| 
        			
					
					 புனித எலிசபெத் ✠ (St. Elizabeth) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				நினைவுத் திருநாள் : நவம்பர் 
					05 | 
			 
			
			
				
					✠ புனிதர் எலிசபெத் 
					✠(St. Elizabeth) 
					 
					*நன்னெறியாளர் : (Righteous) 
					 
					*பிறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு எபிரோன் (ஜோஷுவா 21:11) 
					 
					*இறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு (அநேகமாக எபிரோன்) 
					 
					*ஏற்கும் சமயம் :ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic 
					Church) 
					 
					*கீழ் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை (Eastern Orthodox Church) 
					 
					*ஓரியண்ட்டல் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை (Oriental Orthodox 
					Church) 
					 
					*ஆங்கிலிக்கன் திருச்சபை (Anglican Church) 
					 
					*லூதரன் திருச்சபை (Lutheran Church) 
					 
					*பாதுகாவல் : கர்ப்பிணிப் பெண்கள் 
					 
					எலிசபெத், லூக்கா நற்செய்திகளின்படி செக்கரியாவின் மனைவியும், திருமுழுக்கு 
					அருளப்பரின் தாயாரும் ஆவார். 
					 
					
					திருவிவிலிய சரிதம் : 
					 
					லூக்கா நற்செய்திகளின்படி, எலிசபெத் "ஆரோனின்" மகளாவார். இவரும் 
					இவரது கணவரான செக்கரியாவும் இறைவனின் பார்வையில் நன்னெறியாளர்களாய் 
					வாழ்ந்தனர். ஆனால், குழந்தைகளில்லாதவர்களாய் வாழ்ந்தனர். செக்கரியா 
					ஆலய பணிகளில் இருந்தபோது இறைதூதர் காபிரியல் அவர்முன்னே தோன்றி 
					கூறியதாவது : 
					 
					"செக்கரியாவே பயப்படாதே; உமது இறைவேண்டல்கள் கேட்கப்பட்டன; உமது 
					மனைவி கருத்தாங்கி, ஒரு ஆண் மகவை ஈன்றெடுப்பாள்; நீர் அதற்கு 
					யோவான் என்று பெயரிடுவீர்; அவன் உங்களுக்கு ஒரு சந்தோஷமும் மகிழ்ச்சியுமாய் 
					இருப்பான்; அவர் இறைவனின் பார்வையில் பெரியவனாய் இருப்பதால் அநேகர் 
					அவரது பிறப்பால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்; அவர் திராட்சை 
					இரசமும் வேறு பானங்களையும் அருந்தார். அவர் பிறப்பின் முன்பே 
					பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்.  - லூக்கா 1:1315 
					 
					தாமும், தமது மனைவி எலிசபெத்தும் முதிர் வயதினர் என்ற காரணத்தால் 
					செக்கரியா, இறைதூதர் காபிரியேலின் வார்த்தைகளில் நம்பிக்கை 
					வைக்கவில்லை. இதையறிந்த காபிரியேல் தூதர், செக்கரியாவை நோக்கி, 
					"உமது விசுவாசமின்மையால் நீர் வாய் பேச இயலாத ஊமையாவீர்; எமது 
					வாக்கு நிறைவேறும்வரை நீர் ஊமையாக இருப்பீர்" என்று இயம்பி மறைந்தார். 
					- லூக்கா 1:16-23 
					 
					மற்றும், லூக்கா நற்செய்திகள் (1:2425), (1:26-40), 
					(1:4145), (1:46-55), (1:5664), (1:65-80) ஆகியவற்றில் எலிசபெத் 
					பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. 
					 
					அதிகாரப்பூர்வமற்ற திருமறை ஏடுகள் (Apocrypha) : 
					 
					எலிசபெத் மேலும் பல அதிகாரப்பூர்வமற்ற திருமறை ஏடுகளிலும் 
					குறிப்பிடப்படுகிறார். 
					 
					இஸ்லாம் மத திருமறை நூலாகிய "திருக்குர்ஆனிலும்" இவர் 
					கௌரவிக்கப்படுகிறார். | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |