| 
        			✠ புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி ✠(St. 
					Francesco Spinelli) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				
					நினைவுத் திருநாள் : 
					
					
					(பெப்ரவரி 
					
					/ 
					Fev- 
					06) | 
			 
			
			
				
					✠ புனிதர் 
					ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி ✠(St. Francesco Spinelli) 
					 
 ✠குரு :
					(Priest) 
					 
					✠பிறப்பு : ஏப்ரல் 14, 1853 
					மிலன், லொம்பார்டி-வெனீஷியா இராச்சியம் 
					(Milan, Kingdom of Lombardy-Venetia) 
					 
					✠இறப்பு : ஃபெப்ரவரி 6, 1913 (வயது 
					59) 
					ரிவோல்டா டி'அ்டா, கிரெமோனா, இத்தாலி இராச்சியம் 
					(Rivolta d'Adda, Cremona, Kingdom of Italy) 
					 
					✠ஏற்கும் சமயம் : 
					ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
					(Roman Catholic Church) 
					 
					✠முக்திப்பேறு பட்டம் : ஜூன் 21, 
					1992 
					திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் 
					(Pope John Paul II) 
					 
					✠புனிதர் பட்டம் : அக்டோபர் 14, 
					2018 
					திருத்தந்தை ஃபிரான்சிஸ் 
					(Pope Francis) 
					 
					✠நினைவுத் திருநாள் : ஃபெப்ரவரி 
					6 
					 
					✠பாதுகாவல் : 
					ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் 
					சபை 
					(Sisters Adorers of the Blessed Sacrament) 
					 
					புனிதர் ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, இத்தாலி நாட்டின் ரோமன் கத்தோலிக்க 
					திருச்சபையின் குருவும், "ஆசிர்வதிக்கப்பட்ட அருட்சாதனத்தை ஆராதிக்கும் 
					அருட்சகோதரியர் சபை" (Sisters Adorers of the Blessed 
					Sacrament) எனப்படும் சபையை நிறுவியவருமாவார். இவர், "புனிதர் 
					கெல்ட்ரூட் காமன்சோலி" (Saint Geltrude Comensoli) மற்றும் அருளாளர் 
					"லுய்கி மரியா பலஸ்ஸோலோ" (Blessed Luigi Maria Palazzolo) ஆகியோரின் 
					சமகாலத்தவராவார். மேலும், இவருக்கு காமன்சோலியுடன் முந்தைய ஒத்துழைப்பு 
					இருந்தது. ஐவரும் காமன்சோலியும் இணைந்து "பெர்கமோ" (Bergamo) 
					நகரில் ஒரு மத கல்வி நிறுவனத்தை நிறுவினார்கள். அதற்கு முன்னரே, 
					இவர்களின் உறுப்பினர்களிடையே இரட்டை பிளவு காரணமாக, ஸ்பைனெல்லி 
					தமது பணிகளை விட்டு விலக நேர்ந்தது. 
					 
					கி.பி. 1853ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 14ம் நாளன்று, வடக்கு இத்தாலியின் 
					"லொம்பார்டி" (Lombardy) பிராந்தியத்தின் தலைநகரான "மிலன்" 
					(Milan) நகரில் பிறந்த ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லிக்கு அவர் பிறந்த 
					மறுதினம் திருமுழுக்கு தரப்பட்டது. அவர் தமது சிறு வயதில், தமது 
					பெற்றோருடனும், உடன்பிறந்தோருடனும் மிலனிலிருந்து (Milan) 
					"கிரெமோனா" (Cremona) நகருக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர், 
					கி.பி. 1871ம் ஆண்டின் கோடை காலத்தில், "வர்கோ" நகரில், தமக்கிருந்த 
					கடுமையான முதுகெலும்பு பிரச்சனைக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தினார். 
					தனது குழந்தைப் பருவத்தில், ஏழை எளியவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் 
					அடிக்கடி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தமது அம்மாவுடன் 
					சேர்ந்து, சக தோழர்களுக்கு பொம்மை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட 
					விரும்பினார். 
					 
					அவரது ஆன்மீக வாழ்க்கைக்கான அழைப்புக்கு, அவரது தாயாரும், 
					குருவாக இருந்த அவரது மாமா "பியேட்ரோ காக்ளியரொளி" (Pietro 
					Cagliaroli) என்பவரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். பெர்கமோ நகரில் 
					இறையியல் கற்கத் தொடங்கிய இவரை இவரது நண்பர் "அருளாளர் லுய்கி 
					மரிய பலஸ்ஸோ" (Blessed Luigi Maria Palazzolo) என்பவரும் ஊக்கப்படுத்தினார். 
					கி.பி. 1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14ம் தேதி, குருத்துவ அருட்பொழிவு 
					பெற்றார். விரைவிலேயே, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius 
					IX) அவர்களின் பொது அழைப்பினை ஏற்று, யூபிலி ஆண்டு நிகழ்வுகளில் 
					பங்கேற்க ரோம் நகர் பயணமானார். 
					 
