| தியானப் பாடல்கள் | நினைவெல்லாம் நீதானே |
|
நினைவெல்லாம் நீதானே என் இறைவா நிலையான உறவாய் நீ எனில் வா வா -2 தகுதியில்லாத அடியேன் உள்ளம் வருவதன் காரணம் என்னவோ அன்பின் முழுமை நீர் அல்லவோ கண்டேன் கண்டேன் கண்டேன் என்னில் உம்மை கண்டேன் காண்பேன் காண்பேன் காண்பேன் பிறரிலும் உம்மை காண்பேன்....-2 1 காலம் கடந்து உம்மை நான் அறிந்தேன் கரைகாணா கலமாய் நான் திரிந்தேன்-2 தேடி வந்த தெய்வம் நீயே வீதியில் நின்ற என்னையே புத்தாடை கொண்டு போர்த்தினீர் தலையில் நறுமண தைலம் பூசி எனக்கொரு விருந்தினை அளித்தீரே அப்பாவை உன்னில் கண்டேனே.... கண்டேன் கண்டேன் கண்டேன்...-2 என்னில் உம்மை கண்டேன் காண்பேன் காண்பேன் காண்பேன் பிறரிலும் உம்மை காண்பேன்....-2 2 கடவுள் வடிவினில் விளங்கிய நீர் அடிமையின் கோலம் அதை ஏற்றீர்-2 வானின்று வந்த தெய்வம் திரு உணவாய் உடைந்தீரே திரு இரத்தமாய் வடிந்தீரே நிலைவாழ்வு அளிக்கின்ற விண்ணக விருந்தாய் நிலைத்தீரே அப்பாவை உன்னில் கண்டேனே.... கண்டேன் கண்டேன் கண்டேன்...-2 என்னில் உம்மை கண்டேன் காண்பேன் காண்பேன் காண்பேன் பிறரிலும் உம்மை காண்பேன்....-2 |