இயேசுவின்
திரு இருதய வணக்க மாதம். 1ம் தேதி.
செய்ய வேண்டியவை.
இயேசுவின் திரு இருதயத்தின் மேல் நமக்கு மிகுந்த
பக்தியிருக்க வேண்டும். அளவற்ற அன்பு நிறைந்த
இயேசுவின் திரு இருதயத்திற்கு மனிதர்களால் வரும்
நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும், அன்புக்கு
பிரதி அன்பு காட்டவும், மனிதர்களுடைய இருதயங்களில்
உண்டாகிற பற்றுதல் தான் திரு இருதயப்பக்தி. நம்முடைய
ஆராதனைக்கும், வணக்கத்திற்கும் அன்புக்கும்
தகுதியுடையவரான தூய வார்த்தையாகிய தமத்திரித்துவத்தின்
இரண்டாம் ஆளான இயேசுக் கிறிஸ்துவின் உயிருள்ள
இரத்தமும் உடலுமான இருதயம்தான் இயேசுவின் திரு இருதயம்
இயேசு கிறிஸ்து நம்மீது கொண்டிருக்கும் அளவிடமுடியாத
அன்புதான். அவர் நமது மீட்புக்காக சிலுவையில்
இரத்தத்தைச் சிந்தவும், நமது பீடங்களின் மேல் தூய அப்ப
வடிவில் அற்புதமாய் வீற்றிருக்கவும் செய்கிறது.
ஆதலால், மனிதர்களை அன்பு செய்யும்படி இயேசுவின் திரு
இருதயத்தில் அக்கினிபோல் எரிந்துக் கொண்டிருக்கும்
இறைவனுடைய அன்பை அறிந்து ஆராதித்து அன்புக்கு அன்பு
காட்டுவதுதான் திரு இருதய பக்தியாகும். நம் ஆண்டவர்
புனித மார்கரீத் மரியாவுக்கு தமது இதயத்தைக்
காண்பித்து கூறியது போல், நம்மையும் நோக்கி, மனிதர்களை
அதிகமாக நேசிக்கும் இந்த இதயத்தைப் பாருங்கள்.
இதற்குப் பலர் நிந்தை அவமானத்தை வருவிக்கிறார்கள்.
நன்றியறியாமையும், அசட்டைத்தனமும், அவமரியாதையுமே
அவர்கள் நமக்குச் செய்யும் பிரதி நன்றி . நமது
அன்புக்குப் பதில் அன்பு சிறிதளவாகிலும்
செலுத்துவார்களேயாகில் நாம் அவர்களுக்காக செய்த
அனைத்தும் ஒன்றுமில்லை என்று எண்ணுவதோடு, வேண்டுமானால்
இன்னும் அதிகமாக அவர்களுக்காகப் பாடுபடவும்
தயாராயிருக்கிறோம்.
"மகளே, மகனே, நீயாகிலும் அவர்களுடைய
நன்றிகெட்டதனத்துக்குப் பரிகாரமாக நமக்கு சற்று ஆறுதல்
கொடுக்கமாட்டாயா?" என்று நம் ஒவ்வொருவரையும்
கேட்கிறார். நாம் கட்டிக் கொண்ட சகல பாவங்களும் திரு
இருதயத்தின் தேவ அன்பின் சுடரால் சுட்டெரிக்கப்பட்டு
நமது தீயகுணம் நிறைந்த வாழ்நாள் முழுவதும்
சுத்தப்படுத்தப்படும்படி நாம் ஆண்டவர் இயேசுவின்
அன்பில் நிலைத்து இந்த மாதம் முழுவதும் அவர் இதயத்தில்
குடியிருப்போமாக ! தூய பவுலடியார் கூறியது போல வாழ்வது
நானல்ல, கிறிஸ்துவே என்னிடம் வாழ்கிறார் என்று நாமும்
சொல்லலாம்.
புனித மார்கரீத் மரியா கூறியது போல, 'ஓ என் ஆண்டவரே!