					அங்கே, மரிய அன்னை பேராலயத்திற்கும் சென்ற ஸ்பைநெல்லி, அங்கிருந்த 
					குழந்தை இயேசு கெபியினருகே, மறையுரைச் சிந்தனைகளில் ஆழ்ந்தார். 
					அத்துடன், நற்கருணை ஆராதணையில் பெண்கள் ஈடுபடுவதாக இவர் கண்ட 
					திருக்காட்சி, தாம் சொந்தமாக ஒரு சபையை நிறுவ இவருக்கு உந்துசக்தியாக 
					விளங்கியது. ரோமிலிருந்து திரும்பியதும் ஒரு மாலை பள்ளியில் கல்விப் 
					பணிகளை நடத்தினார். 
					 
					கி.பி. 1882ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 15ம் தேதி, பெர்கமோ (Bergamo) 
					நகரில், புனிதர் கெல்ட்ருட் காமென்சோலி (Saint Geltrude 
					Comensoli) உடன் இணைந்து "நற்கருணை அருட்சகோதரியார்" (Sacramentine 
					Sisters) சபையை தொடங்கினார். இது, நற்கருணைக்கு அர்ப்பணிக்கப்பட்ட 
					இச்சபை, நற்கருணை ஆராதனைப் பணிகளில் மட்டுமே ஈடுபடும். சபையின் 
					முதல் கான்வென்ட், "வயா சான் அன்டோனினோ'வில்" (Via San 
					Antonino) திறக்கப்பட்டது. நகரில் ஏற்பட்ட தொடர் பேரழிவுகள் மற்றும் 
					நிதி நெருக்கடிகளின் காரணமாக, இந்த இல்லம் தோல்வியடைந்த காரணத்தால், 
					கி.பி. 1889ம் ஆண்டு, மார்ச் மாதம், 4ம் தேதியன்று, அதை 
					விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஸ்பைநெல்லிக்கு ஏற்பட்டது. 
					 
					பெர்மாமோவில் நடந்ததை எண்ணி மன வேதனையடைந்த ஸ்பைநெல்லி, 
					"கிரெமோனா" (Cremona) நகரிலுள்ள "ரிவோல்டா டி'அ்ட்டா" (Rivolta 
					d'Adda) எனும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரது குருத்துவ 
					கடமைகளை நிறைவேற்றுவதற்காக கிரெமோனாவுக்கு வருமாறும், மறைமாவட்ட 
					ஆயர் அவரை அழைத்திருந்தார். கி.பி. 1892ம் ஆண்டு, அவர், "ஆசிர்வதிக்கப்பட்ட 
					அருட்சாதனத்தை ஆராதிக்கும் அருட்சகோதரியர் சபையை" (Sisters 
					Adorers of the Blessed Sacrament) நிறுவினார். இச்சபைக்கு, 
					பின்னாளில் கி.பி. 1897ம் ஆண்டு, "கிரெமோனா ஆயர்" (Bishop of 
					Cremona) "கெரேமியா பொனோமெல்லி" (Geremia Bonomelli) அவர்களின் 
					மறைமாவட்ட அங்கீகாரம் கிட்டியது. 
					 
					ஃபிரான்செஸ்கோ ஸ்பைனெல்லி, கி.பி. 1913ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 
					6ம் தேதி மரித்தார். 
					 
					கி.பி. 1926ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 11ம் நாளன்று, இவரது சபைக்கு, 
					திருத்தந்தை அவையின் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. பின்னர், 
					கி.பி. 1932ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 27ம் நாளன்று, திருத்தந்தை 
					பதினோராம் பயஸ் (Pope Pius XI) முழு அங்கீகாரம் வழங்கினார். 
					இவர்களது சபை, "அர்ஜென்ட்டினா" (Argentina) மற்றும் "செனெகல்" 
					(Senegal) உள்ளிட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. 2005ம் ஆண்டு 
					கணக்கெடுப்பின்படி, மொத்தமிருந்த 59 இல்லங்களில், 436 மறைப்பணியாளர்கள் 
					இருந்தனர். | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |