Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  விதை

                                             

  5. வாழ்வு என்பது போரட்டமே  
      
 

1"

20.மெதுவாக அவசரப்படலாம்
வயதான ஒருவர் 25வயது நிரம்பிய தன் மகனோடு ரயிலில் அமர்ந்திருந்தார். ரயில் புறப்படத் தயாரானது. அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டனர். ரயில் போகத் தொடங்கியதும் அந்த 25 வயது இளைஞன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லைஇ மிகவும் ஆர்வத்தோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தான். அவன் சன்னோலரத்தில் அமர்ந்திருந்தான். அவனுடைய கையை வெளியே நீட்டி காற்றைப் பிடித்து விளையாடினான்இ கத்தினான்இ அய்யோ மரங்கள் எல்லாம் குடுகுடு என்று ஓடுது என்று அவன் சொல்லி மீண்டும் கத்தினான். அவன் அப்பாவிடம் அதை சொன்னான். அந்;த வயதான அப்பா மகன் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்இ அவனுடைய உணர்வுகளை புரிந்து கொண்டார். அப்பாவும் மகனும் பேசிக்கொள்வதை அருகில் அமர்ந்தவர்கள் பார்த்தும் கேட்டும் கொண்டே எரிச்சலடைந்தனர். வயது 25 ஆகிறது சிறு பிள்ளை போன்று நடந்து கொள்கிறான் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். மீண்டும் அவன் அவன் தந்தையிடம் அப்பா அங்க பாருங்க குளம்இ விலங்குஇ மேகம் எல்லாம் ரயிலோடவே வருது என்று சொன்னான். மீண்டும் எரிச்சலோடு அனைவரும் பார்த்தனர். திடிரென மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த இளைஞன் கையை வெளியே நீட்டினான். ஆவன் தந்தையிடம் அப்பா மழை என்ன தொடுகிறது என்று சொல்லி ஆச்சிரியப்பட்டான். அருகில் இருந்தவர்கள் பொறுமைதாங்காமல் அந்த பெரிய மனிதாரிடம் "ஏன் உங்க மகனை நல்ல மருத்துவருகிட்ட அழைத்து போய் காட்டக்கூடாதா என்று சொன்னார்கள். ஆதற்கு அந்த பெரியமனிதர் அவர்களிடம் "ஆமாஇ நாங்க இப்பதான் மருத்துவமனையிலிருந்து வருகிறோ ம் அவன் பிறந்ததிலிருந்து இன்று தான் முதன்முதலாக் தன் கண் பார்வையை அடைந்தான்"என்று சொன்னார்.
உண்மை தெரியாமல் முடிவுக்கு வரவேண்டாமே.

இறைவார்த்தை:
லூக்கா 6: 37 "மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்: அப்போதுதான் நீங்களும் கண்டனத்திற்;கு ஆளாக மாட்டீர்கள்."
யோவான் 7: 24 "வெளித் தோற்றத்தின்படி தீர்ப்பளிக்காதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்."
உரோமையர் 2: 1-3 "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரேஇ நீங்கள் யாராயினும்இ சாக்குப் போக்குச்சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள்."
1கொரிந்தியர் 2: 15 "ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார்."
எபேசியர் 4: 29 "கேட்போர் பயனடையும்படிஇ தேவைக்கு ஏற்றவாறுஇ அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்."
தீத்து 3: 2 எவரையும் பழித்துரைக்கலாகாது: சண்டையிடலாகாது: கனிந்த உள்ளத்தினாராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும்."

21.அவப்பெயர் உண்டாக்க வேண்டாமே
ஒரு முறை பெரிய மனிதர் ஒருவர் தன் பக்கத்து வீட்டு நபரைப்பற்றி அவன் ஒரு திருடன் என்று தவாறாக அனைவரிடமும் சொல்லி வந்தார். இதன் விளைவாக அந்த மனிதர் கைது செய்யப்பட்டார். அதானால் சிறைவாசமும் சென்றார். சிறிது நாள் கழித்து அவர் திருடர் இல்லை என்று நிருபிக்கப்பட்டது. இதனால் பக்கத்து வீட்டு நபர் அந்த பெரிய மனிதர் மீது வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அந்த பெரியமனிதர் நான் சும்மாதான் சொன்னேன் என்று சொன்னார். நீதிபதி அந்த பெரியமனிதனிடம் "நீ அவரைப்பற்றி சொன்னது அனைத்தையும் ஒரு தாளில் எழுது என்று சொன்னார். வீட்டிற்கு செல்லும் போது அதை துண்டுதுண்டாக கிழித்து எறிந்து விட்டு போஇ நாளை வா நான் தீர்ப்பு சொல்கிறேன் என்று சொன்னார். மறுநாள் அந்த பெரியமனிதாரிடம் நீதிபதி சொன்னார் "நான் தீர்ப்பு சொல்வதற்கு முன்பு நேற்று நீ துண்டுதுண்டாக கிழித்த தாளை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார். அதற்கு அந்த பெரியமனிதர் "எப்படி அதை பொறுக்கிவருவது இந்நேரம் காற்று பல இடங்களில் அதை அடித்துச் சென்றிருக்கும்இ நான் கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம் என்று சொன்னார். நீதிபதி அவரிடம் "இது மாதிரிதான் நீங்கள் சொன்ன சிறிய சொற்கள் கூட ஒரு மனிதாரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும். ஒரு மனிதரைப்பற்றி நல்லது பேசாமல் இருந்தாலும் சரிஇ அவரைப்பற்றி தவறாகப் பேசக்கூடாது"என்று சொன்னார்.
பேசிய வார்;த்தைகளுக்கு நாம் அடிமை. பேசாத வார்த்தைகளுக்கு நாம் முதலாளி..
இறைவார்த்தை:
லேவியர் 19: 16 "உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நானே ஆண்டவர்."
நீதிமொழிகள் 11: 12 "அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட்டோரின் செயல்: நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு."
நீதிமொழிகள் 20: 19 "வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்: வாயாடியோடு உறவாடாதே."
நீதிமொழிகள் 26: 27 "தான் வெட்டின குழியில் தானே விழுவார்: தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்."
எரேமியா 9: 4 - 5 "ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப் பொறுத்தவரை எச்சரிக்கையாய் இருக்கட்டும். எந்த உறவினரையும் நம்பவேண்டாம். ஏனெனில்இ எல்லா உறவினரும் ஏமாற்றுபவர் என்பது உறுதிஇ அடுத்திருப்பவர் அனைவரும் புறணி பேசுகின்றனர். எல்லாரும் அடுத்திருப்பவரை ஏமாற்றுகின்றனர். யாருமே உண்மை பேசுவதில்லை. பொய் பேசத் தங்கள் நாவைப் பழக்கியுள்ளார்கள்."
யாக்கோபு 3: 1-12 "நாவடக்கம்"
22.நல்லசமாரியன்
பூமியின் தேவதையாக வளம் வந்த அன்னை தெரசா உரோமை நகாரில் தன்னுடைய சகோதாரிகள் இல்லத்தைப் பார்க்கச் சென்ற பொழுதுஇ மறைந்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பால் அவர்களை பார்ப்பதற்கான சிறப்பு அனுமதி பெற்றிருந்தார். தன்னுடைய சக அருட்சகோதாரிகளோடு அன்னை அவர்கள் திருத்தந்தையை பார்ப்பதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்று கொண்டிருந்த சாலையில் இறக்கும் தருவாயில் ஒருநபர் கிடந்தார்;. அன்னையின் கண்களுக்கு இது தென்படவே. வாகன ஓட்டுனரை காரை நிறுத்தச் சொன்னார். வாகனத்தை விட்டு இறங்கி அந்த நபாரிடம் சென்று அவரை மடியில் வைத்து அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். திருத்தந்தையை பார்ப்பதற்கான அனுமதி பெற்றிருந்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. கூட வந்த மற்ற அருட்சகோதாரிகள் மதா; நேரம் ஆகிறது. திருத்தந்தையை பார்க்க நாம் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கின்றோ ம். நாம் வேகமாகச் செல்ல வேண்டும் என்று சொன்னார்;கள். அன்னை அவர்கள் அவர்களைப் பார்த்து நீங்கள் சென்று அவரைப் பாருங்கள் நான் அவரை விட சிறப்பான ஒருவரை இங்கே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.
இறைவார்த்தை:
மத்தேயு 6: 33 "அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
மத்தேயு 8 : 18-22 "இயேசுவை பின்தொடர்தல்இ எதற்கு முதன்மை?"
மத்தேயு 25: 40 "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதாரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
லூக்கா 10: 25-37 "நல்ல சமாரியர்"
லூக்கா 12: 34 "உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்"
உரோமையர் 12: 2 "இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாகஇ உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தௌரிவீர்கள். எது நல்லதுஇ எது உகந்ததுஇ எது நிறைவானது என்பது உங்களுக்குக்குத் தௌரிவாகத் தெரியும்."
23.நான் யாராக மாறுகிறேன்
பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் நல்ல மனிதர். தாராள குணம் கொண்டவர். ஏழைகளுக்கு தம்மிடம் இருப்பதைக் கொடுப்பவர். அப்படிப்பட்ட அந்த மனிதருக்கு ஒரு வினோதமான நோய் வந்தது. அந்த நோயின் காரணமாக இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவருடைய இரத்தத்தை மாற்றவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டது. அவருடை உடம்பில் உள்ள் இரத்த வகையை சார்ந்தவர்கள் இரத்தம் கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கு தக்க பணம் வழங்கப்படும் என்று அறிவிப்பு விடப்பட்டது. இறுதியில் அவருடைய இரத்தவகையைச் சார்ந்த மனிதர் ஒருவர் வந்தார்;. முதல் முறை அவருக்கு அந்த மனிதரிடத்திலிருந்து இரத்தம் எடுத்து செலுத்தப்பட்டது. இரத்தம் கொடுத்து முடித்தவுடன் அந்த மனிதருக்கு முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. அவர் மகிழ்ச்சியோடு வாங்கிச்சென்றார். மீண்டும் மூன்று மாதம் கழித்து அதே மனிதர் அந்தப் பணக்காரருக்கு இரத்தம் கொடுக்க வந்தார் இரத்தம் கொடுக்கப்பட்டது. இம்முறை பணம் நிறைய கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் மட்டுமே அந்தப் பணக்காரர் கொடுத்தார். வருத்தத்N;தாடு அந்த மனிதர் சென்றார். மீண்டும் ஒரு ஐந்து மாதம் கழித்த பிறகு இரத்தம் கொடுக்க அந்த மனிதர் வந்தார். இரத்தம் கொடுத்துவிட்டு பணம்வாங்க காத்துக்கொண்டிருந்தார். அந்தப் பணக்காரர் இரத்தம் கொடுத்த அந்த மனிதருக்கு வெறும் ஐயாயிரம் மட்டுமே கொடுத்தார். அந்த மனிதர் அந்தப் பணக்காரரைப்பார்த்து என் இரத்தம் உங்கள் உடம்பில் ஓடுவதால் தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் அதை உணராமல் எனக்கு மிகவும் குறைந்த பணத்தை தருகிறீர்கள் என்று முறையிட்டார். அதற்கு அந்தப் பணக்காரர் முதல்முறை நான் உனக்கு பணம் கொடுத்த பொழுது என் உடம்பில் என் இரத்தம் ஓடியது அதனால் உனக்கு தாரளமாக கொடுத்தேன். இரண்டாம் முறை உனக்கு நான் பணம் கொடுத்த பொழுது என் உடம்பில் என்இரத்தம் பாதி உன் இரத்தம் பாதி ஓடியது அதனால் தான் அந்தத் தொகையை நான் கொடுத்தேன். மூன்றாம் முறை நீ எனக்கு இரத்தம் கொடுத்த போது என் உடம்பில் ஓடும் இரத்தம் முழுவதும் உன் இரத்தம். உன் இரத்தம் என் உடம்பில் ஓடும் பொழு;;;து உன் எண்ணம் தானே வரும். நீ கருமியாக இருந்ததால் நானும் கருமியாக மாறிவிட்டேன் அதனால் தான் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தேன் என்று சொன்னார்.
இறைவார்த்தை:
மத்தேயு 11: 29 "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்"
மத்தேயு 7:12 "ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என் விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."
லூக்கா 6: 38 "நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீகளோ அதே அளவைiயால் உங்களுக்கும் அளக்கப்படும்."
திருத்தூதர்பணிகள் 20: 35 "பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூறுங்கள்."
பிலிப்பியர் 2:5 "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்."
யாக்கோபு 1: 17 "நல்ல கொடைகள் அனைத்தும்இ நிறைவான வரமெல்லாம்இ ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை. அவர் மாறிக் கொண்டிருக்கும் நிழல் அல்ல."

24.கடவுளை எப்பொழுது நினைக்கின்றோ ம்
உயர்ந்த கட்டிடம் ஒன்றில் வேலை நடந்து கொண்டிருந்தது. கட்டிடத்தின் மேற்பார்வையாளர் கட்டிட வேலைகள் எவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பார்க்க ஒவ்வொரு தளமாக சென்று கொண்டிருந்தார். நான்காவது மாடிக்கு சென்றபோது அங்கு சில வேலைகளை செய்வதற்காக இரண்டாம் மாடியில் வேலை செய்து கொண்டிருந்த கொத்தனாரை அழைத்தார். ஆனால் கொத்தனார் அவர் கூப்பிட்டதற்கு பதில் கொடுக்கவுமில்லைஇ திரும்பவுமில்லை. மீண்டும் அழைத்தார் ஆனால் கொத்தனார் செவிமடுக்கவில்லை. மேற்பார்வையாளர் தன்னுடைய பையிலிருந்து 100 ரூபாயை எடுத்து கீழே போட்டார். கொத்தனார் அதை எடுத்து தன் பையில் வைத்துக் கொண்டார். ஆனால் திரும்பிப் பார்க்கவில்லை. மீண்டும் மேற்பார்வையாளர் தன் பையிலிருந்து 500ரூபாயை எடுத்து கீழே போட்டார். கொத்தானர் அந்த ஐநூறு ரூபாயை எடுத்து தன் பையில் வைத்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார். இப்பொழுது மேற்பார்வையாளர் தனக்கு அருகில் இருந்த ஒரு சிறிய கல்லை எடுத்து கொத்தனார் தலையின் மீது போட்டார். ஆ. என்று சத்தம் எழுப்பி மேலேப் பார்த்தார்.
நாமும் அந்த கொத்தானரைப்போல தான் பலநேரங்களில் இருக்கின்றோ ம். கடவுள் நமக்கு நல்லது செய்கிற போதும் அவரது ஆசிர்வாதங்களை தருகின்ற பொழுதும்; நாம் நன்றியில்லாமல் இருக்கின்றோ ம் ஆனால் நம் முடைய வாழ்வில் துன்பம்இ தோல்வி என்று வருகின்றபோது கடவுளை தேடுகிறோ ம்.
இறைவார்த்தை:
லூக்கா 17: 11-19 "பத்து தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்"
யோவான் 11: 41 "இயேசு அண்ணாந்து பார்த்துஇ "தந்தையேஇ நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்."
கொலோசையர் 3: 15 "கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்."
கொலோசையர் 4:2 "தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள். விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடுபடுங்கள்."
எபேசியர் 5:20 "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்."
உரோமையர் 1:21 "அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லைஇ நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று."

25.திருத்தந்தை என்ன சொன்னார்?
அமொரிக்காவைச் சேர்ந்த அருட்பணியாளர் ஒருவர்இ திருத்தந்தை இரண்டாம் யோவான் பால் அவர்களை சந்திப்பதற்காக சென்றார்;. திருத்தந்தை அவர்களை சந்திப்பதற்கு முன்பாக உரோமையில் உள்ள ஒரு ஆலயத்தைப் பார்க்கச் சென்றார். அந்த ஆலயவாசலில் பலர் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு நபரை அந்த அருட்பணியாளர் கூர்ந்து கவனித்தார். அவர் அருகில் சென்றார். அந்தப் பிச்சைக்காரரும் அந்த அருட்பணியாளரைப் பார்த்தார். இருவரும் ஒருவரையொருவரைப்பார்த்து அதிர்ந்து போயினர். காரணம் அந்தப் பிச்சைக்காரரும் அந்த அருட்பணியாளரும் ஒன்றாக குருமடத்தில் படித்தவர்கள். அவர் பெயர் ஜேம்ஸ். அருட்பணியாளர் ஜேம்ஸ் ஐப் பார்;த்து அவர்கள் பிச்சைக்காராரிடம் நீங்கள் ஒரு அருட்பணியாளர் ஏன் இப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கீறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் நான் சில தவறுகள் செய்ததால் என்னை விலக்கி வைத்துவிட்டனர் என்று சொன்னார். சரி நான் திருத்தந்தையை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். திருத்தந்தை அவர்களை பார்த்த பொழுது தான் சந்தித்த முன்னாள் அருட்பணியாளரான ஜேம்ஸையும்இ அவரது நிலையையும் பற்றியும் திருத்தந்தை அவர்களிடம் சொன்னார். திருத்தந்தை அவர்கள் இன்று இரவு ஜேம்ஸை என்னுடன் உணவு அருந்த அழைத்துவா என்று அவரிடம் சொன்னார். அந்த அமொரிக்க அருட்பணியாளர் ஜேம்ஸ் இருந்த இடத்திற்குச் சென்று நடந்ததைச் சொல்லி அழைத்தார் ஆனால் அவருடன் வர அவர் மறுத்தார். என்னிடம் நல்ல உடைகள் கூட கிடையாது நான் எப்படி வரமுடியும் என்று சொன்னார். அதற்கு அந்த அருட்பணியாளர் என்னுடைய உடைகள்; உனக்கு சரியாக பொருந்தும் என்று சொல்லி அவருடைய உடைகளை ஜேம்ஸ்க்கு கொடுத்தார்;. இறுதியாக இருவரும் திருத்தந்தையோடு உணவு அருந்தச் சென்றனர். திருத்தந்தை அவர்கள் முன்னாள் அருட்பணியாளரான ஜேம்ஸை அழைத்து தனது அறைக்குச் சென்றார். திருத்தந்தை நம்முடன் உணவு அருந்த வருவார் என மற்ற பலரும் அவருக்காக காத்திருந்தனர். நேரமாகியும் திருத்தந்தையும் அந்த ஜேம்ஸையும் காணவில்லை. நீண்ட நேரம் கழித்து ஜேம்ஸ் மட்டும் வந்தார். அனைவருடைய கண்களும் அவர்மீது பதிந்திருந்தன. உள்ளே என்ன நடந்தது? என்று அமொரிக்க அருட்பணியாளர்; அவரிடம் கேட்டார். அதற்கு ஜேம்ஸ்இ திருத்தந்ததை என்னிடம் பாவசங்கீர்த்தனம் செய்தார். நான் திருச்சபையை விட்டு தள்ளி வைக்கப்பட்டவன்இ என்னிடம் எப்படி நீங்க.என்று கேட்டேன். தந்தை அவர்கள் குரு என்பவர் என்றுமே குரு மேலும் நான் இந்த நகரத்து ஆயர் நான் உன்னை மன்னிக்கிறேன் என்று சொல்லி என்னிடம் பாவசங்கீர்;த்தனம் செய்தார் என்று சொன்னார். நானும் அவரிடம் பாவமன்னிப்பு பெற்றேன். எனக்கு புதிய வாழ்வு கிடைத்தது. நான் பிச்சசை எடுத்துக்கொண்டிருந்த பகுதியில் உள்ள பிச்சசைக் காரர்களை நெறிப்படுத்தி அவர்களுக்கென புதிய பணியை செய்ய வேண்டும் என புதிய பணியையும் எனக்கு திருத்தந்தை அவர்கள் கொடுத்தார்கள் என்று சொன்னார். நான் தொலைந்து போயிருந்தேன்இ இப்பொழுது என்னைகக் கண்டுபிடித்தேன்.
இறைவார்த்தை:
மத்தேயு 5: 23-26 "நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதாரிகள் எவருக்கும் உங்கள் மேல்ஏதாவது மனத்தாங்கள் உண்டென அங்கே நினைவுற்றால்இ அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையை செலுத்துங்கள்."
எசாயா 61:3 "சீயோனில் அழுவோர்;க்கு ஆவண செய்யவும்இ சாம்பலுக்குப் பதிலாக அழுகுமாலை அணிவிக்கவும்இ புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சி தைலத்தை வழங்கவும்இ நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் புகழ் என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார்."
திருத்தூதர் பணிகள் 10: 1முழுவதும் "பேதுருவும் கொர்னேலியுவும்இ கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுருவின் உரை"
2கொரிந்தியர் 5: 18 "இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்: ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்."
கொலோசையர் 1:20 "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை. மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்."
26.பெட்டி முழுவதும் முத்தம்
சில வருடங்களுக்கு முன்பு மூன்று வயது குழந்தை தங்க சரிகை பேப்பரை எடுத்து அதை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். இதைக் கவனித்த தந்தை கோபம் அடைந்து பணம் இல்லாத நேரத்தில் தேவையில்லாமல் இப்படி செலவு செய்கிறாயே என்று திட்டினார்;. மறுநாள் காலை கிறிஸ்துமஸ் இந்தக் குழந்தை அலங்காரம் செய்த தங்கசரிகையால் ஆனா ஒரு அன்பளிப்பை தன் தந்தைக்கு கொடுத்தாள். மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் அதைத் திறந்து பார்த்த தந்தை பயங்கரமாக அந்தக் குழந்தையின்மீது கோபங்கொண்டார். யாருக்காவது நாம் அன்பளிப்பு தருகிறோ ம் என்றால் அந்தப் அன்பளிப்பில் எதாவது இருக்க வேண்டும் வெற்றுப் பொருளாக கொடுக்கக்கூடாது என்று அந்தக் குழந்தையிடம் சொன்னார். அந்தக் குழந்தை "அப்பா நான்கொடுத்த அந்த அன்பளிப்பு வெறுமையானது அல்ல நான் அதில் என் அன்பின் முத்தங்களை நிரப்பிக் கொடுத்தேன்"என்று சொன்னது. இதைக் கேட்ட தந்தை ஒருநிமிடம் நிலைகுலைந்து போனார்;. தன் குழந்தையை அள்ளி அனைத்துக் கொண்டார். பின்னாளில் அந்தத் தந்தை தன்னுடைய வாழ்வில் வெறுமையாக உணர்ந்த நேரங்களில் இந்த முத்தப்பெட்டியை திறந்து பார்;த்து புதுப்பொழிவடைந்தார்.
27.எலிப்பொறி
சுவற்றில் விரிசல் விழுந்துவிட்டதோ என்று எண்ணி எலி ஒன்று உற்றுப்பார்த்து பிற்பாடுதான் தெரிந்துகொண்டது அது எலிப்பொறி என்று. எலிக்கு பயம் வந்தது. வீட்டுக்கு பின் சென்று இந்த வீட்டில் எலிப்பொறி இந்தவீட்டில் எலிப்பொறி என்று கத்தியது. இதைக்கேட்ட கோழி" இங்க பாரு எலிஇ அது உனக்கு வச்சது தான் நீ கவனமா இருக்கணும்இ அந்தப் பொறி என்னையெல்லாம் பாதிக்காது அதப்பத்தி கவலப்படனும்னு எனக்கு அவசியமில்ல என்று சொன்னது. அந்த எலி ஆட்டிடம் போய் இந்தவீட்டில் எலிப்பொறி எலிப்பொறி என்று சொன்னது. இதைக்கேட்ட ஆடு "உன்னப் பார்;த்தால் பாவமாக இருக்கு என்னால் எதுவும் செய்யமுடியாது. கட்டாயம் உன்னை என்னுடைய செபங்களில் நினைத்துக்கொள்கிறேன்"என்று சொன்னது. அங்கிருந்த காளை மாட்டிடம் மேற்சொன்னது போலவே சொன்னது. அதற்கு அந்த மாடு "என்ன செய்வது உன் விதி அவ்வளவுதான்"என்று n;சான்னது. வருத்தத்தோடு அந்த எலி அந்த எலிப்பொறி அருகில் அமர்ந்திருந்தது. எலிப்பொறியில் எலி மாட்டியது போன்ற சத்தம் கேட்கிறது என்று நினைத்து அந்த வீட்டில் உள்ள விவசாயின் மனைவி வேகமாக ஓடீ வந்தாள். வந்த வேகத்தில் வழியில் கிடந்த பாம்பின் வாலை மிதித்துவிட்டாள். பாம்பு அவளை கடித்து விடஇ அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவமனையிலிருந்து வரும்பொழுது காய்ச்சலோடு வந்தாள். அவளைப் பார்க்க வந்தவர்கள் இந்தக் காய்ச்சல் சரியாக வேண்டும்மென்றால் கோழி அடித்து அந்தக் கோழியின் சுவை நீரைக் குடித்தால் சரியாகிவிடும் என்று சொல்லிச் சென்றார்கள். கோழியை அடித்தான் அந்த விவாசாயி ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. மேலும் பலர் அவளைப் பார்க்க வந்தனர் சிலர் அவளோடு அங்கேயே தங்கி கவனிக்க தொடங்கினார். ஆதனால் அவர்களுக்கு உணவு கொடுக்க அவன் வளர்த்த ஆட்டைக் கொன்று சமைத்தான். இறுதியில் அந்த விவாசாயின் மனைவி குணமாகமல் இறந்து விட்டாள். அவளை அடக்கம் செய்துவிட்டு வந்தவுடன் இறப்புக்கு வந்தவர்களுக்கு அந்த காளை மாட்டை அடித்து உணவு கொடுத்து துக்கம் கொண்டாடினான். இதையனைத்தையும் அந்த எலி மிகவும் வருத்தத்தோடு எலிப் பொறி அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது.
ஒருவர் துன்பத்தில் இருக்கும் பொழுது ஒதுங்கிப் போகாமல் இருக்கலாமே.
இறைவார்த்தை:
எபிரேயர் 13: 16 "நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை."
1யோவான் 3: 17 "உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதாரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பாரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?"
குலாத்தியர் 6:2 "ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்: இவ்வாறுஇ கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்."
புரிலிப்பியர் 2; 4 "நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்லஇ பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்."
யோவான் 15:12 "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்."

29.தவளையும் கோபுரமும்
தவளைகள் அனைத்தும் ஒருநாள் போட்டி ஒன்று நடத்தியது. வேகமாக சென்று அங்கு தெரியும் அந்;த கோபுரத்தை யார் ஏறி தொட்டுவிட்டு வருகிறார்;களோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவி;க்கப்பட்டது. தவளைகள் அனைத்தும் போட்டிக்குத் தயாராகின. இதைப்பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தவளைகள் அனைத்தும் ஓடத்தொடங்கின. இந்த தவளைகளால் அந்த கோபுரத்தை தொடமுடியாது. தேவையில்லாமல் பலப்பாரிட்சையில் இறங்கியிருக்கின்றனஇ என்று மக்கள் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். இதைக்கேட்ட தவளைகள் சில அவர்கள் சொல்வது உண்மைதான் நம்மால் வெல்லமுடியாது என்று பின்வாங்கிக்கொண்டன. இதுபோல மக்கள் பல விமர்சனங்களை சொல்லிக் கொண்டிருந்தனர். இதனால் பல தவளைகள் தங்கள் ஓட்டத்தைக் கைவிட்டன. இறுதியில் ஒரு சிறிய தவளைமட்டும் அந்தக் கோபுரத்தில் ஏறி கீழே இறங்கி வெற்றிபெற்றது. அனைவரும் அந்த தவளையைப் பாரட்டினர். போட்டி நடத்தியவர் அந்த தவளையிடம் நோ;காணல் கண்டார். எப்படி உங்களால் வெற்றி பெறமுடிந்தது என்று கேட்டார் அந்த சிறிய தவளை ம்ம்ம்? என்று கேட்டது. பிறகு தான் தெரிந்தது அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
விமர்சனங்கள் வரும் பொழுது எதையும் நாம் பொருட்படுத்தாமல் இருந்தால் நமக்கு வெற்றிதான்.

இறைவார்த்தை:
லூக்கா 7: 31-35 "இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரையொருவர் கூப்பிட்டு ":நாங்கள் குழல் ஊதினோம்இ நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் .."
மத்தேயு 15: 21-28 "நமக்கு பின்னால் இவர் கத்திக் கொண்டு வருகிறாரேஇ இவரை அனுப்பிவிடும். "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்லஆம்இ ஆனாலும் தங்கள் உரிமையாளாரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமேஉமது நம்பிக்கை பொரிது."
யோவான் 8;:59 "இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்".

29.விவசாயின் குதிரை
சீனாவில் சொல்லப்பட்டக் கதை இது. ஒரு விவசாயி ஒருவன் குதிரை ஒன்று வைத்து நிலத்தை உழவு செய்து கொண்டிருந்தான். திடிரென ஒரு நாள் அந்தக் குதிரை காணமால் போய்விட்டது. அக்கம்பக்கத்தினர் அந்த விவசாயியைப் பார்த்து பாரிதாபப்பட்டனர். ஓடிப்போன குதிரையைப்பற்றி விசாரித்தனர். அந்த விவசாயி "அதிர்ஸ்டமோ? துரதிஸ்டமோ? யாருக்குத் தெரியும்?;" என்று சொன்னார். ஒரு வாரம் கழித்து ஓடிப்போன குதிரை பலகுதிரைகளுடன் மீண்டும் அந்த விவசாயின் வீட்டிற்கு வந்தது. அக்கம் பக்கத்தினர் அனைவரும் உங்களுக்கு அதிர்ஸ்டம் என்று சொன்னார்கள். மீண்டும் அந்த விவசாயி அவர்களைப்பார்த்து "அதிர்ஸ்டமோ? துரதிஸ்டமோ? யாருக்குத் தெரியும்" என்று சொன்னார். ஒரு நாள் அந்த விவசாயினுடைய மகன் குதிரையின் மீது ஏறி சவாரி செய்து கொண்டிருந்தான் சவாரி செய்து கொண்டிருந்தபோது குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டான். விழுந்ததில் அவனுடைய காலும் முதுகு தண்டும் ஒடிந்தது. இதை அறிந்த மக்கள் அந்த விவசாயைப்பார்த்து பாரிதாபப்பட்டனர். மீண்டும் அந்த விவசாயி அவர்களைப் பார்த்து "அதிர்ஸ்டமோ? துரதிஸ்டமோ? யாருக்குத் தெரியும்?"என்று சொன்னார். சில வாரம் கழித்து அந்தக் கிராமத்திற்கு ராணுவத்தினர் வந்தனர். அந்தக் கிராமத்திலிருந்த இளைஞர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அழைத்துச் சென்றனர். விவசாயின் மகனை மட்டும் அவன் கால் உடைந்ததனால் விட்டுவிட்டுச் சென்றனர். மக்கள் அனைவரும் மீண்டும் அந்த விவசாயியைப் பாரட்டினர். அப்பொழுதும்; அவர் "அதிர்ஸ்டமோ? துரதிஸ்டமோ? யாருக்குத் தெரியும்?"; என்று சொன்னார்.
நம் வாழ்வில் ஏற்படும் சில இழப்புகள் நம்மை வளப்படுத்துகின்றன. இறைவன் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை.


இறைவார்த்தை:
மத்தேயு 6:25-34 "கவலை வேண்டாம்""கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?... உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத்தந்தைக்கு தெரியும்"
நீதிமொழிகள் 3:5 "முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு. உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே."
ஏசாயா 41: 10 "அஞ்சாதே. நான் உன்னுடன் இருக்கிறேன்: கலங்காதேஇ நான் உன் கடவுள்: நான் உனக்கு வலிமை அளிப்பேன்."
எரேமியா 29:11-14 "உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றிஇ கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்லஇ என்கிறார் ஆண்டவர்."
உரோமையர் 8: 28 "கடவுள்ரிடம் அன்புகூர்பவர்களோடுஇ அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடுஇ அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்."
யோபு 4:21 "கடவுள் மீது நம்பிக்கை"

30.ஹாய் குட்மார்னிங்
வழக்கமாக பேருந்தில் பயணம் செய்கின்ற பொழுது யாரும் யாரிடமும் பேசுவதில்லை. தெரிந்தவர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் பேசுவோம். அன்று வினோதமான ஒரு மனிதர் அந்தப் பேருந்தில் ஏறினார். அவர் சிரித்த முகத்தோடு ஓட்டுனரைப்பார்த்து ஹாய் குட்மார்னிங் என்று சொன்னார். அதற்கு ஓட்டுனர் அவரைப்பார்த்து யோவ் படிய விட்டு உள்ள வாயா கூட்டமா இருக்குஇ இதுல உனக்கு குட்மானிங் கேக்குதா என்று சொன்னார். மறுநாள் அந்த நபர் அதே பேருந்தில் ஏறினார் வழக்கம் போல ":குட்மானிங் சார்;என்று சொன்னார். ஆனால் ஓட்டுனர் கண்டுகொள்ளவில்லை. அதற்கு மறுநாளும் ":குட்மார்னிங் சார்என்று கத்தினார். ஆனால் ஓட்டுனர் யோவ் உள்ளவாயா என்று மட்டுமே சொன்னார். ஐந்தாவது நாள் அந்த நபர் பேருந்தில் ஏறியதும் ஓட்டுனர் வேகமாக சார் ":குட்மார்னிங்என்று மகிழ்ச்சியோடு சொன்னார்;. உடனே அந்தநபா; சார் என்பெயர் ":ஜான்உங்க பெயர் என்ன? என்று கேட்டார் அதற்கு அவர் என்பெயர் ":ஆனந்த்என்று சொன்னார். அன்று தான் முதன்முதலாக பேருந்தில் உள்ள அனைவரும் ஓட்டுனர் பெயரை அறிந்து கொண்டனர். பேருந்தில் உள்ள அனைவரும் கலகலப்போடு பயணம் செய்தார்கள். வீட்டிலிருந்து கவலையோடு வந்தால் கூட அந்த பேருந்தில் ஏறினால் அனைவரும் தங்கள் கவலைகளை மறந்து சென்றார்கள். சில நாட்கள் கழித்து அந்தப் பேருந்தில் ஜான் ஏற வில்லை. அனைவரும் ஏன் ஜானைக் காணவில்லை என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர். மீண்டும் பேருந்து அமைதியாக சென்றது. இதையெல்லாம் கவனித்த ஒரு இளைஞர் ஜான் இல்லையென்றால் என்ன என எண்ணிஇ மறுநாள் அந்த இளைஞர் குட்மார்;னிங் சார் என்று சொல்லஇ அந்த பேருந்திற்கு ஜான் மீண்டும் வந்தது போல் இருந்தது. மீண்டும் மகிழ்ச்சி அந்தப் பேருந்தில் பயணமானது.
அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வு பெற வந்தேன்.
இறைவார்த்தை:
யோவான் 16:20 "உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்."
லூக்கா 19: 6 "சக்கேயு விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்."
லூக்கா 2: 10 "அஞ்சாதீர்கள்இ இதோஇ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியு+ட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."
2கொரிந்தியர் 2: 1-4 "நான் மீண்டும் உங்களிடம் வந்து உங்களுக்கு மனவருத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை. நான்."
நீதிமொழிகள் 8:31 "அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்இ மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
சபை உரையாளர் 11:7-8 "ஒளி மகிழ்ச்சியு+ட்டும்இ கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும். மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்."
எரேமியா 32: 41 "அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்."
சீராக் 51:29 "ஆண்டவரின் இரக்கத்தில் உங்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்வதாக."

32.எங்கிருந்தாலும் நல்லது செய்யலாம்
வயதான தந்தை ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான் அவன் பெயர் வின்சென்ட். அந்த தந்தை உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கு நிலத்தை ஒழுங்குபடுத்த சென்றார். வழக்கமாக நிலத்தை சரிசெய்ய அவருடைய மகன் வின்சென்ட் உதவி செய்வான். ஆனால் சந்தேகத்தின் பெயரால் அவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். வயதான தந்தை என்பதால் நிலத்தை அவரால் சரி செய்யமுடியவில்லை. சிறையிலிருந்த தன் மகனுக்கு கடிதம் எழுதினார் "அன்புள்ள வின்சென்ட் நீ நலமா? இந்த வருடம் நான் உருளைக்கிழங்கு பயிரிடவில்லை காரணம் என்னால் குனிந்து நிமிர்ந்து வேலைசெய்ய முடியவில்லைஇ எனக்கோ வயதாகிவிட்டதுஇ நீ இருந்தாய் என்றால் எனக்கு உதவி செய்வாய். எல்லாம் இறைவன் செயல். அன்புடன் அப்பா" என்று எழுதினார். இரண்டு நாட்கள் கழித்து மகனிடம் இருந்து வந்தக் கடிதத்தில் "அன்புள்ள அப்பா தயவு செய்து நம்முடைய நிலத்தை தோண்டாதீர்கள் அந்த நிலத்தில் தான் நான் கொலை செய்தவர்களை புதைத்து வைத்திருக்கிறேன்"என்று எழுதியிருந்தது. மறுநாள் காலை 4 மணிக்கு உளவுத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் வந்து அந்த நிலத்தை தோண்டினார்கள். ஆனால் அனைத்து இடங்களிலும் தோண்டியும் எந்த இறந்த உடலும் தென்படவில்லை. அந்த வயதான தந்தையிடம் ":தொந்தரவுக்கு மன்னிக்கவும்என்று சொல்லி அனைவரும் சென்று விட்டனர். அதேநாளில் தன் மகனிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது. "அன்புள்ள அப்பா இப்பொழுது நீங்கள் விரும்பியது போல் உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். சிறையிலிருந்து என்னால் இதுதான் செய்யமுடியும் . உடம்ப கவனி;த்துக்கொள்ளுங்கள் அன்புடன் மகன் வின்சென்ட்"என்று எழுதியிருந்தது.
எங்கிருந்தாலும் நல்லது செய்யலாமே.
இறைவார்த்தை:
திருத்தூதர் பணிகள் 10: 38 "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்."
கலாத்தியர் 6:9 "நன்மைசெய்வதில் மனம்தளராதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்இ தக்க காலத்தில் அறுவடை செய்வோம்."
1பேதுரு 3:13 "நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால்இ உங்களுக்கு தீமை செய்யப் போகிறவர் யார்?"
நீதிமொழிகள் 3: 27 "உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின்இ தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே."
ஏசாயா 1;17 "நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்"
எரேமியா 32: 41 "அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்."
லூக்கா 6:9 "இயேசு அவர்களை நோக்கிஇ "உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதாஇ தீமை செய்வதா? ஊயிரைக் காப்பதாஇ அழிப்பதா? எது முறை?"என்று கேட்டார்."


32.கடவுளின் கரத்தில் நம்மை ஒப்படைப்போம்.

திருமணமான தம்பதியர் சுற்றுலா சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆற்றைக் கடந்துசெல்ல வேண்டும். படகில் பயணம் செய்தனர். திடீரென பெரிய புயல் ஒன்று உருவானது. திருமணமான அந்த ஆண் ஒரு படைவீரன்இ பெண்ணோஇ படகு மிகவும் சிறியதாக இருந்ததால் கவிழ்ந்துவிடுமோ என்று அஞ்சினாள். பயத்தில் தன் கணவனைப்பார்த்து உங்களுக்கு பயம் இல்லையா? காற்று பயங்கரமாக இருககிறதுஇ எப்படியும் நாம் சாவது உறுதிஇ நீங்கள் கல் மாதிரி அப்படியே இருக்கிறீங்களே என்று சொன்னாள். அந்த கணவனோ பயப்படமால் அமைதியாக அமர்ந்திருந்தார். சிரித்துக்கொண்டே தன உறையிலிருந்து பெரிய வாளை உருவினான். இதைப்பார்த்த மனைவி திடுக்கிட்டாள். அந்த வாளை எடுத்து தன் மனைவியின் கழுத்துக்கு மிகவும் அருகில் வைத்து இப்பொழுது உனக்கு பயமில்லையா என்று அவன் கேட்டான். அதற்கு அவள் "சிரித்துக்கொண்டே நான் ஏன் பயப்படவேண்டும்? நீங்கள் என்னை அன்பு செய்கிறீர்கள் நீங்கள் என்னைக் கொல்ல முடியும்? என்று கூறினாள். இந்தப் பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்று அவன் கூறினான். கடவுள் என்னை அன்புசெய்கிறார். இந்த புயலும் காற்றும் அவர் கையில் உள்ளதுஇ அதனால எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என்று சொன்னான். நாம் உயிN;ராடு இருந்தாலும் நல்லதுஇ இல்லாவிட்டாலும் நல்லது எல்லாம் கடவுளின் கையில் தான் உள்ளது. அவர் வாழ்வின் கடவுள் அழிவின் கடவுள் அல்ல என்று தன் மனைவியிடம் அவன் கூறி;னான். நம்பிக்கையை வளர்ப்பபோம். கடவுளின் கரத்தில் நம்மை ஒப்படைப்போம்.
இறைவார்த்தை:
மத்தேயு 10: 31 "சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதீர்கள்."
மத்தேயு 19:26 "மனிதாரால் இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்"
மாற்கு 4: 35-41 "காற்றையும் கடலையும் அடக்குதல்"அவர்கள் பேரச்சம் கொண்டுஇ "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்;படிகின்றனவே! இவர் யாரோ? என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்."
விடுதலைப் பயணம் 14 1-31 "செங்கடலைக் கடத்தல்"
யோசுவா 3: 1-17 "இஸ்ரேயலர் யோர்தானைக் கடத்தல்"
யோசுவா 1:9 "நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்."
யோபு 12: 10 "அவர் கையில் தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன."
ஏசாயா 45: 6-7 "கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன். நானே ஆண்டவர்இ வேறு எவரும் இல்லை. நான் ஒளியை உண்டாக்குகிறேன்இ இருளைப் படைக்கிறேன்இ நல் வாழ்வை அமைப்பவன் நான்இ இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே."
எரேமியா 10: 6 "ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமில்ர்இ நீர் பெரியவர்இ உமது பெயர் ஆற்றல் மிக்கது."


33.ஏன் கோபத்தில் கத்துகின்றோ ம்
நாம் கோபப்படும் பொழுது நம்மை அறியாமல் நாம் கத்துகின்றோ ம். ஏன் அப்படிக் கத்துகின்றோ ம். யோசித்துப்பார்ப்போம். கங்கை கரையில் குடும்பம் ஒன்று குளித்துக்கொண்டிருந்தது. திடிரென குளித்துக்கொண்டிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்து கோபத்தில் கத்திக்கொண்டனர். அதைப்பார்த்த ஒரு குரு தன்சீடர்களிடம் ஏன் இவர்கள் கோபத்தில் கத்திக்கொள்கிறார்கள் என்று கேட்டார். ஒரு சீடர் "கோபப்படும் பொழுது நாம் அமைதியை இழப்பதானால் கத்துகிறோ ம்" என்று பதில் கூறினார். சரி ஆனால் ஏன் அருகில் இருப்பவரைப் பார்த்து கத்துகிறோ ம் என்று மீண்டும் குரு கேட்டார். சீடர்கள் பல பதில்களை கூறினர் ஆனால் குருவுக்கு அவர்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை. இறுதியாக குரு சொன்னார் "இரண்டு நபர்கள் கோபப்படும் பொழுது அவர்கள் இதயம் நீண்ட தூரம் விலகிச் செல்கிறது. ஆந்த தூரத்தை அருகில் கொண்டுவருவதற்காக அவர்கள் ஒருவரையொருவர் கேட்கும் அளவிற்கு கத்துகிறார்கள்." என்று கூறினார். இரண்டு நபர்கள் அன்பு செய்கிறபொழுது என்ன நடக்கிறது? என்று சீடா; கேட்க மீண்டும் அந்த குரு "இரண்டு நபர்கள் அன்பு செய்கின்ற பொழுது அவர்கள் கத்துவதில்லை. இதமாக பேசிக்கொள்வார்கள் ஏனெனில் அவர்கள் இதயம் அருகில் இருக்கிறது"என்று சொன்னார். இன்னும் அதிகமாக அன்பு செய்கிறபொழுது என்ன நிகழ்கிறது? என்று சீடா; மீண்டும் கேட்கஇ குரு மீண்டும் "அவர்கள் பேசுவதில்லை மாறாக அமைதிமட்டுமே அங்கு நிலவும்"என்று கூறினார். மேலும் சீடரைப்பார்;த்து "நீங்கள் வாக்குவாதம் செய்யும் பொழுது உங்கள் இதயத்தை தூரம் செல்ல விடாதீர்கள். அப்படி செல்லவைத்தீர்கள் என்றால் மீண்டும் அருகில் வர வைப்பது கடினம் என்று சொன்னார்;.
இறைவார்த்தை:
மத்தேயு 5:21-26 "சினங் கொள்ளுதல்""தம் சகோதரர் சகோதரர்களிடம சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்"
எபேசியர் 4: 26-27 "சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்இ பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள்."
யாக்கோபு 1: 19 "என் அன்பார்ந்த சகோதர சகோதாரிகளேஇ இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும் பேசுவதிலும் சினம் கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும். ஏனெனில் மனிதாரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது."
கொலோசையர் 3:8இ13 "இப்பொழுது நீங்கள் சினம்இ சீற்றம்இ தீமை ஆகிய அனைத்தையும் அகற்றிவிடுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். "
நீதிமொழிகள் 15:8 "எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்இ பொறுமை உடையவர் சண்டையயைத தீர்த்து வைப்பார்."
நீதிமொழிகள் 29: 22 "எளிதில் சினங்கொள்பவரால் சண்டை உண்டாகும்இ அவர் பல தீங்குகளுக்கு காரணமாவார்."

34.யாரையும் தீர்ப்பிடாதீர்கள்
தனக்கு வந்த அலைபேசி அழைப்பைக்கேட்டு மருத்துவர் ஒருவர் விரைவாக அறுவைசிகிச்சை அறைக்கு விரைந்து வந்து அறுவைசிகிச்சைக்கான உடைகளை அணிந்து உள்ளே சென்றார். வழியில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபாரின் தந்தை மருத்துவரைப்பார்த்து நேரமாகிவிட்டதுஇ இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறீர்கள்இ உயிரின் மதிப்பு உங்களுக்கு தெரியுமா? என்று வாய்;க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தார். மருத்துவர் அவரைப்பார்த்து நான் காலதாமதமாக வந்ததற்கு என்னை மன்னிச்சிடுங்க நான் வேறொரு மருத்துவமனையில் இருந்தேன். அழைப்பு வந்ததும் உடனே வந்தேன்இ நீங்க சற்று அமைதியா இருங்க எல்லாம் நல்லபடி நடக்கும் அமைதியாக இருந்தால்தான் என்னால் வேலை செய்ய முடியும் என்று சொன்னார். எப்படி அமைதியாக இருக்க முடியும் இந்தஒரு நிலையில் நீங்கள் அமைதியாக இருப்பீங்களா? ஒரு வேலை உங்கள் மகன் இந்த நிலையிலிருந்து இறந்து போனால் அமைதியாக இருப்பீர்;களா என்று கோபத்தோடு கேட்டார் அந்த மனிதர். மருத்துவர் புன்னகை புரிந்துஇ "புனிதப்புத்தகத்தில் மண்ணிலிருந்து வந்தோம் மண்ணிற்கோ திரும்புவோம்இ எல்லாம் இறைவன் செயல்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் மருந்து கொடுப்பவர்கள் இறைவன் குணப்படுத்துபவர். நீங்கள் போய் உங்கள் மகனுக்காக இறைவனிடம் செபியுங்கள் என்று சொல்லிவி;ட்டு அறுவை சிகிச்சை அறைக்கு சென்றார். ஆனால் அந்தத் தந்தை முனகிக்கொண்டே நின்றார்;. சில மணிநேரம் கழித்து அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்து ஆண்டவருக்கு நன்றி எல்லாம் நல்ல முறையில் முடிந்தது. உங்கள் மகன் பிழைத்துக் கொண்டான். எதுவும் விபரம் கேட்க வேண்டுமென்றால் செவிலியாரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியே சென்று வி;ட்டார். அந்தத் தந்தை இந்த மருத்துவருக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது. என்ன? எப்படி? என்று சொல்லாமல் கூட போகிறார் என்று அங்கிருந்த செவிலியாரிடம் முறையிட்டார். அந்த செவிலியர் கண்ணீர் மல்க அவரிடம் "நேற்று நடந்த சாலை விபத்தில் அவருடைய மகன் இறந்து விட்டான். நாம் அவரை அலைபேசியில் அழைத்தபொழுத அவர் தன் மகனை அடக்கம் செய்யும் இடத்தில் இ;ருந்தார். மீண்டும்அந்த இறுதிச்சடங்கை முடிப்பதற்கு போய்க்கொண்டிருக்கிறார்"என்று சொன்னார்.
யாரையும் தீர்ப்பிடாமல் இருக்கலாமே.

இறைவார்த்தை:
நீதிமொழிகள் 31:9 ":அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்குஇ எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு."
எசாயா 11:3 "கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்இ காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்பு செய்யார்."
யோவான் 7:24 "வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள்."
யாக்கோபு 4: 11-12 "பிறாரிடம் குற்றம் காண்போருக்கு எச்சரிக்கை"

35.அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்
ஏழை மனிதர் ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவிக்கு நீண்ட கூந்தல் இருந்தது. அவள் அந்த முடியை சீவி அலங்காரம் செய்வதற்கு ஒரு அழகான சீப்பு (உழஅடி) வாங்கித் தரச்சொன்னாள். இப்போது என்னால வாங்கிதரமுடியாது என்னிடம் அந்த அளவிற்கு பணம் இல்லைஇ என்னுடைய கைக்கடிகாரம் உடைந்து போயிருக்கிறது அதைக்கூட என்னால் சரி செய்ய போதுமான பணம் இல்லை என்று சொன்னான். அந்த மனைவியும் அவனை வற்புறுத்தவில்லை. அந்த மனிதர் தன்னுடைய கைக்கடிகாரத்தை சரிசெய்வற்காக கடைக்கு சென்றான் ஆனால் அந்த கடிகாரத்தை விற்று அந்தப் பணத்தில் அவனுடைய மனைவிக்கு தேவையான சீப் வாங்கிக்கொண்டான். மாலை வீட்டிற்க்கு வந்ததும் தன் மனைவியை அழைத்தான். வீட்டிற்குள் வெளியே வந்த தன் மனைவியை ஆச்சரியத்தோடு பார்த்தான். அவள் தன் நீண்ட கூந்தலை வெட்டி குறைவனா கூந்தலோடு இருந்தாள். உங்கள் கையில் கடிகாரம் இல்லாமல் நன்றாக இல்லை. அதனால்தான் என் முடியை வெட்டி விற்றேன். அதில் சிறிது பணம் கிடைத்தது என்று சொல்லி அவனிடம் கொடுத்தாள். இருவரும் ஒரே நேரத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அவர்கள் செய்த செயலுக்காக அழவில்லை மாறாக அவர்களுடைய அன்பை நினைத்து பெருமிதத்தோடு அழுதனர்.
இறைவார்த்தை:
மலாக்கி 2:14- 16 "உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார்;"
நீதிமொழிகள் 5:18 "உன் நீருற்று ஆசி பெறுவதாகஇ இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு."
நீதிமொழிகள் 12:4 "பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்."
நீதிமொழிகள் 18:22 "மனைவியை அடைகிறவன் நலமடைவான்இ அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்".
நீதிமொழிகள் 19:24 "விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை."
தொடக்க நூல் 2:24 "கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்இ இருவரும் ஒரே உடலாய் இருப்பர்."
மாற்கு 10: 6-9 "படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."
1கொரிந்தியர் 7:1-16 "திருமண வாழ்வு"
எபேசியர் 5:21-33 "கணவர் மனைவியர் நடத்தை"
கொலோசையர் 3:18இ19 "குடும்ப ஒழுக்கம்"
எபிரேயர் 13:4 "திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும்."
1பேதுரு 1:22 "உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள் வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு காட்ட முடியும். எனவே நீங்கள் தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்."

36.திருமணத்தின் பிரமானிக்கம்
கணவன் குடித்துவிட்டு தட்டுத் தடுமாறி வீட்டிற்க்கு வந்தான். வந்தவன் வீட்டில் வாந்தி எடுத்து அப்படியே படுத்துவிட்டான். மனைவி அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு அவனை படுக்க வைத்தாள். மறுநாள் காலையில் அவன் தன் மனைவி தன்னிடம் சண்டை போடக்கூடாது நான் நேற்று நடந்து கொண்டதற்கு என்று வேண்டிக்கொண்டிருந்தான். பக்கத்தில் ஒரு காகிதம் ஒன்றில் "டியர் அன்பே உங்களுக்கு பிடித்த உணவு தயாராக உள்ளது சாப்பிடுங்கள்இ நான் கடைக்கு சென்று மளிகை வாங்கப்போகிறேன்"என்று எழுதியிருந்தது. அவனுக்கு ஒரே ஆச்சரியம். நேற்று என்ன நடந்தது என்று மகனிடம் கேட்டான். மகன் "நேற்று நீங்கள் பயங்கரமாக குடிபோதையில் இருந்தீர்கள். அம்மா உங்கள் சட்டைஇ செறுப்பு இவைகளை களையும் போது நீங்கள் "ஏய் பெண்ணே! என்னை தயவு செய்துவிட்டுவிடு. எனக்கு அன்பான மனைவி மற்றும் பிள்ளை இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள்"என்று சொன்னான்.
அருட்சாதனம் புனிதமான உறவு.
இறைவார்த்தை:
இணைச்சட்டம் 22: 13-30 "பாலுறவுத் தூய்மை பற்றிய சட்டங்கள்"
எரேமியா 3;:1 "கணவன் தன் மனைவியைத் தள்ளிவிடஇ அவள் அவனை விட்டகன்று வேறு ஒருவனோடு வாழ்கையில்இ அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பி செல்வானா?"
மலாக்கி 2:16 "மணமுறிவை நான் வெறுக்கிறேன்நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்."
மத்தேயு 1;:19 "அவர் கணவர் யோசேப்பு நோ;மையாளர். அவர் மாரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்; மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்."
மாற்கு 10:2 "கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?"
மத்தேயு 5: 27-32 "விபசாரம் செய்யாதே எனக்கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்க்ள்.விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்."


37.மணமுறிவு
ஒருமுறை கணவன்இ மனைவி இருவருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இனி நாம் இருவரும் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலைக்கு வந்தனர். பிரிந்து போகலாம் என்று முடிவுக்கு வந்தனர். அதனால் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவர்கள் வழக்கை விசாரித்த நீதிபதிஇ ":எல்லாவற்றையும் சரிசமமாக இருவரும் பிரித்து கொள்ளுங்கள்என தீர்ப்பளித்தார். மூன்று குழந்தைகளை எப்படி சமமாக பிரித்து கொள்ள முடியும் என்று யோசித்தனர். சிறிது நேரம் கலந்தாலோசித்து தம்பதியினர் நீதிபதியிடம் ":வழக்கை திரும்ப பெற்றுக் கொள்கிறோ ம்என்றனர். ":நம் தீர்ப்பால் இவர்களை திருத்திவிட்டோம்என நீதிபதி மகிழந்தார். உடனே தம்பதியினர் ":அடுத்த ஆண்டு 4 குழந்தைகளுடன் வந்து விவாகரத்துக்கு விண்ணப்பிப்போம் என்று காரணம் சொல்லி சென்றனர்.
இறைவார்த்தை:
மலாக்கி 2:16 "மணமுறிவை நான் வெறுக்கிறேன் என்கிறார்; ஆண்டவர். மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான்இஎன்கிறார் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்இ நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்."
1கொரிந்தியர் 7:10-11 "திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாக சொல்வது இதுவே: ":மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது."இது என்னுடைய கட்டளையல்லஇ மாறாக ஆண்டவருடையது. அப்படிப் பிரிந்து வாழ்ந்தால் மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்;லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும். கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது."
1தெசலோனிக்கர்4:4 "உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதிஇ மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்."
மத்தேயு 19:1-11 "இனி அவர்கள் இருவர் அல்லஇ ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்."

