை"
என்பது. நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய அனுபவங்கள்
நிச்சயம் உண்டு. பாடுபட்டுப் படித்தும் தேர்வில் தோல்வி அடைவோர்,
பாடுபட்டு வேலை தேடியும் வேலை இன்றித் தவிப்போர், பாடுபட்டுப்
பணம் சேர்த்தும், அதை ஒரே நாளில் இழந்துவிடுவோர், பாடுபட்டு
ஏற்பாடுகள் செய்து பிள்ளைகளுக்குத் திருமணம்
செய்துவைத்தும், அவர்கள் மகிழ்ச்சியின்றி வாழ்வதைக் கண்டு
கலங்கும் பெற்றோர், பல மருத்துவர்களிடம் சென்றும் நலம்
பெறாதோர்... எனப் பல தரப்பட்ட மக்கள் சீமோன் பேதுருவின் வரிசையில்
நிற்கின்றனர்.
அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பேதுருவின் பதில்
மொழியிலுள்ள இரண்டாம் பகுதி எடுத்துச் சொல்கிறது:
"
ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் "
. அதாவது,
சொந்த முயற்சியில் நம்பிக்கை வைக்காமல், இறையாற்றலில், இறைவனின்
பேரன்பில், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுவது.
அவ்வாறு, சொல்லி, செயல்பட்ட உடனே பேதுருவின் வாழ்வில் அந்த
அற்புதம் நிகழ்ந்தது. வலைகள் கிழியும் அளவுக்கு மீன்பாடு
கிடைத்தது. "
மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை.
கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது"
(உரோ 9:16)
என்னும் இறைமொழியை நினைவில் கொள்வோம்.
மன்றாட்டு:
இரக்கத்தின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய
சொந்த விருப்பத்தினாலோ, பாடுபட்டு உழைப்பதாலோ நாங்கள் எதையும்
சாதித்துவிடப் போவதில்லை. உமது இரக்கத்தால் மட்டுமே எங்கள்
உழைப்புக்குக் கனிகள் கிடைக்கும் என்று அறிகிறோம். ஆண்டவரே,
எங்கள் உழைப்பை ஆசிர்வதியும். உமது இரக்கத்தால் எங்கள் பணிகளில்
எங்களுக்கு வெற்றியைத் தாரும். ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா
- திருத்தொண்டர். வளன் அரசு
நம் ஆண்டவர் இயேசு முதல் சீடர்களான
பேதுருவையும் மற்றவர்களையும் அழைக்கும் போது அவர்கள் மீன்
பிடித்துக் கொண்டிருந்தார்கள் என வாசிக்கின்றோம். வயதிலும்
சரி அனுபவதிலும் சரி பேதுரு இயேசுவைக் காட்டிலும் கடலையும்
அங்கு மீன் பிடிப்பது எப்படி என்பதையும் நன்கு நுட்பமாகவே
அறிந்திருப்பார் என்றால் மிகையாகாது. ஆனால் இயேசு அவரிடம்
சென்று வலையினை. அதுவும் சற்று முன்பு வரை இரவெல்லாம் கண்
விழித்து மீன் பிடித்து எதுவும் இல்லை என வந்தவர்களிடம் மீஷண்டுமாய்
போய் வலையை வீசுங்கள் என்று ஆண்டவர் இயேசு கூறுகிறார். இதில்
உண்மையிலியே நாம் நம் முதல் திருத்தந்தை பேதுருவின் நம்பிகையை
பாராட்ட வேண்டும். வலையைப் போட்டவருக்கு வலைகள் கிழிந்து
போகும் அளவிற்கு ஏராளமான மீன்கள் அகப்பட்டன.
இது நமக்கு என்ன பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றகென்றால் இந்த
கடலைப் போன்ற உலகத்திலே,நம் வாழ்க்கை என்பது கடலில் மிதந்து
தத்தளிக்கின்ற படகை போன்றது.இங்கு விடப்படுகின்ற வலையானது
நம் முயற்சிகளினாலும் திறமைகளினாலும் குடும்ப பின்னனிகளைக்
கொண்டு வீசினோம் என்றால் தோல்விகளையே சந்திக்கின்றன பல
வேளைகளில்.ஆனால் நம் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் நாம்
இறைவனின் துணை கொண்டு ஆழமான நம்பிக்கையோடு வலையினை வீpசினோம்
என்றால் அதனுடைய பலன் பலமடங்கு என்பதை எடுத்து காட்டுகிறது.
நமது நம்பிக்கை மேN;லாட்டமாக இல்;லாமல் வேரோட்டமாக இருக்க
வேண்டும்.
வலைகள் மீன்களால் நிரம்புவதற்கு முன்பாகவே இயேசு சீமோனின்
இதயத்தில் நிறைந்திருக்கின்றார். போட்ட வலைகள் இழுக்கபடுவதற்கு
முன்பே சீமோனை இயேசு தம்மிடம் ஈர்த்துவிட்டார் வலைகள்
கிழிய தொடங்குவதற்கு முன்பே சீமோனின் உள்ளம் இயேசுவின் அன்பினால்
கிழிந்திருந்தது அருகிலிருந்து சீமோனின் நண்பர்கள் வந்து
உதவும் முன்பே இயேசு சீமோனுக்கு நண்பனாக உதவ வந்தார். படகுகள்
மீன்களால் நிரம்புவதற்கு முன்பே இயேசு படகினில் நிறைந்து
இருந்தார். இது அனைத்தும் எப்படி நிகழ்ந்தது என்றால் இயேசுவின்
இறைவார்த்தைக்கு கீழ்படிந்ததானால் தான.; மீன்கூட பிடிக்க
முடியாதவர்கள் கீழ்படிந்தததின் ஒரே காரணத்திற்காக மனிதர்களை
பிடிப்பவர்கள் ஆக்கினார் இயேசு. தான் நிறுவிய காலங்களையும்
கண்டங்களையும் கடந்து செல்லும் திருஅவையின் தலைவர் ஆக்கினார்.
இதே போன்ற நிகழ்வினைத் தான் மற்ற இரண்டு வாசகங்களிலும் இன்று
பார்கிறோம். முதல் வாசகத்தில் எசாயா "
தூய்மையற்ற உதடுகளைக்
கொண்ட மனிதன் நான்"
என்கிறார் (எசாயா 6:5). இரண்டாம் வாசகத்தில்
பவுல் "
திருத்தூதர் என அழைக்கப்பெற தாம் தகுதியற்றவன்"
என்கிறார்
(1கொரி 15:9). நற்செய்தியில் சீமோன் இயேசுவிடம், "
ஆண்டவரே
நான் பாவி, நீர் என்னை விட்டுபோய்விடும்"
என்கிறார் (லூக்
5:8).
ஆனால் மேற்கூறப்பட்டுள்ள மூவரையுமே கடவுள் தம் ஊழியத்திற்கு
தகுதியுள்;ளவர்களாக மாற்;றுகின்றார். கடவுள் தகுதியுள்ளவர்களை
அழைகிறார் என்பதை விட தகுதியற்றவர்களை அழைத்து அவர்களை தமது
பணிக்கு தகுதியுள்ளவார்களாக மாற்றுகிறார். நாமும் நம்
சொந்த பலத்தை நம்பாமல் கடவுளின் அருளினை நம்பி எசாயா கூறுவது
போன்று "
இதோ நான் இருக்கின்றேன். அடியேனை அனுப்பும்"
என்றும்
நம் அன்னை கன்னி மரியாவை போன்று "
இதோ ஆண்டவருடைய அடிமை உமது
வார்த்தை படியே எனக்கு ஆகட்டும்"
என்றும் நம்மையே
காணிக்கையாக்குவோம்.
- திருத்தொண்டர். வளன் அரசு
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
நல்ல முயற்சி
"
விழுவது தவறல்ல, விழுந்து எழாமல் இருப்பதுதான் தவறு"
என்று
பொதுவாக சொல்வார்கள். அதுபோல, தோற்பது தவறல்ல, தோற்றாலும்
மீண்டும் முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தவறு. இன்றைய நற்செய்தியில்
பலமுறை வலைகளைப் போட்டும், மீன் ஒன்றும் கிடைக்காமல், இனிமேல்
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனது வலைகளைப்
பழுதுபார்த்துக்கொண்டிருந்த, பேதுரு, இயேசுவின் வார்த்தைகளைக்
கேட்டு மீண்டும் முயற்சி செய்கிறார்.
பேதுருவுக்கு கடல் அன்னையைப் பற்றி நன்றாகத்
தெரிந்திருக்கும். ஒருநாள் மீன்பாடு இருக்கும், மற்றொரு
நாள் வெறுமனே திரும்பி தான் வரவேண்டியிருக்கும் என்பது
பேதுரு அறியாத ஒன்றல்ல. இதுதான் அவரது வாழ்க்கை. எனவே,
மீன்பாடு இல்லையென்றாலும், பேதுருவுக்கு பெரிய வருத்தம் ஒன்றுமில்லை.
அவர் வழக்கம்போல், கடலுக்குச் சென்று திரும்பியவுடன் தனது
வலைகளை, பழுது பார்த்துக்கொண்டிருக்கிறார். அதே வேளையில்
இயேசு மீண்டும் வலைகளைப் போடச்சொன்னவுடன், அவருடைய
வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, மீண்டும் ஒரு முயற்சி எடுப்போமே,
என்று வலைகளைப் போடுகிறார். நிச்சயமாக, பேதுருவுக்குள்ளாக,
அவருடைய உள்ளுணர்வு இன்னொருமுறை முயற்சி செய்யலாம் என்று
சொல்லியிருக்கும். மற்றொரு மனம், இவ்வளவு முயற்சி செய்து
கிடைக்காதது, இனிமேல் கிடைக்கவாப் போகிறது? என்றும்
சொல்லியிருக்கும். ஆனால், இயேசு சொன்னவுடன் பேதுரு, மற்றொரு
முறை முயற்சி செய்ய முடிவு செய்கிறார்.
நமது வாழ்வில் ஒருபோதும் சோர்ந்து போகக்கூடாது. நமது
முடிவு மரணமாகத்தான் இருக்க வேண்டும். அதுவரை நாம் தொடர்ந்து
வாழ்வில் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த ஒரு
சூழ்நிலையிலும் நாம் சோர்ந்து போகிறபோது, இந்த பகுதியை
மீண்டும் ஒருமுறை வாசிப்போம். தியானிப்போம். அது நமக்கு
நிச்சயம் நல்ல உற்சாகத்தைத்தரும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
அருள்தந்தை குமார்ராஜா
உமது சொற்படியே!
இயேசுவில் இனிய அன்பர்களே, பேதுருவின் நம்பிக்கை இன்று நம்
கவனத்தைக் கவருகின்றது. இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும்
ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும், உமது சொற்படியே வலைகளைப்
போடுகிறேன் என்று சொல்லி வலைகளை வீசுகிறார். எண்ணிலடங்கா
மீன்களை பிடிக்கின்றார். அவரது நம்பிக்கையும், அதன் செயல்
வடிவமும் இன்று நம் வாழ்வைத் தூண்டட்டும்.
நமது வாழ்விலும் சில வேளைகளில் பேதுருவைப் போலவே நாமும்
சோர்வடைந்திருக்கலாம். எவ்வளவோ பாடுபட்டு உழைத்தும் ஒன்றும்
கிடைக்கவில்லை என்னும் பேதுருவின் அனுபவம் நமக்கும்
கிடைத்திருக்கலாம். இன்றும் அத்தகைய நிலை நம்மில் இருக்கலாம்.
நமக்குத் தேவை பேதுருவின் இறைநம்பிக்கையும், தொடர் செயல்பாடும்.
அவரைப் போலவே நாமும் இயேசுவின் சொற்படியே செய்வோம். இறைவனின்
இரக்கத்தில்; நம்பிக்கை கொள்வோம். பேதுருவின் நம்பிக்கை
அவரைத் தொடர் செயல்பாட்டுக்கு இட்டுச்சென்றது. வலையை
மீண்டும் கடலுக்குள் போட்டார் அவர். நாமும் அவ்வாறே
சோர்ந்துவிடாமல், பேதுருவைப் போல மீண்டும் நம் பணிகளில் ஈடுபடுவோம்.
இறைவன் பெருந்திரளான ஆசிர்வாதங்களை நம்மீது பொழிவார்.
மன்றாடுவோம்: நாங்கள் வேண்டுவதற்கும், விரும்புவதற்கும்
மேலாகவே எங்களை ஆசிர்வதிக்கும் அன்பு தெய்வமே, உம்மைப்
போற்றுகிறோம். எங்களது சோர்வு வேளைகளில் நாங்கள் தளர்ந்து
விடாமல், உமது சொற்களை நம்பி, தொடர் முயற்சிகளில் ஈடுபட எங்களுக்கு
ஆற்றறல் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே
மாட்சி, ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
கலிலேயாக் கடல் என்றழைக்கப்பட்ட கெனசரேத்து
ஏரியில் மீன் பிடிக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்றது.
பொதுவாக மீனவர்கள் இரவு நேரத்தில்தான் அங்கே மீன்பிடிப்பது
வழக்கம். ஓர் இரவு முழுவதும் பாடுபட்ட பிறகும் சீமோன்
பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு மீன் கிடைக்கவே இல்லை.
காலை நேரத்தில் இயேசு அவர்களைச் சந்திக்கிறார். சீமோனின்
படகில் இயேசு ஏறுகிறார்; அங்கிருந்து மக்களுக்குப்
போதிக்கிறார். ''ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்
பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என இயேசு கூறியதும்
பேதுருவுக்கு மீன் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும்
இயேசுவின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து அவர் வலை
வீசுகிறார். மீன் கிடைக்காத நேரமாகிய பகல் பொழுதில் வலைகள்
கிழியும் அளவுக்குப் பெருமளவு மீன் படுகிறது. இந்த அதிசயத்தைக்
கண்ட பேதுரு இயேசுவின் கால்களில் விழுகிறார்; அவரை ''ஆண்டவரே''
என்றழைத்து, ''நான் பாவி, என்னை விட்டுப் போய்விடும்'' என்கிறார்
(லூக் 5:8). இங்கே பேதுரு தன் தகுதியற்ற நிலையை ஏற்கின்ற
அதே வேளையில் இயேசுவின் புனிதத் தன்மையையும் அறிக்கையிடுகிறார்.
இயேசுவை அவர் ''ஆண்டவரே'' என அழைப்பதும் கருதத் தக்கது. இயேசு
மக்களுக்குப் போதிக்கும் போது, ''நான் நேர்மையாளர்களை அல்ல,
பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்'' என இயேசு கூறுவார்
(லூக் 5:32). இங்கோ பேதுரு தன்னைப் பாவி என அழைத்து, இயேசு
தம்மை விட்டுப் போய்விட வேண்டும் எனக் கேட்கிறார். ஆனால்
இயேசு பேதுருவை விட்டுப் போய்விடும் எண்ணத்தில் இல்லை.
மாறாக, தான் பாவி என்பதை உணர்ந்த அந்த பேதுருவைத் தான் இயேசு
தனிப்பட்ட விதத்தில் அழைத்தார்; பேதுருவுக்கு ஒரு முக்கியமான
பொறுப்பையும் அளித்தார். அதாவது, பேதுரு இனிமேல் மீன்
பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு இயேசுவுக்காக இன்னொரு
தொழிலைச் செய்யப் போகிறார். அதாவது, மனிதர்களை இயேசுவிடம்
அழைத்து வருவார். கடவுளின் உடனிருப்பை நாம் உணரும்போது நம்
உள்ளத்தில் அச்சம் எழுவது இயல்பு. இங்கேயும் பேதுருவும்
அவரோடு இருந்தவர்களும் அதிசயமான மீன்பாட்டைக் கண்டு
''திகைப்புறுகிறார்கள்''; இயேசுவிடத்தில் துலங்கிய அதிசய
சக்தியைக் கண்டு ''அச்சமுறுகிறார்கள்''. எனவே இயேசு சீமோனை
நோக்கி, ''அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்''
என்று சொல்கிறார் (லூக் 5:10). இயேசுவின் சாவுக்கும் உயிர்த்தெழுதலுக்கும்
பிறகு பேதுரு இயேசு பற்றிய நற்செய்தியை மக்களுக்குத்
துணிச்சலோடு அறிவிப்பார். அவர்களை இயேசுவிடம் கொண்டு
செல்வார். அந்த வரலாற்றை லூக்கா ''திருத்தூதர் பணிகள்''
நூலில் பதிவுசெய்துள்ளார் (காண்க: திப 2:14:41; 3:1-26;
4:1-22). மக்கள் மனம் மாறி, நற்செய்தியை ஏற்று, இயேசுவில்
நம்பிக்கை கொள்வது கடவுளின் வல்லமையால் நிகழும் ஓர் அதிசயமே.
என்றாலும், நற்செய்திப் பணியை ஆர்வத்தோடு செய்திட இயேசுவின்
சீடர்கள் அழைக்கப்படுகிறார்கள. அவர்களும் ''மனிதரைப்
பிடிப்பவர்கள் ஆக வேண்டும்''. படகு, வலை, திரளான மீன்கள்
போன்றவை திருச்சபைக்கும், நற்செய்தி அறிவிப்புக்கும்,
கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கும் முறையே உருவகமாகப்
பொருள் கொள்ளப்படுவதுண்டு.
மன்றாட்டு
இறைவா, உம்மை நாடி வந்து ஆன்ம நலம் பெற்றிட எங்களுக்கு அருள்தாரும்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அருட்திரு ஜோசப் வியோன்
இறைவனை முன்னிலைப்படுத்துவோம்.
அன்பார்ந்த நண்பர்களே! நாட்டில் நடக்கும் அறிவியல் அதிசயங்கள்,
அறிவுக்கு அப்பார்ப்பட்ட நிகழ்வுகள் இவற்றைப் பாரக்கும்போதெல்லாம்
யாக்கோபு, யோவான் போல திகைப்படைகிறோம், பேதுரு போல கடவுளின்
காலில் விழுந்து "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப்
போய்விடும்" என்கிறோம். அந்த அளவுக்கு திகைப்பும் அச்சமும்
அடைகிறோம்.
ஆனால் ஆண்டவனின் அறிவாற்றலை, வல்லமையை உய்த்துணர்வதில்லை.
நம் அறிவையும் அனுபவத்தையும் திறமையையுமே அதன் இயலாமையையும்
வியந்து நிற்கிறோம். நல்ல மீன்பாடு கிடைக்க "ஆழத்திற்குத்
தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்"
(லூக் 5'4), "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன்
கிடைக்கும்" (யோவா 12'6) என்ற வார்த்தைகள் இறைவனின் அறிவாற்றலின்
சான்று, மனித இயலாமைக்குச் சவால்.
எதற்கும் அறிவையும் அனுபவத்தையும் முதன்மைப்படுத்தும் இன்றைய
வாழ்க்கை நிலைக்கு இயேசுவின் இச்செயல்பாடு ஒரு முன் எச்சரிக்கை.
ஆண்டவனை முன்னிலைப்படுத்த ஆணித்தரமான அழைப்பு.
இவ்வாறு ஆண்டவனை முதன்மைப்படுத்தி அவரது ஆசீரோடு அருளோடு,
ஆதரவோடு செபித்து எதைச் செய்தாலும், செய்வதனைத்திலும் உறுதியாக
வெற்றிபெருவோம். மீன் பிடித்த பேதுருவை மனிதர்களைப்
பிடிப்போராக்கியதுபோல நம்மையும் உயர்த்துவார், மேன்மைப்படுத்துவார்.
இயேசுவை முன்னிலைப்படுத்தி எதையும் செய்வோம். உயர்வடைவோம்.
அருட்திரு ஜோசப் வியோன்
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