இயேசுவின் திரு இருதய
வணக்க மாதம்.
26-ம் தேதி.
இயேசுவின் திருஇருதயம் நீதிக்கு
மாதிரிகை.
தமது ஜீவிய காலமெல்லாம் திவ்விய இயேசு அனுசரித்து வந்த
நீதியென்ற புண்ணியமானது திருஇருதய சிநேகத்தின் வேறோர்
சாயல். சேசாருக்கு உரியதைச் சேசாருக்குச் செலுத்துங்கள்.
சர்வேசுரனுக்கு உரியதைச் சர்வேசுரனுக்குச் செலுத்தங்கள்
(லூக் 20:25) என்று நமதாண்டவர் சொன்னபோது, இந்தப்
புண்ணியத்தை எம்மாத்திரம் நன்கு மதித்தாரென்றும், புகழ்ந்தாரென்றும்
அறிகிறது சுலபம். ஒவ்வொருவனுக்கும் அவனுக்குரியதைச்
செலுத்துவதில் தான் நீதி அடங்கியிருக்கிது. இந்தப்
புண்ணியமானது சர்வேசுரனுக்கும் மனிதர்களுக்கும் நாம்
செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் உத்தமமாய் நிறைவேற்ற நம்மைத்
தூண்டுகிறது.
உத்தமமான தேவ ஊழியத்துக்கும், சர்வேசுரன்மட்டில் நமக்குள்ள
கடமைகளை நிறைவேற்றுகிறதற்கும், திவ்விய இயேசு
மாதிரியையிருக் கிறார். தமது தேவபிதாவை மகிமைப்படுத்தி,
அவருடைய சித்தத்தை நிறைவேற்றி மனிதர்களுக்கு அறிவித்து
சிநேகிக்கச் செய்வதில் திவ்விய இயேசு கொண்டிருந்த ஆவல்
இம்மாத்திரமென்று விவரிக்க இயலாது. இதற்காகவே அவர் இவ்வுலகத்துக்கு
வந்தார். இந்தத் தேவ ஊழியத்தை விருத்தி செய்யவே தமது
பிராணனைக் கொடுத்தார். இயேசுக்கிறிஸ்து நாதர் இவ்வுலகத்தை
விட்டு பிரியுந்தருணத்தில் பிதாவே! நீர் எனக்குக் கற்பித்ததையெல்லாம்
நான் நிறைவேற்றினேன் என்று அவர் திருவுளம் பற்றினது சர்வ
நீதிக்கும் ஒத்திருக்கும்.
நாம் சாகுந்தருணத்தில் இதே வார்த்தைகளை நாம் உச்சரிக்கக்
கூடுமானால், நாம் எவ்வளவோ பாக்கியவான்களாயிருப்போம்!
சர்வேசுரன் நமது சிருஷ்டிகர்; நமது இரட்சகர். ஆதலால்
நாம் அவரை வணங்கி, சிநேகித்து சேவிக்கவும், அவருக்குக்
கீழ்ப்படியவும் கடமைப்பட்டிருக்கி றோம். நாம் நல்ல
கிறிஸ்தவர்களாய் நடக்க விரும்பினால் சர்வேசுரன் மட்டில்
நீதிக்க ஒத்தபிரகாரம் நடந்து, அவருடைய கற்பனைகளுக்குக்
கீழ்ப் படிந்து, கிறிஸ்துவனுக்குரிய கடமைகளை
நிறைவேற்றி, சாகும்பரியந்தம் அவருடைய ஊழியத்தில் பிரமாணிக்கமாய்
நிலைத்திருக்க வேண்டியது.