என்னிடம் ஆயிரம் இருதயங்கள், ஆயிரம் உயிர்கள்
இருந்தாலும் அவைகளை எல்லாம் உம்முடைய ஊழியத்துக்கும்
அன்புக்கும் ஒப்புக் கொடுக்கிறே னென்று நாமும்
சொல்லலாம்.
இயேசுவின் திருஇருதய வணக்கமாதத்தை பக்தியோடு கொண்டாடி
இறை அருளை நிரம்பப் பெற நாம் செய்யவேண்டியது:
இம்மாதத்தில் இயேசுவின் திருஇருதயத்துக்கு நமது
அன்பைக் காண்பிக்க எந்தெந்தக் கோவில்களில் அல்லது
ஜெபக்கூடங்களில் இத்திரு இருதய வணக்க மாதத்தை வெளி
ஆடம்பரத்தோடு கொண்டாடுகிறார்களோ, அங்கே நாமும்
சேர்ந்து சிறப்போடு கொண்டாடுவோமென்று நல்ல தீர்மானம்
செய்கிறது அல்லது ஒவ்வொரு குடும்பத்திலும் திருஇருதயப்
படம் ஸ்தாபித்து தினமும் குடும்ப ஜெபமாலைச் சொல்லி
தங்களை முழுவதும் அத்திரு இருதயத்துக்கு
ஒப்புக்கொடுக்க வேண்டியது, அதனால் திரு இருதயத்தின்
ஆசீர்வாதம் கிடைக்கும். திரு இருதயத்திற்கு விரோதமான
எந்தக் காரியத்தையும் செய்யலாகாது.
வரலாறு
புனித மார்கரீத் மரியாவுக்கு தன் சுயநல எண்ணங்கள்,
செயல்களை வெல்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒருநாள்
நமது இரட்சகர் தனது காயங்களைக் காண்பித்து, தன் தீய
செயல்களை எதிர்த்து போராடப் போதுமான தாராள குணம்
மார்கரீத் மரியாவிடத்தில் இல்லாததைப் பற்றிக்
கண்டித்தார். நவ கன்னிகையான மார்கரீத் மரியா ஆண்டவரை
நோக்கி, "சுவாமி! நான் என்ன செய்வேன்? என் இருதயம்
மிகவும் பலவீனமுள்ளதாயிருக்கிறது, எனவே இயேசுவே என்
இருதயத்தை உமது திரு இருதய காயத்துக்குள் எப்போதும்
வைத்தருளுமென்று வேண்டினார்.
சேசுவின் திரு இருதயத்திற்கு
நவநாள் ஜெபம்
கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும் என்று
திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே! தேவரீருடைய
இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது
திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை
நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு
உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக
விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும்
மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும்
பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு
இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக்
கேட்கப் போகிறேன்? தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம்
அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்
போகிறேன்? சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள்
அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய
வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக்
கேட்கப்போகிறேன்? ஆகையால் என் நேச சேசுவின் திரு
இருதயமே! தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன்.
இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில்
என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு
ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம்
வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத்
தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம்
வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள்
அனுகூலமாகும். திவ்விய சேசுவே! தேவரீருடைய நன்மை
உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.
ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து
போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க
மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர்
தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை
நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும்
பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை
நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில்
தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர்
வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான்
ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே,
ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத்
தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும்
சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.
நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி
நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற
ஆசையாயிருக்கிறேன். ஆமென்.
சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக்
கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா,
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து
சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய்
ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய
ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிமான சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும்
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள்
அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும்
சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும்
ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய
இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும்
சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக்
கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும்
சுவாமி.
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள்
இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை
செய்தருளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா! உமக்கு மிகவும்
பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால்
உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி
புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.
உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர்
இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த
மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து
சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய
பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன்
சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும்
சுவாமி. ஆமென்.
1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம்
சிங்கராயர் என்னும் அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப்
பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு
விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.
|
|