38.உண்மையான அன்பு
பார்வையற்ற பெண் ஒருவர் இருந்தார். தான் பார்வையற்றவளாக இருப்பதால் அவள்மீது அவளுக்கே வெறுப்பு வந்தது. தன் காதலனைத்தவிர மற்ற அனைவரையும் வெறுத்தாள். அவளுடைய காதலன் அவள் அருகிலே எப்பொழுதும் இருப்பான். அவள் அவனிடம் "ஒருவேளை எனக்கு பார்வை தெரிந்தால் உங்களை மட்டுமே பார்ப்பேன் அருட்சாதனம் முடிப்பேன்"என்று சொன்னாள். ஒரு நாள் அவளுக்கு கண்தானம் செய்ய ஒருவர் முன் வந்தார். அவள் பார்வையும் பெற தயார் நிலையில் இருந்தாள்;. அந்நிலையில் அவள் காதலன் அவளிடம் நீ பார்வை பெற்றவுடன் இந்த உலகத்தைப் பார்க்க போகிறாய் என்னை அருட்சாதனம் செய்து கொள்வாயா? என்று கேட்டான். அவள் ஆம்! என்ற உறுதியளிப்புடன் சிகிச்சைக்குச் சென்றாள். பார்;வையும் பெற்றாள். முதன்முறையாக காதலனைப் பார்த்து வாயடைத்து நின்றாள். அவனும் தன்னைப்போன்று பார்வையற்றவனாக இருந்தான். அவனிடம் நீ பார்வையற்றவன் என்னால் உன்னை அருட்சாதனம் செய்து கொள்ள முடியாது என்றாள். இதைக் கேட்டு அவன் அழுது கொண்டே சென்று விட்டான். சிறிது நாள் கழித்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "அன்பே என்னுடைய கண்களை கலங்காமல் பார்த்துக் கொள் அன்பென்று".
நாம் ஒருநாளும் கடந்து வந்த பாதைகளை மறந்துவிடக்கூடாது.
இறைவார்த்தை:
விடுதலைப் பயணம் 32: 7 "இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் கேடு வருவித்துக் கொண்டனர்இம்மக்களை எனக்கத் தெரியும்இ வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்."
எரேமியா 31:31 "இதோ நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரேயல் வீட்டாரோடும் யு+தாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்வேன் என்கிறார் ஆண்டவர்."
யோவான் 3:16 "தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்."
புரிலிப்பியர் 3:13 "இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை."


39.எனது பிறந்தநாள் பாரிசு
ஒருநாள் 11 வயது சிறுமி தன் தந்தையிடம் அப்பா என்னுடைய 15 வது பிறந்தநாளுக்கு என்ன அன்பளிப்பு கொடுப்பீர்;கள் என்றாள். இன்னும் சில வருடங்கள் இருக்குஇ அப்போது சொல்கிறேன் என்றார்; தந்தை. 14 வயது நடந்த பொழுது திடிரென ஒருநாள் அந்த சிறுமி மயக்கம் போட்டாள் அவளை மருத்தவமனைக்கு வேகமாக தூக்கிச்சென்றார்கள். மருத்துவர் அவளை பாரிசோதித்த பிறகு அவளுடைய இதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது . இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று சொன்னார். இதை கேட்டுக்கொண்டிருந்த அந்த சிறுமி தன் தந்தையிடம் அப்பா நான் சாகப் போறேனா? என்றாள். தந்தை இல்லடா நீ சாகமாட்டாய் என்று கூறி கண் கலங்கினாள். அழுதுகொண்டே வெளியே சென்றார். நான் சாகமாட்டேனு உங்களுக்கு எப்படி தெரியும் என்று மகள் கேட்டாள். எனக்குத் தெரியும் நீ சாகமாட்டாய் என்று தந்தை மீண்டும் சொல்ல பின் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துவரப்படடாள். தனது 15 வது பிறந்தநாளன்று தன்னுடைய படுக்கை அறையில் ஒரு கடிதத்தை கண்டாள் அதில் "என் தங்கமே நீ நன்றாக இருப்பாய். ஞாபகம் இருக்கிறாதா நீ ஒருநாள்; என்னுடைய 15 வது பிறந்த நாளுக்கு என்ன அன்பளிப்பு தருவீர்;கள் என்று என்னிடம் கேட்டாய். எனக்கு நான் என்ன தருவது என்றுஇ அன்று தெரியவில்லை. ஆனால் உன்னுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய இதயத்தை தருகிறேன்"என்று எழுதியிருந்தது. தன் மகள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக தன் இதயத்தை அவளுக்கு தானம் செய்துவிட்டார்.
நாம் அனைவரும் வாழ்வு பெற தன் மகனையே நமக்கு சிலுவை சாவுக்கு கையளித்தார்.
இறைவார்த்தை:
மத்தேயு 7:9-11 "உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? .. விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார்."
மத்தேயு 9: 18 "தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்து பணிந்து ":என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்."
யோவான் 10:10இ11 "நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டுஇ அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்."
யோவான் 15:13 "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை."
யோவான் 14:1இ2 "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்."
யோவான் 5:21 "தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பது போல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்."
1யோவான் 3:1 "நம் தந்தை நம்மிடம் எத்துனை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள்."

40.ஏன் நண்பா என்னை அடித்தாய்
நண்பா;கள் இரண்டுபேர் பாலைவனத்தில் நடந்துகொண்டு பேசிக்கொண்டே சென்றனர். ஒருகட்டத்தில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இறுதியில் ஒருவன் மற்றொருவன் கண்ணத்தில் அறைந்தான். அடிவாங்கியவன் வருத்தப்பட்டான். கீழே குனிந்து மணலில் இன்று என் நண்பன் என்னை கண்ணத்தில் அறைந்தான் என்று எழுதினான். பாலைவனச்சோலையை அடையும் வரை இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திடிரென அடிவாங்கியவன் பாலைவன புதைமணலில் மாட்டிக்கொண்டு உள்ளே மூழ்கிக்கொண்டிருந்தான். அடித்த நண்பன் வேகமாக அவனை அந்த புதைமணலிலிருந்து காப்பாற்றினான். அடிவாங்கிய நண்பன் அருகில் இருந்த கல்லை எடுத்து ஒரு பாறையில் இன்று என் நண்பன் என்னுயிரை காப்பாற்றினான் என்று எழுதினான். அவனை காப்பற்றியவன் அவனிடம் நான் உன்னை கண்ணத்தில் அறைந்த பொழுது நீ மணலில் எழுதினாய். இ;ப்பொழுது நான் உன் உயிரை காப்பாற்றிய பொழுது நீ கல்லில் எழுதுகிறாய் இது என்ன என்று கேட்டான். அதற்கு அவன் "ஒருவர் நம்மை காயப்படுத்தும் பொழுது அதை மணலில் எழுத வேண்டும் அப்பொழுதுதான் மன்னிப்பு என்று காற்று; அதை அழித்துவிடும். ஒருவர் நல்லது செய்கின்ற பொழுது அதை பாறையில் எழுத வேண்டும் எந்தக் காற்று வந்தாலும் அதை ஒருபொழுதும் அழிக்க முடியாது என்று கூறினான். நல்லதையே பேசுவோம் நல்லதையே எழுதுவோம்.
இறைவார்த்தை:
நீதிமொழிகள் 12:26 "சான்றோ ரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்."
நீதிமொழிகள் 22:24 "கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதேஇ எரிச்சல் கொள்பவனோடு தோழமை கொள்ளாதே."
நீதிமொழிகள் 17:17 "நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான். இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கிறான்."
யோபு 2;: 11 "யோபின் நண்பர் மூவர் அவருக்கு துக்கம் விசாரிக்கவும்இ ஆறுதல் கூறவும் ஒன்று கூடினர்."
யோவான் 15: 13இ15 "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. ஊங்களை நான் நண்பர்கள் என்றேன். ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
உரோமையர் 12:10 "உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்."


41.எந்த அளவையால் பிறரை அளக்கிறீர்கள்
ஒரு ஊரில் ஒரு வெண்ணெய் வியாபாரி இருந்தார். அவர் அந்த வெண்ணையை ஒரு பேக்காரி வியாபாரியிடம் விற்று விந்தார். வெண்ணைக்கு பதிலாக அவர் பேக்காரி வியாபாரியிடம் ரொட்டி வாங்கி வாங்கிவந்தார். ஒருநாள் அந்த பேக்காரி வியாபாரி இவர் கொடுக்கும் வெண்ணையின் அளவு சரியாகஉள்ளதா என்று பார்த்தார். வெண்ணையின் அளவு குறைந்து இருந்தது. இது பேக்காரி வியபாரியை கோபம் அடையச்செய்தது. இதன் விளைவாக அந்த வெண்ணை வியபாரியை நீதிமன்றத்திற்கு அழைத்தார். நீதிபதி விசாரித்தார். வெண்ணெய் வியாபாரியிடம் நீங்கள் ஏதும் அளவையை பயன்படுத்துகிறீர்;களா என்று கேட்டார். அதற்கு அவர் ஐயா நான் படிக்காதவன் எந்த அளவு என்று எனக்கு தெரியாது. ஆனாலும் நான் ஒரு அளவு ஒன்று வைத்துள்ளேன் என்று கூறினார். நீதிபதி என்ன அளவு என்று கேட்டார். ஐயா நான் கொடுக்கும் வெண்ணைக்கு இணையான எடை கொண்ட ரொட்டியை அவரிடமிருந்து வாங்குகிறேன். அதனால் நான் அவருக்கு வெண்ணைகொடுக்கும் பொழுது அவரது ரொட்டியைத்தான் அளவுவாக வைத்துக் கொடுக்கிறேன்இ எடை குறைவது என்று தெரிந்தால் அது என்னுடைய வெண்ணையால் அல்ல அவர் கொடுக்கும் ரொட்டியால் தான் தண்டிக்க வேண்டுமென்றால் அவரைத்தான் தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
எந்த அளவையால் பிறரை அளக்கின்றோ மோ அதே அளவையால் தான் அளக்கப்படுவோம்.

இறைவார்த்தை:
1அரசர்கள் 21 : 1-27 "நாபோத்தின் திராட்சைத் தோட்டம்"
ஆமோஸ் 8:5 "நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி எடைக்கல்லை கனமாக்கிஇ கள்ளத் தாரசினால் மோசடி செய்யலாம்."
லேவியர் 19:11 "களவு செய்யாமலும்இ பொய் சொல்லாமலும் ஒருவரையொருவர் வஞ்சியாமலும் இருங்கள்."
1கொரிந்தியர் 6:10 "திருடர்இ பேராசையுடையோர்இ குடிவெறியர்இ பழிதூற்றுவோர்இ கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை."
42.என்னை உற்சாகப்படுத்தினர்
ஒரு நாள் ஓர்; இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தவளைகள்; சென்று கொண்டிருந்தன.செல்லும் பொழுது இரண்டு தவளைகள் தடுமாறி பெரிய பள்ளத்தில் விழுந்தன. இந்த இரண்டு தவளைகள் விழுந்தவுடன் மற்ற தவளைகள் அனைத்தும் பள்ளத்தை சுற்றி நின்று கொண்டு அடேயப்பா! எவ்வளவுபெரிய பள்ளம் இது இரண்டும் இங்கேயே இறந்துவிடவேண்டியது தான் என்று பேசிக்கொண்டன. இரண்டு தவளைகளும் தவ்வி தவ்வி குதித்து மேலே வர முயற்சி செய்துகொண்டிருந்தன. இறுதியில் ஒரு தவளை தன் முயற்சியை கைவி;ட்டு அங்கேயே இறந்து விட்டது. இறுதிவரை முயற்சி செய்து ஒரு தவளை மேலே வந்துவிட்டது. மற்ற தவளைகள் ஆச்சரியப்பட்டன. எப்படி உன்னால் முடிந்தது என்று கேட்டது. எனக்கு காது கேக்கவி;ல்லை. ஆனால் நீங்கள் என்னை உற்சாகபடுத்திக் கொண்டே இருந்ததால் என்னால் வெளியே வர முடிந்தது என்று பதில் சொன்னது.

இறைவார்த்தை:
இணைச்சட்டம் 31: 6 "வலிமை பெறுஇ துணிவு கொள்இ அஞ்சாதேஇ அவர்கள் முன் நடுங்காதேஇ ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர். அவர் உன்னை விட்டு விலக மாட்டார்;. உன்னைக் கைவிடவும் மாட்டார்."
செப்பனியா 3: 17 "உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்."
மத்தேயு 11:28 "பெருஞ்சுமை சுமந்து சோர்;ந்திருப்பவர்களேஇ எல்லாரும் என்னிடம் வாருங்கள்."
1கொரிந்தியர் 10: 13 "உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும்போது அதை தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார். அதிலிருந்து விடுபட வழி செய்வார்."
2கொரிந்தியர் 4:17 "நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. ஆவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன."
43.இயேசு அவனை விடமாட்டார்
இளைஞன் ஒருவன் இந்து சமயத்தை சார்ந்த ஒரு பெண்ணை காதலித்தான். இருவரும் அருட்சாதனம் செய்து கொள்ளவிரும்பினர். அந்தப் பெண் தன் தந்தையிடம் நான் ஒரு கிறித்தவ இளைஞனை காதலிக்கிறேன் எனக்கு அவனோடு அருட்சாதனம் முடித்துவையுங்கள் என்று சொன்னாள். தந்தை அவளிடம் நாம் இந்து மதம் அந்த இளைஞனோ கிறித்தவன் மதம் மாறியெல்லாம் அருட்சாதனம் செய்து வைக்கமுடியாது அதனால் நீ அந்த இளைஞனை மறந்து விடு என்று சொன்னார். அந்தப் பெண்ணோ நான் அவரைத்தான் அருட்சாதனம் செய்து கொள்வேன் இல்லையென்றால் நான் என் வாழ்நாள் முழுவதும் அருட்சாதனம் செய்து கொள்ளமாட்டேன் என்று அடம்பிடித்தாள். இதைக்கேட்ட தந்தை நான் உன் திருமணத்துக்கு சம்மதிக்கிறேன் என்று சொன்னார். அந்தத் தந்தை அவருடைய குடும்ப ஜோசியாரிடம் இதைப்பற்றி சொன்னார். நீ அந்த இளைஞனை நம்முடைய மதத்திற்கு மாறமுடியுமா என்று கேள் அப்படி மாறினால்தான் அருட்சாதனம் நடக்கும் என்று சொல் என்றார். அந்த இளைஞனிடம் சொன்ன பொழுது நான் என் காதலுக்காக மாறுகிறேன் என்று சொன்னான். மீண்டும் அந்த தந்தை அந்த ஜோசியாரிடம் சென்று அவன் இந்து மதத்திற்கு வருகிறேன் என்று சொல்கிறான் என்று கூறினார். அப்படியா சரி இம்முறை அவனிடம் போய் நீ உன் பெயரை இந்து பெயராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல் என்றார். அந்த தந்தையும் அவ்வாறே அந்த இளைஞாரிடம் சொன்னார். அவனும் காதலுக்காக மாற்றிக்கொண்டான். மீண்டும் ஜோசியாரிடம் நடந்ததை சொன்னார். இம்முறை அவனிடம் போய் இயேசுவை விட்டுவிலகினால் தான் என்பெண்ணை அருட்சாதனம் செய்து கொடுப்பேன் என்று சொல்; என்று கூறினார். கட்டாயம் அவன் இயேசுவுக்கு பயப்படுவான் என்று எண்ணி அந்தத் தந்தை அவனிடம் மேற்சொன்னதை சொன்னார். அந்த இளைஞனும் நான் காதலுக்காக இயேசுவை விட்டுவிடுகிறேன் என்று கூறினான். இந்த பதிலைக்கேட்ட தந்தை ஆச்சரியத்தோடு ஜோசியாரிம் நடந்ததை சொன்னார். அதற்கு ஜோசியர் அந்த பெண்ணின் தந்தையிடம் "அவன் இயேசுவை வி;;ட்டுவிடலாம் ஆனால் இயேசு அவனை ஒருபோதும்விடமாட்டார்"என்று சொன்னார்.
இறைவார்த்தை:
யோவான் 10:10 "ஆடுகள் நிறைவாழ்வு பெறவே நான் வந்தேன்"
தொடக்க நூல் 45:7இ8 "உலகில் உங்களுள் எஞ்சியிருப்போரை பாதுகாக்கவும்இபெரும் மீட்பு செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும்இ கடவுள் உங்களுக்கு முன் என்னை அனுப்பி வைத்தார்;."
எசாயா 53;:4 "மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்."
மத்தேயு 10:29 "காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது."
மத்தேயு 28: 20 "இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்."
லூக்கா 12: 32 "உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்."
எபிரேயர் 13:5 "நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன். உன்னை விட்டு விலகமாட்டேன்."
1பேதுரு 2:9 "நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்இ அரச குருக்களின் கூட்டத்தினர்இ தூய மக்களினத்தினர்இ அவரது உரிமைச் சொத்தான மக்கள்."


44.நீ தான் எனக்கு வேண்டும்
அரசன் ஒருவன் இருந்தான். தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட மக்களை நல்வழியில் நடத்தினான். யார் எதும் கேட்டாலும் இல்லை என்று அவன் சொன்னதில்லை. அவன் கொண்டிருந்த நல்லபண்பையும் குணத்தையும் பார்த்து பலர் அவனிடம் உதவி கேட்டு பல இடங்களில் இருந்து வந்து கொண்டி:ருந்தனர். ஒரு நாள் ஒரு அழாகன இளம் பெண் அந்த அரசனிடம் உதவி கேட்க வந்தாள். அரசனைப் பார்க்க பலர் நின்று கெண்டிருந்தனர். கேட்ட அனைவருக்கும் அரசன் இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டிருந்தான். ஒரு நிமிடம் இந்த இளம்பெண்;இ அரசனோ அருட்சாதனம் ஆகாதவர். அவரையே நாம் கேட்டோம் என்றால் தினமும் இங்கு வரத்தேவையில்லை வரிசையிலும் நிற்க தேவையில்லை என்று யோசித்தாள். அவள்; நினைத்தவாறே அரசனிடம் சென்றாள். ஊனக்கு என்ன வேண்டும் என்று அரசன் கேட்டான் அதற்கு அவள் நீர் தான் வேண்டும் என்று சொன்னாள். அரசன் வாக்கு தவறாதவன் மீற முடியவில்லை. அந்த இளம்பெண்ணை அருட்சாதனம் செய்து கொண்டான்.
இறைவனிடம் அதைத்தா இதைத்தா என்று கேட்பiதை விட இறைவனையே கேட்க வேண்டும். நம் கடவுள் வாக்கு மாறாதவர்.
இறைவார்த்தை:
தொடக்க நூல் 3:15 "உனக்கும் பெண்ணுக்கும்இ உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். அன்னை மாரியாளின் மனநிலை"
யோவான் 20:28 "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்"
2பேதுரு 1:4 "கடவுள் நமக்கு உயர்மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
பிலிப்பியர் 4: 19 "என் கடவுள்இ கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டுஇ உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்."

45.உங்களுக்கு இடமில்லைஇ காலனே நீ வாடா..
ஒரு முறை கடவுள்இ வர்ணன்இ காலன் மூன்று பேரும் தாம் படைத்த இவ்வுலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக பூமிக்கு வந்தனர். பகல் முழுவதும் சுற்றிப்பார்த்தனர். இரவு நேரம் நெருங்கவே இன்று இரவு இந்த ஊரில் தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என்று முடிவு செய்தனர். தின்னையில் ஒரு மனிதர் படுத்திருந்தார். அந்த மனிதாரிடம் கடவுள் சென்று இன்று இரவு நாங்கள் இங்கு தங்க வேண்டும் இடம் தருவாயா? என்று கேட்டார். அந்த மனிதா; நீங்கள் யார் என்று கேட்க நான் தான இவ்வுலகை படைத்த கடவுள் என்று சொன்னார். கடவுள் சொன்னதைக் கேட்டு அந்த மனிதர் நீர் தான் கடவுளா? ஏன் உன் படைப்பில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?; சிலரை வசதி படைத்தவராகவும் சிலரை வறியவராகவும் படைத்திருக்கிறீர்; அதனால் இங்கு தங்க இடம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டான். மூவரும் இன்னும் சிறிது தூரம் சென்றார்கள். வேறொரு மனிதன் அவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்தான். இம்முறை அவனிடம் வர்ணன் சென்று இன்று இரவு நாங்கள் இங்கு தங்க இடம் கிடைக்குமா? என்று கேட்டது. அதற்கு அவன் நீங்கள் யார்? என்று கேட்க நான் தான் வர்ணன் என்று பதில்சொன்னது. நீ மிகவும் ஓரவஞ்சகம் செய்கிறாய். சில இடங்களில் மட்டும் மழையைத் தருகிறாய் பல இடங்கள்; வறட்சியாக இருக்கிறது. இதனால் நாட்டில் பஞ்சம் உண்டாகிறது என்று சொல்லி இடம் இல்லை என்று மறுத்துவிட்டான். மூவரும் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். இம்முறை காலன் சென்று இடம் கேட்டார். நீங்கள் யார் என்று கேட்க நான் தான் காலன் என்று பதில் சொன்னவுடன். வாங்க வாங்க என்று சொல்லி அழைத்தனர். நீ ஒருவன் இந்த உலகில் எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பதில்லை. படித்தவன் படிக்காதவன் இருப்பவன் இல்லாதவன் ஏழை பணக்காரன் என்று எந்த வித்தியாசம் பார்க்கமால் அனைவரையும் அரவணைத்துக்கொள்கிறாய் என்று சொல்லி காலனால் கடவுளும் வர்ணனும் வீட்டிற்குள் நுழைந்தார்கள் என்று ஒரு ஆப்பிரிக்க நாட்டு கதை சொல்கிறது.
நாம் வாழும் இவ்வுலகில் இறப்பு மட்டுமே மனிதனுக்கு நிரந்தரம்.

46.என் கையை நீங்க பிடிங்க
ஒருமுறை அப்பா தன் மூன்று வயது குழந்தையை கூட்டிக் கொண்டு ஒரு பாலத்தில் நடந்துகொண்ருந்தார். அந்தப் பாலத்தின் இருமடங்கிலும் தண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த தந்தை தன் மூன்று வயது மகளைப்பார்த்து "டே தங்கம் என் கையை கெட்டியா பிடிச்சிக்க இல்லைனா தவறி ஆற்றில் விழுந்திடுவ" என்று சொன்னார். அந்த சிறு குழந்தை அந்தத் தந்தையிடம் "அப்பா நீங்க என் கையை பிடிங்க"என்று சொன்னதாம். அதற்கு அப்பாஇ ஏண்;டா பிள்ள அப்படி சொல்றீரிங்க என்று கேட்டார். அதற்கு அந்தக் குழந்தை "என் கை மிகவும் சின்ன கை உங்க கை மிகவும் பெரியகை சின்ன கை பெரிய கையை பிடிக்கும் போது நழுவி விட்டுவிடலாம் ஆனா நீங்க பிடிச்சா என்ன விடமாட்டிங்க உங்க பெரிய கை இந்த சின்ன கையை நல்லா பிடிச்சிக்கும் என்று அவள் சொன்னாள்.
கடவுளின் கரம் பற்றி நடப்போம். அவர் என்றுமே கைவிடமாட்டார்.

இறைவார்த்தை:
}க்கா 12: 7 "உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்."
எபிரேயர் 13: 5இ6 "நான் ஒரு போதும் உன்னைக் கைவிடமாட்டேன்இ உன்னை விட்டு விலக மாட்டேன். ஆண்டவரே எனக்குத் துணைஇ நான் அஞ்சமாட்டேன்இ மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்."
எசாயா 12:2 "இறைவன் என் மீட்பர். அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன். நான் அஞ்சமாட்டேன்."
புலம்பல் 3:25 "ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும்இ அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்."
47.பழி வாங்கியாச்சு
ஒருமுறை மாமனாரும் மறுமகனும் பேசிக்கொண்டிருந்தனர். மாமானார் தன் மருமகனிடம் "ஏன் மாப்பிள்ள உங்க கண்முன்னாடிதான் கோயில் உண்டியல் உடைச்சு காச எடுத்திருக்காங்க நீங்க எதுவுமே சொல்லாமஇ தடுக்காம அமைதியா இருந்திங்களாமே"என்று கேட்டார். அதற்கு அந்த மருமகன் "ஆமா மாமா நான் எதுவுமே சொல்லல"என்று பதில் சொன்னார். ஏன் எதுவும் சொல்லல என்று மாமானார் கேட்டார். அதற்கு அந்த மருமகன் "மாமா நீங்க எனக்கு உங்க பொன்னை அந்தக் கோயில்ல தானே அருட்சாதனம் செய்து வைச்சீ;ங்கஇ அப்ப அந்த சாமி சும்மாதானே இருந்துச்சு வந்து தடுக்கவே இல்லஇ அதான் பழிக்குபழி வாங்கிட்டேன்"என்று சொன்னாராம்.

இறைவார்த்தை:
நீதிமொழிகள் 24: 29 "அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்இ அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன்."
மத்தேயு 5:38-42 "கண்ணுக்குக் கண்இ பல்லுக்குப் பல்..மறுகண்ணத்தையும் திருப்பிக் காட்டுங்கள்."
மத்தேயு 26: 52 "உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில் வாளை எடுப்போர் வாளால் அழிந்து போவர்."
லூக்கா 17: 1-10 "இயேசுவின் அறிவுரைகள்"
உரோமையர் 12:19 "அன்பார்ந்தவர்களே பழிவாங்காதீர்கள்இ அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். பழிவாங்குவதும் கைம்மாறு அளிப்பதும் எனக்கு உரியன."

48.அறிவின் அனுபவம்
பெரியகப்பல் ஒன்று இயந்திர கோளாரல் நின்று கொண்டிருந்தது. அதை சரிசெய்வதற்கு பல நிபுணர்களை அந்த கப்பலின் உரிமையாளர் அழைத்தார். ஆனால் ஒருவர் கூட அந்த கப்பலுடைய இயந்திரத்தில்; என்ன பிரச்சனை என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். அங்கு ஒரு வயதான ஒருவர் வந்தார். அவர் தன் இளமையிலிருந்தே கப்பலின் இஞ்சின் பழுதுபார்க்கும் வேலைசெய்பவர். அவர் என்ன பழுது என்று பார்க்க போனார். கப்பலின் உரிமையாளர் அருகில் இருந்தார். அந்த பெரியவர் மிகவும் கவனமாக என்ன பழுது என்று ஆராய்ந்து கொண்டிருந்தார். பிற்பாடு தான் கொண்டுவந்த பொருட்களில் ஒன்றான ஒரு சிறிய சுத்தியலை எடுத்து கப்பலின் ஒரு முனையில் உள்ள இயந்திரத்தில் அடித்தார். கப்பால் இயந்திரம் செயல்படத் தொடங்கியது. ஒருவாரம் கழித்த அந்த கப்பலின் உரிமையாளருக்கு ஒருகடிதத்தில் கப்பல் இயந்திரம் பழுது பார்த்தற்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று அந்த பெரியவர் அனுப்பியிருந்தார். இதைப் பார்த்த அந்த கப்பலின் உரிமையாளர் அவர் எதுவுமே செய்யவில்லை ஒரு சிறிய சுத்தியலை வைத்து அடித்தற்கு பத்தாயிரம் ரூபாய் எப்படி குடுக்கு முடியும் என்று சொன்னார். சரி எதற்கு இவ்வளவு தொகை ஆனது என்னனென்ன செய்தீர்கள் என்று எனக்கு கொடுங்கள் என்று கூறி கடிதம் அனுப்பினார்.
அந்த மனிதர் கீழ் உள்ளவாறு அனுப்பினார்
சுத்தியலில் அடித்ததற்கு--------------------------------------2.00 ரூபாய்
எங்கு அடிக்க வேண்டும் என்று தெரிந்ததற்கு-----9998.00 ரூபாய்
கடவுளை முழுமையாக அறிந்து கொள்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
நீதிமொழிகள் 2: 11 "நுண்ணறிவு உனக்கு காவலாய் இருக்கும்."
யோவான் 17: 3 "உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு."
குலாத்தியர் 4: 8 "ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தீர்கள்இ அப்போது கடவுள் அல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்."
லூக்கா 12: 54-56 "மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும். இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?"
எபேசியர் 1:17 "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும்இ வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக."
49.ஆபிஸ் பாய்
வேலையில்லாத இளைஞர் ஒருவர் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை கேட்டு சென்றான். உனக்கு இங்கு எடுபிடி வேலைதான் என்று சொன்னார்கள். அந்த இளைஞனும் வேலைக்கு ஒத்துக்கொண்டான். உன்வேலைக்கான பணிநியமனத்ததை உன்னுடைய மெயிலில் அனுப்புகிறோ ம் அதனால் உன் மெயில் விலாசத்தைக் கொடு என்று கூறினார்கள். ஏனக்கு மெயில் விலாசம் இல்லை கணினியைப்பற்றி எதுவும் எனக்கு தெரியாது என்று சொன்னான். நிர்வாகத்தினர் "உனக்கு மெயில் விலாசம் இல்லை என்பது நீ உயிரோடு இல்லாததற்கு சமம்இ நீ உயிரோடு இல்லையென்றால் உனக்கு வேலையும் இல்லை என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டனர். நம்பிக்கையிழந்தவனாக வெளியில் சென்றான். என்ன செய்வது என்று திகைத்துக்கொண்டிருந்தான். தன்னிடம் என்ன இருக்கிறது என்று சோதனை செய்தான்;. வெறும் பத்துருபாய் மட்டுமே இருந்தது. அங்கிருந்து அவன் புறப்பட்டு பெரிய சந்தைக்கு சென்றான். அன்று தக்காளியின் விலை மிகவும் மலிவாககாணப்பட்டது. அவன் வைத்திருந்த 10 ரூபாய்க்கு 10கிலோ தக்காளி வாங்கினான்.அங்கிருந்த நகர்புறப் பகுதிகளில் அதைவிற்றான். இரண்டுமணிநேரத்தில் விற்று அவன் அதற்கு செலவு செய்த முதலீட்டையும் மற்றும் இலாபத்தையும் பெற்றான். அன்று மட்டுமே அவன் இரண்டுமுறை அவ்வாறு செய்து 100ரூபாய் சம்பாதித்தான். இத்தொழில் நன்றாக இருக்கிறதே என்று நினைத்து ஒவ்வொருநாளும் அதிகாலையில் சந்தைக்கு சென்று தக்காளிகளை வாங்கி விற்றான். நாளுக்கு நாள் அவனுடைய இலாபம் பெருகியது. சிறிய தள்ளுவண்டி வாங்கி அதில் பழங்களைப்போட்டு விற்றான். சிறிது சிறிது தாக முன்னேறி வாகனம் வாங்கி பல ஊர்களுக்கு அனுப்பினான். பெரிய பணக்காரனாகவும் ஆனான். ஐந்து வருடத்திற்குள் பெரிய உணவு உற்பத்தியாளராக மாறினான். அவனுடைய எதிர்கால முன்னேற்றத்திற்காக அவன் சொத்துக்களை அனைத்தையும் காப்பீடுசெய்ய நினைத்தான். அதனால் காப்பீடு செய்யும் நிறுவன மேலாளரை அழைத்தான். அவர் வந்து அனைத்தையும சரிபார்;த்துவிட்டு சரி மெயில் விலாசம் கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் என்னிடம் இல்லை என்று சொன்னார். காப்பீடு நிறுவனத்தின் மேலாளர் மெயில் இல்லாமலே உங்கள் உற்பத்தியை பெருக்கி பெரிய தொழில் அதிபராக ஆகியிருக்கிறீர்கள். மெயில் விலாசம் இருந்திருந்தால் இன்னும் எங்கேயோ போயிருப்பீர்கள் என்று சொன்னார். அதற்கு அவர் நான் மட்டும் மெயில் பயன்படுத்தியிருந்தால் ஆபிஸ்பாயாகவே இருந்திருப்பேன் என்று சொன்னாராம். பல நேரங்களில் இந்த வேலை எனக்கு போய்விட்டதே என்று நினைக்கிறோ ம் ஆனால் ஆண்டவருடைய திட்டம் என்பது எப்பொழுதுமே நன்மை பயக்கக்கூடியது.

இறைவார்த்தை:
நீதிமொழிகள் 19: 21 "மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்இ ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்து நிற்கும்.
விடுதலைப் பயணம் 9:16 "என் வல்லமையைக் காட்டவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்."
எரேமியா 29:11 "உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ இ அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றிஇ கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல."
எசாயா 25:1 "ஆண்டவரேஇ நீரே என் கடவுள். நான் உம்மை மேன்மைப்படுத்துவேன். ஊம் பெயரைப் போற்றுவேன். நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர். நெடுநாளாய் நீர் திட்டியுள்ள திட்டத்தை திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்."
நீதிமொழிகள் 16:9 "மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார். ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்."


50.உங்களில் ஒருவர் மெசியா
ஒரு கிறித்தவ ஆலயத்தில் வழிபாட்டிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் அந்த ஆலயத்திற்குஇ ஐந்து போ; மட்டுமே வந்தனர். அந்த ஐந்து போரில் ஒருவர் அருட்பணியாளர்இ ஐந்து பேருமே அறுபது வயதைக் கடந்தவர்கள். அந்த ஆலயத்தின் அருகே ஒரு குன்று இருந்தது. அங்கேஇ ஒரு ஓய்வுபெற்ற ஆயர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அந்த ஆலயத்தின் அருட்பணியாளர்இ ஆயரைப் பார்த்து நீங்கள் ஆலயதிற்கு வந்து திருப்பலி நிறைவேற்றி மக்களுக்கு மறையுரை ஆற்றுங்கள். மக்கள் ஆலயத்திற்கு வருவார்கள் என்று சொல்லி அவரை அழைத்தார். அதற்கு ஆயர் அவர்களஇ; நான் வந்து மறையுரை வைத்து அவர்களுக்கு அறிவுரை கூறுவது என்பது இயலாத காரியம். ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்கிறேன்;;இ "உங்களில் ஒருவர் தான் மெசியா" என்று சொன்னார். அருட்பணியளார்இ அந்த ஆலயத்தில் இருந்த நான்குபோரிடமும் ஆயர் சொன்னதைச் சொன்னார். சில நாட்கள் கழித்து அந்த ஐவரும் ஆயர் சொன்னதைஇ சிந்தித்துப் பார்த்தார்கள். நம் ஐவரில் ஒருவர் தான் மெசியாவாக இருக்க முடியும்;இ என்று சொல்லி அனைவரும் ஒருவரையொருவர் மதித்து நடக்க ஆரம்பித்தனர். இன்னும் சிறிது நாட்கள் கழித்து அனைவருமே மெசியா தான் என்று உணர்ந்துஇ தாங்களையே தாங்கள் மதித்து அன்பு செய்யத் தொடங்கினர். இவர்களின் மாற்றத்தைக் கண்ட ஊர் மக்கள் ஆலயம் நோக்கி வர ஆரம்பித்தனர். ஆலயத்திலிருந்த அந்த ஐந்து நபாரிடமும் புனிதத்தன்மை குடி கொண்டிருந்ததை உணர்ந்தனர். நாளடைவில் தங்களுடைய நண்பர்களையும் ஆலயத்திற்கு அழைத்து வந்தனர். ":ஆலயத்தில் மக்களின் கூட்டம் நிரம்புவதற்கான காரணம் என்ன? என்று சிந்தித்த அருட்பணியாளருக்குஇ ஆயரின் ":ஒரு சொல்; நினைவிற்கு வந்தது. அவர் ஆயாரின் கொடைக்கு நன்றி கூறினார்.
இறைவார்த்தை:
யோவான் 5:33-34 "யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல. நீங்கள் மீட்பு பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்."
எபேசியர் 4:1 "நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்."
1பேதுரு 2: 12 "பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று பழித்துரைப்பினும்இ உங்கள் நற்செயல்களைக் கண்டுஇ கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள்."

51.ஆணி (சினம்)
சிறுவன் ஒருவன் எதற்கெடுத்தாலும் கோபம் கொண்டு பிறரை வசைபாடிக்கொண்டிருந்தான் இதைக்கண்ட அவனது தந்தை மிகவும் கவலைப்பட்டார். ஒருநாள் அந்த தந்தை அவனைக் கூப்பிட்டு ஒரு பை நிறைய ஆணிகளை கொடுத்தார். அவனிடம் நீ எப்பொழுதெல்லாம் கோபம் கொள்கிறாயோ அப்போதெல்லாம் இந்த ஆணியை நீ சுவற்றில் அடி என்று சொன்னார். அவனும் கோபம் வரும்போதெல்லாம் அப்படியே செய்தான். ஒருநாள் தன் தந்தையிடம் வந்து ஆணி தீர்ந்து விட்டது என்று சொன்னான். அவன் தந்தை அவனிடம் "நீ அடித்த ஆணி அனைத்தையும் ஒவ்வொன்றாக பிடுங்கு என்று கூறினார். அவனும் அவ்வாறே செய்தான். இப்பொழுது இந்த சுவற்றைப் பார் இ முன்னைய நிலையில் இருந்த சுவர் எங்கே? என்று கேட்டார்.
நாம் கோபத்தில் பேசும் வார்த்தை இந்த சுவற்றில் உள்ள வடு போல் இருக்கும் அது ஒருநாளும் மாறாது என்று சொன்னார்.
இறைவார்த்தை :
நீதி மொழி 12:8


52.நல்ல செய்தி
ஒருமுறை தத்துவஞானி சாக்ரடீஸிடம்இ ஒருவர் வந்து உங்களிடம் நான் ஒரு செய்தி ஒன்று சொல்ல விரும்புகிறேன் என்று கூறினார். அதற்கு சாக்ரடீஸ் அவர்கள் நீங்கள் சொல்லப் போகும் செய்தி உண்மையானதா? என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் நான் கேட்டதைச் சொல்கிறேன்இ அந்த செய்தியின் உண்மை நிலை என்ன என்று எனக்கு முழுமையாகத் தெரியாது என்றார்;. மேலும் சாக்ரடீஸ் அவரிடமஇ; நீ சொல்லப்போகும் செய்தி நேர்மறையானதா? என்று கேட்டார். அவர்இ நான் சொல்லப்போகும் செய்தி எதிர்;மறையானது என்று சொன்னார். நீங்கள் சொல்லப்போகும் செய்தி நன்மை பயக்கக்கூடியதா? என்று மீண்டும் கேட்டார். ":இல்லை என்று மீண்டும் பதில் வந்தது. நீ சொல்லப்போகும் செய்தி உண்மையாகவும் இல்லைஇ நோ;மறையாகவும் இல்லை இ நன்மையாகவும் இல்லை பிறகு நான் எதற்கு அதை கேட்க வேண்டும் என்று சொல்லி அந்த மனிதரை அனுப்பிவிட்டார்;.
இறைவார்த்தை:
லூக்கா 2:10 "இதோஇ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியு+ட்டும்
நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."
2சாமுவேல் 18:31 ": என் தலைவராம் அரசே! நற்செய்திஇ இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் கரத்தினின்று உம்மை விடுவித்துள்ளார்."
எசாயா 52:7 "நற்செய்தியை அறிவிக்கவும் இ நல்வாழ்வைப் பலப்படுத்தவும்இ நலம் தரும் செய்தியை உரைக்கவும்இ விடுதலையை பறைசாற்றவும்.."
எசாயா 61:1-11 "விடுதலைப் பற்றிய நற்செய்தி"
மத்தேயு 4:23 "இயேசு கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார். அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். விண்ணரசு பற்றிய நற்செய்தியை பறைசாற்றினார்."
திருத்தூதர் பணிகள் 5:42 "அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்துஇ இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.
நீதிமொழிகள் 12: 19 "ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும். பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே."
54 தேர்ந்து தௌரிதல்

விவசாயி ஒருவரின் மகளைஇ இளைஞன் ஒருவன் மனதார நேசித்தான். ஆவளைத் அருட்சாதனம் செய்து கொள்ள விரும்பினான். தன் விருப்பத்தை அந்த விவசாயிடம் சொல்லி அவருடைய பெண்ணைக் கேட்டான். அதற்கு அந்த விவசாயி இளைஞனிடமஇ; நான் வைத்திருக்கும் மூன்று காளை மாடுகளில் நீ எதாவது ஒரு காளை மாட்டின் வாளைப் பிடித்தால் நான் என் மகளை உனக்கு அருட்சாதனம் செய்து வைக்கிறேன் என்று சொன்னார். சம்மதம் தெரிவித்த அந்த இளைஞன் காளை மாட்டின் வாலைப் பிடிக்க களத்தில் இறங்கினான். முதலில் ஒருகாளை மாடு வந்தது. அதைப்பார்த்த அவன் மிரண்டு போனான். தன்னுடைய வாழ்நாளில் அப்படியொரு காளையை அவன் பார்;த்ததில்லை. பார்;ப்தற்கு அந்தக்காளை மிகவும் பயங்கரமாகத்தெரிந்தது. இது போகட்டும் அடுத்து வரும் காளையின் வாலைப் பிடிக்கலாம் என்றிருந்தான். இரண்டாவது காளை வந்தது. இரண்டாவது வந்தக் காளைஇ மிகவும் சீற்றத்தோடு இருந்தது. அது அந்த இளைஞனைக் குறிவைத்தது. இதை உணர்ந்த இளைஞன் இதுவும் கடந்து போகட்டும் இ இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது மூன்றாவது காளையை பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். இப்பொழுது மூன்றாவது காளையும் வந்தது. அது பார்ப்பதற்கு நன்றாக இருந்ததுஇ சாதுவாகவும் இருந்தது. அதைக்கண்ட அந்த இளைஞன் மகிழ்ந்தான். ஆனால் அவன் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஏனெனில் மூன்றாவதாக வந்த காளைக்கு வால் இல்லை.
நம்முடைய வாழ்வு முழுவதுமே வாய்ப்புதான். முதலில் வரும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது.
இறைவார்த்தை:
சீராக் 15: 17 "மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்."
நீதிமொழிகள்3:5-6 "முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு. உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்."
மத்தேயு 7:13-இ14 "இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள். ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது. வழியும் விரிவானது. அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது. வழியும் மிகக் குறுகலானது. இதைக் கண்டு பிடிப்போர் சிலரே."



55.வெற்றியின் ரகசியம்

இளைஞன் ஒருவன் சாக்ரடீஸிடம் வந்துஇ வெற்றியின் இரகசியம் என்ன? என்று கேட்டான். ":நாளை காலை நான் சொல்லும் ஆற்றங்கறைக்கு வா என்று அவனிடம் சாக்ரடீஸ் சொன்னார். அந்த இளைஞன் மறுநாள் காலை சொன்ன இடத்திற்கு வந்தான். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றுக்குள் இறங்கச் சொன்னார். ஆற்றுக்குள் இறங்கிய இளைஞனை நீரினுள் அமிழ்த்தினார். சிறிது நேரத்தில் மூச்சு திணறி; தாங்க முடியாமல் திமிறிக்கொண்டு வெளியே வந்தான். மேலும் கீழுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். இப்பொழுது அவனிடம் சாக்ரடீஸ்இ "நீரினுள் இருந்த பொழுது நீ எதை அதிகமாக விரும்பினாய் என்று கேட்டார். அதற்கு அவன் ":காற்று என்று சொன்னான். அது தான் "வெற்றியின் இரகசியம்"; என்று சொன்னார். காற்றை எப்படியாவது சுவாசிக்க வேண்டும் என்பதற்காக நீ கடினப்பட்டு என்னை தள்ளிக்கொண்டு வெளியே வந்தாய் அது தான் "வெற்றியின் ரகசியம்"; என்று மீண்டும் சொன்னார். நம்முடைய இலக்கின் மீது அணையாத தாகம் இருக்கும் பொழுது அது வெற்றியின் ரகசியமாக மாறும்.
இறைவார்த்தை:
இணைச்சட்டம் 8:1 "இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்துஇ அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள்."
யோசுவா 1:8 "இந்த திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்துஇ இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைபிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம் எல்லாம் நலம் பெறுவாய்இ வெற்றி காண்பாய்."
நீதிமொழிகள் 16: 3 "உன்செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை. அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்."
எபிரேயர் 12: 2 "நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களை பதியவைப்போம்."


55.நல்ல தலைவர்
ஒரு முறை லண்டனில் ஆப்பிரிக்காவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரு உயர் அதிகாரிக்குஇ விருந்து கொடுக்கப்பட்டது. அந்த விருந்தில் மகாராணி விக்டோரியா கலந்து கொண்டார். அனைவருக்கும் விருந்து பாரிமாறப்பட்டது. அங்கு ":பிங்கர் பவலில் சுiவாயன சூப் வைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து வந்த உயர் அதிகாரிக்கு ":பிங்கர் பவலை எவ்வாறு பயன்படுத்துவதுஇ என்பது பற்றித் தெரியவில்லை. எனவே அவர் அதைத் தன்னுடைய கையால் எடுத்து வாயில் வைத்து குடித்தார். இதைக்கண்ட அனைவரும் இவருக்கு நாகாரிகம் தெரியவில்லை என்று ஒருமாதிரியாகஇ தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.; இதைக்கண்ட மகாராணி விக்டோரியா அவர்கள்இ தனக்கு வைக்கப்பட்டிருந்த ":பிங்கர் பவல; சூப்பை கையால் எடுத்து வாயில் வைத்துக் குடித்தார். இதைக்கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு தாங்களும் தங்களுடைய ":பிங்கர் பவலை கையில் எடுத்து வாயில் வைத்து குடித்தனர். இதன் வழியாக மகாராணி விக்N;டாரியாஇ ஒரு மனிதனுடைய மாண்பைக் காத்தார். தலைவன் என்பவன் பிறருக்காக இருப்பவன். மற்றவர்கள் அவமானமாக நினைக்கின்ற பொழுது அந்த அவமானம் தனக்குரியதாக எண்ணி பிறாரின் மதிப்பை காப்பாற்ற நினைப்பவரே உண்மையான தலைவர்.
இறைவார்த்தை:
எரேமியா 1:5 "தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன். நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன். மக்களினங்களுக்கு உன்னை இறைவாக்கினனாக ஏற்படுத்தினேன்."
மத்தேயு 20: 25-28 "பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். .மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்லஇ தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்."
மாற்கு 10:35-45 "செபதேயுவின் மக்களது வேண்டு கோள் இ உங்களுள் முதன்மையானவாரக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்."
யோவான் 13: 1-20 "இயேசு சீடாரின் காலடிகளைக் கழுவுதல்"
1திமொத்தேயு 3:1-7 "சபைக் கண்காணிப்பாளா; பண்புகள்"
தீத்து 1:1-16 "திருச்சபைத் தலைவர்களின் பண்புகள்"
எபிரேயர் 13:7 "உங்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூறுங்கள். அவர்களின் வாழ்வின் நிறைவை எண்ணிப்பார்த்து நீங்களும் அவர்களைப்போல் நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்."

9. கண்ணாடித் தம்ளரை கீழே போடுங்க..

பேராசிரியர் ஒருவர் சிறிய கண்ணாடித் தம்ளாரிலஇ; சிறிதளவு தண்ணீரை நிரப்பி அதை உயர்த்தப் பிடித்துக்காட்டிஇ தன்னுடைய மாணவர்களிடம்இ இந்த தம்ளாரில் இருக்கும் தண்ணிரின் கனம் எவ்வளவு இருக்கும்? என்று கேட்டார். மாணவர்களஇ; ":50.100125 கிராம் இருக்கும் என்று பதில் கொடுத்தனர். எவ்வளவு இருக்கும் என்று எனக்கும் தெரியாது. ஆனாலஇ; என்னுடைய கேள்வி இதுதானஇ; நான் சில மணித்துளிகள் இப்படியே பிடித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும?; என்று கேட்டார். ஒன்றும் ஆகாது என்று அனைவரும் பதில் தந்தனர். சரி இதே மாதிரிஇ நான் ஒரு மணிநேரத்திற்கு வைத்திருந்தால் என்ன ஆகும?; என்று கேட்டார். அதற்கு அனைவரும் உங்களுடைய கை வலி எடுக்கும் என்றனர். சரி நாள்முழுக்க நான் அதைபிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும?; என்று கேட்டார். உங்கள் கை மரத்துப்போகும்இ தசைபிடிக்கும்இ வாதம் ஏற்படும் என்று பலவாறு அடுக்கிக் கொண்டே போனார் ஒரு மாணவர். சரியாகச் சொன்னாய் என்று சொன்னார். ஆனால் நாள் முழுக்க தம்ளரை உயர்த்தி பிடித்ததால் அந்த தம்ளாரின் எடை மாறியிருக்குமா? என்று கேட்டார். ":இல்லை என்று மீண்டும் அனைவரும் சொன்னனர். எனக்கு வலியை உண்டாக்கியது எது? என்று கேட்டார். அனைவரும் விழித்தனர். இந்த வலியிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும?; என்று கேட்டார். ":கண்ணாடித் தம்ளரை கீழே விட வேண்டும; என்று ஒரு மாணவர் சொன்னார். நன்று. நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் அப்படித்தான். சில மணித்துளிகள் அதை மனதில் வைத்திருக்கும் பொழுது அது வலியை ஏற்படுத்தாது. ஆனால் அதை சில மணி நேரம் மனதில் வைத்திருக்கும் பொழுது அது வலியை ஏற்படுத்தத் தொடங்கும். நாள்முழுவதும் அதை நினைக்கும் பொழுது அது நமக்கு வாதத்தைக்கூட ஏற்படுத்தும.; நம்மால் எதையும் செய்ய இயலாது என்றார். நம்முடைய வாழ்வில் பிரச்சனைகள் துன்;பங்கள்இ கவலைகள் அனைத்தும் வரும் ஆனால் உறங்கச் செல்வதற்கு முன்பாக அனைத்தையும் கீழே போட்டு விடவேண்டும்.
இறைவார்த்தை:
சீராக் 30:24 "கவலை உரிய காலத்திற்கு முன்பே முதுமையை வருவிக்கும்."
நீதிமொழிகள் 12: 25 "மனக்கவலை மனிதாரின் இதயத்தை வாட்டும் . இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்."
திருப்பாடல்கள் 55:2இ22 "என் விண்ணப்பத்தைக் கேட்டு மறுமொழி அருளும். என் கவலைகள் உன் மன அமைதியைக் குலைத்துவிட்டன. ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு. அவர் உனக்கு ஆதரவளிப்பார்."
மத்தேயு 6:25-34 "நான் உங்களுக்குச் சொல்கிறேன்இ உயிர் வாழ எதை உண்பதுஇ எதைக்குடிப்பது என்றோ . நாளையக்கவலையப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்."
மத்தேயு 10:19 "என்ன பேசுவதுஇ எப்படிப் பேசுவது? என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்."
1பேதுரு 5:7 "உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்."


58.என்னுடைய தழும்பைப் பாருங்க
அமொரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்திற்கு அருகில் உள்ள ஒருகிராமத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி. வழக்கம் போல் அந்தப்பெண் தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவள் வீட்டருகே ஒரு குளம் ஒன்று இருந்தது. அது ஒரு கோடை காலம். அந்தப் பெண்ணினுடைய 10 வயது மகன் நான் குளிக்கப் போகிறேனஇ; என்று சொல்லி துள்ளிக்குதித்துக் கொண்டு வேகமாக குளத்திற்குள் குதித்து நீந்திக் கொண்N;;ட சென்றான். தண்ணீர் மிகவும் குளிராக இருந்ததால் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தான்.; அவனுக்கு நேர்எதிராக ஒரு முதலை ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை அவன் கவனிக்கவில்லை. இதை வேலை பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய அம்மா பார்த்துவிட்டுஇ வேகமாக கத்திக் கொண்டே வந்தாள். சத்தம் கேட்ட பிறகு தான் பார்த்தான்இ அவனை நோக்கி முதலை வந்து கொண்டிருந்தது. அவன் திரும்பி வேகமாக நீச்சலடித்துக் கொண்டு கரையை நோக்கி வந்தான். அதற்குள் முதலையும் அருகில் வந்துவிட்டது. அவனுடைய தாயும் அவன் அருகில் வந்துவிட்டார். முதலை அவனுடைய காலைக் கவ்வியது. அவனுடைய அம்மாஇ அவனுடைய தோல்பட்டையைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக இழுத்துக்கொண்டிருந்தாள். இருவரும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருந்தார்கள். அலறிக்கொண்டே இருந்தான் சிறுவன். அவ்வழியே சென்ற ஒருவர் இதைப்பார்த்துஇ நீரில் இறங்கிஇ ஒருவழியாக அந்த சிறுவனைக் காப்பற்றினார். அந்தச் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசேர்க்கப்பட்டான். சிறிது சிறிதாக அவன் குணமடைந்து கொண்டிருந்தான். அவனுடைய கால் பகுதி முழுவதும் தழும்பாக இருந்தது. அவனுடைய தோல்பட்டை மிகவும் காயத்தோடு இருந்தது. அவனுடைய அம்மா அவனை நன்றாக கவனித்துக் கொண்டாள். பத்தாரிக்கை நிருபர்கள் வந்துஇ அந்த சிறுவனிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க வந்தனர். உன் காலை காட்டு உன் தழும்புகளைப் பார்க்க வேண்டுமஇ; என்று கூறினர். அவன் தன் காலை காட்டிய பிறகு பெருமிதத்தோடு என்னுடைய தோல்பட்டையைப் பாருங்க எப்படிப்பட்ட தழும்புஇ என்னுடைய அம்மாஇ "முதலை என்னைக் கொன்று விடக்கூடாது" என்பதற்காகஇ என்னை இறுக்கிபிடித்ததனால் ஏற்பட்ட தழும்பு என்று கூறினான்.
நம் அனைவரிடமும் தழும்புகள் உள்ளன. முதலை பிடித்ததால் அல்ல மாறாக நம்முடைய கடந்தகால வாழ்க்கை நிகழ்வினால்இ ஆனால் கடவுள் தாய் போன்று நம்மை கைவிடாமல் காத்து வருகின்றார்.
இறைவார்த்தை:
எசாயா 49:1இ15இ1 "கருப்பையில் இருக்கும் போதே ஆண்டவர் என்னை அழைத்தார். என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பார்ளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? ."
எசாயா 66: 13 "தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்."
எசேக்கியேல் 19:2 "சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய். இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்."
லூக்கா 13:34 "எருசலேமேஇ எருசலேமே இறைவாக்கினரைக் கொல்லும் நகரே உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயேஇ கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக் கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்."
லூக்கா 11:27 "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளா;த்த உம் தாய் பேறுபெற்றவர்."

58.கண்டு கொள்ளாமை
கெவின் கார்ட்டர் என்பவர்இ தென்ஆப்பிரிக்கா நாட்டில் பிறந்த ஒரு வெள்ளையர். இவர் புகைப்பட வல்லுநராக பணியாற்றினார். இவர் எடுத்தப் பல படங்கள் மிகவும் புகழ்பெற்றவை. 1993 ஆம் ஆண்டு தெற்கு ":சு+டானில; உள்ள ":அய்யோடு என்று இடத்தில் ஒரு தாய் தன் பிள்ளையை விட்டுவிட்டு உணவு சேகாரிக்கச் சென்றாள். மிகவும் பசிஇ பட்டினிஇ பஞ்சம் வாட்டிக் கொண்டிருந்த நேரம் அது. அந்தக் குழந்தை மிகவும் ஒட்டிய வயிறோ டும்இ பார்ப்பதற்கே பாரிதாபமான நிலையில் நிலை குலைந்து தரையில் கிடந்தது. அந்தக் குழந்தைக்கு பின்னாலஇ; பிணம் தின்னும் கழுகு ஒன்று அந்தக் குழந்தையைஇ கொத்தி கவ்விக் கொண்டு போவதற்காக காத்துக்கொண்டிருந்தது. இந்தக் காட்சியை பார்த்த கெவின்கார்ட்டர்இ அதை தான் வைத்திருந்த புகைபடக்கருவியில் பதிவு செய்தார். 1994இ மார்ச் மாதத்தில்இ அவர் எடுத்த அந்தப்படத்திற்கு அமொரிக்காவில் வழங்கக்கூடிய மிக உயாரிய விருதான புலிட்சர் விருது வழங்க தேர்வுசெய்யப்பட்டது. அவர் எடுத்த அந்தப் ":புகைப்படத்தை நியுயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கை வெளியிட்டது. அதைப் பார்த்த அனைவரும் திடுக்கிட்டனர். அனைவரும் அந்தக்குழந்தை "என்னாயிற்று? இ என்னாயிற்று?" என்று பத்திரிக்கை நிறுவனத்திடம் கேட்டனர். புலிட்சர் விருது வழங்கும் விழாவில் அவரிடம் அந்தக் குழந்தை ":என்னாயிற்று? என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ":தெரியவில்லை என்று பதில் தந்தார். அந்தப்படத்தை எவ்வளவு நேரம் எடுத்தீர்கள்? என்று கேட்ட பொழுதுஇ ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேலாக என்னுடைய லென்சை சரி செய்துஇ அந்தப்படத்தை எடுக்க காத்திருந்தேன் என்று கூறினார். ":அந்தக் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழவில்லையா? என்று கேட்டபொழுதுஇ மவுனமாக அவர் இருந்தார். 1994இ ஏப்ரல் 18 ஆம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இறைவார்த்தை:
லூக்கா 12: 13-21 "அறிவற்ற செல்வன் உவமை"
லூக்கா 16:19-31 "செல்வரும் இலாசரும் உவமை"
ஏசாயா 42:20 "பலவற்றை நீ பார்த்தும் இ கவனம் செலுத்தவில்லை. உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை."
எரேமியா 37:2 "செதேக்கியாவும் அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்கு செவிமடுக்கவில்லை."
மத்தேயு 13: 14-15 ": நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்கள் பார்த்தும். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்."
திருத்தூதர் பணிகள் 28:26-27 "நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும்.என நீ இம்மக்களிடம் போய்ச் சொல்."

59.மனந்தளராமல் செபியுங்கள்
அருட்பணியாளர்.ஜோசப்லாங்போர்டு என்பவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை கல்கத்தாவில் இருக்கக்கூடிய அன்னை தெரசா அவர்களின் பணிகளைப் பார்க்கவந்தார். ஒருநாள் அன்னை தெரசா அவர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அருட்சகோதாரி ஒருவர் தயங்கித் தயங்கி வந்தார். அன்னையிடம் வந்துஇ ":மதர் இன்று நமக்கு தயார் செய்து வைத்திருந்த மதிய உணவு அனைத்தும் வீணாகிவிட்டது. நம்முடைய இல்லத்தில் இருக்கும் 300 அருட்சகோதாரிகள் வெளியில் சென்றிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள். போதியளவு சப்பாத்தி மாவும் இ;ல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று சொன்னார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அருட்பணியாளர். ஜோசப்லாங்போர்டு அன்னை பிரபலமானவர் என்பதால்இ தன்னுடைய தொலைபேசியின் மூலம் யாரையாவது அழைத்து உணவு கொண்டு வரச்சொல்வார் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அன்னை தெரசா அவர்கள் ":ஏம்மா நீதான் இந்த வாரம் சமையல் அறையில் இருப்பவரா? ":இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்?இ ":போ இயேசுவிடம் போய் சொல்லுஇ எல்லாம் அவர் பார்த்துக்குவார்இ என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அந்த அருட்சகோதாரிஇ தயங்கியே நின்றார். மீண்டும் அன்னை தெரசா அவர்கள் ":போமா ஆலயத்திற்குச் சென்று இயேசுவிடம் போய் சொல்லுமாஇ என்று சொன்னார். இதைக்கேட்ட அருட்பணியாளர். ஜோசப்இ திகைத்து நின்று கொண்டிருந்தார்;. மீண்டும் அவரின் உரையாடலைத் தொடர்ந்தார்;. பத்து நிமிடத்திற்கு பிறகு ஒரு சகோதாரி வந்து ":மதர் இ உங்களைப் பார்ப்பதற்கு கீழே ஒரு மனிதர் காத்திருக்கிறார் என்று சொன்னார். இருவரும் பேசிக்கொண்டே கீழே வந்தனர். அன்னை தெரசா அதற்கு முன்னளஇ; அந்த மனிதரைப் பார்த்ததே இல்லை. அந்த மனிதர்இ அன்னை n;தரசாவிடம் ":மதர் இன்று அனைத்து ஆசிரியர்களும் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி போரட்டத்திற்கு சென்று விட்டனர். அனைத்து பள்ளிகளும் இன்று விடுமுறை. பிள்ளைகளுக்குத் தயார் செய்து வைத்திருந்த உணவை என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதை எப்படியாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அன்னையினுடைய செபம் என்றுமே வீண் போனதே கிடையாது. நேர்மையற்ற நடுவரே அப்படி செய்தாரெனில் அல்லும் பகலும் தம்மை நோக்கி அழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இறைவன் அற்புதம் செய்யமாட்டாரா?
இறைவார்த்தை:
லூக்கா 11:13 "தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியை கொடுப்பது எத்துணை உறுதி."
லூக்கா 18:1-8 "அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்று கூறினார்."
மாற்கு 11: 24 "நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோஇ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்இ நீங்கள் கேட்டபடியே நடக்கும்."
யோவான் 15:7 "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்."
லூக்கா 11:9 "கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்இ தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்இ தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்."
யோவான் 14: 13-14 "நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்."


60.பற்றற்ற வாழ்வு
கிரேக்க தத்துவ ஞானி டயோஜனிஸஇ; உடைமைகளற்ற வாழ்வின் அர்த்தம் உணர்ந்தவர். ஒரு கோப்பை மட்டுமே அவருக்குச் சொந்தமாக இருந்தது. ஒருநாள் ஆற்றங்கரை மணலில் அவர் படுத்திருந்தார். அப்போது ஒரு நாய் அங்கு வந்தது. ஆற்று நீரில் வாய் வைத்து அருந்திஇ அதன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டது. நாயின் செய்கையைப் பார்த்த டயோஜனிஸ்இ தன்னிடமிருந்த கோப்பையை வேண்டாத சுமையென்று உணர்ந்தார். அந்தக் கோப்பையை ஆற்றில் வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து
நடந்தார். இவரை மேற்கத்திய பட்டினத்தார் என்று சொல்லாம்.
இறைவார்த்தை:
மத்தேயு 6: 19இ20 "மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும். திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்."
மாற்கு 12: 41-44 "இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமேஇ ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்."
திருத்தூதர் பணிகள் 2: 45 "நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்றுஇ அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பங்களித்தனர்."
எபிரேயர் 13;: 5 "பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள்."
61.நுகர்வு வெறி
சிந்தனையாளர் சாக்ரடீஸஇ; ஒவ்வொரு நாளும் கடைத்தெருவுக்குச் சென்றுஇ ஒவ்வொரு கடையிலும் உள்ள பொருள்களை உற்றுப்பார்ப்பார். ஆனால்இ எதையும் ":அவர் என்றும் வாங்கியதில்லை. இதைக் கவனித்த கடைக்காரா; அவரிடம் ஒரு பொருளையும் வாங்காத நீங்கள்இ ஒவ்வொரு நாளும் கடைத்தெருவுக்கு வருவது ஏன்?; என்று கேட்டார். அதற்கு அவர் எவ்வளவு பொருள்கள் இல்லாமல் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அறிந்து கொள்ளவே அன்றாடம் வருகிறேன் என்று பதில் கூறினார். அவரை ஒருமுறை லண்டனில் பல்பொருள் அங்காடி ஒன்றை பொ;னாட்சா அவர்கள் திறந்துவைக்க வேண்டும் என்றுஇ அதன் உரிமையாளர் விரும்பி அழைத்தார். இந்த அங்காடியைத் திறந்து வைத்த நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள?; என்று செய்தியாளர்கள் கேட்டபொழுதுஇ "உலகில் எனக்கு அவசியமற்ற பொருள்கள் எவ்வளவு! இருக்கின்றன என்று இங்கு வந்த பின்னரே அறிந்து கொண்டேன.;"என்றார்.
இறைவார்த்தை:
எபிரேயர் 13;: 5 "பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள்."
1திமொத்தேயு 6:7இ8 "உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகமுடியாது. எனவேஇ உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்."
லூக்கா 12:15 "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது."
மத்தேயு 16: 26 "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"
சபை உரையாளர் 5:13இ15 "ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும். மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்இ வருவது போலவே இவ்வுலகைவிட்டுப் போகின்றனர். "




62.இரக்கத்தின் பாரிசு
அமொரிக்காவில் உள்ள ":பில டெல்பி என்ற இடத்தில்இ ஒரு நாள் இரவு கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது வயதான ஒரு மனிதர் தன் மனைவியுடன் அங்கிருந்த விடுதியில் அறைகள் ஏதும் கிடைக்குமா? என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தார்;. இரவு நேரம் என்பதால்இ விடுதி காப்பாளார் அனைத்துக் கதவுகளையும்இ அடைத்துக் கொண்டிருந்தார். அந்த வயதான மனிதர் இன்று இரவு இங்கு தங்க அறைகள் கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு அந்த விடுதி காப்பாளார்இ எல்லா அறைகளிலும் மக்கள் இருக்கிறார்கள். நேரமோ இரவு 1மணிஇ இந்த நேரத்தில் நீங்கள் எங்கு செல்வீர்கள் என்று சொல்லிஇ நீங்கள் என்னுடைய அறையில் தங்கிச் செல்லுங்கள். ஆனால்இ என்னுடைய அறை உங்களுக்கு போதுமானதாக இருக்குமா? என்று தெரியவில்லைஇ இருந்தாலும் நான் அதை உங்களுக்காக ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிஇ தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அவரது அறையைஇ அவர் தயார் செய்து அந்த வயதான தம்பதியருக்கு கொடுத்தார். மீண்டும் அவர்களைப் பார்த்து "சாப்பீட்டீர்களா? என்று கேட்டார். இல்லை என்று பதில் வரவேஇ என்னிடம் சிறதளவு ரொட்டி தான் இருக்கிறது என்று சொல்லி கொடுத்தார். இருவரும் மகிழ்ச்சியோடு உண்டு பசி தீர்த்துக்கொண்டார்கள். காலை விடிந்தவுடன் இருவரும் மகிழ்ச்சி;யோடு அவருக்கு நன்றி கூறினார்கள். உங்களுடைய இரக்கம்இ உபசரிப்பு அனைத்தும் சிறப்பாக இருந்தது என்று வாழ்த்தினார்கள். மேலும் அவருடைய இரக்கத்திற்கும் அன்பிற்கும் அடையாளமாக அந்த பெரியவர் சொன்னார்இ "ஒருநாள் நான் பெரிய ஓட்டல் விடுதி ஒன்று கட்டுவேன"; அதற்கு நீதான் பொறுப்பாளர் என்று சொன்னார். இதைக்கேட்ட அந்த இளைஞர் சிரித்தார். பின்னர் அந்த தம்பதியினர் விடைபெற்று சென்றனர். இரண்டு வருடம் கழித்துஇ அந்த இளைஞருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் ஒரு நாள் மழை நேரத்தில் நடந்த ":அந்த நிகழ்வை எழுதி அந்த பெரியவர் நியுயார்க் நகருக்கு வருமாறு அழைத்திருந்தார். அந்த இளைஞரும் அவர் சொன்ன அந்த விலாசத்திற்கு சென்றார். அங்கே அந்த பெரிய மனிதரைப் பார்த்தார். அவர் அந்த இளைஞனை ஒரு இடத்திற்கு கூட்டிக்கொண்டு போய் உயர்ந்த கட்டிடம் ஒன்றைக் காண்பித்தார். அதைப்பார்த்த அந்த இளைஞன் வியந்து போனார். இந்த உயர்ந்த பல வசதிகள் கொண்ட விடுதிக்கு நீ தான் மேலாளர் என்று சொன்னார். அதை அந்த இளைஞரால் நம்பமுடியவில்லை.மேலும் அவர்இ உன்னிடம் இருக்கும் நல்ல எண்ணத்திற்கு ":நான் தரும் என்னுடைய பாரிசு என்று சொன்னார். அந்த விடுதிதான் உலகத்திலே மிகவும் புகழ்பெற்ற "வால்டரூப் அஸ்டோரியா விடுதி". அது நியுயார்க்கில் அமைந்துள்ளது. அந்தப் பெரியவர் தான் "வில்லியம் வால்டரூப் ஆஸ்டர்". அந்த விடுதியில் இடம்கொடுத்த அந்த மேலாளர் தான் "ஜார்ஜ் போலட";. உங்களுடைய சிறிய செயல் உங்கள் எதிர்காலத்தையே மாற்றிவிடும். எப்பொழுதும் நன்மையனவற்றையே செய்வோம்.
இறைவார்த்தை:
மீக்கா 6:8 "இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?"
மத்தேயு 10:42 "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
மத்தேயு 7: 21 "என்னை நோக்கிஇ ஆண்டவரேஇ ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."
திருவெளிப்பாடு 22:12 "இதோ நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது."
யாக்கோபு 4: 17 "நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால் அது பாவம்."
கொலோசையர் 3: 23இ24 ": நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்லஇ ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமை பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்."


63.தொலைந்து போன கைக்கடிகாரம்
ஒருமுறை விவசாயி ஒருவர்இ கோதுமை ":சறுகைக் கட்டுகளில; தன்னுடைய கைக்கடிகாரத்தை தொலைத்து விட்டார். அது அவருக்கு மிகவும் முக்கியமான கடிகாரம். தேடிப்பார்த்தார் ஆனால் கண்டு பிடிக்கமுடியவில்லை. அருகில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளை அழைத்து இதில் என்னுடைய கடிகாரம் ஒன்று தொலைந்து விட்டது. அதை தேடி கண்டுபிடிப்பவர்களுக்கு பாரிசு என்று கூறினார். அனைவரும் தேடிப் பார்த்தார்கள் ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. மிகவும் வருத்தத்தோடு இருந்தார் அந்த விவசாயி. ஒரு சிறுவன் அந்த விவசாயிடம் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நான் தேடிக் கண்டுபிடிக்கிறேன் என்று கூறினான். சரி என்று விவசாயி சொன்னார். சிறிது நேரம் கழித்த பிறகு அந்தச் சிறுவன் தொலைந்து போன கடிகாரத்தோடு வந்தான். இதைப்பார்த்த விவசாயி மிகவும் மகிழ்ந்து போனார். மற்ற அனைவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லைஇ உன்னால் எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது என்று ஆச்சரியத்தோடு கேட்டார் விவசாயி. அதற்கு அந்த சிறுவன் "நான் ஒன்றுமே செய்யவில்லைஇ அமைதியாக அந்த கோதுமை சறுகுகளை சுற்றி அமர்ந்தேன்இ கடிகாரத்தின் முள் சத்தம் டிக் டிக் டிக் என்று வந்தது. சத்தம் வந்த திசையை நோக்கி என் காதுகளை கூர்மைப் படுத்தி அதை எடுத்தேன்"என்று கூறினான்.
இறைவார்த்தை:
மத்தேயு 7:7 "தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்"
எசாயா 55:6இ7 "ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்இ அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்."


64.மறுபக்கம்
தந்தை ஒருவர் நாளிதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அவருடைய சிறிய மகள் ஒருத்திஇ அவரை நாளிதழ் படிக்கவிடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். இதைக் கவனித்த தந்தைஇ அவளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலஇ; அவர் படித்துக் கொண்டிருந்த அந்த நாளிதழின் ஒரு பக்கத்தை துண்டு துண்டாகக் கிழித்துஇ இதில் உலக வரைபடம் இருக்கிறது. துண்டான இந்த தாளை ஒட்டிச் சேர் என்று சொன்னார். இந்த உலக வரைபடத்தை ஒன்றாகச் சேர்ப்பதற்கு எப்படியும் ஒருநாள் ஆகும் என்று நினைத்து இதைச்சொன்னார். ஆனால் சிறிது மணித்துளிகளே அவருடைய மகள் அப்பா நான் இதை ஒட்டிவிட்டேன் என்று வந்து காட்டினாள். எப்படி இருந்ததோ அதே மாதிரி அதை இணைத்திருந்தாள். இதைக் கண்ட தந்தை மிகவும் ஆச்சரியப்பட்டார். எப்படி இதை செய்தாய் ?; என்று கேட்டார். ஓ. அதுவா அந்த தாளின் மறுபக்கத்தில் ஒரு மனிதனின் முகம் இருந்தது. அந்த மனிதமுகத்தை இணைத்தேன் இந்த வரைபடம் வந்தது என்று சொல்லி தந்தையை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டுஇ மீண்டும் விளையாடச் சென்று விட்டாள். இந்த உலகதில் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் என்று எதுவும் இல்லை. நாம் சந்திக்கக் கூடிய அனைத்திற்குமே தீர்வுகள் இவ்வுலகன் மறுபக்கம் இருக்கின்றன நாம் அதை தேடிக் கண்டுபிடிப்பதில்லை.
இறைவார்த்தை:
நீதிமொழிகள் 3:6 "நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்இ அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்."
மத்தேயு 11: 25 "தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரேஇ உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும்இ அறிஞா;களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தீனீர்;."
பிலிப்பியர் 4: 6 "எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம்"
பிலிப்பியர் 4: 13 "எனக்கு வலுவு+ட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு."


65.மாமியார் மருமகள்
சீனாவில் பாரம்பாரியமாக சொல்லப்பட்ட கதை இது. லீலீ என்ற இளம்பெண்ணுக்கு அருட்சாதனம் முடிந்தது. அருட்சாதனம் முடிந்ததும் அவள் தன்னுடைய கணவனோடும் மாமியாருடனும் சென்றாள். சிறிது நாட்கள் கழித்த பிறகு மாமியாரின் செயல்கள் லீலீக்கு கோபத்தை வரவழைத்தது. இருவரும் தவறான வார்;த்தைகளை பாரிமாறிக்கொண்டனர். கணவன் வேலைக்கு போய் வீடு திரும்பி வரும்போதெல்லாம் லீலீ அவனிடம் முறையீடு செய்தாள். இதனால் அவன் நாளடைவில் மிகவும் மனம்நொந்து போனான். சீன நாட்டின் பாரம்பாரியப்படி தனிக்குடித்தனம் போக முடியாது. பிரச்சனை அளவுக்கு மீறி போனதால் இவற்றிற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தாள் லீலீ. ஒரு நாள் தன்னுடைய தந்தையின் நண்பரான ஹீவாங் என்பவரை சந்தித்து நடந்த அனைத்தையும் சொன்னாள்.ஹீவாங் என்பவர் ஒரு வைத்தியர். அவரிடம் நீங்கள் விசம் கலந்த மருந்து தாருங்கள் அதை வைத்து நான் மாமியாரை கொன்றுவிடுகிறேன் என்று சொன்னார். சிறிது நேரம் கழித்த பிறகு நான் தருகிறேன் ஆனால் அதற்கு முன் நான் சொல்வதையெல்லாம் நீ செய்ய வேண்டும் என்று சொன்னார். தனது உள்ளறைக்குச் சென்று சில மருந்து பொட்டலங்களை எடுத்து வந்தார். இதை நீ கொஞ்சம் கொஞ்சமாக உன்மாமியாருக்கு கொடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் கொடுத்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள். அதனால் நீதான் கொன்றாய் என்று உன் மேல் சந்தேகம் வந்துவிடும். அதனால் நல்ல உணவு வகைகைளை சமைத்து அதில் கலந்து கொடுஇ நீ பாரிமாறும் பொழுது இனிமையான வார்த்தைகளைப் பேசுஇ ஒருபோதும் வீண் வம்புக்கு போகாதேஇ உன்னுடைய சொந்த தாய் போன்று அவரை நடத்து இப்படி நடத்தி அவருக்கு இந்த மருந்தை சிறிது சிறிதாகக் கொடு என்று சொல்லி அனுப்பினார். இன்னும் கொஞ்சநாட்களில் மாமியார் இறந்து விடுவார் என்ற மகழ்ச்சியோடு வீடு வந்தாள். மருத்துவர் சொன்னது போல் நடக்க ஆரம்பித்தாள். இந்த செயல்களை பார்த்த மாமியார் லீலீ மிகவும் நல்லவள் நாம் தான் இத்தனை நாட்களாக தவறாகப் புரிந்து கொண்டோம் என்று கவலைப்பட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடவுள் எனக்கு அருமையான மருமகளை கொடுத்திருக்கிறார்; என்று புகழ்ந்தார். லீலீ யும் தன்னுடைய மாமியாரின் நடத்தையில் மாற்றம் வந்ததை உணர்ந்தாள். இருவரும் தாய் பிள்ளை போன்று இருந்தனர். ஒரு நாள் லீலீ தன் தந்தையின் நண்பரான ஹீவாங்கிடம் வந்தார். நான் தவறுசெய்து விட்டேன். என் மாமியார் சாகவேண்டும் என்பதற்காக நான் உணவில் மருந்து வைத்துக் கொடுத்தேன். ஆனால் என் மாமியார் என் தாய் போன்று என்னைக் கவனித்துக்கொள்கிறார் நான் அவசரப்பட்டு இதை செய்து விட்டேன் என்று சொல்லி அழுதாள். இப்பொழுது வைத்தியர் ஹீவாங் "லீலீ நான் விசம் கொடுக்கவில்லை மாறாக ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள மருந்தை தான் கொடுத்தேன். ":விசம; நான் கொடுத்த மருந்தில் இல்லைஇ விசம் உன்னுடைய எண்ணத்திலும் மனதிலும் தான் இருந்தது. அது இப்பொழுது இல்லை. மகிழ்ச்சியோடு வாழ்"என்று சொல்லி வழி அனுப்பினார்.
இறைவார்த்தை:
ரூத் நூல் முழுவதும்
மத்தேயு 10:34-39 "தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்."
லூக்கா 12:53




66.துன்பத்தின் தூரம்
ஒரு முறை இளைஞன் ஒருவன் குருவிடம் வந்து துன்பமான இந்த வாழ்வில் இருந்துவிடு படஇ ஏதாவது எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டான். அந்தக் குரு அந்த இளைஞனைப்பார்த்து ஒரு டம்ளாரில் உப்பு கலந்த நீரை எடுத்துவா என்று கூறிளார். அவனும் அவ்வாறே செய்தான். இப்பொழுது அந்த நீரைப் பருகு என்று சொன்னார். அவன் அதைப்பருகினான். இப்பொழுது அதன் சுவை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அவன் மிகவும் உப்பு காரிக்கிறது அதை குடிக்க முடியவில்லை என்று சொன்னார். மீண்டும் அந்த இளைஞனைப் பார்த்து இப்பொழுது சிறிது உப்பு எடுத்துவா என்று சொல்லி அனுப்பினார். அவ்வாறே அந்த இளைஞன் சிறிது உப்பை எடுத்து வந்தான். இப்பொழுது இருவரும் அருகில் இருந்த குளத்திற்கு சென்றார்கள். அந்த உப்பை எடுத்து குளத்தில் வீசினார். இப்பொழுது அந்த இளைஞனைப்பார்த்து நீ அதிலிருந்து நீரை எடுத்து பருகு என்று சொன்னார். அவனும் அவ்வாறே செய்தான். இப்பொழுது இந்த நீரின் சுவை எப்படி இருக்கிறது என்று கேட்டார். நன்றாக இருக்கிறது என்று சொன்னான். இப்பொழுது உப்பின் சுவை இதில் இருக்கிறதா என்று கேட்டார்இ இல்லை என்று பதில் சொன்னான். அந்த இளைஞனைப்பார்த்து "தம்பி மனித வாழ்வில் வரும் துன்பமும் அப்படித்தான்.அதுவும் உப்புமாதிரியே! அதனுடைய அளவோ சுவையின் தன்மையோ மாறாதுஇ ஆனால் நாம் சந்திக்ககூடிய துன்பத்தை எதில் வைத்து பார்க்கிறோ ம் என்பது தான் முக்கியமானது. அதை நாம் சிறிய டம்ளாரில் வைத்து குறுகிய பார்;வையோடு பார்த்தோம் என்றால் அது நமக்கு கசப்பாகத்தான் தோன்றும். ஆனால் அதை குளம் போன்று விரிவுபடுத்தி பார்த்தோம் என்றால்இ அதன் கனாகனம் மாறும்"என்று சொன்னார். நமது பார்;வை டம்ளரைப் போன்று குறுகிய நிலையில் இல்லாமல் குளமாக நமது பார்;வைகளை விசாலப்படுத்த பழகிக்கொள்வோம்.
எபேசியர் 4:2 "முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கிக் கொள்வோம்."
இறைவார்த்தை:
2திமொத்தேயு 2:3 "கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள்."
லூக்கா 9: 23 "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்."
மத்தேயு 5:11-12 "என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்துஇ துன்புறுத்திஇ உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும் பொழுது நீங்கள் பேறுபெற்றவர்களே. மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."



10. அவள் அனைத்தையும் கொடுத்தாளா?
ஒரு நாள் சிறுவன் ஒருவன் தெருவில் சில பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு சிறுமி ஒருத்தி கையில் இனிப்பு வைத்திருந்தாள். இதைக் கவனித்த சிறுவன் நான் என்னுடைய பொம்மைகளைத் தருகிறேன். அதற்கு பதிலாக நீ உன் இனிப்புகளை தருவாயா? என்று கேட்டான். அதற்கு அவள் ஒப்புக்கொண்டாள். சிறுவன் தான் வைத்திருந்த பொம்மைகளில் பெரிய பொம்மை ஒன்றை எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதைக் கொடுத்தான். ஆனால் சிறுமியோ தான் வைத்திருந்த அனைத்து இனிப்புகளையும் அவனுக்கு கொடுத்து விட்டாள். அன்று இரவு அந்த சிறுமி நன்றாக தூங்கினாள். ஆனால் அந்த சிறுவனால் தூங்க முடியவில்லை நான் மறைத்தது போல் அவளும் மறைத்து வைத்திருப்பாளோ என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
எதைக் கொடுத்தாலும் முழுமையாக கொடுக்க வேண்டும்.
இறைவார்த்தை:
லூக்கா 21 :1-4 "ஏழைக்கைம் பெண்ணின் காணிக்கை."
லூக்கா 6:38 "கொடுங்கள்இ உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்ப டிநன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."
திருத்தூதர் பணிகள் 5:1-11 "அனனியாவும் சப்பிராவும்இ முழுமையாக கொடுக்காதால் ஏற்பட்ட இழப்பு"


11. இங்கு சிறுவன் ஒருவன் இருக்கிறான்
2010 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள புக்ஷிமா என்ற இடத்தில் ஏற்பட்ட சுனாமியால் அங்கிருந்த அணுஉலைகள் வெடித்தன. இதனால் மக்கள் மறுகுடியிருப்பு பகுதிக்கு அனுப்பபட்டனர். மறுகுடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. அனைவரும் ஆரவாரம் இல்லாமல் தள்ளு முல்லு இல்லாமல் அமைதியாக வாங்கிக்கொண்டிருந்தனர். அந்த நீண்ட வரிசையில் சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அங்கு மறுவாழ்வு பணிக்கு சென்றிருந்த வேற்று நாட்டவர் அந்த சிறுவனைப்பார்த்தார். இன்னும் சிறதிதளவே உணவு பொட்டலங்கள் இருக்கின்றன. இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் இது போதுமா? என்ற கேள்வி அவரில் எழுந்தது. அதனால் ஒரு வேளை இந்த சிறுவனுக்கு இது கிடைக்காமல் போகலாம் என்று எண்ணினார். அந்த சிறுவனை அவர் அழைத்து தனியாக உணவு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தார். ஆனால் அந்த சிறுவன் அதை மறுத்து தான் எங்கு வரிசையில் நின்றானோ அதே இடத்திற்கு சென்றான். இதைக் கண்ட அந்த வெளிநாட்டவர் "என்ன தம்பி நான் உனக்கு உணவு கிடைக்க வேண்டும் என்று நினைத்து இப்படி செய்தேன் ஆனால் அதை நீ நிராகாரித்து விட்டாய்"என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் எங்களுடைய நாட்டில் பகிர்வுக்கு பஞ்சம் கிடையாது. யாரும் பசியோடு திரும்பமாட்டார்கள். அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்று பெருமிதத்தோடு அவன் சொன்னான்.
இறைவார்த்தை:
யோவான்:6 9 "இங்கு சிறுவன் ஒருவன் இருக்கிறான். ஆவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனைப் பேருக்கு இவை எப்படிப் போதும்."
திருத்தூர் பணிகள் 2: 42-48 "நம்பிக்கைக் கொண்டோரின் வாழ்க்கை முறைஇ நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்."
திருத்தூதர் பணிகள் 4:32-35 "திருத்தூதருடைய காலடியில் வைப்பா;. அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்."
1கொரிந்தியர் 11:1-33 "ஆண்டவரின் திருவிருந்துஇ என் சகோதர சகோதாரிகளேஇ உண்பதற்காக நீங்கள் ஒன்று கூடி வரும்போது ஒருவர் மற்றவருக்காகக் காத்திருங்கள்."

12. இயேசுவை நான் உண்ண வேண்டும்
கார்மேல் சபையைச் சேர்ந்த அருட்பணியாளர் அமல்ராஜ் அவர்கள் முதல் நன்றித் திருப்பலியின் போது மறையுரையில் அவர்இ "தான் இருந்த ஒரு பங்கில் ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணிக்கு யாரோ அவரது அறையின் கதவை தட்டினார்கள். யார்? என்று உள்ளிருந்த இவர் கேட்டார். கொஞ்சம் கதவைத் திறங்கள் என்று சொன்னார்கள். இவர் கதவைத் திறந்து பார்த்தார். தன்னுடைய பங்கைச் சேர்ந்த இருவர் நின்று கொண்டிருந்தனர். என்னப்ப விசயம் இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்;கள்? என்று கேட்டார். திவ்ய நற்கருணை கொடுக்கனும் பாதர் என்று வந்தவர்கள் சொன்னார்கள். ஆதற்கு அவர் யாரும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்;களா? அவஸ்தை ஏதும் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டார். இல்ல சாமி நீங்க திவ்ய நற்கருணையை எடுத்துக்கிட்டு வாங்க என்று கூறி அவரை அழைத்துச் சென்றனர். அவர்கள் சொன்ன இடத்தை அடைந்ததும் அவர் கண்டகாட்சி அவரை அசரவைத்தது. அங்கே ஒரு பெண் அப்பொழுதுதான் புதிதாக ஒரு குழந்தையை பெற்று எடுத்திருக்கிறார். குழந்தையின் ஈரம் கூட காயவில்லை. குடிலில் சூசையப்பரும் மாதாவும் குழந்தை இயேசுவை துணியில் கிடத்தி மண்டியிட்டு செபிக்கும் காட்சி போல இப்பெண் தன் குழந்தையை முந்தியில் கிடத்தி அதற்கு முன்பாக செபித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் அவரைப்பார்த்து சாமி இன்னும் நான் இந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை. கொடுப்பதற்கு முன்பாக நான் எனது இயேசுவின் திருஉடலை உண்டபிறகு; சுறக்கும் எனது தாய்ப்பாலின் அமுதத்தினை என் குழந்தைக்கு நான் ஊட்டுவேன்இ அப்பொழுதுதான் என் குழந்தை இயேசுவைப் போல் வளரும் என்று கூறினார். இதைக் கேட்ட தந்தை ஆச்சரியத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார்.
இறைவார்த்தை:
1கொரிந்தியர் 11;:27இ28 "எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால்இ அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.
யோவான் 8:12 "உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்இ வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பர்."
யோவான் 4:14 "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்."
யோவான் 6:51-58 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."

68.அவன் ஒரு ஓஸ்தி திண்ணி

திருச்சி மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்பணிர்ளர் ஆர்.வி மத்தியாஸ் அவர்கள் ஒருமுறை எங்களுக்கு வகுப்பு எடுத்த பொழுது இந்த நிகழ்வைச் சொன்னார். இளம் கிறித்தவ தொழிலாளர்கள் இயக்கத்தில் இவர் உறுப்பினராக இருந்த போது பிரேசிலுக்கு சென்றார். அங்கு கரும்புத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைத்து தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார். அவர்கள் தங்களது முதலாளியைப் பற்றியும் தங்களின் வேதனைகளையும் அவரிடம் சொன்னார்கள். அதற்கு தந்தை அவர்கள் உங்களது முதலாளி மிகவும் நல்லவர் போல் இருக்கிறார். தினமும் அவர் ஆலயம் வருகிறார். ஆவரைப்பற்றி இப்படி கூறுகிறீர்களே என்று திடுக்கிட்டார். அதற்கு அவர்கள் "சாமி அவன் ஒரு ஓஸ்தி திண்ணி ( ர்ந ளை ய ர்ழளவ நயவநச கயவாநச) எங்களுடைய இரத்தம் பற்றாது என்று இயேசுவின் இரத்தத்தையும் உடலையும் உறிஞ்சும் அட்டை சாமி"என்று சொன்னார்கள்.
இறைவார்த்தை:
1கொரிந்தியர் 11;:27இ28 "எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால்இ அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். ஏனெனில் இ ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்;ப்பையே வருவித்துக் கொள்கிறார். "

69.துதிபாடுதல்
கிரேக்கத் தத்துவ ஞானி டயோஜினஸ்இ சூப் தயாரிக்க அவரை விதைகளை நீரில் கழுவிக்கொண்டிருந்தார். அரிஸ்படிஸ் என்ற அறிஞர் அங்கு வந்தார். "நீங்கள் என்னைப் போன்று மன்னரைப் புகழ்ந்து முகஸ்துதி செய்தால் இப்படி அவரை விதைகளைக் கழுவும் அவசியம் நேர்ந்திருக்காது"என்றார் அரிஸ்படிஸ். "நீங்கள் என்னைப் போல் சாதாரண அவரை விதை சூப்பைக் குடித்து வாழப் பழகியிருந்தால்இ அரசருக்கு துதிபாடும் அவலம் உங்கள் வாழ்வில் வந்திருக்காது"என்று சிரித்தபடி சொன்னார் டயோஜினஸ்.
இறைவார்த்தை:
நீதிமொழிகள் 27:2 "உன்னை உன்னுடைய வாயல்லஇ மற்றவர்களுடைய வாய் புகழட்டும்இ உன் நாவல்லஇ வேறொருவர் நா போற்றட்டும்."
எரேமியா 9:23இ24 "பெருமை பாரட்ட விரும்புவர்இ நானே ஆண்டவர் என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும்இ பேரன்போடும் நீதியோடும் நோ;மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவராக. ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்."
யாக்கோபு 4:16 "இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற் பெருமையெல்லாம் தீமையானது."
லூக்கா 6:26 "மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும் போது ஐயோ உங்களுக்கு கேடுஇ ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினரும் இவ்வாறே செய்தார்கள்."

70.மகிழ்ச்சி
ஒரு பாட்டி எப்போதும் ஓயாமல் அழுது கொண்டே இருந்தார். பெரியவர் ஒருவர்இ ": ஏனம்மா எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறாய் என்று கேட்டார். பெரியவரே எனக்கு இரண்டு பெண்களில் ஒருத்தியைக் உப்பு விற்பவனுக்கும்இ இன்னொருத்தியைக் குடை விற்பவனுக்கும் அருட்சாதனம் செய்து கொடுத்தேன். மழைக் காலத்தில் உப்பு சரியாக விற்காததால் வறுமையில் வாடும் ஒரு மகளின் குடும்பத்திற்;காக அழுகிறேன். மழை இல்லாதபோது குடை விற்காததால் மற்றொரு மகளின் துயரை நினைத்து அழுகிறேன் என்றார். பெரியவர் சிரித்தார். அம்மா மழைக்காலத்தில் குடை வியாபாரம் செய்யும் குடும்பம் வளமாக இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள். வேயில் காலத்தில் உப்பு விற்கும் குடும்பம் நலமாக இருக்கும் என்று நிம்மதி கொள். இப்படி நீ நினைக்கப் பழகிக்கொண்டால் ஆண்டு முழுவதும் ஆனந்தமாக இருக்கலாமே என்றார். இதைக் கேட்ட அந்தப்பாட்டி நீங்கள் சொல்வதே சரி மகிழ்ச்சியாக வாழும் வழி இப்போதுதான் எனக்குத் தௌரிவாக புரிந்தது என்றார்.
இறைவார்த்தை:
யோவான் 15:11 "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்."
யோவான் 16: 20 "உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்"
சுபை உரையாளர் 7:14 "வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிருஇ தும்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியதுஇ அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்து கொள்ளா வண்ணம் கடவுள்இ இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்."
எரேமியா 32:42 "அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்."
1தெசலோனிக்கர் 5:16இ17 "எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்றி கூறுங்கள்."

71.தாழ்ச்சி
முன்னொரு காலத்தில் கிரேக்கர் ஒருவருக்கு உலகத்திலேயே மிகப்பெரிய அறிஞர் யார்? என்று தெரிந்து கொள்ள ஆசை ஏற்பட்டது. கிரேக்க நாட்டில் டெல்பி என்ற ஆலயம் ஒன்று இருந்தது. அங்கே போய் யார் என்ன கேள்வி கேட்;டாலும் அந்த ஆலயத்திலிருந்து அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த கிரேக்கர் டெல்பிக்குச் சென்று உலகத்திலேயே மிகப்பெரிய அறிஞர் யார்? என்று கேட்டார். அதற்கு சாக்ரடீஸ் என்று பதில் வந்தது. அவரைப் பார்ப்பதற்காக அந்த மனிதர் சாக்ரடீஸ் இருந்த இடத்தை தேடிச் சென்றார். அங்கே ஒருவர் சுவர் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். கிரேக்கர்இ இங்கே சாக்ரடீஸ் என்று ஒருவர் இருக்கிறாமே அவர் எங்கே இருக்கிறார்? என்று கேட்டார். சுவர் கட்டிக் கொண்டிருந்தவர் ஏன்இ நான் தான் சாக்ரடீஸ் என்றார். கிரேக்கருக்கு நம்ப முடியவில்லை. கொத்து வேலை செய்கிற இவர்இ பார்க்கவே அவலட்சணமாக இருக்கிறார்;. இந்த ஆளா உலகத்திலேயே மிகப்பெரிய அறிஞர்? என்று நினைத்துஇ ஊண்மையிலேயே நீங்கள் தான் சாக்ரடீஸா என்று அந்த அறிஞர் வியப்போடு கேட்டார். நான் தான் சாக்ரடீஸ் என்று மீண்டும் பதில் கூறி ஏன் என்னை கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்இ இல்லை உலகத்திலேயே மிகப்பெரிய அறிஞர் யார்? என்று டெல்பியிடம் கேட்டேன் அது உங்கள் பெயரைச் சொன்னது என்று சொன்னார். உலகத்திலேயே மிகப்பெரிய அறிஞன் நானா? டெல்பி அப்படியா சொன்னது? அது தவறு.என்றார்;.மேலும்இ என் இளமைக் காலத்தில் நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்டிதேன். அறிவு வளரவளர நான் அறிந்தது ஒன்றும் இல்லை என்று எனக்கு விளங்க ஆரம்பித்தது. இன்று தான் எனக்கு ஒன்றுமே தெரியாது என்ற முடிவுக்கு வந்தேன் என்று சொன்னார். கிரேக்கர் குழம்பிப் போனார். அவர் மீண்டு;ம் டெல்பிக்குச் சென்றார். உலகத்திலேயே மிகப்பெரிய அறிஞர் சாக்ரடீஸ் என்று நீ சொல்கிறாய். அவரோ நான் இல்லை எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார் என்றார். யார் சொல்வது சரி என்று கேட்டார். சாக்ரடீஸ் தனக்கு ஒன்றுமே தெரியாது என்று உணர்ந்ததால்தான் நான் அவரை உலகத்திலேயே மிகப்பெரிய அறிஞர் என்றேன். அவர் இன்று தான் அந்த உயர்ந்த நிலையை அடைந்தார். நீ நேற்று இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் நான் சாக்ரடீஸ் பெயரை சொல்லியிருக்க மாட்டேன் என்று சொன்னது டெல்பி.
இறைவார்த்தை:
ஏசாயா 14:11-17 "உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம் வரை தாழ்;த்தப்பட்டன.இ நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன் இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏறப்டுத்துவேன்."
மத்தேயு 11: 29 "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்."
மாற்கு 9:33-37 "யார் மிகப் பெரியவர்?"
லூக்கா 14:11 "தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்இ தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்."
நீதிமொழிகள் 15:33 "ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி. மேன்மை அடையத் தாழ்மையே வழி."
நீதிமொழிகள்: 30:23 "இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்இ தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்."



72.விருந்தோம்பல்
ஹாத்திம்தாய் என்பவர் அரபு நாட்டில் வாழ்ந்த ஒரு நல்லமனிதர். அவர் அரசராக இருந்தவர். அவர் யார் வந்து எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால்இ அரசராக இருந்தவர் ஆண்டியாகிவிட்டார். ஒரு முறை மூன்று மனிதர்கள் இவரை பார்;க்க வந்தனர். அவர்கள் தம்வீடு தேடி வந்திருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அரேபியப் பண்பாட்டின்படி அவர்களை உபசரித்தார். சுவையான உணவைச் சமைத்து பாரிமாறினார். அவர்கள் உண்டு முடித்தபின் என்ன விஷயமாய் வந்தீர்கள் என்று கேட்டார். அவர்கள் யார் வந்து எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் வள்ளல் என்று உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோ ம் என்று சொல்லி உங்களிடம் ஒரு பொருளை பெற வந்திருக்கிறோ ம் என்று கூறினார்கள். அதற்கு அவர் இதுவரை கேட்டவர்க்கு இல்லை என்று நான் சொன்னதில்லை. இப்போது நான் இருக்கும் நிலைமை உங்களுக்குத் தெரியும். எனவே தயவு செய்து என்னிடம் இருக்கும் பொருளைக் கேளுங்கள் என்று சொன்னார். அவர்கள் உங்கள் குதிரை எங்களுக்கு வேண்டும் என்றார்கள். அதைக் கேட்டதும் ஹாத்திம்தாய் அதிர்ச்சி அடைந்தார். கண் கலங்கித் தலைகுனிந்தார். விருந்தினர்கள்இ உங்கள் குதிரை நல்ல உயர்சாதிக் குதிரை. அரேபிய நாட்டிலேயே மிக வேகமாக ஓடக்கூடியது என்று புகழ்பெற்ற குதிரை. நீங்கள் உயிருக்குயிராய் அதை நேசிக்கிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆதைக் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று வருத்தப்படகிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை. அதைக் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக வருத்தப்படுகிறேன். ஏன் என்று கேட்டனர். அது இப்போது என்னிடம் இல்லை என்று சொன்னார். நீங்கள் பொய் சொல்கிறீர்கள் நாங்கள் வீட்டுக்குள் வரும் பொழுது அதைப்பார்த்தோம். அதற்குள் அது எப்படி இல்லாமல் போகும் என்றார்கள். அதற்கு அவர் "நீங்கள் விருந்தினார்களாக வந்துவிட்டீர்கள். உங்களுக்கு உணவு பாரிமாற வேண்டியது என் கடமை. ஆனால் சமைப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. அதனால் என் குதிரையை சமைத்து உங்களுக்குப் பாரிமாறிவிட்டேன்"என்றார். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள்.
இறைவார்த்தை:
எபிரேயர் 13:2 "அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிபடுத்தியதுண்டு."
1பேதுரு 4:9 "முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்."இ
லூக்கா 14:12-14 விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதனைஇ பெரிய விருந்து உவமை."
உரோமையர் 12:13 "வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள்இ விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்."
1திமோ: 5:10 "விருந்தோம்பல் இறைமக்களின் காலடிகளைக் கழுவுதல் இன்னலுற்றோ ருக்கு உதவி செய்தல் போன்ற அனைத்து நற்செயல்களில் ஈடுபட்டு அவற்றால் நற்சான்று பெற்றவராக இருக்க வேண்டும்."
2 அரசர் 6:22-23இ
எசாயா 58:7இ




73.ஒன்று.. இரண்டு தெரியல

முதல் முறையாக அந்தக் குழந்தை மழலையர் பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். மிகவும் மகிழ்ச்சியாகச் சென்றாள். ஆறு மாதம் கழிந்;த பிறகு அந்தக் குழந்தையின் தாய் அவளைப் பார்த்து ": உங்கள் பள்ளியில் ஒன்றுஇ இரண்டெல்லாம் சொல்லித் தருகிறார்;களா? என்று கேட்டார். ஆமாம்மா! எனக்கு நூறு வரை சொல்லத் தெரியும் என்று பதில் சொன்னாள் அந்தக் குழந்தை. தாய் அவளிடம் எங்க சொல் பார்ப்போம் என்றாள். குழந்தை ":123.4. என்று சொல்லி நிறுத்திவிட்டாள். நூறு வரை தெரியும் என்று சொன்னாய் பாதியோடு நின்று விட்டாயே என்று கேட்டார். அந்த நேரத்தில் வேலை முடிந்து அக் குழந்தையின் தந்தை வீட்டிற்கு வந்தார். உடனே ஏங்க நம்ம பிள்ளைக்கு 1இ2 கூட தெரியமாட்டிங்குது என்று சொன்னாள். தந்தை அந்தக் குழந்தையிடம் ":இங்க வாமா என்று அழைத்து மீண்டும் தாய் கேட்ட கேள்வியை கேட்டார் குழந்தை எனக்கு நூறு வரை தெரியும்பா! என்று சொன்னாள். எங்க சொல் பார்ப்போம் என்று தந்தை சொன்னார். அந்தக் குழந்தை 1..234568.. என்று சொல்லி நிறுத்திக்கொண்டது. தாயும் தந்தையும் மிகவும் கவலைப்பட்டனர். நாம் நமது குழந்தைக்கு பணம் கட்டி படிக்க வைக்கின்றோ ம் ஆனால் ஆசிரியர்கள் 1இ2இகூட ஒழுங்காக சொல்லித்தரவில்லையே என்று ஆவேசப்பட்டடனர். மறுநாள் குழந்தையை கூட்டிக் கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். வகுப்பாசிரியரைப் பார்த்து நீங்கள் என் குழந்தைக்கு ஒழுங்காகச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று முறையிட்டார்கள். அதற்கு ஆசிரியர் உங்க குழந்தை நன்றாகப் படிப்பாள் என்று சொன்னார். மேலும்இ உங்கள் குழந்தை எண்கள் நூறு வரை நன்றாகச் சொல்வாளே! என்று கூறி அந்தக் குழந்தையை அழைத்து 1இ2இ சொல்லச் சொன்னார். அந்தக் குழந்தை சொல்ல ஆரம்பித்தாள் 1 என்று சொல்லி முடித்தவுடன் ஆசிரியர் ":ம்; என்று சொன்னார். மீண்டும் 2 என்று சொன்னவுடன் ":ம்; குட; என்று சொன்னார். இவ்வாறு ஒவ்வொரு எண்ணையும் சொல்ல ஆசிரியர் ":ம்ம; என்றும் ":குட; என்றும் சொல்லிக் கொண்டே வந்தார். அந்தக் குழந்தையும் நூறு வரை நன்றாக சொன்னாள். அந்தப் பெற்றோ ர்களிடம் "குழந்தைகள் எதை செய்தாலும் அதில் அங்கிகாரத்தை தேடுவார்கள் வீட்டில் உங்கள் குழந்தை சொன்னபோது நீங்கள் அதை கண்டுகொண்டிருக்க மாட்டீர்கள் அதான் அவள் சொல்லியிருக்கமாட்டாள். என்று சொல்லி "குழந்தையை அங்கீகாரித்து உற்சாகப்படுத்துங்கள்" என்று சொல்லி வழியனுப்பினார் ஆசிரியர்.



13. குழந்தைகளே என்ன மன்னிச்சிடுங்க
2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி பரபரப்போடு நடந்து கொண்டிருந்தது. இறுதிக்கட்ட போட்டியானது பிரான்சுக்கும் இத்தாலிக்கும் நடந்து கொண்டிருந்தது. யார் அந்த வருடத்திற்கான உலக சாம்பியன் பட்டத்தை வெல்வது என்ற பலப்பாரிட்சை நடந்து கொண்டிருந்தது. பிரான்சு நாட்டின் அணித்தலைவாரக விளையாடிக் கொண்டிருந்த ஜிடேன் என்பவர் இத்தாலி நாட்டின் அணியில் விளையாடிக் கொண்டிருந்த மார்கோ மெட்ராசி என்பவரின் தலையில் பலமாக மோதினார். ஜிடேன் மோதியதில் இத்தாலி நாட்டு வீரர் மெட்ராசி தரையில் கீழே விழுந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பல லட்ச மக்கள் இந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏன் தலையில் மோதினீர்கள் என்று காரணம் கேட்டதற்கு மெட்ராசி என் தாய் மற்றும் என் சகோதாரியைப்பற்றி தகாத வார்த்தைகளால் மைதானத்தில் பேசினார் என்று சொன்னார். அடுத்த நாள் ஜிடேன் தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்று "நேற்று மைதானத்தில் நான் நடந்து கொண்ட செயலை பல ஆயிரம் குழந்தைகள் பார்த்திருப்பீர்கள் நான் செய்த இந்த செயலுக்கு எந்தவிதமான பாரபட்சம் கிடையாது. அன்பார்ந்த குழந்தைகளே என்னை மன்னித்து விடுங்கள் என்று அனைவரிடமும் மன்னிப்பு கோரினார்".
இறைவார்த்தை:
ஏசாயா 9:6 "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்இ ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்."
ஏசாயா 57:5 "உங்கள் பச்சிளம் குழந்தைகளை கொலகிறீர்கள்."
எரேமியா 31:20 "நீ என் அன்புக் குழந்தை அல்லவா? ஊனக்கு எதிராக நான் அடிக்கடி பேசியபோதிலும்இ உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்."
லூக்கா 18:15-17 "குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்இ அவர்களைத் தடுக்காதீர்கள்இ ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது."
உரோமையர் 2:20 "அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருங்கள்."
பிலிப்பியர் 2:15 "குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்இ உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்."


14. மிகவும் கொடுரமான விலங்கு
நான் பழனியில் 2012 ஆம் ஆண்டு உதவி அருட்பணியாளராக இருந்த போது அங்கிருந்த ஆசிரிய பெருமக்களோடு நாங்கள் சென்னைக்கு இன்ப சுற்றுலா சென்றிருந்தோம். மாமல்லபுரம் கடற்கரை மற்றும் சிற்பங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு கடற்கரை சாலையில் உள்ள அரசு முதலைப் பண்ணைக்குச் சென்றோ ம். அந்த முதலைப்பண்ணையில் நிறைய முதலைகள் பல கட்டங்களாக பிரித்து வைத்திருந்தனர். அப்படி பார்த்துக் கொண்டு வருகையில் ஒரு சிறிய பெட்டியின் முகப்பில் "உலகத்தில் மிகவும் கொடுரமான விலங்கு இங்கு உள்ளது"என்று எழுதியிருந்தது. பலர் அதைப் பார்;த்தும் பார்க்காமல் சென்றார்கள். நான் அதன் அருகில் சென்று அந்த சிறிய பெட்டியைத் திறந்து பார்த்தேன். அந்தப் பெட்டியினுள் கண்ணாடி இருந்தது. அந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. அனைவரும் அதைக் கண்டு சிரித்தனர். ஆனால் உலகத்தில் மிகவும் கொடுரமான விலங்கு "மனிதன் தான"; என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
இறைவார்த்தை:
மத்தேயு 4:18-22 "என் பின்னே வாருங்கள்இ நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன். இது முதல் மனிதர்களை பிடிப்பாய்"
சீராக் 18:8"மனிதர் என்போர் யார்? அவர்களால் ஏற்படும் நன்மைகள் என்ன? அவர்களிடம் இருக்கும் நன்மைகள் யாவை? தீமைகள் யாவை?..."
சீராக் 10:19 "மதிப்பிற்குரிய இனம் எது? மனித இனம். மதிப்பிற்குரிய இனம் எது? ஆண்டவருக்கு அஞ்சும் இனம். மதிக்கத் தகாத இனம் எது? அதே மனித இனம். மதிக்கத் தகாத இனம் எது? கட்டளைகளை மீறும் இனம்."
திருப்பாடல்கள் 118:8 "மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிடஇ ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்."



76.தூண்டில்
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே விற்பனை நிலையத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. விற்பனைத் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா? என்று மேலாளர் கேட்டார். அதற்கு அந்த நபர் எனது நாட்டில் நான் விற்பனைப்பிரிவில் தான் வேலை பார்த்தேன் என்று கூறினார். அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நீ நாளை முதல் வேலையைத் தொடங்கலாம். கடையை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன் என்று சொன்னார். முதல் நாள் கடை மூடும் நேரம் மேலாளர் வந்தார். இன்று எத்தனை நபர்களிடம் விற்றாய் என்று கேட்டார். ஒருவரிடம் மட்டும் என்று பதில் கூறினார். என்ன ஒருத்தர் மட்டுமா? உன்னுடன் வேலை பார்;க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை விற்கக்கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானல் நீ நிறைய போரிடம் விற்க வேண்டும் என்று சொல்லி சரி எவ்வளவு விற்றாய் என்றார். 1012347.64 டாலர் விற்றேன். ஒரே நபாரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய் என்று கேட்டார். முதலில் அவரிடம் சிறிய தூண்டில்இ கொஞ்சம் பெரிய தூண்டில்இ அதைவிடப் பெரிய தூண்டில்இ பிஷிங் ராட்இ பிஷிங் கியர் எல்லாம் விற்றேன். பிறகு அவரிடம் எங்கே மீன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மென்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் தெரியவில்லை என்றார். நான் நமது ஆட்டோமோபைல் டிபார்ட்மென்ட் சென்று ஒரு 4ஓ4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள டெண்ட் விற்றுக் கொடுத்தேன் என்று சொல்லி முடித்தார். என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய் என்று ஆச்சரியத்தோடு மேலாளர் கேட்டார். அய்யோ இல்லைங்சார் அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான் தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப அமைதி கிடைக்கும். எப்போதும் உங்களுக்கு தலைவலியே வராது என்று சொன்னேன் என்று பதில் சொன்னார்.
இறைவார்த்தை:
நீதிமொழிகள் 8: 12 "நானே ஞானம். நான் விவேகத்தோடு வாழ்கிறேன். அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்."
நீதிமொழிகள் 13:16 "கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார். மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவார்."
மத்தேயு 25:14-30 "தாலந்து உவமை"

77.உழைப்பே உண்மையான சொத்து
ஒரு ஏழை ஒருவன் ஒரு துறவியைப் பார்க்கச் சென்றான். அவரைப்பார்த்து குருவே நான் ஒரு ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள் என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "நான் 5000 தருகிறேன்இ உன் கைகளை என்னிடம்; வெட்டிக் கொடு"என்று சொன்னார். அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான். "சரி நான் உனக்கு 15இ000 ரூபாய் தருகிறேன் உன் கால்களை கொடு" என்றார். அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை. வேண்டுமென்றால் 500000 ரூபாய் தருகிறேன்இ உன் கண்களையாவது கொடு என்றார். அதற்கும் அவன் முடியாது என்றான். உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன் உன் உயிரைக் கொடு என்றார். அதற்கு அந்த ஏழை என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான். அதைக் கேட்ட குரு அவனிடம் "உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லைஇ மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு"என்று கூறினார்.
15. உழைப்பு
ஒரு முறை ஓர் அரசன் மாறுவேடம் புனைந்து பல ஊர்களுக்குச் சென்றான். அப்போது ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் மரநிழலில் அமர்ந்துஇ கூடை முடைந்து கொண்டிருந்தாள். அரசன் அவளை நெருங்கிஇ "அம்மா! நீ மட்டும் இங்கே தனியே கூடை முடைந்து கொண்டிருக்கிறாயே! வேறு ஒருவரையும் இந்தக் கிராமத்தில் காணாமேஇ அவர்கள் எல்லோரும் எங்கே போயிருக்கிறார்கள்?"என்று கேட்டான். "அரசரை தாரிசிக்கப் போயிருக்கிறார்கள்"என்றாள் அந்தப்பெண். நீ அரசரைப் தாரிசிக்கப் போகவில்லையா என்று வினவினான் அரசன். செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து முடிக்காமல் இருக்கும் முட்டாள் தான் அரசரைத் தாரிசிக்கப் போவார்கள் என்று மறுமொழி சொன்னாள் அந்தப் பெண். அரசரை தாரிசிப்பதால் பயன் ஒன்றும் கிடைக்காது என்பது உங்கள் கருத்தா என்று அரசன் கேட்டான். பயன் கிடைக்குமோஇ கிடைக்காதோ அது எனக்குத் தெரியாது. எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உதறித் தள்ளிவிட்டுஇ ஒரு நாள் வேலையைப் பாழ்ப்படுத்திவிட்டுஇஅரசரைக் காணச் செல்வது மதியீனம் ஆகாதா? என்று கேட்டாள் அந்தப் பெண். பெண் இப்படிச் சொன்னதும் அரசன் மகிழ்ச்சி அடைந்தான். அந்தப் பெண்ணின் கையில் ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்துஇ "பெண்ணே! இந்தத் தங்க நாணயத்தை நான் தந்த பாரிசாக வைத்துக் கொள். அரசனைத் தாரிசிக்கச் சென்றவர்கள் திரும்பியதும் அரசன் வந்து உன்னைஇ ஓர் உண்மையான உழைப்பாளியைத் தாரிசித்துவிட்டுச் சென்றான் என்று அவர்களிடம் சொல்"என்று கூறி விடைபெற்றுக் கொண்டு திரும்பினான்.
இறைவார்த்தை:
தொழிலாளர் தினம் அன்று இதைப் பயன்படுத்தலாம்
விடுதலைப் பயணம் 20:9 "ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்."
மத்தேயு 20:1-16 "திராட்;சைத் தோட்ட வேலையாள்கள் உவமை"
லூக்கா 10:7 "அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமையுடையவரே."
திருத்தூதர் பணிகள் 20:33-35 "எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவருடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன."
1தெசலோனிக்கர் 4:11 "நாங்கள் உங்களுக்கு கட்டளையிட்டதுபோலஇ உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டுஇ உங்கள் சொந்த கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்."
2தெசலோனிக்கர் 3:7-13 "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகது என்று நாங்கள் உங்களிடையே இருந்த போதே உங்களுக்கு கட்டளைக் கொடுத்தோம்."




78.சற்று ஓய்ந்திருங்கள்
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இளைஞர் ஒருவர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஓவ்வொருவரிமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. அவ்வேளையில் அவனுடைய பேராசரியர் அப்பக்கம் வந்தார் அவரிடம் ஆலோசனைக் கேட்டார். புத்தகம் படிஇ நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம் சொல்லப் போகிறார் என்பது இளைஞாரின் எதிர்பார்ப்பு. ஆனால் அவர் "உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனள்ள நேரங்;களைத் தொடங்கி வைக்கும்"என்று சொன்னார்.
இறைவார்த்தை:
விடுதலைப் பயணம் 34: 21 "ஆறு நாள்கள் நீ வேலை செய்இ ஏழாம் நாளில் ஓய்வு கொள்."
தொடக்க நூல் 2:3 "கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கிஇ அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில் தான் ஓய்ந்திருந்தார்."
மாற்கு 6:31 "நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையாள ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்."

16. .நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்தவழியாக விறகு வெட்டி அவனைப்பார்த்தான். கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த் வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்தாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் "இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதானல் தான் இந்த சுட்டொரிக்கும் வெயிலிலும் அடித்துப்பேடடாட்டது போல் உறங்குகிறான்"என நினைத்துக் கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்"என நினைத்துச் சென்றான். சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும் என அவரை வணங்கி விட்டு சென்றார். நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.
இறைவார்த்தை:
மத்தேயு 12:33 "மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும்."
மத்தேயு 7:17-18 "நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது."
மத்தேயு 13:1-9 "விதைப்பவர் உவமை."
1சாமுவேல் 16:7 "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லைஇ மனிதர் முகத்தை பார்க்கின்றனர்இ ஆண்டவர் அகத்தைப் பார்க்கின்றார்."



79.துளையிட்ட காசு
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள் தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால் அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும்இ பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக்கொண்டான். அன்று. அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக் கொள்வான். வெளியே எடுக்க மாட்டான். சில ஆண்டுகளில் பணம் இ பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின்இ ஒரு நாள் தன் மனைவியிடம் அந்தக் காசைப் பார்க்க வேண்டும் போல உள்ளது என்றவாறு கோட்டுப்பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள்இ ": என்னை மன்னியுங்கள். ஊங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான் தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்" என்றாள். இது எப்போது நடந்தது என்று கேட்டான். அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கை தான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்.
இறைவார்த்தை:
யோசுவா 1:9 "நான் உனக்கு கட்டளையிடவில்லையாஇ ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னேடு இருப்பேன்."
பிலிப்பியர் 4:13 "எனக்கு வலுவு+ட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய ஆற்றல உண்டு."
யாக்கோபு 1:12 "சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோ ர். ஏனெனில்இ அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போதுஇ தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்."

80.ஏற்பதும் இகழ்வதும்
பல வருடங்களுக்கு முன்னால் தான் சென்றிருந்த ஓர் ஊருக்கு மாறுவேடமிட்டு குரு ஒருவர் மீண்டும் போனார். ஏனெனில் முன்பு அவர் சென்ற போது அவரின் அறிவுரைகளைக் கேட்காமல் அவர் மீது கோபம் கொண்டு அவரைக் கற்களால் அடித்து விரட்டியிருந்தனர். தற்பொழுது அவரை அடையாளம் தெரிந்து கொள்ளாத மக்களிடம் என்னிடம் ஒரு மந்திரக்கல் இருக்கிறது. அபூர்வ கற்களை வியாபாரம் செய்யும் எனக்கு இந்தக் கல் என் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்தது. இது சந்திரனிலிருந்து பூமியில் விழுந்ததாக பெரியவர்கள் சொன்னார்க்ள். அக்கல்லைப் பார்த்தாலே செய்த பாவங்கள் விலகும் நோய் நீங்கும் எதிரிகள் விலகுவர் என பலவாறு சோதிடரைப் போல உரை நிகழ்த்தினார். உடனே மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். நான் தான் முதலில் பார்ப்பேன் எனக்குத்தான் முதலில் என்று அங்கே பெரிய அடிதடி ரகளையே நடந்தது. குரு இதை சும்மா காட்டமாட்டேன். இதைப் பார்க்கக் கட்டணம் என்று கூறி அதற்கான கட்டணத்தைக் கூறினார். அக்கட்டணத்தை மக்கள் ஏற்று அந்த அபூர்வ கல்லைப் பார்த்தனர். பலர் தங்கள் சிரமங்கள் அப்பொழுதே விலகியதாகக் கூறி வியந்தனர். சிறிது நேரத்திலேயே அவருக்கு பணம் நிறைய கிடைத்தது. அன்று மாலை மக்கள் முன் குரு மக்களால் சேர்ந்த பணம் அனைத்தினையும் கொட்டினார். பின்பு பின்வருமாறு உரை நிகழ்த்தினார். சில நாட்களுக்கு முன் நான் உங்களிடம் நல்லதைச் சொன்னபோது நீங்கள் என்னனைக கற்களால் அடித்து விரட்டினீர்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அங்கனம் அடித்தக் கற்களுள் ஒன்றுதான் இந்த அபூர்வக் கல். இந்த முறை நான் மிகைப்படுத்திக் பொய்யானத் தகவலைச் சொன்னேன். நீங்கள் பணத்தை அள்ளிக் கொடுக்கிறீர்கள். ஊழகை;காமல் பொருளீட்டப் பார்க்கிறீர்கள் என்றுரைத்து விட்டு மாறுவேடத்தினைக் களைந்தார். அதனைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வெட்கி தலைகுனிந்தனர். குரு அவர்களிடம் பெற்ற பணத்தினை அவர்களிடமே கொடுத்து விட்டு சென்றார்.
இறைவார்த்தை:
மத்தேயு 1:19 "மாரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்;."
யோவான் 1:11 "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை."
யோவான் 15:18 "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்."
2கொரிந்தியர் 12:9 "என் அருள் உனக்குப் போதும்இ வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்."
எபிரேயர் 11:26 "தமக்குக் கிடைக்கிருந்த கைம்மாறு ஒன்றையே கண்முன் இருத்திஇ அவர் எகிப்தின் செல்வங்களைவிடஇ மெசியாவின் பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம் என்று கருதினார்."

81.காலத்தை கண்டுணர்தல்
ஒரு முறை பேராசிரியர் அவர் தங்கள் மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டு பதில் எழுத சொன்னார்.
1. உலக அதிசியங்கள் எத்தனை?
2. இந்திய மட்டைப்பந்து அணியில் விளையாடும் ஐந்து நபர்களை எழுதுக?
3. நோபல் பாரிசு யாருடைய பெயரால் கொடுக்கப்படுகிறது?
4. இந்திய நாட்டினுடைய முதல் பிரதமர் யார்?
5. நம்முடைய கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யும் நபாரின் பெயர் என்ன?
மேல் கேட்கப்பட்ட நான்கு கேள்விகளுக்கும் மாணவர்கள் சரியான பதிலை எழுதினார்கள். ஆனால் ஐந்தாவது கேள்விக்கு மட்டும் யாரும் பதில் எழுதவில்லை. பேராசரியர் மாணவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். ஒருநாளும் அவர் பெயர் என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை என்று பதில் சொன்னார்கள். உலக அறிவு நல்லது ஆனால் அதைவிட நம் அருகில் இருப்பவர்களை அறிந்து கொள்ளும் அறிவே உண்மையான அறிவு என்று சொன்னார்.
இறைவார்த்தை:
லூக்கா 12:54-56 "மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்இ அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும் பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்இ அதுவும் நடக்கிறது. வெளிக்காடக்காரரே நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போதுஇ இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?"

82.தர்மம் தலைகாக்கும்
ஒரு விறகுவெட்டி தலையில் விறகுச் சுமையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வரும் வழியில் எதிரில் ஒரு துறவி வருவதைப் பார்த்தான். அவருக்கு வழி விடுவதற்காக அவன் பாதையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றான். அவனை நோக்கி வந்த துறவிஇ ": விறகு சுமையை உடனே கீழே எறி என்றார். விறகு வெட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று காலையிலிருந்து காட்டுக்குப் போய் கடினப்பட்டு வெட்டிக் கொண்டு வந்த விறகுகள் அவை. அவற்றை விற்றால்தான் அன்று அவனுக்கு உணவு. அந்தக் கட்டை எறியச் சொல்கிறாரே? இருந்தாலும் அந்தத் துறவி மீது அவனுக்கு ஏற்பட்ட மாரியாதை உணர்வால் அவன் விறகுக் கட்டை கீழே போட்டான். கட்டைக் கீழே போட்ட வேகத்தில் கயிறு அறுந்துபோய் விறகுகள் சிதறின. ஆந்த விறகுகளுக்கு இடையிலிருந்து ஒரு கருநாகம் நௌரிந்து ஓடியது. விறகுவெட்டி அதிர்ச்சியோடு நின்றுவிட்டான். அவன் துறவியின் காலில் விழுந்தான். சாமி நீங்க என் உயிரைக் காப்பாற்றினீர்கள் என்றான். அவன் கண்களில் நீர் ததும்பியது. உன்னைக் காப்பாற்றியது நானல்ல. நீ செய்த தர்மம். இன்று எதாவது தர்மம் செய்தாயா என்று கேட்டார் துறவி. விறகுவெட்டி ": சாமி நான் பரம ஏழை.விறகு வெட்டிப் பிழைப்பவன். தர்மம் செய்யும் சக்தி எனக்கேது? என்றான். துறவி நன்றாக யோசித்துப்பார். இன்று நீ ஏதோ நற்செயல் செய்திருக்க வேண்டும். அதுதான் உன்னைக் காப்பாற்றியிருக்கிறது என்றார். விறகுவெட்டி சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தான். அவனுக்கு நினைவு வந்துவிட்டது. சாமி இன்று பகல் முழுவதும் விறகுகளைவெட்டிக் களைத்துப் போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். கடுமையான பசி. கேழ்வரகுக் கூழ் கொஞ்சம் கொண்டு வந்திருந்தேன். அதைக் குடிக்கும் போது அங்கே ஒரு வழிப்போக்கன் வந்தான். ஐயா நான் இரண்டு நாளாய்ப் பட்டினி. ஏனக்கு எதாவது சாப்பிடக் கொடுங்கள் என்றான். நான் என் கூழில் பாதியை அவனுக்குக் கொடுத்தேன். இதுதான் ;நான் இன்று செய்தது. அது என்னை மரணத்திலிருந்து காப்பற்றக் கூடிய அளவுக்குப் பெரிய தா;மமா? ஆச்சரியமாக இருக்கிறது என்றான். துறவிஇ இன்று நீ பாம்பு கடித்துச் செத்துப்போக வேண்டியவன். நீ செய்த தர்மம் உன்னைக் காப்பாற்றிவிட்டது. நீ நன்றாக இருக்கவேண்டும் என்றால்இ உன்னால் முடிந்த அளவு தா;மம் செய் என்று கூறினார்.
இறைவார்த்தை:
இணைச்சட்டம் 14:28 "மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்துஇ உனது நகாரின் வாயிலருகே வை."
நீதிமொழிகள் 19:17 "ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிற ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்இ அவர் கொடுத்ததை ஆண்டவர் திருப்பி தந்துவிடுவார்."
ஏசாயா 58:8இ10 "பசித்தோருப்போருக்காக உன்னையே கையளித்துஇ வறியோரின் தேவையை நிறைவு செய்வாயனால் இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்."
மத்தேயு 6:1-4 "நீங்கள் தா;மம் செய்யும்போது உங்களைப்பற்றி தம்பட்டம் அடிக்காதீர்கள்..நீங்கள் தர்மம் செய்யும்போதுஇ உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தா;மம் மறைவாயிருக்கும்இ மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்."
லூக்கா 11:41 "உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்."
1திமொத்தேயு 6:18 "அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாகஇ தங்களுக்குள்ளதைத் தாராள மனத்N;தாடு பகிர்ந்தளிப்பார்காளாக."



83.இயேசுவின் மனநிலை
பழனியில் நான் உதவி அருட்பணியாளராக இருந்த பொழுது என் மனதை தொட்ட நிகழ்வு. நாங்கள் நடத்தக்கூடிய பள்ளியின் அருகில் அமைந்திருக்கக்கூடிய சாலை என்பது மிகவும் முக்கியமான சாலை. ஏப்பொழுதும் மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லக்கூடிய சாலை. சுர்லையின் இரண்டு புறங்களிலும் இரண்டு கிறித்தவ நிறுவனங்கள் உள்ளன. அந்த சாலையின் ஓரத்தில் ஏறக்குறைய மூன்று நாட்களாக ஒரு பெரியவர் ஒருவர் படுத்துக்கிடந்தார். அந்த மனிதாரின் மேலிருந்து துர்;நாற்றம் மற்றும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. அதனால் என்னவோ தெரியவில்லைஇ யாரும் அருகில் செல்லவில்லை. அருகில் இருந்த திருச்சிலுவை அருட்சகோதாரிகள் அந்த சாலையின் வழியாகத்தான் ஆலயத்திற்கு வரவேண்டும். இதை இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருந்த ஒரு சகோதாரிக்கு மனதில் ஒருவிதமான உறுத்தல் ஏற்பட்டது. மற்ற சகோதாரிகளின் உதவியோடும் அங்கிருந்த ஆலயப்பணியாளர்களோடும் அந்த நபரை சுத்தப்படுத்தி ஒரு கருணை இல்லத்தில் சேர்த்தார்கள். இந்த நிகழ்வு கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையை வெளிப்படுத்தியது.
இறைவார்த்தை:
கலாத்தியர் 6:2 "ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்இ இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்."
புரிலிப்பியர் 2:4இ5 "நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்லஇ பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்."
யோவான் 15:12 "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை."
லூக்கா 18:35-43 "இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோதுஇ பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர்"(தொடர்ந்து வாசிக்க)


84..அந்த வீட்டில் பல்லி இல்லை
ஒரு பெரிய பணக்காரர் அதிக பொருள் செலவுடன் விலையுயர்ந்த ஒரு வீட்டைக் கட்டினார். அந்த வீரிடு வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப் பட்டிருந்தது. பல சமய சடங்குகள் அங்கு நடத்தப்பட்டன. பிற்பாடு அந்தவீட்டில் அந்தப் பணக்காரர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் குடியேறினார்கள். ஆனால் குடியேறிய ஒருசில மாதங்களிலே அந்தவீட்ஐ மிகவும் குறைந்து விலைக்கு விற்றுவிட்டார். அந்த பணக்காரருடைய நண்பர் ஏன் இந்த வீட்டை விற்றீர்கள் என்று கேட்டார். ":அந்த வீட்டில் குடியேறிய நாளிலிருந்து என்னுடைய தொழில் பின்னடைவு ஏற்பட்டது. வீட்டிலும் நிம்மதி இல்லை. அதன் காரணத்தை தெரிந்து கொள்ள எனதுது குடும்ப சோதிடரை அனுகினேன். ஆந்தச் சோதிடர் வீட்டைப் பார்த்துவிட்டு இந்த வீட்டில் எங்கேயுமே பல்லியைக் காணவி;ல்லை. பல்லி இல்லாத வீட்டில் குடியிருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைஇ உடனே வீட்டைக் காலி செய்து வேற வீட்டிற்கு செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டார் என்று பதில் கூறினார். பிறகு தான் தெரிந்தது அந்த வீடு கட்டும் பொழுது பல்லிஇ கரையான் போன்றவை வராமால் இருக்க மருந்து வைத்து கட்டப்பட்ட வீடு என்று.
இறைவார்த்தை:
மத்தேயு 23:23 "நீங்கள் புதினாஇசோம்புஇசீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதிஇ இரக்கம்இ நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள்."
மத்தேயு 23 ஆம் அதிகாரம் முழுவதும்
மத்தேயு 7:24-28 "நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்."
மாற்கு 7:1-23 "மூதாதையர் மரபு"


85.இறைவனின் மாட்சிமை
நான் நான்காம் ஆண்டு இறையியல் படிக்கும் பொழுது திருச்சியில் உள்ள பெரியமிளகு பாறைக்கு வார இறுதி களப்பணிக்கு சென்றேன். அப்பொழுது அங்குள்ள வீடுகளை சந்திப்பது வழக்கம். ஒரு முறை ஒரு வீட்டைச் சந்தித்தேன். மிகவும் வசதி வாய்;ப்புகள் நிறைந்தவீடு. ஆந்த வீட்டின் தலைவர் இந்தியன் ஸடேட் வங்கியில் உயர்ந்த பதவியில் உள்ள மனிதர். அவருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. உலகத்தின் எந்த மூலைக்கும் அவர் தன்னுடைய குடும்பத்தோடு இலவசாமாக பயணம் செய்யலாம். பயணப்படிகள் அனைத்தையும் அவருடைய நிர்வாகம் பார்த்துக் கொள்ளும். அவருக்கு இரண்டு பிள்ளைகள் அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. அவரால் நடக்க முடியாது. அவர் நடப்பதற்கு இன்னொரு மனிதர் உதவி செய்யவேண்டும். அவரை பார்த்தவுடன் நான் அவர்களிடம் ": கடவுள் இவ்வளவு செல்வத்தை கொடுத்து இப்படிப்பட்ட பிள்ளையை கொடுத்திருக்கிறாறே என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் ": பாதர்இ ஒருவேளை எங்கள் மகன் வேற வீட்டில் பிறந்திருந்தான் என்றால் அவனை இவ்வளவு செலவு செய்து அவர்களால் கவனித்துக் கொள்ள முடியாது அதற்காகத் தான் கடவுள் இவனை நல்ல முறையில் நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று எங்கள் வீட்டில் பிறக்கச் செய்திருக்கிறார். இந்தக் குழந்தையை பெறுவதற்கு நாங்கள் குடுத்து வைத்திருக்கனும். கடவுளுடைய வல்லமையை ஒவ்வொரு நாளும் இவன் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறோ ம் என்று கூறினர். இந்தப் பதிலைக் கேட்ட எனக்கு திருவிவிலியம் வாசித்தது போல் இருந்தது.
இறைவார்த்தை:

யோவான் 9:13 "இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். ரபிஇ இவர் பார்வையற்றவாராய் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோ ர் செய்த பாவமா? என்று இயேசுவிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாகஇ இவர் செய்த பாவமும் அல்லஇ பெற்றோ ர் செய்த பாவமும் அல்லஇ கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்."
ஏசாயா 40:5 "ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்இ மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்இ ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்."
ஏசாயா 48:3 "நீயே என் ஊழியன்இ இஸ்ரயேலே உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்."



86.எனது அப்பா
ஒரு மகன் தன் அப்பாவைப் பற்றி என்ன நினைக்கிறான்.
4 வயதில் - என் அப்பா தான் சிறந்தவர். அவரைவிடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.
6 வயதில் - என் அப்பாவுக்கு எல்லாரையும் தெரியும்
10 வயதில் - என் அப்பா நல்ல அப்பா தான் ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது.
12 வயதில்- ஹீம்! நான் சிறுபிள்ளையாக இருந்தபோது என்மீது பாசமாக இருந்தார்.
14 வயதில்- என் அப்பா தான் எல்லா விசயத்தையும் சரியாக செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.
16 வயதில்- அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஷ்ட் விசயங்களே தெரியவி;;ல்லை.
18 வயதில்- அப்பா ஏன் இப்படி பல சமயங்களில் பைத்தியக்ர்ரத்தனமாக நடந்து கொள்கிறார்.
20 வயதில்- அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. ஆம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?
25 வயதில்- என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?
30 வயதில்- என் மகனை சமாளிப்பது பெரிய கஷ்டம் நான் சிறுபிள்ளையாக இருந்தபோது எப்படி பணிந்து நடந்தேன்.
40 வயதில்- அந்தக் காலத்தில் உன்அப்பா என்ஐன அத்த்னை ஒழுக்கத்தோடு வளர்த்தார்;. நானும் அப்படித்தான் என் மகனை வளர்க்க வேண்டும்.
45 வயதில்- குழந்தைகளை அதுவம் வளர்பருவ குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாN;ரா?
50 வயதில்- எத்தனையோ கஷ்;டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்N;லாரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒருமகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.
55 வயதில்- என் அப்பா ஒரு நல்ல மனிதர்.
60 வயதில்- என் அப்பா தான் சிறந்தவர்
முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் ஆகின்றன. தந்தையை நேசிப்போம்.
இறைவார்த்தை:
நீதிமொழிகள் 23:24-26 "நோ;மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்இ ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார். நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாகஇ உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக. மகனேஇ நான் சொல்வதைக் கவனிஇ என்வழிகளில் உன் கவனத்சை; செலுத்து."
நீதிமொழிகள் 20:20 "தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்குஇ காரிருள் வேளையில் அணைந்து போகும்."
சீராக் 3:1-15 "குழந்தைகளேஇ உங்கள் தந்தையாகிய எனக்குச் செவிசாயுங்கள்இ நான் கூறுவதன்படி செயல்படுங்கள்இ அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள். பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப் படுத்தியுள்ளார்இ தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்இ அவர்களுடைய மன்றாட்டு கேட்க்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர். தந்தையின்ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும் குழந்தாய்இ உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவுஇ அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதேதந்தைக்கு காட்டும் பாரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்."

87.அன்பு
நான் ஒரு முறை புனித வளனார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். வயதான பொரிவர் ஒருவரும் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பர்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தார். நான் அவரைப் பார்த்து ஏங்க ஐயா ஏதும் அவசர வேலை இருக்கா இப்படி அடிக்கடி மணியையும் டோக்கனையுமே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டேன். ஆமா தம்பி என்று சொன்னார். நான் போய் தான் என் மனைவிக்கு சாப்பாடு கொடுக்கனும் என்றார். ஏன் அவர்களுக்கு உடம்பு சரியில்லையா என்று கேட்டேன். ஆமாம் தம்பி கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது. என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரியவில்லை எனறார். கடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே அவங்களுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுக்கறீங்களா என்று கேட்டேன். நியாபக மறதி நோய் அவளுக்குதான் தம்பி. ஏன்னை யார் என்று அவளுக்குத்தான் தெரியாது. ஆனால் எனக்கு அவள் யார் என்ன உறவு என்ப துநன்றாக தெரியும் என்றார். அவர் சொன்ன வார்த்தை என் கண்களில் நீர் வரவழைத்தது.
இறைவார்த்தை:
இணைச்சட்டம் 6:5 "உன் முழு இதயத்தோடும்இ உன் முழு உள்த்தோடும்இ உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக."
1பேதுரு 3:7 "உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்துஇ அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்."
கொலோசையர் 3:19 "திருமணமான ஆண்களேஇ உங்கள் மனைவியாரிடம் அன்பு செலுத்துங்கள்."

17. அன்பு மாய மந்திரம்
ஒரு குருவிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள். குரு கூறிய சமாதனாங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார். மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. புயந்து வந்துவிட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பிவிட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது. புலி முடியை ஓடிச் சென்று குருவிடம் கொடுத்தாள். குரு அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் குழம்பிப் போனார். குரு கூறினார் இனி உனக்கு மூலிகை தேவவையில்லை. நீ புலியின் முடியைப்பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படிப் பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும் போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா? என்றார்.
இறைவார்த்தை:
திருப்பாடல்கள் 51:10 "கடவுளேஇ தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்இ உறுதிதரும் ஆவியைஇ புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்."
சுபை உரையாளர் 7:8 "ஒன்றின் தொடக்கமல்லஇ அதன் முடிவே கவனிக்கத் தக்கதுஇ உள்ளத்தில் பெருமைகொள்வதை விடப் பொறுமையோடு இருப்பதே மேல்."
நீதிமொழிகள் 14:1 "ஞானமுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்இ அறிவற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்."
நீதிமொழிகள் 14:17 "எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்இ விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்."

88.நோ;மையை விதையுங்கள்
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும். அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன. இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டுஇ உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யாருடைய செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் நிறுவனத்தின் பொறுப்பபை ஏற்க வேண்டும் என்றார். அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியரான சுரேஷ் என்பவரும் ஒரு விதை வாங்கிச் சென்றான். தன் மனைவியிடம் முதாலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டிஇ உரமஇ; தண்ணீர்; எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள். ஒரு வாரம் கழித்து வேலைசெய்யும் இடத்தில் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்துவிட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் சுரேசின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்;பிக்கவில்லை. ஒரு மாதம் ஆனது அப்பொழுதும் முளைக்கவில்iலை. ஆறுமாதம் ஆனபோதும் முளைக்கவில்லை. விதையை வீணாக்கிவிட்டேனே என்று வருத்தப்பட்டான் இருந்த போதிலும் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. குறித்தக் காலம் வந்தது அனைவரையும் வரவழைத்தார். நாளை வரும்பொழுது உங்களது செடிகளை கொண்டுவாருங்கள் என்றார். அனைவரும் நன்றாக வளர்ந்திருந்த செடிகளை கொண்டுவந்தனர். சுரேஷ் மட்டும் வெறும் தொட்டியை கொண்டு வந்தான். இதைப்பார்த்த அனைவரும் அவனைப்பார்த்து ஏளனமாகச் சிரித்தனர். முதாலாளி அனைத்து செடிகளையும் பார்;த்துக் கொண்டே வந்தார். சுரேஷ் அருகில் வந்ததும் எங்கே உன் செடி என்று கேட்டார். ஐயா நான் எவ்வளவு நீர் ஊற்றினாலும் அது முளைக்கவில்லை என்று கூறினான். முதலாளி சுரேசை தவிர மற்ற அனைவரையும் அமரச்சொன்னார். எனக்குப் பின் இந்த நிறுவனத்தை வழிநடத்தப் போகிறவர் இவர் தான் என்று சொன்னார். அனைவரும் குழம்பிபோனர். இவன் செடி வளரவே இல்லை எப்படி இவனை பதவியில் அமர்த்த முடியும் என்று தங்களுக்குள்ளே கேட்டுக் கொண்டனர். சென்றவருடம் நான் ஆளுக்கொரு விதை கொடுத்தேன் அல்லவா அத்தனை விதைகளும் அவிக்கப்பட்ட விதைகள் ( டிழடைநன ளநநனள) அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்காது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். சுரேஷ் மட்டும் நேர்மையாக நடந்து கொண்டான். அவன் தான் நமது நிறுவனத்தின் மேலாளா; ஆவதற்கு தகுதியுடையவன் என்றார்.
இறைவார்த்தை:
நீதிமொழிகள் 10:9 "நாணயமாக நடந்து கொள்வோர் இடையு+றின்றி நடப்பர்இ கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்."
நீதிமொழிகள் 11:3 "நோ;மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்."
நீதிமொழிகள் 12:22 "பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்இ உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார்."
நீதிமொழிகள் 28:6 "முறைகேடாய் நடக்கும் செல்வரைவிடஇ மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்."
லூக்கா 16:10 "மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நோ;மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்."



89.பணமா? மனமா?
ஒரு அப்பாவும் 4வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தைக் கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. கோபத்தில் மகனுடைய கையை பிடித்துஇ நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வுலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் எலும்புகள் முறிந்துவிட்டதால் இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவைப் பார்த்து "அப்பா என்னோட விரல்கள் திரும்ப வளர்ந்துவிடும் இல்லப்பா..? என்று கேட்டவுடன் அந்த அப்பா தேம்பி அழுது கொண்டே வெளியில் வந்தார். வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டிஇ எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு அமர்ந்து விட்டார். அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருக்கிறத என்று.. அந்த வாசகம் "ஐ லவ் யு+ அப்பா".
மனிதர்களை பயன்படுத்துகிறோ ம்: பொருட்களை அன்பு செய்கிறோ ம்.
ஏழைகளை இருவெள்ளிக்கு விற்பனை செய்கிறீர்கள்.
இறைவார்த்தை:
மத்தேயு 6:21 "உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்."
மத்தேயு 6:24 "எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில்இ ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார். அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவ்ரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது."



90.எரிபலிகளா? இரக்கமா?
ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார். ஏழைப் பணியாளர் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலையிலிருந்து இரண்டு பழங்களைப் பறித்துச் சாப்பிட்டு விட்டான். அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார். கனவில் இறைவன் வந்து நீ எனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்இ ருசியாக இருந்தது என்றார். செல்வந்தனுக்கு மிகவும் கோபம் வந்தது. ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்பட்டான். மறுநாள் காலை அந்தப் பணியாளரை கூப்பிட்டு விசாரித்தான். அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு இ மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்துவிட்டதைச் சொன்னான். செல்வந்தனுக்கு புரிந்தது. அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று.
எரிபலிகளை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்.
இறைவார்த்தை:
எசாயா:1:11-17 "எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு? என்கிறார் ஆண்டவர். ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும்இ கொழுத்த விலங்குளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டனஇ இவற்றின் இரக்கத்திலும் எனக்கு நாட்டமில்லை.இனிஇ காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்இ நீங்கள் எனக்கு காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது."
ஓசேயா 6:6 "உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்லஇ இரக்கத்தையே விரும்புகின்றேன்இ எரிபலிகளைவிட கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்."
ஆமோஸ் 5:21 "உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்இ உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை."