சர்வேசுவரனுக்கடுத்த கடமைகளை நிறைவேற்ற தங்களாலான பிரயாசப்படுகிற
நல்ல கிறிஸ்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள்
நடத்தையால் தங்களைக் கண்காணிக்கும் வேத போதகர்களுக்கு
மெய்யாகவே ஆறுதலாயிருக்கிறார்கள். இன்னும் வேறு பலர்
இருக்கிறார்கள், இவர்கள் தேவ ஊழியத்தில் அஜாக்கிரதையாய்
நடந்து, பாவ வழியில் வாழ்கிறார்கள். தங்களுக்கு இஷ்டமான
கடமைகளைச் செய்வார்கள், தங்கள் சுபாவத்தோடு ஒத்துப்போகாத
கடமைகளை விட்டுவிடுவார்கள். நித்திய கேட்டுக்கு ஆளாக்கும்
இந்த அசமந்தத்திலிருந்து இவர்களை அசைக்கக் குருவானவர்
பிரயாசப்படுவாராகில், உடனே முறையிடுவார்கள், அவருக்கு
விரோதமாய்ப் பேசுவார்கள். தங்கள் பேரில் கண்டிப்பாயிருக்கிறாரென்று
தூற்றுவார்கள். சில சமயங்களில் கலகம் உண்டு பண்ணுவார்கள்.
அசட்டைத்தனமுள்ள கிறிஸ்துவர்களுக்கு ஆபத்தாய் வந்து
முடியும் இந்தக் குற்றங்களைக் கவனியாமல், கண்ணை
மூடிக்கொண்டிருப்பது குருவானவருக்கு மிக எளிது. ஆனால்
தமது வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட ஆத்துமங்களைத் தமது
அசட்டைத்தனத்தால் கவனியாமல் விடுவாரேயாகில், இவர் ஆண்டவருக்குக்
கண்டிப்பான கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.
இயேசுவின் திருஇருதய பக்தர்கள் சர்வேசுரன் மட்டில்
நீதியென்கிற புண்ணியத்தைத் தங்களால் இயன்றளவு அனுசரிப்பார்கள்.
தேவ ஊழியத்தில் தாராள குணத்தோடு நடப்பார்கள். சோதனை நேரத்திலும்,
ஞான ஆறுதலான நேரத்திலும் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கம்
தவறமாட்டார்கள். தேவ ஊழியத்தில் தவறி, சர்வேசுரனுக்குத்
துரோகம் பண்ணுகிறதைவிட சாகத் துணிந்திருப்பார்கள்.
புனித அதிரியானப்பர் கொடிய சாவுக்கு தீர்வையிடப்பட்ட
போது, தமக்கு வரப்போகிற வேதசாட்சி முடியைப்பற்றி தமது
மனைவிக்கு அறிவிக்கும்படி காவற்காரர்களுடைய அனுமதி
பெற்று வீட்டுக்குப் போனார். அவருடைய பக்தியுள்ள மனைவி,
தன் புருஷன் நிர்ப்பாக்கியமாய்த் தன் விசுவாசத்தையும்
இயேசுக்கிறிஸ்துவையும் மறுதலித்து விட்டதினிமித்தமல்லவா
சினத்திலிட்டு விடுதலையாகி வருகிறாரென்று எண்ணி, கோபங்கொண்டு
கதவை சாத்திவிட்டுச் சொன்னதாவது : "ஆ! கோழை, சதிகாரரே,
என் முன் ஒருபோதும் வராதேயும், என்னோடு பேசாதேயும்.
தேவ ஊழியத்தை விட்டுப் பிரிந்து, உமது சிருஷ்டிகருக்கும்
இரட்சகருக்கும் துரோகம் புரிந்த நீர் என் முகத்தில்
விழிக்கவேண்டாம். தீர்வை நாளில் தேவ சந்திதானத்துக்கு
முன் வேத விரோதியாய் நீர் நிற்கும்போது உமது
நிர்ப்பாக்கியம் எவ்வளவு பெரிதாயிராது" என்று கத்தினாள்.
புனித அதிரியானப்பர் தன் மனைவி போட்ட சப்தத்தைக்
கேட்டு ஆச்சரியப்படாமல், உண்மையை உள்ளது போல் அறிவிக்க,
அவள் உடனே சந்தோஷப்பட்டதுமல்லாமல், இருவருமாக ஆண்டவருக்கு
நன்றியறிந்த தோத்திரம் செலுத்தினார்கள். தேவ ஊழியத்தில்
விசுவாசிகளுக்கு இருக்கவேண்டிய வீரத்துவமான பிரமாணிக்கத்தின்
ஆச்சரியமான மாதிரிகை இதுவே!
தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் பங்கில் சில வருஷங்களுக்கு
முன் தங்கள் பங்கு குரு செய்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்
பிரியமில்லாத சில பெரிய மனிதர்கள் குருவானவருக்கு விரோதமாய்க்
கலகஞ் செய்து, இந்தத் தீர்மானத்தை மாற்றினாலொழிய நாங்கள்
திருப்பலியில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும், திருவருட்
சாதனங்களைப் பெறமாட்டோமென்றும் பிடிவாதம் பண்ணினார்கள்.
ஆனால் அவ்வூர்ப் பெண்பிள்ளைகள் பக்தியுள்ள புத்திசாலிகள்.
அவர்களில் பலர் மரியன்னையுடைய சபையைச் சேர்ந்த
சுறுசுறுப்புள்ள கிறீஸ்துவர்கள். தங்களுடைய கணவர்கள்
அநேக சாவான பாவங்களுக்கு உத்திரவாதிகளாகி நித்திய
கேட்டின் மார்க்கத்தில் நடக்கப்போகிறதைப் பற்றி மிக
துன்பப்பட்டார்கள். ஆதலால் பெண்களெல்லோரும் சேர்ந்து
தாங்களே ஒரு கூட்டம் கூடி, தங்கள் வீட்டுக்காரர்கள் சர்வேசுரனுக்கு
குருவானவருக்கும் விரோதமாக எடுத்த பிடிவாதப்படி தாங்கள்
நடக்கிறதில்லையென்றும், அவர்கள் திருச்சபையின் சொற்படி
கேட்கும் வரையில் அவர்களுக்கு சமையல் செய்து போடுகிறதில்லையென்றும்
தீர்மானம் பண்ணினார்கள். இந்தத் தீர்மானத்தால் குடும்பத்தில்
மிக தொந்தரவுகள் ஏற்பட்டன. கணவர்கள் அவர்களைத்
திட்டினார்கள், அடித்தார்கள், கொடுமையாய் நடத்தினார்கள்.
பெண்கள் பயப்படவில்லை, வெகு உறுதியாயிருந்தார்கள். ஆண்
பிள்ளைகள் தான் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து உடல்
மெலிந்து வருத்தப்படவேண்டியிருந்தது. கடைசியாய்த் தங்கள்
மனைவிகளின் எண்ணப்படி புருஷர் இணங்க வேண்டியிருந்தது.
குருவானவர் கட்டளைக்கு முழுதும் கீழ்ப்படிந்தார்கள்.
இவ்வகையாய் அவர்களுடைய சரீர உயிரும், ஆத்தும் உயிரும்
காப்பாற்றப்பட்டது.
தேவ ஊழியத்தில் இந்தப் பக்தியுள்ள பெண்கள் காட்டின் ஆச்சரியத்துக்குரிய
நன்மாதிரிகையைக் கண்டு உணர்வோம். இவர்கள் தங்கள் நல்ல
நடத்தையால் போதிக்கும் படிப்பினை மிக பலனுள்ள படிப்பினை.
இவ்வித சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்கள் வேத வைராக்கியத்தைக்
காண்பிக்கிறது, மற்றவிடங்களிலும் மிக பிரயோஜனமாயிருக்கும்.
2- வது - நமது அயலார்மட்டில் நமக்குள்ள கடமைகள் : தேவ
ஊழியத்தில் சுறுசுறுப்பும் பிரமாணிக்கமுமுள்ள கிறிஸ்துவன்,
தன் அயலான் மட்டில் தனக்குள்ள கடமைகளையும் பிரமாணிக்கமாய்ச்
செலுத்துவான். பிறருடைய சொத்துக்கும் பெயருக்கும் கெடுதலான
சகலத்தையும் விலக்கி, நல்ல கிறிஸ்துவர்கள் எச்சரிக்கையாய்
நடப்பார்கள். பிறருடைய சொத்தில் அல்லது காணிபூமியில்
ஒரு சொற்பப் பாகத்தை யென்கிலும் தங்களுடையதாக்கிக்
கொள்ளுதல், மற்றவர்களுக்குச் சொந்தமான பணத்தைத் தன்வசம்
வைத்திருத்தல், கேடுவரும் படி பொய்ப் புகார் செய்தால்,
பொய்ச்சாட்சி சொல்லுதல்,
விற்கிற வாங்குகிற ஜாமான்களின் அளவில் ஏமாற்றுதல், புறணி
ஆவலாதிகளால் மற்றவர்களுடைய பெயரைக் கெடுத்தல் ஆகிய இவைபோன்றவைகள்
பிறருக்கு அநீதம் வருவிக்கிறதென்று அவர்களுக்கு நன்றாய்த்
தெரியும். சில சமயம் ஏதேனும் கெடுதல் வருவித்துவிட்டதாகக்
கண்டால் உத்தரித்தாலொழிய பாவப்பொறுத்தல் கிடையாதென்று
நல்ல கிறீஸ்துவன் எப்போதும் அறிந்திருப்பதினால், அது
பொருள் நஷ்டமோ அல்லது பெயர் நஷ்டமோ தான் செய்த கெடுதலை
நிவர்த்தி செய்ய தன்னாலான பிரயாசப்படுவான்.
இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் அனைவரும், ஆண்டவரிடமும்
அயலார்மட்டிலும் தாங்கள் செலுத்த வேண்டிய கடமைகளையெல்லாம்
உத்தமமாய் நிறைவேற்ற உறுதியான பிரதிக்கினை செய்யும்பட்சத்தில்
அவர்களும் புனித சூசையப்பரைப்போல் நீதிமான், அதாவது "சர்வேசுரன்
மட்டிலும், மனிதர்கள் மட்டிலும் தனக்குள்ள சகல கடமைகளையும்
நிறைவேற்றுகிற கிறிஸ்துவன்" என்கிற பெயருக்குப் பாத்திரமாவார்கள்.
இயேசுவின் திரு இருதயமானது நித்தியத்துக்கும் அவர்களுடைய
சம்பாவனையும் பாக்கியமுமாயிருக்கும்.
வரலாறு.
ஓர் வியாதிக்காரனுக்கு அவஸ்தை கொடுக்க குருவானவரைக்
கூப்பிட்டார்கள் குருவானவர் போனார். சரீரமெல்லாம் காயங்களால்
மூடப்பட்டு அசையாமல் கட்டை போல் கிடக்கும் வாத
வியாதியுள்ள ஒரு மனிதனைக் கண்டார். அவனுக்கு உதவி
செய்ய ஒருவருமில்லை. அவன் மகள் நாள் முழுதும் கடின
கூலி வேலை செய்து சாப்பாடு கொண்டுவர வேண்டியிருந்தது.
இவ்வித வேதனைகளின் நடுவில் அவனுடைய அமரிக்கையையும்,
பொறுமையையும் கண்ட குருவானவர் ஆச்சரியப்பட்டு அவனை
நோக்கி : இந்தப் பரிதாபத்துக்குரிய நிலையில் நீ இவ்வளவு
மனச்சமாதானமாயிருக்கிறதெப்படி என, வியாதிக்காரன்,
சுவாமி, உங்கள் கண்களை உயர்த்திப் பாருங்கள், எங்கிருந்து
எனக்கு ஆறுதல் வருகிறதென்று காண்பீர்கள், என்றான். அப்படியே
குருவானவர் மேலே பார்த்தார். அங்கே இயேசுவின் திருஇருதயப்படமும்,
மரியாயின் மாசற்ற இருதயப் படமும் சுவரில்
தொங்கிக்கொண்டிருந்தன. "சுவாமி, இங்கேயிருந்துதான்
நான் ஆறுதலடைகிறேன். வேதனை அதிகரிக்கும் போது இந்தப்
படங்களைப் பார்த்து சேசுவும் மரியாயும் என்னிலும் அதிக
வேதனை அனுபவித்தார்கள். என்றாலும் அவர்கள் மாசில்லாதவர்கள்.
நானோ பெரும் பாவி என்று நினைத்ததும், உடனே எனக்கு ஆறுதல்
வருகிறது. தவிர, இதே நினைவுதான் இயேசுவுக் காகவும், தேவமாதாவுக்காவும்
அவர்களுடைய திருஇருதயங்களுக்குப் பிரியப்பட எந்த வேதனைகளையும்
நான் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது" என்றான்.
இவ்வரிய வார்த்தைகளைக் கேட்டதும், பக்தி அன்புக்குரிய
இவ்வுணர்ச்சிகளை அவனிடம் கண்டதும், குருவானவருடைய இருதயம்
சந்தோஷத்தால் பூரித்து. கடைசி திருவருட்சாதனங்களை எல்லாம்
நிறைவேற்றினார். 'இயேசுவின் திரு இருதயமும் மரியன்னையின்
மாசற்ற இருதயமும் என் ஆத்துமத்தை மோட்சத்துக்கு இட்டுக்
கொண்டுபோக வருகிறதை நான் பார்க்கிறேன்" என்னும் பரம்
வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு தேவ ஆனந்தத்தில் அமிழ்ந்தினவனாய்
இரண்டு தினத்தில் பாக்கியமான மரணமடைந்தான்.
புனித மார்கரீத் மரியம்மாளின்
சுகிர்த வாக்கியம்.
ஆண்டவருடைய பிரமாணிக்கமுள்ள ஊழியர்களுக்கொத்த வண்ணம்
உன்னைத்தானே மறுதலித்து உன் எஜமானுடைய ஊழியத்துக்கு
சுறுசுறுப்போடு உன்னைக் கையளி. உன் அன்பு ஏற்றபடி ஆண்டவர்
பலன் அளிப்பார். இயேசுவின் திரு இருதயத்தின் வார்த்தை,
மாதிரிகை, புண்ணியக் கிரிகைகளுக்கு ஒத்தவண்ணம் உன்னுடைய
வாழ்வை சீர்படுத்து.
இயேசு உன் இருதயத்தை முழுதும் கைப்பற்ற ஆசைப்படுகிறார்.
அதுபோலவே நீயும் அவருடைய அன்பை கைப்பற்ற ஆசைப்படு.
கூடுமானால் சகலத்துக்கு மேலாய் அவரை அன்பு செய்ய உன்னாலான
முயற்சி எடுத்துக்கொள்.
சிலுவையில் என் இயேசு தொங்கின் தோற்றமாய் அல்லது
பிலாத்தென்பவனுடைய அரண்மனையில், இதோ மனிதன் என்று
காட்டின் பாவனையாய் எனக்கு என் ஆண்டவர் அடிக்கடி தம்மைக்
காண்பித்தார். இந்தக் காட்சி என் இருதயத்தில் எவ்வளவு
இரக்கத்தையும், அன்பையும் சிலுவைகளின் மேல் ஆவலையும்
உண்டுபண்ணினதென்றால் எனக்கு வந்த சகல துன்பங்களும் மிக
எளிதாயிருந்தது. (பர். அரு. பிதா)
மனவல்லய ஜெபம்.
இயேசுவின் மதுரமான இருதயமே! உம்மை நான் அதிகமதிகமாய்
அன்பு செய்தருளும்.
சேசுவின் திரு இருதயத்திற்கு
நவநாள் ஜெபம்
"கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும்" என்று
திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே! தேவரீருடைய
இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது
திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை
நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு
உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக
விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும்
மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும்
பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு
இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக்
கேட்கப் போகிறேன்? தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம்
அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்
போகிறேன்? சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள்
அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய
வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக்
கேட்கப்போகிறேன்? ஆகையால் என் நேச சேசுவின் திரு
இருதயமே! தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன்.
இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில்
என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு
ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம்
வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத்
தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம்
வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள்
அனுகூலமாகும். திவ்விய சேசுவே! தேவரீருடைய நன்மை
உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.
ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து
போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க
மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர்
தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை
நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும்
பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை
நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில்
தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர்
வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான்
ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே,
ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத்
தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும்
சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.
நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி
நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற
ஆசையாயிருக்கிறேன். ஆமென்.
சேசுநாதருடைய திரு இருதயத்தின்
பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக்
கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா,
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து
சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய்
ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய
ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிமான சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும்
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள்
அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும்
சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும்
ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய
இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும்
சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக்
கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும்
சுவாமி.
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள்
இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை
செய்தருளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா! உமக்கு மிகவும்
பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால்
உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி
புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.
உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர்
இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த
மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து
சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய
பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன்
சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும்
சுவாமி. ஆமென்.
|