Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் இனிய கானம் கேட்குதே


இனிய கானம் கேட்குதே கடலின் கரையிலே
கருணை உள்ளம் பாடுதே மனமும் உருகுதே
அலையெல்லாம அருள்வடிவிலே
இசையெல்லாம் எழும் திசையிலே
அன்னை உந்தன்

வானில் நிலவென காலைக் கதிரென நீ எழுந்தாய்
பாடும் கவியென ஓடும் நதியென
நீ பிறந்தாய்
நீலக் கடலெங்கும் நீந்தும் மலை தன்னில் நீ தவழ்ந்தாய்
சோலை மலரென பூவில் மணமென நீ கலந்தாய்
வானெங்கும் விண்மீனென
மேவும் ஜோதியே
ஆனந்தம் பேரானந்தம் உனைக் காணும் போதிலே
உன் பார்வையால் என் பாவங்கள் போக்கவேண்டுமே

ஆலம் விழுதென அன்னை அருளினை நான் அறிந்தேன்
முன்னம் வினையெல்லாம் எங்கே சென்றதென நான் அறியேன்
காலம் பொழுதென்ன காக்கும் கரம்தன்னில் நான் தவழ்ந்தேன்
தேடும் விழிதன்னில் காணும் கருணையை நான் உணர்ந்தேன்
பூவெல்லாம் உன் புகழையே எந்நாளும் பாடுவேன்
நாவெல்லாம் உன் நாமமே நாளும் போற்றுவேன்
நாளெல்லாம் நின் பூமுகம் கருணை சிந்துமே




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா