Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் கடவுளே! உமது பேரன்பினால்  

கடவுளே! உமது பேரன்புப் பெருக்கினால்  எனக்குப் பதில்மொழி தாரும்.

ஏனெனில் உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்;
வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்;
என் தாயின் மக்களுக்கு  அயலான் ஆனேன்.(2)





கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

ஏனெனில் உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்;
வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்;
என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.



ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்;
கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்;
துணை செய்வதில் நீர் மாறாதவர். - பல்லவி
ஆண்டவரே! நான் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்;
நீர் தரும் மீட்பும் அரணானதே..


உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. -
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். - பல்லவி


எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்;
கடவுளை நாடித் தேடுகிறவர்களே உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்;
சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.

வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும்
அவரைப் புகழட்டும். -
கடவுளின் பெயரை பாடிப் புகழ்வேன்;
அவருக்கு நன்றி செலுத்தி,
அவரை என்றும் மாட்சிமைப்படுத்துவேன்..


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்