91.ஏழ்;மையின்னா?
ஒரு பணக்கார தந்தை தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது. கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஒன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம்இ அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பொரிதுஇ அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்கிறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோ ம். அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாப்பிடுகிறார்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோ ம். அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள். நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோ ம். அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக் கொண்டே சென்றான்.. மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடையச் செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.
"நான் ஏழைகளுக்கு உணவு கொடுக்கும் போது மக்கள் என்னை புனிதன் என்கிறார்கள். ஏழைகளுக்கு ஏன் உணவு இல்;லை என கேள்வி எழுப்பும்போது என்னை கம்யு+னிஸ்ட் என்கிறார்கள்."
இறைவார்த்தை:
லூக்கா 6: "ஏழைகளேஇ நீங்கள் பேறுபெற்றோ ர்இ ஏனெனில் இறையாட்சி உங்களுக்குரியதே."
யாக்கோபு 2:1-13 "என் அன்பார்ந்த சகோதர சகோதாரிகளேஇ நான் சொல்வதைக் கேளுங்கள்இ உலகின் பார்வையில் ஏழைகாளாய் இருப்பவர்களைஇ நம்பிக்கையில் செல்வர்களாகவும்இதம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்."
92.முதன்மையானது
பல கப்பல்கள் வந்து செல்லும் அந்தத் துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் இரவு நேரங்களில் எரிந்து கொண்டிருக்கிறதா இல்லையா என்று பார்;த்துக் கொள்வதற்கு ஒரு இரவு காவலர் பணியில் அமர்த்தப்பட்டார். அந்தக் கடற்கரையில் நி;றைய் மணல் திட்டுகளும் பாறைகளும் நிறைந்த பகுதி என்பதால் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கலங்ரை விளக்கு அணைந்துவிடாமல் இருக்கவும் மாதம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கு போதுமான எண்ணையும் அந்த காவலாரிடம் கொடுக்கப்பட்டது. ஒரு நாள் ஒரு பெண் வந்து காவலாரிடம் கொஞ்சம் எண்ணெய் தாருங்கள் வீட்டில் என் மகன் குளிரினால் அவதிப்படுகிறான் என்றாள். மற்றும் ஒரு நபர் வந்து நாளை என் மகனுக்கு தேர்வு இருக்கிறதுஇ விளக்கு எரிக்க போதிய எண்ணெய் இல்லை அதானல் கொஞ்சம் எண்ணெய் தாருங்கள் என்றார். சிறிது நேரத்தில் மற்றொரு நபர் இரவு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் சிறிது எண்ணெய் கொடுங்கள் என்றார். காவலர் அவர்கள் சொல்லுகிற அத்தனை காரணங்களும் சரியெனப்படுகிறது அதானால் அனைவருக்கும் சிறிதளவு எண்ணெய் கொடுத்தார். அனைவரும் வாங்கிச் சென்றனர். அந்த மாத இறுதியில் கலங்கரை விளக்கில் எண்ணெய் இல்லாமல் போனது. அந்த இரவு கப்பல் ஒன்று வந்தது. பாறைபகுதிகள் என்பதால் அதில் மோதி ஏறக்குறைய 100 போ; இறந்து விட்டனர். ஏன் இப்படி செய்தாய் என்று அந்தக் காவலாரிடம் கேட்ட பொழுது தான் எண்ணெய் கொடுத்த காரணத்தை சொன்னார். உன்னுடைய பொறுப்பும் கடமையும் என்பது முதலில் களங்கரை விளக்கு அனையாமல் பார்த்துக் கொள்வது. மற்ற அனைத்தும் இரண்டாம்தர காரணங்கள் என்று சொல்லி அவர் தண்டிக்கப்பட்டார்.
இறைவார்த்தை:
லூக்கா 9:51-62 "என்னைப் பின்பற்றிவாரும்இ என்றார். அவர்இ ":முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும் என்றார். இயேசு அவரைப்பார்த்துஇ ":இறந்N;தாரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியை அறிவியும் என்றார். வேறொருவரும்இ ":ஐயாஇ உம்மைப் பின்பற்றுவேன்இ ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் என்றார். இயேசு அவரைநோக்கி ":கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல என்றார்."

93. பிரிவினைகள்
ஒரு முறை ஒரு நபர் விபத்துக்குள்ளானார். அந்த நபாரின் மனைவி மற்றும் அவருடைய மாமியார் அவரைப்பார்த்துஇ ": நாங்க எத்தனை முறை சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீங்களா? மாதாவை கும்பிடுதாதிங்கஇ இயேசுவை கும்பிடுங்கனுஇ பாருங்க அதனால தான் உங்களுக்கு விபத்து ஏற்பட்டிருக்குது என்றனர். அந்த நபாரின் பெற்றோ ர்கள் ": தம்பி பெரிய ஆபத்திலிருந்து இயேசுவும் மாதாவும் தான் உன்ன காப்பாத்திருக்கங்கா என்றனர். இயேசு பெரியவரா? மாதா பெரியவங்களா? என்ற பிரிவினையால் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பித்தது. கொஞ்சம் நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நபர் விபத்துக்குள்ளானார். இம்முறையும் யாரால் விபத்துக்குள்ளானார் என்ற பிரச்சனை எழுந்ததுஇ இயேசுவா? முர்தவா? என்ற பிரச்சனை எழுந்தது. இம்முறை அவர் சொன்னர் ": நான் விபத்திற்குள்ளானது இயேசுவாலும் அல்ல மாதவாலும் அல்ல உங்களாலும் அல்ல என்னுடைய கவனக்குறைவால் ஆனது என்றார். நான் இயேசுவையும் கும்பிடுல்ல மாதாவையும் வணங்கள எனக்கு மதமே வேண்டாம் என்று இப்பொழுதெல்லாம் அவர் எந்தக் கோயிலுக்கும் செல்வதில்லை.
இறைவார்த்தை:
யோவான் 17:21 "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையேஇ நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்."
திருத்தூதா; பணிகள் 1:14 "திருத்தூதர்கள் அனைவரும் சில பெண்களோடும்இ இயேசுவின் சகோதரர்களோடும்இ அவருடைய தாய் மாரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்."
யோவான் 2:5 "இயேசுவின் தாய் பணியாளாரிடம்இ ":அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்றார்."
லூக்கா 11: 27இ28 "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்இ என்று குரலெழுப்பிக் கூறினார். இயேசுவோ ":இறைவார்;த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோ ர் என்றார்."
லூக்கா 1:43 "என்ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"

94. இறைவேண்டல்
ஒரு நாளும் தவறாமல் கோயிலுக்குச் செல்லும் பெரியவர் ஒருவர் இருந்தார்;. வழக்கத்திற்கு விரோதமாக அசந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவரை ஒருவன் தட்டி எழுப்பினான். அவர் திடுக்கிட்டு விழித்தார். ": பெரியவரே நேரம் ஆயிருச்சு நீங்க கோயிலுக்கு போகனும் போங்க என்று அவன் கூறினான். பெரியவர் அவனைப்பார்த்தார். அவன் யார் என்று தெரியவில்லை. அதற்கு முன் அவனைப்பார்த்ததும் இல்லை. தம்பி என்ன நல்ல வேலை எழுப்பினீங்கஇ சரி நீங்க யாரு தம்பி என்று கேட்டார். அவன் ": என் அறிமுகத்திற்கெல்லாம் நேரம் இல்iலைஇ நீங்க முதலில் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு திருப்பலி ஆரம்பிக்கப் போகுது என்று சொன்னான். என்னைய எழுப்பிவிட்ட உன்ன எப்படி தம்பி யாருன்னு தெரிஞ்சுக்கமா போறது? சொல் நீ யார்? என்று அந்தப் பெரியவர் அவனை விடாப்பிடியாய் கேட்டுக்கொண்டிருந்தார்;. பொறுமையிழந்த அவன் நான் தான் சாத்தான் என்று அவன் பதில் சொன்னான். இதைக் கேட்ட பெரியவர் ஆச்சரியத்தோடு ": நீ எப்பபொழுதும் தீமை செய்யத்தானே தூண்டுவாய்இ இது என்ன புதிதாக உள்ளது என்றார். ஆனாலும் நான் நம்பமாட்டேன் இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. நீ சொல்லாமல் நான் கோவிலுக்கு போகமாட்டேன் என்று சொன்னார். அதற்கு சாத்தான் ": பெரியவரே நான் உங்களை நெடுங்காலமாக கவனித்து வருகிறேன். நீங்கள் நாள் தவறாமல் அனைத்து வழிபாடுகளையும் நேரம் தவறாமல் கலந்து கொள்கிறீர்கள். கெட்ட பழக்கங்கள் எதுவும் உங்களிடம் இல்லை. ஒழுக்கத்தில் உறுதியாக இருக்கிறீர்கள். உங்களை எந்த வகையிலும் கெடுக்க முடியாது என்பதை அறிந்து கொண்டேன். இன்று நீங்கள் வழக்கத்திற்கு மாறாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். நீங்கள் இன்று திருப்பலியை தவறவிடப்போகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மீண்டும் சிந்தித்துப்பார்த்தேன் நீங்கள் காலம் கடந்து திருப்பலிக்கு செல்வதை வி;ட உரிய காலத்தில் திருப்பலிக்கு செல்வதே நல்லது என்று உணர்ந்தேன். அதனால் தான் எழுப்பினேன் என்றான். பொரிவர் ": உரிய காலத்தில் நான் திருப்பலிக்கு சென்றால் உனக்கு எப்படி நல்லது? என்று கேட்டார். அவன் ": நீங்கள் உரிய காலத்தில் திருப்பலிக்கு சென்றால் வழக்கம் போல திருப்பலி என்ற வெறும் கடமை உணர்வோடு இருப்பீர்கள். எனக்கென்ன என்று இருப்பீர்கள். ஆனால் காலம் தாமதம் சென்று போனீர்கள் என்றால் மிகுந்த அச்சத்தோடு திருப்பலியில் கலந்து கொள்வீர்கள். இறைவனிடம் மன்னிப்புக் கேட்பீர்கள். இறைவன் ரொம்ப நல்லவர் அவரும் உங்களை மன்னித்துவிடுவார். இதனால் இறைவனின் அருள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். அது எனக்கு நஷ்டம் தானே என்றான். இறைவேண்டல் என்பது கடமையாகாது மாறாக உள்ளாந்த நிலையில் இறைவனோடு ஒன்றித்திருப்பது.
இறைவார்த்தை:
லூக்கா 18:9-15 "பாரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை""இருவர் இறைவனிடம் வேண்டக்கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பாரிசேயர்இ மற்றவர் வரிதண்டுபவர். பாரிசேயர் நின்று கொண்டுஇ இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்இ ":கடவுளே நான் கொள்ளையர்இ நோ;மையற்றோ ர்இ விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இல்லாதது பற்றி..என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக்கொடுக்கிறேன்."
மத்தேயு 6:5-13 "இறைவேண்டல்""நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்று கொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாகச் சொல்கிறேன். ஆனால் நீங்கள்நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்."

95.நீதி
ஒருவன் தன்னுடைய தாய்இ தந்தை இருவரையும் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதியினுடைய தீர்ப்பபை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கடைசி நாள் விசாரணையின் போது கொலையாளியின் வக்கீல்இ நீதிபதி ரொம்பவும் இரக்கம் சுபாவம் உள்ளவர். நீ அவருடைய இரக்கத்தைத் தூண்டும் விதமாக பேசு என்று சொல்லிக் கொடுத்தார். கைதி நீதிபதியிடம் ஐயா ஏதோ ஒரு ஆத்திரத்தில் நான் முட்டாள் தனமாக பெற்றவர்களைக் கொலை செய்துவிட்டேன். இப்போது திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று கேட்டால்இ பரவாயில்லை. ஆனால் அவன் நீதிபதியிடம்இ ஐயா! மகராசா! ஏஜமான் நான் அப்பா அம்மா இல்லாத அனாதை இந்த உலகத்தில் நான் எப்படிக் காலம் தள்ளுவேன் தயவு செய்து நீங்கள்தான் எனக்கு வழி சொல்ல வேண்டும் என்றான். நீதிபதி தன் தீர்ப்பில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டிருக்கிறது. அவன் தன் பெற்றோ ரைப் பிரிந்து தவிப்பதாக் கூறுகிறான். எனவே அவனை அவனது பெற்றோ ர்கள் இருக்கும் இடத்துக்Nகு அனுப்புகிறேன். அதாவது மரண தண்டனை விதித்து அவனைப் பெற்றோ ரிடம் சேர்க்கிறேன் என்று தீர்;ப்பு வழங்கினார்.
இறைவார்த்தை:
இணைச்சட்டம் 16:18-20 "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய். அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்கு தீர்ப்பு வழங்கட்டும். நீதியைத் திரித்துவிடாதே. ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே. கையு+ட்டு வாங்காதேநீதியை மட்டும் நிலைநிறுத்து."
திருப்பாடல்கள் 9:8; "உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார். மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக்கூறுவார்."
ஏசாயா 11:3இ4 "கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்குவார். காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார். நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார். எளியோரரு வழக்கை விசாரிப்பார்."
ஆமோஸ் 6:12 "நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றீனீர்கள்இ நோ;மையின் கனியை எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்."
சாலமோனின் ஞானம் 1:15 "நீதிக்கு இறப்பு என்பது இல்லை."
மத்தேயு 5:6 "நீதியைநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோ ர்இ ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்."
எபேசியர் 6:14 "உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டுஇ நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்."
96.பொறாமை
கொலம்பஸ் அமொரிக்காவைக் கண்டுபிடித்தற்காக அவருடைய நண்பர்கள் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விருந்துக்கு வந்த பலாரில் ஒரு சிலர் கொலம்பஸ் மீது பொறாமைப்பட்டனர். புதிய கண்டத்தைக் கண்டுபிடிப்பது பெரிய காரியமா? இவர் சென்ற வழியில் வேறு யாராவது நீண்ட நாட்கள் பயணம் செய்திருந்தால்இ இதே போன்று ப்அந்தப் புதிய கண்டத்தைக்கண்டு பிடித்திருப்பார்கள் என்று கூறினர். ஆமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கொலம்பஸ் அவர்களின் வாயை அடக்குவதற்கு ஒரு யுக்தி செய்தார். விருந்தில் யாராவது இந்த முட்டையைச் செங்குத்தாக நிற்க வைக்கமுடியுமா? எனக் கேட்டார். எல்லோரும் மவுனமாக இருந்தனர். பிறகு கொலம்பஸ் அவித்த முட்டையின் அடிப்பாகத்தை லேசாகச் சீவியெடுத்து மேசையின் மீது நிற்க வைத்தார். கொலம்பஸின் இந்தச் செயலால் பொறாமைத்தனம் படைத்தவர்களால் மேற்கொண்டு எதுவும் பேசமுடியவில்லை.
"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்" - குறள் 166
இறைவார்த்தை:
சாலமோனின் ஞானம் 2:24 "அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்."
மத்தேயு 20:15 "நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?"
மத்தேயு 27:18 "பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒபு;புவித்திருந்தார்கள் என்பது பிலாத்துக்குத் தெரியும்."
கலாத்தியர் 5:26 "வீண் பெருமையைத்தேடாமலும்இ ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாமலும்இ ஒருவர்மீது ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக."
யாக்கோபு 3:16 "பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும்இ கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும்."

97.உண்மை
அரசன் ஒருவன் தினமும் இரவில் மாறுவேடமிட்டு நகரச் சோதனைக்குச் செல்வது வழக்கம். ஒரு நாள்இ அரண்மனையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த ஒருவனைக் கண்ட அரசன்இ அவனிடம் விசாரித்தான். அந்த ஆசாமி. அண்ணே நான் ஒரு திருடன். ஆரண்மனை பொக்கிஷத்தில் ஏகப்பட்ட வைரங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவற்றில் சிலவற்றை திருடி விற்றால் வாழ்நாள் முழுக்க என் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். அதுதான் எப்படி உள்ளே போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். இதைக் கேட்டு அரசனுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனிடம்இ நானும் திருடனேஇ அரண்மனையில் பொக்கிஷம் எங்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் வயதாகிவிட்டதால் என்னால் சுவர் ஏறிக் குதிக்க முடியவில்லை. எனவே திருடுவதில் பாதியை எனக்குத் தருவதாக ஒப்புக் கொண்டால்இ உனக்கு உதவுகிறேன் என்றான் கிழ வேசத்தில் இருந்த அரசன். திருடன் சம்மதித்தான். அரசன் சொன்ன இடத்தை நோக்கி குதித்த திருடன் சற்று நேரம் கழித்து வெளியே வந்;தான். அண்ணே பொக்கிஷத்தில் இருந்து நான் வைரக்கற்களை எடுத்தேன். எனக்கு இரண்டு போதும். இந்தாருங்கள் நீங்கள் கேட்டபடி உங்களுக்கு இரண்டு என்ற அரசனிடம் இரு வைரக்கற்களை தந்தவன். தனது முகவரியையும் தெரிவித்துவிட்;டுச் சென்றான். பிறகுஇ அரண்மனை திரும்பிய அரசன் பொக்கிஷத்தை சோதனையிட்டான். அதி;ல் நான்கு வைரங்கள் குறைந்திருந்தன. மறுநாள் மந்திரி ஒருவரை அழைத்த அரசன்இ நேற்று நகர்வலத்தின் போது திருடன் ஒருவனைப் பிடிக்க முயன்றேன். அரண்மனை பொக்கிஷத்தில் திருடிய இரண்டு வைரங்களை வீசிவிட்டு அவன் தப்பியோடிவிட்டான். பொக்கிஷத்தில் எத்தனை குறைந்திருக்கின்றன என்று பார்;த்துச் சொல்லுங்கள் என்றான். அதன்படி பொக்கிஷ அறைக்குச் சென்ற மந்திரிஇ நான்கு வைரங்கள் குறைந்திருப்பதை அறிந்தார். இதில் இரண்டை எடுத்துக் கொண்டால் அரசனுக்குக் தெரியவா போகிறது என்று இரு வைரங்களை எடுத்து இடுப்பில் முடிந்து கொண்டார். பிறகு அரசனிடம் வந்துஇ ஆறு வைரக்கற்கள் குறைகின்றனஇ என்றார். அரசன் அதிர்ந்தான். திருடனாக இருந்தாலும் உண்மையாகவும் நோ;மையாகவும் கைவிடாத அவன் எங்கே? மந்திரியாக இருந்தும் உண்மையை காற்றில் பறக்கவிட்ட இவன் எங்கே? என்று அரசன் மந்திரியை சிறையில் அடைத்து திருடனை மந்திரியாக மாற்றினான்.
"பொய்கள் நிஜத்தைத் தீண்டலாம்இ ஆனால் திருடிவிட முடியாது."
இறைவார்த்தை:
சீராக் 2:2 "உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இருஇ உறுதியாக இரு."
யோவான் 8:31-32 "என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடா;களாய் இருப்பீர்கள்.உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்"
யோவான் 14:6 "வழியும் உண்மையும் வாழ்வும் நானே."
எபேசியர் 4:25 ":;பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்."

98.உழைப்பு
ஒரு முறை ஓர் அரசன் மாறுவேடம் புனைந்து பல ஊர்களுக்குச் சென்றான். அப்போது ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் மரநிழலில் அமர்ந்துஇ கூடை முடைந்து கொண்டிருந்தாள். அரசன் அவளை நெருங்கிஇ "அம்மா! நீ மட்டும் இங்கே தனியே கூடை முடைந்து கொண்டிருக்கிறாயே! வேறு ஒருவரையும் இந்தக் கிராமத்தில் காணாமேஇ அவர்கள் எல்லோரும் எங்கே போயிருக்கிறார்கள்?"என்று கேட்டான். "அரசரை தாரிசிக்கப் போயிருக்கிறார்கள்" என்றாள் அந்தப்பெண். நீ அரசரைப் தாரிசிக்கப் போகவில்லையா என்று வினவினான் அரசன். செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து முடிக்காமல் இருக்கும் முட்டாள் தான் அரசரைத் தாரிசிக்கப் போவார்கள் என்று மறுமொழி சொன்னாள் அந்தப் பெண். அரசரை தாரிசிப்பதால் பயன் ஒன்றும் கிடைக்காது என்பது உங்கள் கருத்தா என்று அரசன் கேட்டான். பயன் கிடைக்குமோஇ கிடைக்காதோ அது எனக்குத் தெரியாது. எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உதறித் தள்ளிவிட்டுஇ ஒரு நாள் வேலையைப் பாழ்ப்படுத்திவிட்டுஇஅரசரைக் காணச் செல்வது மதியீனம் ஆகாதா? என்று கேட்டாள் அந்தப் பெண். பெண் இப்படிச் சொன்னதும் அரசன் மகிழ்ச்சி அடைந்தான். அந்தப் பெண்ணின் கையில் ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்துஇ "பெண்ணே! இந்தத் தங்க நாணயத்தை நான் தந்த பாரிசாக வைத்துக் கொள். ஆரசனைத் தாரிசிக்கச் சென்றவர்கள் திரும்பியதும் அரசன் வந்து உன்னைஇ ஓர் உண்மையான உழைப்பாளியைத் தாரிசித்துவிட்டுச் சென்றான் என்று அவர்களிடம் சொல்"என்று கூறி விடைபெற்றுக் கொண்டு திரும்பினான்.
இறைவார்த்தை:
தொழிலாளர் தினம் அன்று இதைப் பயன்படுத்தலாம்
விடுதலைப் பயணம் 20:9 "ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்."
மத்தேயு 20:1-16 "திராட்;சைத் தோட்ட வேலையாள்கள் உவமை"
லூக்கா 10:7 "அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமையுடையவரே."
திருத்தூதர் பணிகள் 20:33-35 "எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடிருந்தவருடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன."
1தெசலோனிக்கர் 4:11 "நாங்கள் உங்களுக்கு கட்டளையிட்டதுபோலஇ உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டுஇ உங்கள் சொந்த கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்."
2தெசலோனிக்கர் 3:7-13 "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகது என்று நாங்கள் உங்களிடையே இருந்த போதே உங்களுக்கு கட்டளைக் கொடுத்தோம்."

99.அவள் அனைத்தையும் கொடுத்தாளா?
ஒரு நாள் சிறுவன் ஒருவன் தெருவில் சில பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு சிறுமி ஒருத்தி கையில் இனிப்பு வைத்திருந்தாள். இதைக் கவனித்த சிறுவன் நான் என்னுடைய பொம்மைகளைத் தருகிறேன். அதற்கு பதிலாக நீ உன் இனிப்புகளைத் தருவாயா? என்று கேட்டான். அதற்கு அவள் ஒப்புக்கொண்டாள். சிறுவன் தான் வைத்திருந்த பொம்மைகளில் பெரிய பொம்மை ஒன்றை எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதைக் கொடுத்தான். ஆனால் சிறுமியோ தான் வைத்திருந்த அனைத்து இனிப்புகளையும் அவனுக்கு கொடுத்து விட்டாள். அன்று இரவு அந்த சிறுமி நன்றாக தூங்கினாள். ஆனால் அந்த சிறுவனால் தூங்க முடியவில்லை நான் மறைத்தது போல் அவளும் மறைத்து வைத்திருப்பாளோ என்று நினைத்துக் கொண்டிருந்தான்.எதைக் கொடுத்தாலும் முழுமையாக கொடுக்க வேண்டும்.
இறைவார்த்தை:
லூக்கா 21 :1-4 "ஏழைக்கைம் பெண்ணின் காணிக்கை."
லூக்கா 6:38 " கொடுங்கள்இ உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்ப டிநன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."
திருத்தூதர் பணிகள் 5:1-11 " அனனியாவும் சப்பிராவும்இ முழுமையாக கொடுக்காதால் ஏற்பட்ட இழப்பு".
100.இயேசுவை நான் உண்ண வேண்டும்
கார்மேல் சபையைச் சேர்ந்த அருட்பணியாளர் அமல்ராஜ் அவர்கள் முதல் நன்றித் திருப்பலியின் போது மறையுரையில் அவர்இ தான் இருந்த ஒரு பங்கில் ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். ஒரு நாள் நள்ளிரவு இரண்டு மணிக்கு யாரோ அவரது அறையின் கதவை தட்டினார்கள். யார்? என்று உள்ளிருந்தவாரு இவர் கேட்டார். கொஞ்சம் கதவைத் திறங்கள் என்று சொன்னார்கள். இவர் கதவைத் திறந்து பார்த்தார். தன்னுடைய பங்கைச் சேர்ந்த இருவர் நின்று கொண்டிருந்தனர். என்னப்பா விசயம் இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்;;கள்? என்று கேட்டார். திவ்ய நற்கருணை கொடுக்கனும் பாதர் என்று வந்தவர்கள் சொன்னார்கள். அதற்கு அவர் யாரும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கீறார்;;களா? அவஸ்தை ஏதும் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டார். இல்ல சாமி நீங்க திவ்ய நற்கருணையை எடுத்துக்கிட்டு வாங்க என்று கூறி அவரை அழைத்துச் சென்றனர். அவர்கள் சொன்ன இடத்தை அடைந்ததும் அவர் கண்டகாட்சி அவரை அசரவைத்தது. அங்கே ஒரு பெண் அப்பொழுதுதான் புதிதாக ஒரு குழந்தையை பெற்று எடுத்திருக்கிறார். குழந்தையின் ஈரம் கூட காயம்வில்லை. குடிலில் சூசையப்பரும் மாதாவும் குழந்தை இயேசுவை துணியில் கிடத்தி மண்டியிட்டு செபிக்கும் காட்சி போல இப்பெண் தன் குழந்தையை முந்தியில் கிடத்தி அதற்கு முன்பாக செபித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் அவரைப்பார்த்து சாமி இன்னும் நான் இந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை. கொடுப்பதற்கு முன்பாக நான் எனது இயேசுவின் திருஉடலை உண்டபிறகு சுறக்கும் எனது தாய்ப்பாலின் அமுதத்தினை என் குழந்தைக்கு நான் ஊட்டுவேன்இ அப்பொழுதுதான் என் குழந்தை இயேசுவைப் போல் வளரும் என்று கூறினார். இதைக் கேட்ட தந்தை ஆச்சரியத்தில் ஆனந்த கண்ணீர் விட்டார்.

இறைவார்த்தை:
1கொரிந்தியர் 11;:27இ28 " எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால்இ அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.
யோவான் 8:12 " உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்இ வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பர்."
யோவான் 4:14 " நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்."
யோவான் 6:51-58 " விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."
101.நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அந்தவழியாக விறகு வெட்டி அவனைப்பார்த்தான். கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த் வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்தாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான் "இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதானல் தான் இந்த சுட்டொரிக்கும் வெயிலிலும் அடித்துப்பேடடாட்டது போல் உறங்குகிறான்"என நினைத்துக் கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். "காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது. ஆதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்"என நினைத்துச் சென்றான். சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும் என அவரை வணங்கி விட்டு சென்றார்.
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.
இறைவார்த்தை:
மத்தேயு 12:33 " மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும்."
மத்தேயு 7:17-18 "நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது."
மத்தேயு 13:1-9 " விதைப்பவர் உவமை."
1சாமுவேல் 16:7 "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லைஇ மனிதர் முகத்தை பார்க்கின்றனர்இ ஆண்டவர் அகத்தைப் பார்க்கின்றார்."
102.அன்பு மாய மந்திரம்
ஒரு குருவிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள். குரு கூறிய சமாதனாங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார். மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்துவிட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பிவிட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது. புலி முடியை ஓடிச் சென்று குருவிடம் கொடுத்தாள். குரு அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் குழம்பிப் போனார். குரு கூறினார் இனி உனக்கு மூலிகை தேவவையில்லை. நீ புலியின் முடியைப்பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படிப் பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும் போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா? என்றார்.
இறைவார்த்தை:
திருப்பாடல்கள் 51:10 "கடவுளேஇ தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்இ உறுதிதரும் ஆவியைஇ புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்."
சுபை உரையாளர் 7:8 "ஒன்றின் தொடக்கமல்லஇ அதன் முடிவே கவனிக்கத் தக்கதுஇ உள்ளத்தில் பெருமைகொள்வதை விடப் பொறுமையோடு இருப்பதே மேல்."
நீதிமொழிகள் 14:1 "ஞானமுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்இ அறிவற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்."
நீதிமொழிகள் 14:17 "எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்இ விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்."







 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!